Contact us at: sooddram@gmail.com

 

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 10)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர் தேசிய விடுதலைப் போராட்ட வீரர் ஒரு சமூக விடுதலைப் போராளி தமது செயற்பாட்டில் முழுமை பெற்று வெற்றி பெற வேண்டுமாயின் அவர்கள் நிச்சயமாக இடதுசாரிகளாக இருக்க வேண்டும். அன்றேல் அவர்களால் தமது போராட்ட வடிவங்களை செயற்பாடுகளை முழுமையாக செயற்படுத்த முடியாது. வெற்றி காண முடியாது. இதனை நாம் சர்வதேச விடுதலைப் போராட்டத்தில் மட்டும் அல்ல இலங்கையில் நடைபெற்ற தமிழ் சிங்கள் மக்களின் ஆயுதப் போராட்டத்திலும் கண்டிருக்கின்றோம்.

ராஜினி புலிகளில் ஒரு தீவிர செயற்பாட்டாளராகவும் ஒரு அடையாளம் காட்டும் அங்கரிக்கும் சர்வதேச புத்திஜீவியாகவும் இருந்தவர். புலிகளை விட்டு முரண்பாடுகள் காரணமாக வெளியேறியவர். அதுவும் புலிகளின் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் பற்றிய முரண்பாடுகளினால் வெளியேறியவர். இதனை வெளிப்படையாக பேச்சு, அறிக்கை, செயற்பாடுகள் மூலம் விமரசித்துவந்தவர். கூடவே முறிந்த பன(இந்த புத்தகத்துடன் சம்மந்தப்பட்ட மற்றயவர்கள் புலிகளில் உறுப்பினராக எப்போதும் இல்லாது இருந்தவர்கள்) என்ற புத்தகத்தின் வெளியீடும் புலிகளின் தலைவர்களின் ஒருவரான திலீபனின் இறந்த உடலை புலிகள் தங்கள் விருப்பிற்கு ஏற்ப கையாள முற்படுகையில் ஒரு மருத்துவராக விரிவுரையாளராக பொறுப்பு மிக்க பல்கலைக்கழக நிர்வாகியாக ராஜினி செயற்பட்டது புலிகளுக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியிருந்தது. இவைகளே புலிகள் ராஜினியைக் கொல்வதற்கு அவசரப்பட்டதற்கான காரணங்கள் ஆகும். புலிகளின் ஏகபோக ஆதிகத்திலிருந்த பிரதேசத்திருந்து கொண்டு புலிகளின் மனித உரிமை மீறல் செயற்பாட்டையும் விமர்சித்துக் கொண்டு இவ்வளவு காலமும் உயிர்தப்பியது அவரின் பிரபல்யம் பல்கலைகழக விரவுரையாளர் என்ற பதவி சர்வதேச ரீதியில் அவருக்கு இருந்த தொடர்பு என்பனவே காரணம் ஆகும்.

இந்தக்காலகட்டதில் தென் இலங்கையில் ஜேவிபி தமிழ் மக்களுக்கு வழங்கிய அதிகாரப் பரவலாக்தை ஆதரித்த சகல நபர்களையும் சிறப்பாக இடதுசாரிகளை தேடி அழித்துக் கொண்டிருந்தனர். இதற்கு பிரேமதாஸாவின் ஆசீர்வாதம் இருந்து கொண்டே இருந்தது. இதேபோல் புலிகளும் பிரேமதாஸாவுடன் நல்ல உறவை ஏற்படுத்தி இதே அதிகாரப் பரவலாக்க ஆரம்ப புள்ளிக்கு எதிராக செயற்பட்டனர். ஆக பிரேமதாச இலங்கை அரசு ஜேவிபி புலிகள் என்ற மூன்று தரப்பும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக கிடைக்கிவிருந்த அதிகாரப் பரவலாக்கத்திற்கான ஆரம்ப புள்ளிளை இல்லாமல் செய்வதில் இயைந்து இணைந்தே செயற்பட்டனர்.

அதிகாரப் பரவலாக்கத்திற்கு ஆதரவாக கருத்துக் கொண்டிருந்த தயாபால திரணகம் ஜே.வி.பி புலி பிரேமதாஸ என முத்தரப்பினருக்கும் தலைமறைவாக இருக்க வேண்டும் என்ற நிலையிலேயே இருந்தார்.

ஜேவிபியும் புலிகளும் ராஜினியை தனது குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மட்டும் செயற்பட தள்ளியது. இதேபோல் தயாபாலாவை சிறந்த தகப்பனாக மட்டும் செயற்பட தள்ளியது. மாறாக ராஜினி தயாபால இருவரையும் இரு குழந்தகளுக்கும் சிறந்த தாய் - தந்தையாக இணைந்து செயற்படும் வாய்புக்புகள் எற்படுவதை தடுத்தே வந்துள்ளது. தாயை பறிகொடுத்த பின்பு தாயின் அரவணைப்பில் வாழ்ந்த 9 வயது சரிகா 11 வயது நர்மதா என்ற பிஞ்சுகளை தனது சிறகுக்குள் அரவணைத்தபடி 1989ம் ஆண்டு பிற்பகுதியில் இலங்கையை விட்டு வெளியேறினார். இங்கும் கேள்வி ஒன்று தொக்கு நின்றாலும் தயாபாலா திரணகமவின்; வெளிநாட்டு பாதுகாப்பு பயணத்திற்கு உதவி செய்த அந்த நல்ல உள்ளத்திற்கு நான் தலைவணங்குகின்றேன். என் அனுபவங்களிலிருந்து இந்த தலைவணங்கலை நான் செய்கின்றேன்.

தோழர் ஜேம்ஸ்
ஆகஸ்ட் 19, 2012

(முற்றும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com