Contact us at: sooddram@gmail.com

 

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 7)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

புலிகளுடனான உறவுகளை 1982 ஆரம்பித்த இவர் புலிகளுடனான முரண்பாடுகள் காரணமாக தனது ஸ்தாபன உறவுகளை 1984 உடன் முறிதுக்கொண்டார் பொதுவாகவே புலிகள் தமது இயக்கத்தில் இணைந்த யாரும் இயக்த்தை விட்டு வெறியேறுவதை அனுமதிப்பது இல்லை விரும்புவதும் இல்லை. அப்படி யாராவது தன்னிச்சையாக வெளியேறினால் அவர்கள் தொடர்ந்தும் மௌனமாக வாய்விலங்கிட்டு தமது ஆயுள் காலம் வரை இருத்தல் வேண்டும். முள்ளிவாய்காலில் புலிகளின் சரணாகதி அழிவிற்குப் பின்னர் இன்றுவரை இது நீடிக்கின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதனைக் கடைப்பிடிக்க தவறியவர்கள் புலிகளின் ஆயுதங்களால் நிரந்தரமாக மௌனிக்கப்படுவார்கள். இந்த நடைமுறையை உடைத்தெறிந்து புறப்பட்டவர்கள் ராஜினியைத் தவிர்த்து யாரும் இல்லை என்றே கூறலாம்.

புதிய அமைப்பொன்றையே நிறுவி அரச பாதுகாப்புடன் செயற்படும் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி இதற்கு முற்றுப்புள்ளி வைத்ததாக பார்க்கப்பட்டாலும் அவர் பிரிந்து சென்ற சூழல் காலகட்டம் நிலமைகள் அவர் புலிகளில் இருந்த இரண்டாவது நிலை பொறுப்பும் அவர் பிறந்த கிழக்கு மாகாண சூழலும் காரணமாக இருந்தன. இவர் தனி நபராக இல்லாமல் பெரும் படையாக பிரிந்து சென்றார் என்பதுவும் கவனிக்கத்தக்கது. இதனைத் தவிர்த்து தனி நபர்களாக புலிகளிலிருந்து ஒதுங்கி மௌனம் காக்காதவர் என்று யாரும் இல்லை. அவ்வளவு மரணப்பயத்தை ஏற்படுத்தியிருந்த திறமை புலிகளிம் மட்டுமே இருந்தது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் விதிவிலக்காக அமைந்தவர் ராஜினி திரணகம என்றால் மிகையாகாது.

ஆமாம் புலிகளுடனான முரண்பாடுகளுடன் அவ் அமைப்பிலிருந்து வெறியேறிய ராஜனி தனது இலண்டன் மருத்துவத்துறை சிறப்பு படிப்பை முடித்துக் கொண்டு யாழ்ப்பாண மருத்து பீடத்திற்கு சிறப்பு விரிவுரையாளராக திரும்பினார். இங்கும் ஒரு கேள்வி தொக்கி நிற்கின்றது. இலண்டனில் ராஜினியின் புலிகளுடனான தொடர்பு சர்வதேசம் அறிந்தது. இலங்கையும் அறிந்தே இருக்கும். மீண்டும் இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தினூடு பயணிப்பதற்கான பாதுகாப்பு சிக்கலை ராஜினி எவ்வாறு சமாளித்தார் என்பதே அது. இக்காலகட்டத்திலேயே புலிகள் வடக்கு கிழக்கு எங்கும் மாற்று ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் போராடும் உரிமைகளை துப்பாக்கி முனையில் வலிந்து பறித்துக்கொண்ட கால கட்டம் ஆகும். ராஜினி புலிகளின் திறந்த சிறைச்சலையாக இருந்த வடமாகாண யாழ்பாணத்தில் தனது இரு குழந்தைகளுடன் குடியேறினார். அத்துடன் நிற்காமல் மனித உரிமை அமைப்பாக தம்மை பிரகடனப்படுத்திய யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் மனித உரிமைகள் அமைப்பு என்ற அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவாராக செயற்பட்டார் என்ற தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

1986 களில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக புறப்பட்ட ஒவ்வொரு விடுதலை அமைப்புக்களை இந்தியாவின் கை கூல,ி எம்மை அழிக்க தீர்மானித்து இருந்தனர், தாமே தமது செயற்பாட்டை நிறுத்திக் கொண்டு ஒதுங்கிவிட்டனர், எம்முடன் கலந்து விட்டனர் என்று கூறி துப்பாக்கிகளால் வட கிழக்கில் செயற்படவிடாது தடுத்த போது எந்த புத்திஜீவிக் கூட்டமும் இந்த புலிகளின் ஏகபோக பாசிச செயற்பாட்டிற்கு எதிராக வீதியில் இறங்கவில்லை, போராடவில்லை, கொலைகளை தடுத்து நிறுத்தவில்லை. இன்னொருவகையில் மௌனம் காத்து தவறுகளுக்கு வழிவிட்டு நின்றனர். சிலர் குளிர்பானம் பரிமாறி மகிழ்ந்தனர். சிலர் வாய்புக்களைப் பயன்படுத்தி பிரமுகர் ஆகினர். இவர்கள் அன்று யோசிக்கவில்லை இந்த ஆயுத ஏகபோகம் ஒரு முள்ளிவாய்கால் முடிவுகளை இறுதியில் கொண்டு வந்து நிறுத்தும் என்று.

ஆனால் வரலாறு முன்னோக்கியே எப்போதும் நகரும் என்பதற்கு இணங்கு 33 வருடங்கள் கழிந்த நிலையில் ஒரு மிருகத்தினால் வலிந்து சிறைப்பிடிக்க இன்னொரு மிருகத்தினால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் மரணங்களின் சாம்பல் மேட்டில் மண்டியிட்டு இரவல் கோணத்துடன் படுத்துறங்கிய விளைவுகளுடன் தனது கோர நிகழ்வுகளை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது.

33 வருடங்களுக்க முன் எம்மில் சிலர் இதனை அன்றே எதிர்வு கூறியிருந்தனர் இந்த 2009 மே மாதத்தை எதிர்வு கூறியவர்களில் பலர் துப்பாக்கிகளுக்கே பலியாகியும் விட்டனர். சிலர்
உங்கள் முன்னேயும் நிற்கின்றோம்.

(தொடரும்......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com