Contact us at: sooddram@gmail.com

 

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 8)

(நேசன்)

சுந்தரம் படுகொலையின் பின்னான சுந்தரம் படைப்பிரிவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதன் ஆரம்பகாலங்களிலேயே வெறுமனவே சுத்த இராணுவக் கண்ணோட்டம் கொண்ட ஒரு குழுவின் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கையாகவே இருந்து வந்தத(ஐயரின் "ஈழ விடுதலைப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற தொடரை படிக்கவும்). தமிழீழ விடுதலைப்புலிகளுக்குள் தோன்றிய முரண்பாடுகளும் அதன் பின்னான " புதியபாதைக்" குழுவினரின் பிரிவும் அன்றைய சூழலில் ஓரடி முன்னோக்கிய நகர்வாகவே பார்க்கப்பட வேண்டும். அன்றிருந்த சமூக, அரசியல் பின்னணியில் இருந்து " ுதிய பாதை " யின் பணியை மதிப்பீடு செய்வோமானால் இது புலனாகும். நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களுடன் கூடிய, பிரதேசவாத சிந்தனைகள், சாதிய அமைப்பு முறைகளுடன் கூடிய ஒரு "பிற்பட்ட" கலாச்சாரத்தைக் கொண்ட சமூகமாக எமது சமூக அமைப்பு இருந்தது. சிங்கள பேரினவாதம் ஒருபுறமும் தமிழ்க்குறுந்தேசியவாதம் மறுபுறமும் கோலோச்சிய காலமாக இருந்தது.

இத்தகையதொரு சூழலில் சுந்தரத்தின் முன்முயற்சியில் வெளிவந்த "புதியபாதை" ஈழ விடுதலைப் போராட்டத்தில் முற்போக்கான அரசியல் சிந்தனையின் ஒரு மைல் கல்லேயாகும். முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த தமிழர் விடுதலைக் கூட்டணி குறுந்தேசிய வெறியை மக்கள் மத்தியில் விதைத்து விட்டிருந்த வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் சுத்த இராணுவக் கண்ணோட்டத்துடன் கூடிய தனிநபர் பயங்கரவாதத்தையே அவர்களது அரசியலாகக் கொண்ட வேளையில், சுந்தரமோ இடதுசாரி அரசியலுடன் கூடிய மாற்றுக்கருத்தை மிகவும் துணிச்சலுடன் மக்கள் மத்தியில் கொண்டு சென்ற ஒரு எளிமையான போராளி. ஆனால் சுந்தரம் " புதியபாதை" பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்தபோதும் கூட, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பில் இருந்து பிளவுபட்டு வந்திருந்த காரணத்தால் அரசியல் ரீதியில் அதன் தொப்புள்கொடி உறவுகளிலிருந்து முற்றாக விடுபட்டிருக்கவில்லை என்றொரு உண்மையையும் நாம் கண்டுகொள்ள வேண்டும்.

அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு நேர் எதிரிடையான அரசியலை எடுத்துச் செல்லும் " புதியபாதை" பத்திரிகை தங்களை அம்பலப்படுத்துவதை விரும்பாத நிலையில் கூட்டணித்தலைமை அன்றிருந்தது. மக்கள் மத்தியில் சுதந்திரன் போன்ற பத்திரிகைகள் கூட்டணி சார்பாக குறுந்தேசிய வெறிகளைக் கிளப்பி கூட்டணிக்கு பலம் சேர்த்துக் கொண்டிருந்த நிலைமையை தலைகீழாக்கும் "புதியபாதை"யின் கருத்துக்கள் தகர்த்துவிடுமோ என்ற அச்சத்தினால் கூட்டணித்தலைமையால் வெறுக்கப்பட்டது. தனது பக்கத்தில் சார்ந்திருக்கும புலிகளுக்கு யார் யார் துரோகிகள் என சுட்டுவிரல் காட்டி மேடைகளில் பேசி தூபம் இட்டனரோ அவர்களை புலிகள் தமிழினத் துரோகிகள் என்று பெயரில் கொன்றழித்தனர்.

இவ்வாறே சுந்தரத்தின் கொலைக்கான அரசியல் காரணங்கள் அன்று திரண்டிருந்தன. கூட்டணியின் விருப்பை புலிகள் நிறைவேற்றி வைத்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுந்தரம் படுகொலையும் அதற்குப் பழிவாங்கும் முகமாக புளொட்டினால் மேற்கொள்ளப்பட்ட இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலைகளும், 1982 மே 19 சென்னை மாம்பழம் பாண்டிபஜாரில் உமாமகேஸ்வரன(முகுந்தன்), ஜோதீஸ்வரன் (கண்ணன்) ஆகியோரை கொல்வதற்காக அவர்கள் மீது பிரபாகரன் நடாத்திய துப்பாக்கி வேட்டுக்களுக்குப் பின்னான நாட்கள் இரண்டு அமைப்புக்களுமிடையிலான முறுகல் நிலையாக மாறியிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைமிரட்டல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு புளொட் நிர்ப்பந்திக்கப்பட்டது. இதனால் சுந்தரத்துடன் செயற்பட்டவர்கள் உட்பட சுழிபுரம் பகுதியையும் அதைச் சூழவுள்ள பகுதியினரும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கும் ஜனநாயக மறுப்புக்கும் எதிராக முகம் கொடுக்கத் தயாரானார்கள். சுந்தரம் சுழிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதாலும், புளொட்டின் ஆரம்பகாலங்களில் சுழிபுரத்தையும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலுள்ள இளைஞர்கள் கணிசமாக இருந்ததாலும், சுழிபுரத்தை மையமாகக் கொண்டு இவர்கள் செயற்படக் காரணமாக இருந்தது. இதன் ஆரம்ப காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கும், ஜனநாயக மறுப்புக்கும் எதிராக துணிச்சலுடன் முகம் கொடுத்தவர்கள் பின்னாட்களில் தம்மை "சுந்தரம் படைப்பிரிவு" என்ற பெயரில் அழைக்கத் தொடங்கியது மட்டுமல்லாமல் தமது நடவடிக்கைகளுக்கு "சுந்தரம் படைப்பிரிவு" என்றே உரிமையும் கோரினர். இவ்வாறு உருவான " சுந்தரம் படைப்பிரிவை" ச் சேர்ந்தவர்கள் புளொட்டுக்குள் ஒருவகை அதிகாரத்தன்மை கொண்டவர்களாகவும் புளொட்டினுடைய கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் வெளிப்படுத்திக் கொண்டனர். இலங்கையின் அரச படைகளுக்கு எதிராகப் போராடியது மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப்புலிகளின் எதேச்சதிகாரத்துக்கெதிராகவும் போராடி புளொட்டை வளர்த்தது தாம் என்பதால் " சுந்தரம் படைப்பிரிவு " தான் புளொட் என்ற ஒரு மனோநிலை இவர்களிடத்தில் வளர்ந்திருந்தது. இதனால் புளொட்டின் தளநிர்வாகத்துடன் முரண்பாடு கொண்டவர்களாகவும் தளநிர்வாகத்துக்கு கட்டுப்படாதவர்களாகவும் காணப்பட்டனர். " சமூகவிரோதிகள் ஒழிப்பு", தமது செலவீனங்களுக்குத் தேவையான பணத்தை அரச தபாற்கந்தோர் போன்ற இடங்களில் கொள்ளையிடுதல் மூலம் பெற்றுக் கொள்ளுதல், அன்றாட தனி நபர்சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் (சாதிப்பிரச்சனை, காதல் விவகாரங்கள்) தலையிடுதல் என்பனவற்றில் தாமாகவே முடிவெடுத்து செயற்பட்டனர். இவர்களிடையே சாகசப் போக்கும் ஆயதக் கவர்ச்சியும் குழுவாதமும் தலையெடுத்திருந்தது. புளொட்டின் அரசியல் கருத்துக்கள் எதுவும் தங்களுக்கு பொருந்தாதது அல்லது நடைமுறைக்குதவாதது என்ற கருத்துப் போக்கும் இவர்களிடம் காணப்பட்டது. உமாமகேஸ்வரனுடன் தமக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும் அவரின் அனுமதியுடன் தான் செயற்படுவதாகவும் இதற்கு விளக்கம் கொடுத்திருத்தனர். எந்த எதேச்சதிகாரப் போக்கு தவறானதென்று சுந்தரம் படைப்பிரிவினர் தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்கொண்டார்களோ, பின்பு அதே எதேச்சதிகாரப் போக்குகளுடன் சுந்தரம் படைப்பிரிவினர் புளொட்டுக்குள் விருட்சம் போல் வளர்ந்து நின்றனர். 

(தொடரும்....) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com