Contact us at: sooddram@gmail.com

 

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 12)

(நேசன்)

பௌத்த விகாரை தீக்கிரையை எதிர்த்த அதே இடத்தில் அடையாளமின்றி தீக்கிரை

சலீம், சத்தியமூர்த்தியின் கைதினால் ஏற்பட்ட இடைவெளியை நிவர்த்தி செய்து தொடர்ச்சியாக புளொட் செயற்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு செல்லவேண்டிய பொறுப்பும், அதற்கான தேவையும் ஏனைய மத்தியகுழு உறுப்பினர்களிடம் விடப்பட்டிருந்தது. மத்தியகுழு உறுப்பினர்களான பார்த்தன், குமரன் (பொன்னுத்துரை), கேதீஸ்வரன், ஈஸ்வரன் ஆகியோரே அன்று தளத்தில் இருந்தனர். மத்தியகுழு உறுப்பினர்களான குமரன் (பொன்னுத்துரை) கரைப் பொறுப்பாளராக இருந்தமையால் அவர் படகுப் போக்குவரத்து ஒழுங்குகளைக் கவனித்து வந்தார்; ஈஸ்வரன் மட்டக்களப்பு பொறுப்பாளராக செயற்பட்டு வந்ததால் அவர்களது கூடுதல் நேரத்தை மட்டக்களப்பிலேயே கழித்து வந்தார்; பார்த்தன் இராணுவ சம்பந்தமான செயற்பாடுகளில் கவனம் செலுத்தி வந்தார்; இதனால் மத்தியகுழு உறுப்பினரான கேதீஸ்வரன் இப்பொழுது மிகவும் தீவிரமாகவும் அதேவேளை பொறுப்புடனும் செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஏனைய மாவட்டங்களிலிருந்து வரும் அமைப்பாளர்களுடான தொடர்புகளைப் பேணுதல், இந்தியாவிற்கு பயிற்சிக்கென வருபவர்களை பராமரித்து அனுப்பிவைத்தல், யாழ் மாவட்டத்திலுள்ள அமைப்பாளர்களின் தேவைகளை, பிரச்சினைகளைக் கையாளுதல் அனைத்துமே கேதீஸ்வரனின் முன்னால் மலைபோல் உயர்ந்து நின்றன.

மிகவிரைவிலேயே யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அதிபர் பிரிவுகளிலும் பொறுப்பாக செயற்படும் அனைவரையும் ஒன்றுசேர்த்து கேதீஸ்வரனால் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பில் நானும் கலந்துகொண்டேன். சத்தியமூர்த்தி, சலீமின் கைதுபற்றி அனைவருக்கும் கேதீஸ்வரனால் தெரிவிக்கப்பட்டதோடு, சத்தியமூர்த்தி செய்துவந்த வேலைகள் அனைத்தையும் நேசனே இனிமேல் தொடர்ந்து செய்வார் என்றும், அனைவரையும் நேசனுடன் தொடர்புகளைப் பேணுமாறும் கேட்டுக் கொண்டார். அத்துடன் தேவையேற்படும் போதெல்லாம். யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க அதிபர் பிரிவு அமைப்பாளர்களும் ஒன்று கூடி, யாழ் மாவட்டம் சம்பந்தமான வேலைத்திட்டங்களையும் முடிபுகளையும் எடுக்குமாறு கூறினார்.

நீண்டகாலமாக காந்தீயத்திலும் புளொட்டிலும் செயற்பட்ட உரும்பிராய் ராசா, ரமணன், ஜீவன், பாலா, சின்னப்பத்தர், சுகந்தன்(சிறி),வடமராட்சி கணேஷ், கல்லுவம் குரு, கொக்குவில் கிருபா, சிவானந்தி போன்ற பலர் அன்று புளொட்டில் இருந்தபோதும் சத்தியமூர்த்தியின் இடத்துக்கு கேதீஸ்வரன் என்னைத் தெரிவு செய்தமைக்கு காரணம், நான் சத்தியமூர்த்தியுடன் நெருக்கமாக அமைப்பு வேலைகளில் செயற்பட்டதென்பதாலும், பெரும்பாலான சத்தியமூர்த்தியினுடைய தொடர்புகள் மற்றும் ஏனைய மாவட்டப் பொறுப்பாளர்களின் தொடர்புகள் என்பனவற்றை நான் அறிந்திருந்தமையுமே ஆகும் என நினைக்கிறேன். ஆனால், அன்றைய நிலையில் எனக்கிருந்த அரசியல் அறிவென்பது மிக மிக மட்டுப்படுத்தப்பட்டதொன்றாகவே இருந்தது. நான் GUES இல் செயற்பட்டபோது படித்த சில இடதுசாரி நூல்கள், தோழர் தங்கராசாவின் பாசறைகளில், கருத்தரங்குகளில் பெற்றுக்கொண்ட அரசியல் அறிவே, அப்போது எனக்கிருந்தது. புளொட்டில் இணைந்த பின்பு அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி எதுவுமே பயனளிக்கவில்லை. நடைமுறை, மற்றும் நிர்வாகரீதியான வேலைப்பழு என்பன அதற்கு இடம் கொடுக்கவில்லை.

கொக்குவில் சுற்றிவளைப்பின் பின்னான சந்திப்புக்கள், யாழ் பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதிகளுக்கு மாறியது. ஏனைய மாவட்டங்களிலிருந்து இளைஞர்கள் யாழ்ப்பாணம் வந்தவண்ணமிருந்தனர். இவர்களை இந்தியாவுக்கு அனுப்புவதில் மட்டுமல்லாது, இவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதிலுமே நிறையவே பிரச்சனைகளை முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. கொக்குவில் சுற்றிவளைப்பின் பின்னான நிலமை இதுவாக இருந்தது. 1983 யூலைக்குப்பின் விடுதலை இயக்கங்களின் வளர்ச்சியால், அரசபடைகளுக்கெதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. விடுதலை இயக்கங்களின் தாக்குதல்களுக்குப் பதிலாக, அரசபடையினர் வர்த்தக நிலையங்களை தீயிட்டுக் கொளுத்துதல், அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தல், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல் போன்றவற்றை மேற்கொண்டு வந்தனர்.

1984 சித்திரை 10ம் திகதி, யாழ் வைத்தியசாலைக்கு அண்மையில் சென்று கொண்டிருந்த இராணுவ வண்டித் தொடர் மீது, தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நிகழ்த்தினர். இச் சம்பவத்தில் ஒரு இராணுவவீரர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமுற்ற இராணுவத்தினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தால், யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்திருந்த அடைக்கலமாதா கோவில் சிறிது சேதமுற்றிருந்தது. ஊரடங்கு உத்தரவும் இராணுவத்தால் அமுல்படுத்தப்பட்டது. மறுநாள், சித்திரை 11 ம் திகதி, இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டினால் அடைக்கலமாதா கோவில் சேதமடைந்ததற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு, ஒரு கும்பல் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் அமைந்திருந்த பௌத்தவிகாரை மீது தாக்குதல் நடத்தியதோடு அதற்கு தீயுமிட்டனர். இச் செயலுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அமலதாஸ் என்பவர் தலைமை தாங்கினார்; அமலதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்; தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்டப் பொறுப்பாளர் கிட்டுவுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வந்தவர்; பௌத்தவிகாரை தாக்குதல் சம்பவம் பற்றி யாழ் பல்கலைக்கழகத்துக்கு தகவல் பரவியது.

இதையறிந்த யாழ் பல்கலைக்கழக மாணவனும் புளொட்டின் மத்தியகுழு உறுப்பினருமான கேதீஸ்வரனும் அவரது நண்பர்களும் உடனடியாக பௌத்தவிகாரைக்கு விரைந்து, பௌத்தவிகாரையை சேதப்படுத்துவதை நிறுத்துமாறு, அங்கு கூடியிருந்தவர்களை வேண்டினர். ஆனால் பல்கலைக்கழக மாணவர்களின் வேண்டுகோளை, அவர்கள் செவிமடுத்தார்களில்லை. பல பத்தாண்டுகளாகவே, தமிழர்களல்லாத ஏனைய இனத்தவர்களையும், ஏனைய மதத்தவர்களையும், அவர்களது கலாச்சாரத்தையும், கீழ்த்தரமாக மேடைகளில் பேசிவந்த பிற்போக்குத் தலைமைகளினால், மக்களின் சிந்தனையில் நஞ்சூட்டப்பட்டிருந்ததன் வெளிப்பாடாக, இந்தச் சம்பவம் அமைந்தது. இதனால் பௌத்தவிகாரையில் கூடியிருந்தவர்கள், தமது செயற்பாட்டிலிருந்து பின்வாங்க முடியாதவர்களாக, காணப்பட்டனர். பௌத்தவிகாரையை எரியூட்டியதால் ஏற்பட்ட பதட்டநிலையால், யாழ் நகரம் வெறிச்சோடத் தொடங்கியது. இந்நிலையில் மறுநாள், இந்தியாவுக்கு பயிற்சிக்கு செல்வோரை அனுப்புவதை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு, கேதீஸ்வரனுக்கு இருந்தது. இதற்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு, கேதீஸ்வரனும் கொக்குவில் கிருபாவும், விரைந்து செயற்பட முடிவெடுத்தனர். திருநெல்வேலியில் வசித்து வந்த எரிபொருள் நிலைய உரிமையாளரை தொடர்பு கொண்டு, எரிபொருள் தந்துதவுமாறு கேட்டதற்கு, அவரும் சம்மதிக்கவே, கேதீஸ்வரனும் கொக்குவில் கிருபாவும் வாகனம் ஒன்றில், எரிபொருளைப் பெறுவதற்கு, யாழ்நகர் நோக்கி விரைந்தனர்.

பௌத்தவிகாரை எரியூட்டப்பட்ட தகவலை அறிந்து, இராணுவம் யாழ்நகரின் பெரும்பாலான பகுதிகளில் குவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. துரதிஸ்டவசமாக கேதீஸ்வரனும் கொக்குவில் கிருபாவும் சென்ற வாகனம், இராணுவத்தால் இடைமறிக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும், இராணுவத்தால் பௌத்தவிகாரைக்கு அருகில் ஏற்கனவே கைது செய்து வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுடன் ஒன்று சேர்க்கப்பட்டு, அனைவரையும் அதே இடத்தில் இராணுவம் சுட்டுக் கொன்று, ரயர் போட்டு எரியூட்டியது. சில மணி நேரத்துக்கு முன் பௌத்தவிகாரையை எரிப்பது தவறான செயல் என வாதம் புரிந்த ஒருவன், அத்தகைய செயலுக்கெதிராக போராடிய ஒருவன், அதே விகாரைக்கு அருகே சுட்டுக்கொலை செய்யப்பட்டு, எரியூட்டப்பட்டான். ஈனர்களின் ஈனச் செயல்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. இழப்புகளும், மரணங்களும் எம்மைத் தொடர்ந்த வண்ணமிருந்தன.

ஆரம்ப காலங்களிலேயே புளட்டுக்குள் தோன்றிய தவறான போக்குகளுக்கு எதிராக கேதீஸ்வரன் தொடர்ச்சியாக புளட்டின் தலைமையுடனும் மத்திய குழு உறுப்பினர்களோடும் போராடிய ஒருவர். தவறான போக்குகளுடன் கேதீஸ்வரன் என்றுமே சமரசம் செய்தது என்பது கிடையாது.

(தொடரும்....) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com