Contact us at: sooddram@gmail.com

 

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 23)

(நேசன்)

மேயர் அல்பிரட் துரையப்பாவும், கொலை செய்யப்பட்ட ஏனைய பாராளுமன்ற அரசியல்வாதிகளும் துரோகிகளா?

இந்தக் கேள்வி, இன்றைய காலகட்டத்தில் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் தோல்வியைத் தழுவிய பின்னான காலகட்டத்தில் - தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பப்பட வேண்டியதொன்றாகும், விவாதிக்கப்பட வேண்டியதொன்றாகும், விடைகாணப்பட வேண்டியதொன்றாகும். இத்தகையதொரு கேள்வி தமிழ் மக்களிடத்தில் எழுப்பப்படாவிடில், விவாதத்துக்கு உள்ளாக்கப்படாவிடில், இதற்கான விடை காணப்படாவிடில், தமிழ்மக்கள் தமது அரசியலில் கானல் நீரை நோக்கி ஓடுபவர்களாகவே இருப்பர் என்பதில் சிறிதும் ஜயமில்லை.

 வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அதன் பின்னரான தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் "தமிழீழமே தமிழர்களுக்கான ஒரே தீர்வு" என்ற எழுச்சிப் பிரச்சாரங்களும் தென்றலுடன் கலந்துவந்து எமது காதுகளில் தேனாக இனித்திருந்த காலமது. "உதய சூரியன் கிழக்கில் உதிக்கும், தமிழீழம் நாளை மலரும்" என தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வானதிர முழங்கிய காலமது. தமது கருத்துக்களுக்கு மாற்றான கருத்துள்ளவர்கள், தமது அரசியலுக்கு மாற்றான அரசியல் வழிமுறை கொண்டவர்கள் அனைவரும் "துரோகிகள்" எனவும், தமிழ் சமூகத்திலிருந்து பிடுங்கி எறியப்படவேண்டிய களைகள் எனவும் பிரச்சார மேடைகளில் பகிரங்கமாகப் பேசி "துரோகிகள்" பட்டியல் போட்ட காலமது. தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் உணர்ச்சி பொங்கும் " தமிழீழம்" குறித்த மேடைப் பேச்சுக்களை முன்வரிசையிலமர்ந்து ஆவலுடன் செவிமடுத்து வந்த பாடசாலை மாணவனான நானும் என் போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் "துரோகி" களாக சுட்டிக்காட்டப்பட்டவர்கள் தமிழ் சமூகத்திலிருந்து களையெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உடன்பாடு கொண்டவர்களாகக் காணப்பட்டோம்.

அன்றைய காலகட்டத்தில் அரசியல் என்றாலே தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் மேடைப்பேச்சே அரசியல் என்றறிந்திருந்த எமக்கு கூட்டணியினரின் மேடைப் பேச்சுக்கள் தமிழ்மக்களின் உண்மையான விடுதலையின்பாலான விமோசனத்தின்பாலான பேச்சுக்களாகவே இனம் கண்டோம். யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட்டபோது "தமிழர்களின் துரோகி கொல்லப்பட்டு விட்டான்" என மாணவர்கள், இளைஞர்கள் உட்பட தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் பெருமைப்பட்டுக் கொண்டனர். தொடர்ச்சியாக "துரோகிகள்" கொன்றொழிக்கப்பட்டனர். தமிழ் சமூகத்தில் இருந்து களைகள் பிடுங்கி எறியப்படுவதாக மகிழ்ச்சி அடைந்தோம். இந்த "துரோகி" ஒழிப்பை அல்பிரட் துரையப்பாவில் ஆரம்பித்து வைத்த வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட இது போன்ற செயல்களில் ஈடுபட்ட தனி நபர்களும் "ஹீரோ"க்களாக தமிழ் சமூகத்தாலும் இளைஞர்களாலும் பார்க்கப்பட்டனர். அல்பிரட் துரையப்பாவில் கருவுற்ற "துரோகி" ஒழிப்பு அரசியல் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள் மாற்று கருத்துடையோரை "துரோகி"களாக்கி அழிப்பதிலும், பின்னாட்களில் தமிழீழ விடுதலைப்புலிகளால் தாமல்லாத, தமது கருத்துக்களுடன் உடன்படாதவர்களை "துரோகி"களாகக் காட்டி அழிப்பதென முள்ளிவாய்க்கால் வரை நீண்டு சென்ற வரலாறாகியது. எழுபதுகளிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் நாம் பாடசாலை மாணவர்களாக, இளைஞர்களாக இருந்தோம். தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் பேச்சுக்கள் எமக்கு வேத வாக்காக இருந்தன. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இளமையின் துடிப்பும், வேகமும், அரசியல் என்றால் என்ன வென்று தெரியாத நிலை, அனுபவ முதிர்ச்சியின்மை என்பவை இதற்கு காரணமாக இருந்தன

ஆனால் கடந்தகால எமது ஈழவிடுதலைப் போராட்ட அனுபவங்களுக்குப் பின்பும், தமிழ் மக்கள் அதிகளவில் புலம் பெயர்ந்து வாழும் மேற்கு ஜரோப்பிய, வட அமெரிக்க நாகரீக சமுதாயத்தின் அரசியல், சமூக, கலாச்சார விழுமியங்களை நாம் நடைமுறையில் கண்டுணர்ந்த பிற்பாடும், தம்மை "முன்னேறிய பிரிவினர்" என அழைத்துக் கொள்வோரில் ஒரு பகுதியினர் - ஒரு பகுதியினர் மட்டுமேதமது இரத்தத்துடனும் சுவாசத்துடனும் கலந்துவிட்ட "துரோகி" அரசியலிலிருந்து துண்டித்துக்கொள்ள முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர் என்பது கசப்பான ஒரு உண்மையாகும்.

"துரோகி" அரசியல்: மேற்கு ஜரோப்பிய, வட அமெரிக்க நாகரீக சமுதாயத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதென்ன?

மேற்கு ஜரோப்பிய, வட அமெரிக்க நாகரீக சமுதாயத்தின் அரசியல், சமூக, கலாச்சார விழுமியங்களைப் பற்றிய புரிதலைப் பெறுவதற்கு வட அமெரிக்க நாடான கனடாவின் உதாரணத்தை எடுத்துக்கொள்வது போதுமானதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

கனடாவில் "செவ்விந்தியர்" அல்லது "பூர்வீகக் குடிகள்" என அறியப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக வசித்துவந்திருந்த போதும் கனடா ஒரு குடியேற்ற நாடாகவே உலக அரங்கில் அறியப்பட்டுள்ளது. ஜரோப்பிய குடியேற்ற வாசிகளின் வருகையைத் தொடர்ந்து (1497 முதல் ஆயிரக்கணக்கில் ஆங்கிலேயரின் வருகை; 1790 முதல் ஆயிரக்கணக்கில் பிரஞ்சுக்காரரின் வருகை) இன்றைக்கு நாமறிந்த கனடா எனும் நாட்டின் பல்வேறு மாகாணங்களும் வளர்ச்சியடையத் தொடங்கின. இதில் கியூபெக் மாகாணம் பிரெஞ்சு மொழிபேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்டதாகவும், நியூபிரன்ஸ்விக் மாகாணம் ஆங்கிலம் பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளையும் பேசும் மாகாணமாகவும், ஏனைய மாகாணங்கள் ஆங்கில மொழியை பேசுவோரை பெரும்பான்மையாகக் கொண்டதாகவும் விளங்கின. ஜரோப்பிய குடியேற்றவாசிகளின் வருகையிலிருந்தே இன்றைய ஒவ்வொரு மாகாணங்களும் தனித்தனியான, சுயாட்சியுடைய அரசுகளாக, நிர்வாக அலகுகளைக் கொண்டதாகவே செயற்பட்டுவந்த அதேவேளை பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பலம் பெற்று வளர்ந்து வந்தன. மாகாணங்களின் முதலாளித்துவ வளர்ச்சியும், அவற்றின் முன்னேற்றமும் உறுதியானதும் பலமானதுமான ஒரு மத்தியப்படுத்தப்பட்ட அரசை வேண்டி நின்றது.

இதனால் ஏற்கனவே தனித்தனியே நிலவிய சுயாட்சி கொண்ட மாகாண அரசுகளான ஒன்றாறியோ, கியூபெக், நியூபிரன்சுவிக், நோவாகொசியா ஆகிய நான்கு மாகாணங்களும் எந்தவித நிர்ப்பந்தமுமின்றி, மக்களின் சுயவிருப்பின் அடிப்படையில் DOMINION OF CANADA என 1867 இல் ஒன்றிணைந்து இன்றைய கனடாவுக்கு அடிக்கல் நாட்டி வைத்தனர். இந்த நான்கு மாகாணங்களும் ஒன்றிணைந்ததால் மக்களுக்கு ஏற்பட்ட அனுகூலங்களைக் கண்ட ஏனைய மாகாணங்களும் தமது சுயவிருப்பின் பேரில் DOMINION OF CANADA வில் ஒன்றிணையத் தொடங்கின. 1905 ம் ஆண்டு சஸ்கச்சுவான், அல்பேட்டா மாகாணங்கள் ஒன்றிணைந்தபோது அனைத்து மாகாணங்களும் ஒன்றிணைந்த ஒரு பலமான கனடா நாடு உருவானது. ஆனால் 1869 இல் தமது சுயவிருப்பில் DOMINION OF CANADA வில் இணைந்துகொண்ட பிரெஞ்சு மொழியைப் பேசும் கியூபெக் மக்கள் தாம் தாம் பெரும்பான்மையான ஆங்கிலம் பேசும் மக்களைக் கொண்ட கனடாவிற்குள் மொழிரீதியாக, பொருளாதாரரீதியாக, அரசியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக நசுக்கப்படுவதாக உணரத்தலைப்பட்டனர்.

இதனால் "கியூபெக் கட்சி" என்ற கட்சியை உருவாக்கி தாம் கனடாவில் இருந்து பிரிந்து போவதற்கான வேலைத்திட்டங்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டனர். கனடாவில் உள்ள ஜந்து பிரதான கட்சிகளான கன்சர்வேட்டிவ் கட்சி, லிபரல் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி, கியூபெக் கட்சி, கிறீன் கட்சி போன்ற ஜந்து கட்சிகளிலும் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் மக்கள் அங்கம் வகிக்கின்றனர். கனடாவின் மிகவும் பிரபல்யம் வாய்ந்த பிரதம மந்திரிகளும் அமைச்சர்களும் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக்காரர்களாக இருந்துள்ளனர், இருந்தும் வருகின்றனர். பாராளுமன்றத்துக்கான தேர்தல்களின் போது கட்சிகள் தமது அரசியல் கொள்கைகள், வேலைத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் கியூபெக்கர்களையோ, கனேடிய அரசில் அங்கம் வகிக்கும் கியூபெக்கர்களையோ அரசியல் கருத்துக்கள் மூலமும், கொள்கைகள் வேலைத்திட்டங்கள் மூலமே எதிர்கொள்கின்றனர். அனைத்துக் கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் கியூபெக்கர்கள், அவர்களின் தலைவர்கள் ஒரே மேடையில் பகிரங்கமாக தமது கருத்துக்களை முன்வைத்து வாதிடுகின்றனர். பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி கண்டவர்கள் தமது தோல்வியை ஒப்புக் கொண்டு வெற்றி பெற்றவரை வாழ்த்தி வழிவிடுகின்றனர். கனடாவில் இருந்து பிரிந்து சென்று தனியரசு அமைக்க கியூபெக் மக்கள் ஜனநாயகரீதியில் இரண்டு தடவை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தினர். 1980 ம் ஆண்டில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக 40 வீத வாக்குகளைப் பெற்றும், 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்துக்கணிப்பில் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக 49 வீத வாக்குகளைப் பெற்றும் தோல்வியடைந்தனர். ஆனால் இந்தத் தோல்விகளுக்குப் பின்பும் கியூபெக் அரசியல்வாதிகளோ, அல்லது கியூபெக் மக்களோ இதுவரை யாரையும் சுட்டுவிரலைக்காட்டி "துரோகி" என குறிப்பிட்டது கிடையாது. ஏன்? இதுதான் கல்வியில் வளர்ச்சியடைந்த, கலாச்சாரரீதியில் வளர்ச்சிபெற்ற, அரசியலில் முதிர்ச்சியடைந்த, ஜனநாயக விழுமியங்களைப் பின்பற்றுகின்ற கலாச்சாரத்தை கொண்ட பிரெஞ்சு மொழிபேசும் கியூபெக் மக்களின் பண்பாடும், இவர்களிடமிருந்து தமிழ் சமுதாயமும், தமிழ் அரசியல்வாதிகளும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உண்டு.

(தொடரும்....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com