Contact us at: sooddram@gmail.com

 

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 13)

(நேசன்)

தென்னிலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டமும் அதன் முடிவும்

1984 தைமாதம் ஒன்பதாம் திகதி, இனக் கலவரத்துள் அகப்பட்டு பாதிக்கப்பட்டதனால் இடம் பெயர்ந்த தமிழ் பல்கலைக்கழக மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமானது. இப் போராளிகளுள் மதிவதனியும் ஒருவர். பல்கலைக்கழக மாணவர்களின் அகிம்சை வழியான போராட்டத்தை வெற்றிகரமான வெகுஜன போராட்டடமாக மாற்றுவதற்கு, அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் கேதீஸ்வரனும் ஒருவராக இருந்தார். ஆனால் மக்கள் போராட்டத்திலோ, மக்கள் அரசியலிலோ நம்பிக்கை அற்ற, வெறுமனே ஆயுதங்களை மட்டுமே நம்பியிருந்த, மன நோயாளிகளான தமிழீழ விடுதலைப் புலிகளோ மாணவர் போராட்டத்தில் ஈடுபட்ட, சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தோரை ஆயுத முனையில் கடத்தி செல்வதற்கு திட்டமிட்டிருந்தது, பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கசிந்திருந்தது.

இதையறிந்த பல்கலைக்கழக மாணவர்களான கேதீஸ்வரன், சத்தியமூர்த்தி, பாலா, சிறி (சுகந்தன்) போன்றோர் தமிழீழ விடுதலைப் புலிகள் அப்படி ஒரு அராஜக செயலில் ஈடுபட்டால் அதனை தடுத்து நிறுத்த ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுடன் தயாராக இருந்தனர். ஆனால் அகிம்சை போராளிகள் ஆயுத முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்தமாக கடத்தி செல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தின் முன்னால், நிராயுதபாணிகளான பல்கலைக்கழக மாணவர்கள், எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் இருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளை தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஒரு மாணவர் போராட்டம் வெகுஜன எழுச்சிப் போராட்டமாக மாறுவதை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்தனர். மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறுவதை, எப்படி தடுத்து நிறுத்தலாம் என திண்டாடிக் கொண்டிருந்த சிறீலங்கா அரசுக்கு, புலிகள் உண்ணாவிரத போராளிகளை கடத்தியது, பெரும் நிம்மதியை கொடுத்தது. உண்ணாவிரதிகளை கடத்திய அன்றிரவே தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த கடத்தல் தவறானது என கண்டித்து புளொட் சார்பாக யாழ் நகரமெங்கும  ுவரொட்டிகள் ஒட்டியதில் கேதீஸ்வரன் முக்கிய பங்கு வகித்ததிலிருந்து, கேதீஸ்வரன் எப்படி தவறான போக்குகளுடன் சமரசம் செய்யாமல், அவற்றிற்கு எதிராக தன்னால் முடிந்தவரை போராடினார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கேதீஸ்வரனின் மரணத்தின் பின் அவர் கவனித்து வந்த அனைத்து வேலைகளையும் தற்காலிகமாக நானே கவனிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. உமாமகேஸ்வரனின் அழைப்பின் பேரில் மத்தியகுழு உறுப்பினரான கண்ணாடிச் சந்திரன் இந்தியா சென்றிருந்தார். மத்தியகுழு உறுப்பினர்களான பெரியமுரளியும் ஈஸ்வரனும் கூட அப்பொழுது இந்தியாவிலேயே தங்கியிருந்தனர். இதனால் அமைப்புச் சம்பந்தமான அனைத்துவிடயங்களையும் முடிவுகளையும் தளத்திலிருந்த மத்தியகுழு உறுப்பினர்களான குமரன் (பொன்னுத்துரை) மற்றும் பார்த்தனுடன் கலந்து பேசியே எடுத்து வந்தேன்.

 திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் செல்வன(கிருபாகரன்), மூதூர் அமைப்பாளர் அகிலன், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ரகு, கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கிளி மாஸ்டர், வவுனியா மாவட்ட அமைப்பாளர் வவுனியா சிறி , முல்லைத்தீவு அமைப்பாளர் வரதன், மன்னார் அமைப்பாளர் சயந்தன், ஆகியோருடைய தொடர்புகளை பேண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் அசோக்கும், மகளிர் அமைப்புப் பொறுப்பாளர் செல்வியும் தமது செயற்பாடுகளை தனித்துவமாகவே செய்து வந்தனர். இவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மக்களமைப்பைச் சேர்ந்த அமைப்பாளர்கள் செய்துவந்தனர். ஏனைய மாவட்ட அமைப்பு வேலைகளுக்குத் தேவையான நிதி, பிரச்சார ஏடுகளான பத்திரிகை, சஞ்சிகைகள், பிரசுரங்கள் அனைத்துமே யாழ்ப்பாணத்திலிருந்தே விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

(தொடரும்...) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com