Contact us at: sooddram@gmail.com

 

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 9)

(நேசன்)

எதேச்சதிகாரப் போக்குடன் சுந்தரம் படைப்பிரிவினர்

புளொட்டில் முழுநேரமாக செயற்பட்ட சிலர் தங்கள் செலவுக்கென ( உணவ, போக்குவரத்து) மாதாந்தம் பணம் பெற்று வந்தனர். ஆனால் அதற்குச் சரியான கணக்கு எழுதப்பட்டு தலைமையிடம் அல்லது சம்பந்தப்பட்ட நபருக்குப் பொறுப்பானவரிடம் கொடுக்கப்பட வேண்டும். சுந்தரம் படைப்பிரிவினரைச் சேர்ந்தவர்களோ செலவுகளுக்கு கொடுக்கும் பணத்துக்கு கணக்குக் கொடுப்பதைத் தவிர்த்து வந்தனர். இவர்களது இத்தகைய தவறான போக்கை நிறுத்துவதற்கு செலவுகளுக்கான கணக்கு கொடுத்தால் மட்டுமே பணம் கொடுப்பதென்று முடிவாகி சந்ததியாரின் வேண்டுகோளின் பேரில் சுந்தரம் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்குப் பணம் கொடுப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சுந்தரம் படைப்பிரிவினர் மானிப்பாய் தபால் அலுவலகத்தை கொள்ளையிட்டு தமது செலவுகளுக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டனர். புளொட்டினுடைய கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்படியாதவர்களாக, அதன் நடைமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்களாக, தள நிர்வாகத்துக்குக் கீழ்ப்படியாதவர்களாக சுந்தரம் படைப்பிரிவினர் விளங்கினர்.

சந்ததியார் அமைப்புக்குள் கொள்கை கட்டுப்பாடு என்பவற்றை தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒருவர். சுந்தரம் படைப்பிரிவினரின் தவறான போக்குகளுக்கு எதிராக சந்ததியார் நேரடியாகவும் வெளிப்படையாகவும் நடவடிக்கைகளை எடுத்து வந்தவர். இதனால் சந்ததியார் மீது வெறுப்புணர்வும் காழ்ப்புணர்ச்சியும் கூட இவர்களிடத்தில் வெளிப்படையாகக் காணப்பட்டது. சந்ததியார் சுந்தரம் படைப்பிரிவினரின் தவறான போக்குகள் மேல் காட்டிய "கடும்" போக்கும், அதேவேளை உமாமகேஸ்வரன் அவர்கள் மேல் காட்டிய "மென்" போக்கும் சுந்தரம் படைப்பிரிவினரிடையே சந்ததியார் மீதான வெறுப்புணர்வை வளர்ப்பதற்கு காரணமாக இருந்தது மட்டுமல்லாது அவர்களை உமாமகேஸ்வரனை நோக்கி அணிதிரளவும் வைத்தது. இதுவே அமைப்புக்குள்ளே குழுவாதம் தோன்றி வளர்வதற்கும் காரணமாக அமைந்தது.

அரசியல் பேசுபவர்கள் கொள்கை மற்றும் கட்டுப்பாடு பற்றிப் பேசுபவர்கள் சந்ததியாரின் கருத்துக்கு ஆதரவாகக் காணப்பட்டனர். மக்கள் அரசியலைப் புறக்கணித்த கொள்கை கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாக் காட்டிக் கொண்டவர்கள் உமாமகேஸ்வரனைச் சுற்றி அணிதிரண்டனர்.

வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து போட்டோப்பிரதி இயந்திரம்,றோணியோ இயந்திரம் போன்றவற்றை கொள்ளையிடுவதென்று சுந்தரம் படைப்பிரிவினர் முடிவு செய்திருந்தனர். இந்தத் தகவலை அறிந்து கொண்ட மத்தியகுழு உறுப்பினர்களான சத்தியமூர்த்தியும், கேதீஸ்வரனும் இத்தகைய தேவையற்ற, தள நிர்வாகக்குழுவின் முடிவற்ற ஒரு கொள்ளை தேவையல்ல என்றும், இதனை உடனே நிறுத்தும்படியும் தள நிர்வாகப் பொறுப்பாளர( காந்தன்- ரகுமான் ஜான்) கேட்டுக் கொண்டனர். ஆனால், தள நிர்வாகப் பொறுப்பாளரான காந்தன(ரகுமான் ஜான்) இந்த விடயத்தில் நேரடியாக முகம் கொடுத்து உரியமுறையில் தீர்த்துவைப்பதைத் தவிர்த்து சத்தியமூர்த்தியையும் கேதீஸ்வரனையும் அவர்களே கையாளும்படி விட்டுவிட்டார். மத்தியகுழு உறுப்பினர்களான இருவரும் சுந்தரம் படைப்பிரிவினரிடம் சென்று பேசினர். மத்தியகுழு உறுப்பினர்களுடன் நீண்ட தர்க்கத்தில் ஈடுபட்ட சுந்தரம் படைப்பிரிவினர் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டனர் வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி கொள்ளையிடப்பட்டது. இந்தக் கொள்ளை, அன்று எந்தவித தேவையுமற்ற எந்தவித பயனுமற்ற கொள்ளை என்பதோடு மட்டுமல்லாமல், புளொட்டின் தளநிர்வாகத்தின் முடிவில்லாத, மத்தியகுழு அங்கத்தவர்களின் சரியான கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத, புளொட்டின் இராணுவப்பிரிவு என்று சொல்லப்படும் ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான செயற்பாடாகும் இதுபோன்ற தன்னிச்சையான முடிவுகளும் செயற்பாடுகளும் புளொட்டின் ஆரம்ப காலங்களிலேயே புற்றுநோய் போல் தோன்றி வளர்ந்து வந்தது.

(தொடரும்....) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com