Contact us at: sooddram@gmail.com

 

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 17)

(நேசன்)

மக்களே ஒரு போராட்டத்தின் தீர்க்கரமான சக்தி

இராணுவப் பயிற்சி முடித்து வந்தவர்கள் தாம் மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் இராணுவப் பயிற்சி முடித்து வந்து பாதுகாப்பில்லாமல் இராணுவத்திடம் பிடிபட்டு இறக்க முடியாது என்ற வாதத்தை முன்வைத்தனர். இவர்களது இந்த வாதம் தவறானதாகும். ஆயுதங்கள் இருந்தால் மட்டுமே தம்மை இராணுவத்திடமிருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்ற வாதம், போராட்டத்தில் மக்களின் பாத்திரத்தையும், மக்களே ஒரு போராட்டத்தின் தீர்க்கரமான சக்தி என்பதையும், மக்களே எமது பாதுகாவலர்கள் என்பதையும் மறுதலித்து, ஆயுதங்கள் மட்டுமே தீர்க்ககரமான சக்தி என்ற தவறான முடிவுக்கு இட்டு செல்கிறது. புளொட் அமைப்பானது தன்னை ஒரு புரட்சிகரமான அமைப்பாக பிரகடனப்படுத்தி இருந்தது. ஆனால் இந்தியாவில் பயிற்சி முடித்து வந்த பெரும்பாலான புளொட் உறுப்பினர்களோ போராட்டம் பற்றிய அரசியல் பார்வை அற்றவர்களாக, அரசியல் வளர்ச்சி அற்றவர்களாக, வெறுமனே இராணுவப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தனரே தவிர, ஒரு புரட்சிகர அமைப்புக்கு, ஒரு புரட்சிகர இராணுவத்துக்கு இருக்கவேண்டிய அரசியல் பார்வை, அரசியல் வளர்ச்சி, சமூகம் பற்றிய, மக்கள் பற்றிய பார்வை போன்ற முற்போக்கு அம்சங்களை கொண்டவர்களாக விளங்கவில்லை.

1984 ஆரம்ப பகுதியில், புளொட்டின் மக்கள் அமைப்பின் வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, அதன் இராணுவ அமைப்பின் வளர்ச்சி பின்னிலையிலேயே இருந்து வந்தது. ஆனைக்கோட்டை போலீஸ் நிலைய தாக்குதலுக்கு பின்பு புளொட் உறுப்பினர்களால் நன்கு திட்டமிடப்படாது உதிரியாக மேற்கொள்ளப்பட்ட, கொக்குவில் ஞானபண்டித வித்தியாசாலை பரீட்சை கடமையில் இருந்த போலீசார் மீதான தாக்குதல், வவுனியா விமானப்படையினர் மீதான தாக்குதல் போன்ற தாக்குதல்களில் ஆயுதங்கள் கைப்பற்றப்படவில்லை. 1984 சித்திரை மாதம் பார்த்தன் தலைமையில் மட்டக்களப்பில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த வேளை பார்த்தனின் மரணத்துடன் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

புளொட்டின் இராணுவத்தின் வளர்ச்சி என்பது அன்றைய நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. ஆயுத போராட்டத்துக்கு தன்னை தயார்படுத்தும் ஒரு அமைப்புக்கு ஆயுதங்கள் அற்ற நிலை என்பது மிகவும் கவலைக்கிடமானதொன்றாகும். எனவே, இந்த நிலையை மாற்றுவதை நோக்கமாக கொண்டு ஆயுதங்கள் சேகரிப்புக்கான தேடல் தளத்தில் செயற்பட்ட உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வேளையில் சாவகச்சேரி அமைப்பாளர் மைக்கல், யாழ்ப்பாணம் கண்டி வீதி மக்கள் வங்கி கிளையில் துப்பாக்கிகள் பாதுகாவலர்கள் உபயோகத்திற்காக இருப்பதாக தெரிவித்தார். அவற்றை எம்மால் கைப்பற்ற முடியுமானால், தான் அது பற்றிய விபரமான தகவல்களை பெற்று தருவதாக கூறியிருந்தார். இது எமது ஆயுத தேவையை குறைந்த பட்சம் தீர்த்து வைக்கும் என கருதியதால் இது பற்றிய தகவல்களை பெற்று துப்பாக்கிகளை கைப்பற்றுவதற்கான திட்டம் தீட்டப்பட்டது. இந்த நடவடிக்கையில் மல்லாவிச் சந்திரன் முக்கிய பங்கு வகித்தார். தர்மலிங்கம், மது, சிலோன், வாகீசன் உட்பட பலர் இதில் பங்கு கொண்டனர்.

இந்தியாவில் பயிற்சி பெற்று யாழ்ப்பாணம் திரும்பியவர்கள் பங்கு பற்றிய முதலாவது இராணுவ நடவடிக்கை இதுவாக அமைந்தது. மக்கள் வங்கியில் பாதுகாப்பாக பூட்டி இரும்புப் பெட்டகமொன்றில் வைக்கப்பட்டிருந்த 18 துப்பாக்கிகளும் இந்த நடவடிக்கையின் போது வெற்றிகரமாக கைப்பற்றப்பட்டன.

இதற்கு அந்தப் பகுதி பொதுமக்களின் உதவி பெரிதும் காரணமாய் அமைந்தது. 18 துப்பாக்கிகளையும் பூட்டி வைத்திருந்த இரும்பு பெட்டியை வங்கிக்கு வெளியே கொண்டுவந்துவிட்டிருந்த புளொட் இராணுவத்தினர் அதை தாங்கள் கொண்டு சென்ற லொறிக்குள் ஏற்ற முடியாமல் திண்டாடிய வேளையில் அப்பகுதி மக்கள் தாமாகவே முன் வந்து துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டியை லொறிக்குள் ஏற்றி விட்டனர். நீண்ட காலமாக ஒரு சில ஆயுதங்களுடன் புளொட் இராணுவம் இயங்கி வந்த நிலையில் இருந்து சிறிது முன்னோக்கிய நகர்வாக இந்த நடவடிக்கை அமைந்தது.

புளொட்டின் மக்களமைப்பை பலமாகக் கட்டியெழுப்பும் முகமாக தொடர்ச்சியாக கிராமங்கள் தோறும் அரசியல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. யாழ் மாவட்டத்தில் செயற்பட்ட அனைத்து உதவி அரசாங்க அதிபர் பிரிவு அமைப்பாளர்களுமே இதற்காக கடுமையாக உழைத்து வந்தனர். புதிய அங்கத்தவர்களை அமைப்புடன் இணைத்தல், கிராமங்கள் தோறும் அமைப்பு கமிட்டிகளை உருவாக்குதல் என்று தொடர்ச்சியாக செயல்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இத்தகைய அமைப்புக்களை உருவாக்குவதென்பது அவ்வளவு இலகுவாக நடைபெற்றிருக்கவில்லை. அரச படைகளின் தேடுதல் வேட்டைகளும், கெடுபிடிகளும், அன்றாட நிகழ்வாக இருந்த காலகட்டம் அது. அத்துடன் ஏனைய விடுதலை போராட்ட அமைப்புகளின் எதிர்ப்புகளும், சவால்களும் நாம் செல்லும் கிராமங்கள் தோறும் இருந்து வந்தது. இவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்த அதேவேளை, இத்தகைய எதிர்ப்புக்களையும், சவால்களையும் முறியடித்தே மக்கள் அமைப்பை உருவாக்க முடிந்தது.

தோழர் தங்கராஜா 1984 ஆம் ஆண்டு ஆரம்பப்பகுதிகளிலேயே இந்தியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்தியாவில் இராணுவப்பயிற்சி பெறுபவர்களுக்கு அரசியல் வகுப்புக்களை நடத்துவதற்காகவே அவரை இந்தியா அழைத்திருந்தனர். இதனால் கிராமங்கள் தோறும் அரசியல் கருத்தரங்குகளை தோழர் தங்கராஜாவின் பாசறைகளில் பங்கேற்றவர்களே மேற்கொண்டு வந்தனர். இதில் ரக(நிசாந்தன்), பிரசாத், பாசறை ரவி(முத்து) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். திருகோணமலை அமைப்பாளர் செல்வன் (கிருபாகரன்), முல்லைத்தீவு அமைப்பாளர் வரதன் போன்றோர் யாழ்ப்பாணம் வந்து தங்கி நிற்கும் போதெல்லாம் இத்தகைய அரசியல் கருத்தரங்குகளை நிகழ்த்தி வந்தனர். ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, புளொட்டினது மக்களமைப்பு பலம் பெற்று வளர்ந்து வந்தது. இந்த வளர்ச்சி யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சி நிலையாகவும் இருந்தது.

இதற்கு புளொட்டினுடைய மக்களமைப்பில் செயற்பட்ட அங்கத்தவர்களின் கடின உழைப்பும், அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கருத்தரங்குகளும், "புதியபாதை" பத்திரிகை, மற்றும் "தமிழீழத்தின் குரல்" வானொலிச் சேவையின் மூலம் வெளிக்கொண்டுவந்த கருத்துக்களும் காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். சிறிலங்கா அரசபடைகளின் கெடுபிடிகளுக்கும், வேட்டையாடல்களுக்கும், புளொட்டின் முன்னணி அங்கத்தவர்களின் இழப்புக்களுக்கும், மரணங்களுக்கு மத்தியிலும், ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புக்களின் எதிர்ப்புக்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலேயே இது சாத்தியமானது.

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை சுந்தரம் படைப்பிரிவினர் புளொட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் செயல்களை தொடர்ந்தவண்ணமிருந்தனர். இதில் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சிலரும், சிவநேசன(சுண்ணாகம்), வசந்தன் (சுண்ணாகம்), நித்தி(உடுவில்) போன்றோரும் ஈடுபட்டு வந்தனர். யாழ் மாவட்டத்தில் செயற்பட்ட அமைப்பாளர்களிடத்திலிருந்து தொடர்ச்சியாக சுந்தரம் படைப்பிரிவினர் குறித்த முறைப்பாடுகள் வந்தவண்ணமிருந்தன. மக்கள் மத்தியிலிருந்து சுந்தரம் படைப்பிரிவினரின் அடாவடித்தனங்கள் குறித்து கேள்விகள் எம்மை நோக்கி எழுப்பப்பட்டன.

இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு சுந்தரம் படைப்பிரிவினர் என்று செயற்படுபவர்களை விசாரணை செய்வதென்று முடிவாகியது. இதற்கு நானும், மல்லாவிச் சந்திரனும், தர்மலிங்கமும் சென்றிருந்தோம். சுண்ணாகத்தைச் சேர்ந்த சிவநேசன் என்பவரை உடுவிலில் வைத்து விசாரணை செய்தோம். புளொட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதை உடனடியாக நிறுத்தும்படி கேட்டுக்கொண்டோம். இதையறிந்து அவ்விடத்துக்கு வந்த சுந்தரம்படைப்பிரிவைச் சேர்ந்த சிலர் எம்முடன் வாக்குவாதத்தில் இறங்கினர். சிவநேசனை (சுண்ணாகம்) உடனடியாக விடுவிக்கும்படியும், அப்படிச் செய்யாவிடின் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்றும் எமக்கு எச்சரிக்கை விடுத்தனர். சுந்தரம் படைப்பிரிவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாம் அவர்கள் விடயத்தில் எந்தவித முன்னேற்றமும் காணாமலேயே திரும்ப வேண்டியிருந்தது.

புளொட் மக்களமைப்பைக் கட்டியெழுப்பி மக்கள் மத்தியில் பலம் பெற்று, மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டிருந்த அதேநேரம் புளொட்டுக்கு களங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளை சுந்தரம் படைப்பிரிவினர் என்று தம்மை அழைத்துக் கொண்டவர்கள் எவருடைய கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் செய்து வந்தனர். இவர்களது நடவடிக்கைகள் அனைத்துமே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களின் நடவடிக்கை போலல்லாமல் தெருச் சண்டியர்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்ததாகவே காணப்பட்டது. யாழ் மாவட்டக் கமிட்டியால் சுந்தரம் படைப்பிரிவினரின் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து உமாமகேஸ்வரனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு எந்தவித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படாமலே நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. சுந்தரம் படைப்பிரிவினரின் அடாவடித்தனங்களும் தெருச் சண்டித்தனங்களும் தொடர்ந்தவண்ணமாக இருந்தன.

 (தொடரும்....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com