Contact us at: sooddram@gmail.com

 

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 8)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

1986 டிசம்பர் தொடக்கம் 1987 ஜுலை வரையிலான காலப்பகுதியில் வடக்கு - கிழக்கில் புலிகள் தமது ஏகபோக முடியாட்சியை நடத்தினர். இக்காலகட்டத்தில் புலிகள் தவிர்ந்த வேறு எந்த அமைப்புக்களும் வடக்கு கிழக்கில் செயற்பட முடியவில்லை. விதிவிலக்காக தீப்பொறிக் குழு பல்கலைக்கழக ஆசிரியர் மனித உரிமை அமைப்பு போன்ற அமைப்புக்கள் தனது மட்டுப்படுத்திய புலிகளை கோபத்திற்குள் உள்ளாக்காத செயற்பாட்டை மட்டும் கொண்டிருந்தனர்.

வடமராட்சியில் ஆரம்பித்து யாழ்பாணத்தை கைப்பற்றுதல் என்ற இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கையை தடுத்து நிறுத்த 1987 ஜுன் 2ம் திகதி ஒப்பரேசன் பூமாலை என்ற மனிதாபிமான சாப்பாட்டு பொதிகளை ஆகாயத்திலிருந்து வீசுதல் என்ற நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி தனது வழிக்கு ஜேஆர் ஜெயவர்தனாவை கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து ஜேஆர் ஜெயவர்தனவுடன் ராஜீவ் காந்தி வடக்கு கிழக்கில் அதிகாரப் பரவலாக்கலுக்கான இலங்கை இந்திய ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய அமைதிகாக்கும் படையின் வடக்கு கிழக்கிற்கான வருகையும் நடைபெற்றன. பூரண கும்பம் மாலை ஆரத்தி கூடவே இந்திய அமைதிகாக்கும் படையின் இராணுவ வாகனத்தில் இந்தியக் கொடியுடன் கூடிய புலிக்கொடியுடன் இருவரும் ஒன்றாக பவனி வருதல் என்று தேன்நிலவுடன் புலிகள் இந்திய அமைதிகாக்கும் படை உறவுகள் வடக்கு கிழக்கு எங்கும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏனைய விடுதலை அமைப்புக்கள் மீண்டும் வடக்கு கிழக்கில் தமது அரசியல் செயற்பாட்டை ஆரம்பிக்க தொடங்கின. போர் நிறுத்தம் சமாதானம் என்று ஆரம்பித்த இந்த ஜனநாயக இடைவெளியை பாவித்து ராஜினி போன்றவர்களால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர் மனித உரிமை அமைப்பும் தனது செயற்பாட்டை விஸ்தரித்தது.

இந்திய அமைதிகாக்கும் படையுடனான தேன் நிலவு புலிகளுக்கு சீக்கிரத்தில் கசத்தது. இதற்கு முக்கிய காரணம் ஏனைய விடுதலை அமைப்புக்களின் செயற்பாடுகள் தமது ஏகபோகத்தை இல்லாமல் செய்துவிடும் என்பதினால். மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். தருணம் பார்த்து இருந்தனர் புலிகள் இவற்றிற்கு முற்றுப் பள்ளி வைக்க. கடலில் ஆயுதக் கப்பலுடன் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமது உறுப்பினர்கள் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையை இந்திய அமைதிப்படை நிறைவேற்றவில்லை என்ற கோதாவில் புலிகள் இந்திய அமைதிப்படையை வலிந்த யுத்தத்திற்குள் இழுத்தனர். இதனையே ஜேஆர் என்ற குள்ள நரி இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது எதிர்பார்த்து செயற்பட்டார். இதற்கு செயல்வடிவம் கொடுத்தார்கள் புலிகள்.

இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் இடையிலான சண்டை ஆரம்பிப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் மட்டக்களப்பில் புளொட் ஈபிஆர்எவ்எவ் உறுப்பினர்கள் நூற்றுக் கணக்கானவர்கள் புலிகளின் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்று இந்திய இராணுவத்தின் கண்முன்பே மட்டக்களபு மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டனர். இதனைத்
திசை திருப்புவதற்கான தருணமாகவும் வலிந்த சண்டை நிகழ்வுக்கு திகதி குறித்திருந்தனர் புலிகள்.

புலிகள் இந்திய அமைதி காக்கும் படையேயான யுத்தத்தின் போது இரு தரப்பினரும் மனித உரிமை மீறல்களை செய்தனர். இவ்விடயங்களை ராஜினி பல்கலைக்கழக ஆசிரியர் மனித உரிமை அமைப்பு ஊடாக அறிகை வெளியீடுகள் மூலம் அம்பலப்படுத்தி வந்தார். பல்கலைக்கழகம் என்ற தளத்திற்கு அப்பால் இவ் செயற்பாட்டை விரிவு செய்திருந்தால் இன்னும் பல வெற்றிகளை இவர்கள் கண்டிருக்க முடியும். இவர்களிடம் இருந்த மத்தியதர புத்திஜீவித் தன்மை இதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

(தொடரும்......)(பகுதி 9)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com