Contact us at: sooddram@gmail.com

 

ஒரு "தமிழீழப்" போராளியின்நினைவுக்குறிப்புக்கள் - பகுதி 1

(எல்லாளன்)

போராளியின்ரிஷிமூலம்

பாடசாலையில் பயிலும்போதே நான் அரசியலில் ஈடுபாடு உடையவனாக இருந்தேன். அதற்கு எனது குடும்பத்தின் அரசியல், தொழிற்சங்க ஈடுபாடு முக்கிய காரணங்களாக இருந்தன என்று நினைக்கிறேன். எனது அப்பா அரசாங்கத்தில் முக்கிய பதவி வகித்த போதிலும் தமிழரசுக்கட்சி வேலைகளிலும் ஈடுபாடு காட்டினார். அதேவேளை எனது கிராமத்திலுள்ள சுருட்டுத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற் சங்க வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார். அதனால் அவருடைய மகன் என்ற ரீதியில் சிறுவயதிலிருந்தே நான் அரசியல் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதை எனது குடும்பத்தினர் பெரிய குற்றமாகக் கருதவில்லை.

நான் சிறுவயதினனாக இருந்தபோது என் அப்பா இறந்துவிட்டார். அதன் பின் எனது சகோதரி எங்கள் தொகுதி எம்.பியின் கீழ் வழக்கறிஞராக வேலை செய்தார். அதனால் 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ச்சார்பாக எமது வீடு எமது தொகுதியின் காரியாலயம்போல் செயற்பட்டது. அந்த வேளையில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குச் சார்பாக வேலை செய்த இளைஞர்களின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. பாடசாலை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து அந்த இளைஞர்களுடன் உதயச+ரியன் போஸ்டர்கள் ஒட்டுவதிலிருந்து கூட்டங்களுக்கு மரம் நட்டு லயிற் போடுவது வரை எனது வேலைகள் ஆரம்பமாயின.

அந்த வேலைகளில் ஈடுபடும் போதுதான் எனக்குப் பரமேஸ்வரன் என்ற இளைஞருடன் உறவுகள் ஆரம்பமாயின. நான் வயதில் சிறுவனாக இருந்த போதும் பொது வேலைகளில் பங்கேற்பதைத் அவர் தடுக்கவில்லை. ஆனால், அவர் செய்யும் இரகசிய வேலைகளில் என்னைத் தவிர்த்தார். அதற்கு அவர் கூறிய காரணம், எனக்குச் சிறு வயது என்பதும், மற்றும் பள்ளிக் கல்வியை முடித்த பின்பே நான் அவர்களுடன் வேலை செய்ய முடியும் என்பதுமாகும்.

1977 தேர்தல் முடிந்த பின் நடந்த இனப் படுகொலையின் விளைவாக மீண்டும் உணர்வு ஊட்டப்பட்டவர்களாக அகதிகளாகிக் கொண்டிருக்கும் எமது மக்களுக்காக உடுப்பு, உணவு, பணம் போன்றவற்றை சேகரிக்கத் தொடங்கினோம். அப்போதும் எமது வீடு ஒரு நடைமுறைக் காரியாலயமாக இரவு பகலாகச் செயற்பட்டது. அந்த வேளையில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்தது. அப்படி இருந்தும் நாங்கள் பொது வீதிகளைத் தவிர்த்து ஒழுங்கைகள் வேலிகள் மூலமாக அகதிகளுக்கு உணவு, உடை சேகரித்தோம். எமது தொகுதியில் உள்ள கோப்பாய் ஆசிரிய பயிற்சி பாடசாலை ஓர் அகதி முகாமாக மாறியவுடன் எமது வேலைகள் மேலும் மும்மரமாக செயற்பட்டன.

அக்காலத்தில் எமது பகுதிகளில் பொலிஸ் நிலையம் முழு நேரமாக இயங்கியது. சிறிலங்கா அரச பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரமேஸ்வரன் போன்றோரின் நடவடிக்கைகள் கண்காணித்தார்கள். அதனால் பரமேஸ்வரன் தனது வீட்டில்ப டுப்பதில்லை. அதே போன்ற வேலைமுறை அவரைப் பின்பற்றி வருகின்ற எனக்கும் நடைமுறையானது. நானும் நிலைமை சரியாகும் வரையில் வீட்டில் படுப்பதில்லை.

 மானிப்பாய் வங்கிக் கொள்ளையும் பொலிஸ் தேடுதலும்

 1978 ஆம் ஆண்டில் மானிப்பாய் வங்கிக் கொள்ளை நடந்தது. அது சம்பந்தமாக நான் தெரிந்து கொண்ட விடயங்கள் மற்றும் கேள்விபட்ட விடயங்களை மற்றவர்களுடன் அதீதகற்பனைகளுடன் கலந்து பகிர்ந்துகொண்டேன். எங்கடை ஆக்கள், நம்முடைய கோஸ்டிதான் செய்தவர்கள் என்றும், மணியான அட்டாக் என்றும் அதேபோல், ஏதோ எனக்குச் சொல்லிப்போட்டுத்தான் ‘பொடியள், ‘அட்டாக்’ செய்தவர்கள் போலவும் நானும் அதில்ப ங்கேற்றவன் போலவும் கதைப்பேன்.

அது நடந்து இரண்டு வாரங்களின் பின் ஒருநாள் பாடசாலையில் நான்படித்துக் கொண்டிருந்தபோது காலை 9.30 மணியளவில் பாடசாலை அலுவலகத்தலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. என்னைக் கூட்டிக்கொண்டு போவதற்கு எனது சகோதரி வந்திருப்பதாகவும், எனது தாத்தாவுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது எனவும் எனக்குக் கூறப்பட்டது. உடனடியாக எனது சகோதரியுடன் புறப்பட்டுப்போனபோதுதான் அவர் எனக்கு உண்மையான காரணத்தைச் சொன்னார்.

என்னைக் கைது செய்வதற்கு என்னைத் தேடி பொலிஸ் வீட்டிற்கு வந்ததாகச் சொன்னார். வந்த பொலிஸ்காரர் எனது ஊரவர். நான் வீட்டில் இல்லாததால் அம்மாவிடம் வந்ததற்கான காரணத்தைக் கூறியுள்ளார். அவருக்கு நான் பாடசாலையில் இருப்பேன் என்று தெரிந்தும் அங்குவராமல், வீட்டில் ஒருவரும் இல்லை என்று தான் மேல் அதிகாரிகளுக்குச் சொல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

அதே நேரம் எனது சகோதரி எமது தொகுதி எம்.பியின் கீழ் வேலை செய்ததால் அந்தச் செய்தி அவருக்குத் தெரிய வந்ததால் என்னைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டார். அந்தச் செய்தி பரமேஸ்வரன் மற்றும் அவரின் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. ஏன் என்னைத் தேடுகின்றார்கள் என்பது தெரியாததால் எல்லோருமே பதட்டப்பட்டார்கள். எம்.பி அப்போது கொழும்பில் நின்றார்.

அதுவரை என்னைப் பாதுகாப்பாக மறைத்து வைப்பது என்றும், ஒரு வழக்கறிஞர் மூலம் என்னை உயர் அதிகாரிகளிடம் சரண் அடையச் செய்வது என்றும் எனது சகோதரி முடிவு எடுத்திருந்தார். அந்த முடிவின்படி நான் இருநாட்கள் தலைமறைவாக வைக்கப்பட்டேன். அந்தவேளையில் பரமேஸ்வரனும் அவருடன் சேர்ந்தவர்களும் எனக்குப் பல போதனைகளை அளித்தார்கள். பொலிஸ் எவ்வாறு சித்திரவதை செயவார்கள் என்றும், சித்திரவதை செய்தாலும் குறைந்தபட்சம் எப்படி பரமேஸ்வரன் போன்றவர்கள் சம்பந்தமான இரகசியங்களைப் பாதுகாப்பது என்றும் சொன்னார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்க்கை எனது கைகளில்தான் தங்கி இருப்பது போன்றும் அதில் நான் எவ்வாறு விடயங்களைக் கையாள்வேன் என்பதைப் பொறுத்துத்தான் அவர்கள் என்னைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வதா இல்லையா என்றை முடிவை எடுப்பார்கள் எனவும் கூறினார்கள்.

யாழ்மாவட்ட ஏ.எஸ்.பியைச் சந்தித்து என்னை அங்குக் கூட்டிச் செல்வதற்கான ஏற்பாடுகள் “பிரான்ஸிஸ்சேவியர்” என்னும் வழக்கறிஞர் மூலம் செய்யப்பட்டது. அந்த வழக்கறிஞர் வீட்டிலும் ஒருநாள் தங்க வைக்கப்பட்டேன். அதன் பின் ஏ..எஸ்.பியை சந்திப்பதற்காக நானும் வழக்கறிஞரும் யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகம் சென்றோம். முதலில் வழக்கறிஞர் முன்னிலும் பின்னர் தனியாகவும் 30 நிமிடமளவில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முக்கியமாக மானிப்பாய் வங்கிக் கொள்ளை சம்பந்தமானது. அதுபற்றி எனக்கு தெரிந்தவற்றைக் கேட்டார்கள். நானும் தெரிந்தவற்றைச் சொன்னேன். அதற்கு அதிகாரி எனக்கு எவ்வாறு அந்த விடயங்கள் தெரியும் என்று கேட்டார். நான் ஈழநாடு, வீரகேசரி பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன் என்று கூறிய போது அவர் சிரித்தார். அதன்பின் இனிமேல் வீதிகளில் நின்று ஆட்களுடன் கதைக்க வேண்டாம் என்றும் என்னைக் கல்வியில் கவனம் செலுத்துமாறும் கூறினார். பிறகு எனது வழக்கறிஞரைக் கூப்பிட்டு தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலில் ஏதோ தவறு நடந்துள்ளது என்றும் என்னைக் கூட்டிக்கொண்டு போகுமாறும் சொன்னார்.

(தொடரும்.....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com