Contact us at: sooddram@gmail.com

 

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 25)

(நேசன்)

"சமூகவிரோதிகள்" ஒழிப்பு: சமூகத்தைப்பற்றிய தவறான புரிதலின் வெளிப்பாடு

"சமூகவிரோதிகள்" பற்றிய பிரச்சனையை நாம் ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பின், அதுவும் நிலப்பிரபுத்துவ தளைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாத, சமூக ஏற்றத்தாழ்வுகளினால் விளைந்ததொன்றாக நாம் பார்க்கத் தவறியிருந்தோம். அது மட்டுமல்லாது மிகவும் மோசமான சாதிய அமைப்பு முறையை தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஒரு சமூக அமைப்பின் குறைபாடாக, ஒரு சமூகப் பிரச்சனையாக பார்ப்பதற்கு தவறியிருந்தோம். "சமூகவிரோதிகள்" பற்றிய பிரச்சனை ஒரு வர்க்கபார்வையற்ற, சமுதாயத்தைப்பற்றிய சரியான புரிந்துணர்வற்றதொன்றாகவே காணப்பட்டது. சமூகத்தைப் பற்றிய தவறான புரிதலிலிருந்து, சமூகத்தைப் பற்றிய தவறான பார்வையிலிருந்து பிரச்சனைகள் அணுகப்பட்டன. சமூகத்தின் கீழ்மட்டத்தைச் சேர்ந்த வறியமக்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களாகவே இருந்தனர். இவர்களது பின்தங்கிய சமூகநிலையிலிருந்து ஊற்றெடுக்கும் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு (அவர்களையே போராளிகளாக மாற்றுவதற்குப் மாறாக) அவற்றை அணுகுவதற்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட "சமூகவிரோதிகள்" ஒழிப்பின் நேரடியான தாக்கத்தை சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட வறிய மக்களே முகம் கொடுக்க நேர்ந்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் "சமூக விரோதிகள்" என மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட வறியமக்களாக இருந்தார்கள் என்பதுதான் உண்மையானது.

இந்தச் "சமூக விரோதிகள்" ஒழிப்பில் சில சமயங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் அல்லது குடும்ப உறவினர்கள் கொலை செய்யப்பட்டனர். இது எத்தகைய தவறான, மிகவும் மோசமான முடிவுகளை நாம் எடுத்திருந்தோம் என்பதைக் காட்டுகிறது.

நாம் (புளொட்) ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடுவதாகக் கூறிக்கொண்டு இத்தகைய கொடூரமான செயற்பாடுகளில் ஈடுபட்டதானது எமது கருத்துக்களுக்கும் செயல்களுக்குமான முரண்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.

"தராக்கி" சிவராமை புளொட்டுக்குள் உள்வாங்கிய கண்ணாடிச்சந்திரன்

மத்தியகுழு உறுப்பினரான கண்ணாடிச்சந்திரனால் வெளியிடப்பட்ட உரிமைகோரும் துண்டுப்பிரசுரமும், அதனால் ஏற்பட்ட குழப்பங்களும் அமைப்புக்குள் விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பிக் கொண்டிருந்தன. இவற்றை மக்கள் மத்தியில் வேலை செய்துகொண்டிருந்த நாம் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இதேகாலப் பகுதியில் புளொட்டின் தகவல் பிரிவில் ரமணனுடன் செயற்பட்ட கைதடியை சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் தர்மலிங்கம், மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த அக்கரைப்பற்றை சேர்ந்த தர்மரத்தினம் சிவராம் என்பவர் புளொட்டில் இணைந்து செயற்பட விரும்புவதாக கண்ணாடிச்சந்திரனிடம் தெரிவித்தார். சிவராமை கண்ணாடிச்சந்திரன் சந்தித்துப் பேசுவதற்கு தர்மலிங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டார். சிவராமை சந்தித்துப் பேசிய கண்ணாடிச்சந்திரன் சிவராமை புளொட்டில் இணைத்துக் கொள்ள உடன்பட்டார். நீண்ட நாட்களாக யாழ் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த தர்மரத்தினம் சிவராம் தன்னை ஏதாவது ஒரு இயக்கத்துடன் இணைத்துக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். எந்த இயக்கமுமே சிவராமை உள்வாங்க முன்வராத நிலையில் இறுதியில் கண்ணாடிச்சந்திரன் மூலமாக புளொட்டுடன் தொடர்பை ஏற்படுத்தி புளொட்டுடன் இணையும் முயற்சியில் இறங்கினார். அவரின் முயற்சி வெற்றியடைந்தது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற தர்மரத்தினம் சிவராம் கண்ணாடிச்சந்திரனால் புளொட்டுக்குள் உள்வாங்கப்பட்டு சில நாட்களிலேயே யாழ் மாவட்டத்தில் மக்கள் அமைப்பில் செயற்பட்டு வந்தவர்களுக்கு அரசியல்வகுப்பு எடுக்கும்படி கண்ணாடிச்சந்திரனால் பணிக்கப்பட்டிருந்தார். தர்மரத்தினம் சிவராம் மார்க்சிய நூல்கள் உட்பட பல்வேறு நூல்களையும் கற்றறிந்தவராக இருந்த அதேவேளை பேச்சுவன்மையும் அவரிடம் காணப்பட்டது. சிவராமை அமைப்புக்குள் உள்வாங்கி சிலநாட்களுக்குள்ளாகவே அவரை புளொட் உறுப்பினர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க அனுமதித்தது என்னைப் பொறுத்தவரை தவறானதொன்றாகவே உணரப்பட்டது. புளொட்டுக்குள் இராணுவப் பயிற்சிக்கென வந்தவர்கள் எல்லோரையுமே அவர்கள் பின்னணி என்னவென்று சரிவர ஆராயாது உடனேயே இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பியது போல, சிவராமின் பின்னணி என்ன என்று சரிவர தெரியாமலேயே புளொட்டுக்குள் உடனேயே இணைத்தது மட்டுமல்லாமல், அவரை அரசியல் வகுப்புக்கள் எடுக்குமாறும் கண்ணாடிச்சந்திரன் பணித்தது மிகவும் தவறானதொன்றாகும். மத்திய குழு உறுப்பினர்களின் நடவடிக்கைகளை கீழணி உறுப்பினர்கள் தட்டிக் கேட்கக்கூடிய நிலவரம் அப்போது புளொட்டில் இருக்காததால் கண்ணாடிச்சந்திரனுக்கு எனது முரண்பாட்டைத் தெரிவிக்க முடியவில்லை.

"எஸ்ஆர் - SR" என்று புளொட்டில் அழைக்கப்பட்ட தர்மரத்தினம் சிவராம் தனது பேச்சுவன்மையாலும், கவர்ச்சிகரமான பேச்சாலும் புளொட்டுக்குள் ஒரு கூட்டத்தை தன்னைச் சுற்றி உருவாக்கி கொண்டிருந்தார். தன்னை ஒரு மார்க்சிஸ்ட் என பெருமையாக சொல்லிக்கொண்டு, சேகுவரா போல முகத்தில் தாடியுடனும், ஒரு அதீத சிந்தனையாளன் போன்ற முகபாவனைகளோடும், தர்மரத்தினம் சிவராம் அரசியல் வகுப்புக்களை எடுத்துவந்த வேளை, சிவராமால் சிலவேளைகளில் மறைக்க முடியாமல் போன அவரது சூழ்ச்சியே உருவான வஞ்சகமான பார்வைகளை சிலர் இனம் காணத் தவறவில்லை.

இந்தியாவில் பயிற்ச்சி முடித்த புளொட் இராணுவப் பிரிவை சேர்ந்தவர்கள் சிறு சிறு குழுக்களாக இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு எந்தவிதமான வேலைத்திட்டங்களும் இருக்கவில்லை. கண்ணாடிச்சந்திரன் இவர்களுக்கு பொறுப்பாகவும் இவர்களது தேவைகளை கவனிக்க வேண்டியவராகவும் இருந்தார்.

தள நிர்வாகத்தை கவனித்தலுடன், இந்தியாவில் இருந்து பயிற்ச்சி முடித்து வந்தவர்களுடனான உறவுகளை பேணுதல் போன்ற வேலைப்பளுவும், இராணுவப் பயிற்ச்சி முடித்து வந்தவர்களின் எதிர்பார்ப்புகளை சரிவரப் பூர்த்திசெய்ய முடியாத நிலையும் இந்தியாவில் இருந்து பயிற்ச்சி முடித்து வந்தவர்களுக்கும் கண்ணாடிச்சந்திரனுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்ற வழிகோலியது.

கூடவே கண்ணாடிச்சந்திரனிடம் காணப்பட்ட இயக்க உறுப்பினர்கள் மீதான "கடும் போக்கும்" பணம் சம்பந்தமான விடயங்களில் கண்ணாடிச்சந்திரன் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடான, கறாரான போக்கும் கூட (இது என்னைப் பொறுத்த வரையில் தூய்மைவாதமே) இந்தியாவில் இருந்து பயிற்சி பெற்று வந்தவர்களுக்கும், கண்ணாடிச்சந்திரனுக்கும் இடையிலான முரண்பாட்டுக்கு காரணமாக அமைந்தது.

தன்மேல் சுமத்தப்பட்டிருந்த தாங்க முடியாத வேலைப்பளுவை உணர்ந்து கொண்ட கண்ணாடிச்சந்திரன் சில வேலைகளை ஏனையவர்களுக்கு பகிர்ந்தளித்து தன் மேல் உள்ள வேலைப் பளுவை குறைக்க முன்வந்தார். "செய்தி மக்கள் தொடர்பு திணைக்களம்" என்றொரு பிரிவை ஏற்படுத்தி அதற்கு பொறுப்பாக திருநெல்வேலியை சேர்ந்த விபுல் என்பவரை நியமித்தார். விபுலின் கீழ் திருநெல்வேலி ஞானம், கோண்டாவில் சிறி போன்ற பலர் பணியாற்றினார். புளொட்டினது அனைத்து பிரச்சார ஏடுகள், பத்திரிகைகள் உட்பட அனைத்து மக்கள் தொடர்பு வெளியீடுகளையும், அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிப்பதே செய்தி மக்கள் தொடர்பு திணைக்களத்தின் பணியாக இருந்தது.

தளத்தில் நிதி சம்பந்தமான பணிகளுக்கு சிவானந்தியை நியமித்ததை அடுத்து, நிதி சம்பந்தமான விவகாரங்களை சிவானந்தி கவனித்து வந்தார்.

சாவகச்சேரி பகுதிக்கு அமைப்பாளராக செயற்பட்டு வந்த சிவானந்தி தளத்தின் நிதிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து, சாவகச்சேரியை சேர்ந்த அப்பன் என்பவர் சாவகச்சேரிக்கு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தனது வேலைப்பளுவை குறைக்க, கண்ணாடிச்சந்திரன் பொறுப்புக்களை பகிர்ந்தளித்து கொடுத்த போதும்கூட தளத்தில் இருந்த மத்திய குழு உறுப்பினர்களான குமரனும் (பொன்னுத்துரை) கண்ணாடிச்சந்திரனுமே தளத்தில் அனைத்து செயட்பாடுகளையும் முடிவெடுத்து செயற்படுத்திக் கொண்டிருந்தனர்.

(தொடரும்....) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com