Contact us at: sooddram@gmail.com

 

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 24)

(நேசன்)

"சமூகவிரோதி"களும் மரணதண்டனையும்

ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் அவர்களின் ஆரம்பகாலங்களிலேயே "சமூக விரோதிகள்" என்ற சொல்லை உபயோகிக்கத் தொடங்கியிருந்தனர். சமூகத்தில் சிறுகளவுகளில் ஈடுபடுவோர், கொள்ளைகளில் ஈடுபடுவோர், தெருச்சண்டியர்கள், விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவோர் போன்றோரை "சமூகவிரோதிகள்" என அழைக்கத் தொடங்கினர். இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டனர் அல்லது மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இத்தகைய செயலை மிகச் சிறிய அமைப்பாக இருந்த தமிழீழ விடுதலை இராணுவம(TELA) உட்பட புளொட், தமிழீழ விடுதலைப் புலிகள் வரை மேற்கொண்டனர்.

ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் ஆரம்பகாலங்களிலேயே இயக்கங்களுக்குள் தோன்றி வளர்ந்த "சமூகவிரோதி" என்ற பார்வையும் "சமூகவிரோதி" ஒழிப்பு நடவடிக்கைகளும் 1983 யூலைக்குப் பின்னான இயக்கங்களின் வளர்ச்சியையொட்டி தீவிர நடைமுறைவடிவம் பெற்றது. "சமூகவிரோதி" என ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களால் இனம் காணப்பட்டவர்கள் பெரும்பாலும் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். குடும்பவறுமை காரணமாக, ஒருவேளை உணவுக்காக திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் கூட ஈவிரக்கமின்றி மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த "சமூகவிரோதி" ஒழிப்பானது சில சமயங்களில் ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்களில் அங்கம் வகித்தவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பின்பாலானதாகவும் தனிப்பட்ட சமுதாய, சாதிய குரோதங்களின் பாலானதாகவும், தனிநபர் பழிவாங்கல்களாகவும் இருந்துள்ளது என்பது மற்றொரு உண்மையாகும்.

புளொட் இந்தச் "சமூகவிரோதிகள்" ஒழிப்பு நடவடிக்கையில் ஆரம்பகாலங்களிலிருந்தே ஈடுபட்டு வந்தது. புளொட் சிறுகுழு வடிவில் இருந்த ஆரம்பகாலங்களிலேயே இத்தகைய "சமூகவிரோதி" ஒழிப்புக்கள் ஒரு சிலரின் முடிவாக இருந்து வந்தது. புளொட்டால் மரணதண்டனை வழங்கப்பட்டவர்கள் மேல் சில சமயங்களில் தவறான அல்லது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. தனிப்பட்ட குரோதங்கள் தீர்த்துக் கொள்ளப்பட்டன.

சுழிபுரத்தைச் சேர்ந்த சிவனடியார் மகாலிங்கம் என்பவரை புளொட்டின் சுந்தரம் படைப்பிரிவினரைச் சேர்ந்தவர்கள் "சமூகவிரோதி" எனச் சுட்டுக் கொன்றனர். ஆனால், பிற்காலத்தில் அதே சுந்தரம் படைப்பிரிவினரைச் சேர்ந்தவர்கள் இக்கொலை பற்றித் தெரிவிக்கையில் சிவனடியார் மகாலிங்கம் தன்னை விடச் சாதியில் மேலான புளாட் உறுப்பினரின் உறவினரான கணவனை இழந்த பெண்ணுடன் உறவு வைத்திருந்தமையாலேயே அவர் "சமூகவிரோதி" எனக் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணச் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த சாதியமைப்பு முறையின் தாக்கம் எந்தளவுக்கு விடுதலை அமைப்புகளுக்குள் செல்வாக்கு செலுத்தியது என்பதற்கு ஒரு உதாரணமாகும்.

சில சமயங்களில் சமூகவிரோதி என்ற பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை இயக்கங்களின் கொடூரமான விசாரணைகளின் போது இறந்த சம்பவங்களும் உண்டு.

புளொட்டை பொறுத்தவரை 1983 இறுதிவரை மேற்கொள்ளப்பட்ட "சமூகவிரோதி" ஒழிப்பு நடவடிக்கைகளை புளொட்டால் செய்யப்பட்டவை என உரிமை கோரியிருக்கவில்லை. புளொட் என உரிமைகோருமிடத்து புளொட்டுக்கெதிரான உணர்வலைகள், எதிர்ப்புக்கள் மக்கள் மத்தியிலிருந்து உருவாகும் என புளொட் தலைமையிலிருந்தவர்கள் எண்ணியிருந்தனர். இதனால் புளொட்டால் மேற்கொள்ளப்பட்ட "சமூகவிரோதி" ஒழிப்பு " சுந்தரம் படைப்பிரிவு", "காத்தான் படைப்பிரிவு", "சங்கிலியன் பஞ்சாயம்" போன்ற வெவ்வேறு பெயர்களில் உரிமை கோரப்பட்டு வந்தது.

1984 ம் ஆண்டிலிருந்து புளொட்டின் மக்களைப்பின் வளர்ச்சியுடன் நிலைமைகள் மாற்றமடையத் தொடங்கின. மாவட்ட அமைப்புக்களில் செயற்பட்டுவந்த அமைப்பாளர்கள் மக்கள் மத்தியில் செல்லும்போது முகம் கொடுக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக இந்தச் சமூகவிரோதிப் பிரச்சனைகள் இருந்தது. இதனால் அமைப்பாளர்கள் "சமூகவிரோதிகள்" குறித்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைப்பாளர் சந்திப்புக்களில் வேண்டுகோள் விடுத்தனர். கடந்தகாலங்களில் புளொட் "சமூகவிரோதிகள்" ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்திருந்ததால் நாமும் இந்த "சமூகவிரோதிகள்" ஒழிப்பில் முரண்பாடற்றவர்களாக இருந்தோம்.

ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைப்புவடிவிலான செயற்பாடுகள் ஆரம்பித்த பின்னர் எந்தவிதமான முடிவாக இருந்தாலும் - மிகவும் மோசமான தவறான முடிவுகளாக இருந்தாலும் கூட - அந்த முடிவுகள் குழுமுடிவாக இருந்ததேயன்றி தனிப்பட்ட ஒருவருடையதாகவோ அல்லது ஒரு சிலரது முடிவாகவோ இருந்ததில்லை. அத்துடன் "சமூகவிரோதிகள்" ஒழிப்பாக இருந்தாலும் சரி ஏனைய நடவடிக்கையாக இருந்தாலும் சரி வெவ்வேறு பெயர்களில் உரிமை கோராமல் "தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்" என்றே உரிமை கோரினோம்.

(தொடரும்...)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com