Contact us at: sooddram@gmail.com

 

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 4)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.


1970 களில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஆரம்பித்த தீவிரவாதம் மிக்க அரசியல் செயற்பாடு 1972 களில் மாணவர் போராட்டங்களாக வெளிப்படத் தொடங்கியது. பல்கலைக் கழக அனுமதியில் தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மாணவர்களைவிட மொழி இன ரீதியில் காட்டப்பட்ட தரப்படுத்தல் பாகுபாடு தமிழ் மாணவர்கள் மத்தியில் எழுச்சிக்களுக்கு வழி கோலின. இன மொழி ரீதியான தரப்படுத்தலில் இருந்த பாகுபாட்டை எதிர்த்து தமிழ் மாணவர் போராட்டங்களை முன்னெடுத்தனர். பின்தங்கிய பிரதேசங்களுக்கு பல்கலைக் கழக அனுமதியில் வழங்கிய சலுகைகள(பிரதேச அடிப்படையிலான தரப்படுத்தல்) யாழ்பாணம் தவிர்ந்த ஏனைய பின்தங்கிய தமிழ் மாவட்டங்களுக்கு நன்மையாக அமைந்திருக்கின்ற என்பதை மூடி மறைத்தனர் இந்த யாழ்ப்பாண மையவாத போராட்டக்காரர்.

யாழ்ப்பாணம் கொழும்பு கண்டி மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்ட மாணவர்கள் பிரதேச தரப்படுத்தல் முறமையினால் நன்மை அடைந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் பின்தங்கிய பிரதேச பல்கலைக்கழக அனுமதி முறமைகளில் உள்ள சலுகைகளை அப்பிரதேசங்களுக்கு தற்காலக இடம்பெயர்வுகள் மூலம் யாழ்ப்பாண மாணவர்களும் பயன்படுத்திக் கொண்டதுதான். கூடவே தமிழர்களுக்குள்ளேயே சாதி ரீதியாக தாழ்ந்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியிருந்தே கல்வி மறுப்பு என்ற மேட்டுக்குடி மக்களின் கல்விப் பாகுபாடும் நீண்டகாலமாக மூடி மறைக்கப்பட்டு வந்ததும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

தமது பிள்ளைகள் சாதாரண அரச பாடசாலைகளில் கல்வி கற்க வைத்து சமூகத்தின் சகல பிரிவின் வாழ்வையும் அறிய வைத்த பேராசிரியர் கைலாசபதிக அதிபராக செயற்படும் போது அதிகார வர்க்கத்திறகுரிய செயற்பாட்டை தன்னகத்தே கொண்டிருக்காமல் மாணவர் சமூகத்திற்கு சமத்துவ கொள்கையை அறிமுகப்படுத்திய கார்திகேயன் போன்ற நல் ஆசான்கள் பலர் தோன்றியிருந்தால் தமிழருக்குள் தமிழர் போட்டுக்கொண்ட கல்வி மறுப்பு தரப்படுத்தல் இல்லாமல் உடைத்தெறியப்பட்டிருக்கும்.

பல்கலைக் கழகத்திற்கு தெரிவுக்கு அறிமுகப்படுத்திய தரப்படுத்தல் முறமை அறிமுகப்படுத்துவதற்கு முதல் வருடம் ராஜினி யாழ்பாணத்திலிருந்து கொழும்பு மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெற்றிருந்தார்.

மாணவர் போராட்டங்களுடன் ஆரம்பமான தமிழ் மக்களின் போராட்டம் 1974 களில் ஆயுதம் தாங்கிய செயற்பாடுகளுக்குள் புகுந்து கொண்டது. தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்பு ஜேஆர் அரசினால் திட்டமிட்டு தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மூலம் முழு வீச்சில் வீங்கிப் பெருத்தது. 1971 ஏப்ரல் மாதம் தென் இலங்கையில் இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசுக்கெதிராக ஜேவிபியினால் முன்னெடுக்கப்பட்ட அவசர ஆயுதக் கிளர்ச்சிகளைத் தொடர்ந்து 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்களை இலங்கை இராணுவம் சுட்டு கங்கைகளில் வீசியது. இக் கொலைகளில் தயாபால திரணகம தமது கிராம மக்களினால் காப்பாற்றப்பட்டு இருந்தார்.

இக் கொலைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியிலிருந்து எதிர்பலைகள் போராட்டங்கள் சிறிய அளவிலேனும் நடைபெறவில்லை. தமிழ் மக்கள் மத்தியிலிருந்த அரசியல் தலைமைகள் இதற்கான முன்னெடுப்புக்கள் எதனையும் செய்யவில்லை. இலங்கையின் அன்றைய பிரதம மந்திரி பாதுகாப்பிற்காக சில தினங்கள் தென்னிலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து யாழ்ப்பாணக் கோட்டையில் தங்கியிருத்தல் பாதுகாப்பானது என்ற முடிவுகளின் அடிப்படையில் செயற்படும் அளவிற்கு யாழ்ப்பாணம் பாதுகாப்பான பிரதேசமாக காணப்பட்டது என்பது இங்கு கவனிக்கதக்கது.

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக சிங்கள தமிழ் மக்கள் முடிந்தளவில் இணைந்து போராடுதல் என்பதற்கான வாய்ப்புக்களை தமிழ் தரப்பு எப்போதும் தவற விட்டும் நிராகரித்தும் வந்திருக்கின்றது. பேரினவாதம் இதற்கான வாய்ப்புக்களை இல்லாது செய்திருந்தது. இதனாலேயே ஜே.ஆர் ஜெயவர்த்தன போன்றவர்களினால் தென்னிலங்கை எங்கும் 1977 களில் நடைபெற்றது போன்ற இன சுத்திகரிப்புகளை சிங்கள மக்களின் பாரிய எதிர்ப்புக்கள் ஏதும் இன்றி செய்யக் கூடியதாக இருந்தது.

ஆனால் சிங்கள மக்கள் மத்தியிலிருந்த நல்ல உள்ளங்கள் இப்படியான இனக் கலவரங்களின் போதெல்லாம் இலங்கையின் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்ந்து வந்த பல இலட்சம் தமிழ் மக்களை காப்பாற்றியிருக்கின்றார்கள் என்பது கவனிக்க தக்கது. வடக்கில் ஒரு சிங்கள மகன் ஈறாக அங்கு வாழ முடியாத செயற்பாட்டையும் இதே போல் பாரம்பரியமாக வடக்கில் வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் மகன் அங்கு தங்க முடியாத சூழலையும் புலிகள் ஏற்படுத்தியதை போன்று தென்னிலங்கையில் தமிழ் மக்கள் வாழ முடியாது என்று எந்த சாதாரண சிங்கள மகனும் அல்லது சிங்கள அமைப்பும் கட்சியும் கொள்கை ரீதியாக கொண்டிருக்கவில்லை என்பது இங்கு கவனிக்க தக்கது.

(தொடரும்......) (பகுதி 5),

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com