Contact us at: sooddram@gmail.com

 

மங்குனி சீமானும் அவரின் மொக்கை அரசியலும்? (பகுதி 3)

இப்படியாக இந்துத்துவ பாசிச அடக்குமுறைக்கு எதிராகத்தான் தமிழகத்தில் தலித்துகள் தேவாலயங்களிலும் மசூதிகளிலும் தஞ்சம் புகுந்தார்கள். இந்த வரலாற்றுப் பின்னணி தெரியாமல் கிறித்தவ முரண்பாடு, இசுலாமிய முரண்பாடு என்று உளறுவதெல்லாம் இந்துத்துவத்திற்கு, மனுதர்மத்திற்கு, பார்ப்பனியத்திற்கு சாமரம் வீசுவதாகத்தான் அமையும். வரலாற்று அறிஞர்களும் சமூக அறிஞர்களும் இன்னும் சமூகத்தைச் சீர்திருத்த வந்த அறிஞர் பெருமக்கள் எல்லாம் இந்துத்துவத்தையும் அதற்கு அடிப்படையாக இருக்கிற சாதியத்தையும் வேரறுக்க வேண்டும் என்று பரப்புரை செய்துவிட்டபிறகு, அந்த இந்துத்துவ பாசிசத்துக்கு எதிராக சீமான் ஏதாவது புரட்சி செய்யலாமே.

மனுதர்மத்தைக் கட்டிக் காக்கவும், இந்துத்துவத்தைக் கட்டிக்காக்கவும், சாதியத்தைக் கட்டிக் காக்கவும் வாழ்நாள் முழுக்க செயல்பட்ட முத்துராமலிங்கத் தேவர், 'நாங்கள் இந்துக்கள் இல்லை' என்று கலகம் செய்த தலித்துகளுக்கெதிராக அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார். இத்தகைய அடக்குமுறைக்கெதிராகக் களமாடியவர்தான  இமானுவேல் சேகரன். இதைப் பொறுக்க முடியாமல்தான் இமானுவேல் சேகரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையின் முதல் குற்றவாளி முத்துராமலிங்கத் தேவர்தான். (அரசியல் - சமூகப் பின்புலத்தால் பின்னர் முத்துராமலிங்கத் தேவர் விடுதலை செய்யப்பட்டார்.) தலித்துகள் இன்றளவும் அக்கொடூரத்தை மறக்கவில்லை. ஆனால் சீமான் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு மாலைபோட்டு மரியாதை செய்கிறார். 

தமிழர்களிலேயே எந்தத் தமிழன்? என்ன சாதி? சாதியில் என்ன பிரிவு? பிரிவில் என்ன வகையறா? என்றெல்லாம் தமிழன் கொலைவெறியோடு சுற்றிக்கொண்டிருக்கிறான்.

முதலில் 'நாம் தமிழர்' என்று முழங்குபவர்களுக்கு தமிழகச் சூழலில் தமிழர்களுக்கு எது முதன்மையான பிரச்சனை? தமிழர்களை ஒன்றுசேர விடாமல் தடுப்பது எது என்கிற வரலாற்று, சமூக, அரசியல் அறிவு அவசியம். பன்னெடுங்காலமாக கூறுபோடுவது சாதியும் மதமும்தான். இவைதான் தமிழரின் வீழ்ச்சிக்கு மூலம். ஊர் என்றும் சேரி என்றும் இரண்டு குடியிருப்புகள் இன்னும் இருக்கத்தானே செய்கிறது. இதைவிட வேறு என்ன அவமானம் இருக்கிறது? தமிழர்களே ஊர்த்தெரு தமிழர்களாகவும், சேரித்தெரு தமிழர்களாகவும் பிரிந்து கிடக்கிறார்கள். சக மனிதன் சாதியின் பெயரால் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டு இழிவுபடுத்தப்படும் நிலைகண்டு கொதிக்காதவன் என்ன புரட்சி பேசி என்ன ஆகப்போகிறது?

சாதி  ெறியர்களால் தமிழர்கள் விரட்டி விரட்டிக் கொல்லப்படுகிறார்கள்; சேரிப் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறார்கள்; சேரிகள் தீக்கிரையாக்கப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாய் சொந்தக்காரர்களின் வீடுகளில் சென்று தங்குகிறார்கள்; நாயைப் போல் தலித்துகள் மீது இத்தகைய அடக்குமுறைகள் திணிக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தலித்துகளின் விடுதலைத் தாகம் மட்டும் இன்னும் குறையவில்லை.

உலகெங்கும் அனைத்து வகை ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெற தலித்துகள் இன்னமும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிங்களவனின் ஒடுக்குமுறைக்கெதிரான தமிழனின் விடுதலைப் போராட்டமும், சாதிவெறித் தமிழர்களுக்கெதிரான பச்சைத் தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் ஒன்றுதான். இலங்கையில் சிங்களவனும் புலிகளும் தமிழனை சுட்டுக் கொன்றார்கள். இந்தியாவிலோ தமிழனே இன்னொரு தமிழனை வெட்டிக் கொல்கிறான். பெயர்தான் மாற்றம். ஆதிக்கம் ஒன்றுதான். விடுதலைப் போராட்டம் என்பதை சொந்த மண்ணிலிருந்துதான் தொடங்க வேண்டும். தலித்துகள் அனைத்து வகை ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை பெற்றால்தான் தமிழர் விடுதலை சாத்தியமாகும். பிற மனிதனின் இழிவை, ஒடுக்குமுறையை ஒழிக்காமல் தமிழீழத்திற்காகப் போராடுவோம் என்று சொல்வதெல்லாம் ஏமாற்று வேலைதான். இது 'நாம் தமிழர்'களுக்கு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் நெடுமாறன், வையாபுரி கோபால்சாமி, திருமாவளவன் போன்ற பம்மாத்து தமிழ்த் தேசியம் பேசும் அனைவருக்கும் பொருந்தும்.

சீமான் முதலில் சாதி, மதம் குறித்த வரலாற்றைப் படிக்க வேண்டும். சிங்களவனாலும், தமிழ்ச் சாதிவெறியர்களாலும், புலிகளாலும்,  இலங்கைத் தமிழன் அனுபவித்த கொடுமைகளை அறியவேண்டும். அந்த வலிகளை உணரவேண்டும். அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்புறம்தான் புரட்சி செய்ய மக்களைத் திரட்ட வேண்டும். எலலாவற்றுக்கும் மேலாக முதலில் சொந்த நாட்டிலுள்ள அவலங்களைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழனுக்காகப் போராட இலங்கைத் தமிழராகிய நாம் இருக்கிறோம். அது எமது கடமையும் கூட. காசு வாங்கிக்கொண்டு காசுக்காக மாரடிக்கும் கூலிப்படையை அழைத்துப் போராட வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.

 பிரபாகரன் கலியாண விடயத்துக்கும் சீமானின் கலியாணத்துக்கும் இன்னொரு ஒற்றுமையும் இருக்கிறது. மாற்று இயக்கப் போராளி ஒருவர் காதலித்த பெண்ணைத்தான் பிரபாகரன் கைபிடித்தார். (கைபிடிக்கு முன் அந்தப் பெண்ணை கைகழுவி விடத்தான  ுயற்சித்தார்.  நடிகை விஜயலட்சுக்கு தமிழகத்தில் நடந்தது போல) அதே போலத்தான் சீமானும் ஒரு புலிப் பயங்கரவாதி காதலித்துத் திருமணம் செய்த புலிப் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கலியாணம் செய்துகொள்ள இருக்கிறார். என்ன இருந்தாலும் சீமானின் திருமணத்துக்கு எமது வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறோம்.

இறுதியாக புரட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களின் பொன்மொழிகளை நினைவுபடுத்திக் கொண்டு விடைபெறுகிறேன்.

'நாம் தமிழர் கட்சியில் சேராதவர்கள் ஒரு அப்பனுக்குப் பிறக்காதவர்கள்.'

'டெசோ மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் தமிழின விரோதிகள்.'

(பச்சைத்தமிழன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com