Contact us at: sooddram@gmail.com

 

ஒரு "தமிழீழப்" போராளியின்நினைவுக்குறிப்புக்கள் - பகுதி 2

(எல்லாளன்)

போராளிஅந்தஸ்துசுமத்தப்பட்டது

எனது விசாரணையின் பின் நான் எனது கிராமத்திற்கு வந்தபோது என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னைப்பற்றி பலவாறு பேசிக் கொண்டார்கள். ஒரு சிலர் என்னுடன் தொடர்புகளைக் குறைத்துக் கொண்டனர். மேலும் சிலர் என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். எனது கல்லூரியிலும் பலர் தாங்களாகவே பலகதைகளை உருவாக்கி என்னைப்பற்றி ஒரு மாயையை உருவாக்கிக் கொண்டார்கள். அதன் பின் எவரும் என்னுடன் பிரச்சினைப்படுவதில்லை. என்னைவிட வயதில் மூத்தவர்களும் என்னை மரியாதையாக நடத்தினார்கள்.

என்னைப்பற்றி வெளியான கதைகளில் ஒன்று எனக்கு வெடிகுண்டுகள் தயாரிக்கத் தெரியும் என்பது. அதனால்தான் என்னைப் பொலிஸார் பிடித்தார்கள் என்பது. அதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் எனக்கு விஞ்ஞானம் ஓடாத பாடம். அதிலும் இரசாயனவியல் பாடம் விருப்பமேயில்லாத ஒன்று. வெடிகுண்டுகள் எப்படித் தயாரிப்பது என்பதைப் பற்றிய அடிப்படை அறிவே எனக்கு இருக்கவில்லை.

1978 ஆம் ஆண்டு கால கட்டத்தில் எனது கல்லூரியில் எமது வகுப்பில் சேர்ந்த ஒரு மாணவனைப்பற்றி கட்டாயம் சொல்ல வேண்டும். அவர் அற்புதன் என்னும் அற்புதராஜா நடராஜா ஆவார். அற்புதன் வகுப்பில் சேரும்போது எமது வகுப்பிலுள்ள ஆண் மாணவர்கள் வடக்கு பகுதி தெற்கு பகுதி என இரு பகுதியினராகப் பிரிந்து இருந்தனர். அதற்கு சாதி அமைப்பே காரணமாக இருந்தது. அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை ஒன்றின் பின் அவர்கள் பிரிந்து ஒருவருடன் ஒருவர் கதைக்காத நிலையில் இருந்தனர். எனது நிலை பிறப்பினால் நான் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவன். வகுப்பில் தெற்குப் பகுதி மாணவர்களுடன் கூட்டாக இருந்தேன்.

வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்களில் பலர் என் உறவினராகவும் என்னைப் பற்றிய செய்திகளையும் அறிந்தவர்கள். அதனால் அவர்கள் என்னுடன் பிரச்சினைப்படுவதில்லை.

அற்புதராஜா எமது வகுப்பில் சேரும்போது அவரது நண்பர் வடக்கு பகுதிபிரிவில் இருந்தார் எனவே என்னைப்பற்றி அவர் தெரிந்து கொண்டபின் நாம் கதைக்க தொடங்கியவுடன் மீண்டும் வடக்கு தெற்கு பிரிவுகள் பேதம் மறந்து சுமுகநிலை எற்பட்டது. அதனால் எமது கவனம் படிப்பிலும் அன்றாட அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளைப் பற்றி உரையாடுவதிலும் சென்றது. முன்பு எங்கள் கவனம் அடிபடுவதில்தான் இருந்தது. அக்காலத்தில் வடக்குப்பகுதியினர் தெற்குப்பகுதிக்கு சென்றபோதும் தெற்குப்பகுதியினர் வடக்குப்பகுதிக்குச் சென்றபோதும்ச ண்டை மூளும். எனக்கு அப்படியான பிரச்சினைகள் இருக்கவில்லை. இதுவெல்லாம் எனது பால்ய பருவத்தில் நிகழ்ந்தவையே.

நான் அற்புதராஜாவையும் பரமேஸ்வரனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். நாம் பயிற்சி பெறும் நோக்கத்தோடு பரமேஸ்வரனை அணுகியபோது அவர் அதற்கு மறுத்துவிட்டார். கல்வியின் முக்கியத்துவத்தைக் கூறி, குறைந்தளவு பாடசாலைப் படிப்பை முடித்தவுடன் அதைப் பற்றிப் பேசலாம் என்றார். ஆனால் பொது வேலைகளில் எம்மை ஈடுபடுத்தினார். கூட்டணியினரின் மகாநாடு ஆவரங்காலில் நடைபெற்றபோது நாங்கள் பலநாட்களாக பரமேஸ்வரனுடன் சேர்ந்து அந்த வேலைகளில் பங்குபற்றினோம்.

யாழ்நூலகம், ஈழநாடுகாரியாலயம்போன்றவைஎரிக்கப்பட்டன

1980 ஆம் ஆண்டு சாதாரணதர பத்திரப் பரீட்சை முடிவுகளின் பின் எமது கிராமத்துப் பாடசாலையில் நாம் விரும்பிய மேற்படிப்பு இல்லாததால் யாழ்ப்பாண நகரப்பாடசாலை ஒன்றில் அனுமதி பெற்று அங்கு சென்றோம். நான் மத்தியகல்லூரிக்கும் அற்புதன் வைத்தீஸ்வரா கல்லூரிக்கும் சென்றோம். 1981 ஆம் ஆண்டு யாழ்நூலகம், நகரத்திலிருந்த கடைகள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் போன்றவை எரிக்கப்பட்டன. யாழில் தங்கியிருந்த சிங்கள அரசியல்வாதிகளினால் தூண்டப்பெற்று பொலிஸ்காரர்களால் எரிக்கப்பட்டன.

அன்று காலை பரமேஸ்வரனும் மற்றும் இரு நண்பர்களும் நானும் மிகவும் பதட்டமான சூழ்நிலையில் சைக்கிளில் யாழ்ப்பாணம் சென்றோம். மாவட்ட சபைத் தேர்தல் அடுத்த நாட்களில் நடைபெற இருந்ததால் எமது கிராமத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் மேலதிகபொலிசாரும் இராணுவமும் இருந்தன. யாழ்நூல் நிலையத்தைப் பார்த்துவிட்டு ஈழநாடு பத்திரிகை நிலையத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது இராணுவம் ஒரு ஜீப்பில் வந்து கொண்டிருந்தது. பலரும் அந்த இடத்தைவிட்டு நகர ஆரம்பித்தார்கள்.

ஆனால் பரமேஸ்வரன், ‘இவங்களை விடக்கூடாது. இங்கிருந்து இவங்களை ஓடப்பண்ணவேணும். எனக்கு உதவிதேவை’ என்று சொன்னார். எங்களைப் பயப்படாமல் தன்னுடன் நிற்கச் சொன்னார். வீதி திருத்துவதற்காகவோ திருத்தியபின்போ அங்கே எஞ்சியிருந்த கற்களைப் பொறுக்கி சாறத்துக்குள் போட்டுக் கொண்டார். என்னைச் சைக்கிளுடன் நிற்குமாறும் தான் சொல்வதைச் செய்யுமாறும் கூறினார். இராணுவ ஜீப் எம்மைத் தாண்டியவுடன் கற்களை வீசத் தொடங்கினார். ஜீப் உடனே நின்றது. இராணுவத்தினர் தட தட என்று இறங்கினார்கள். எறியுங்கடாகல்லை என்று பரமேஸ்வரன் சொன்னார். உடனே நாம் கற்களை இராணுவத்தினரை நோக்கி வீசினோம். இராணுவத்தினரைக் கண்டு மெல்லமாக நகரத் தொடங்கிய பலரில் சிலரும் திரும்பி வந்து கல்லெறியத் தொடங்கினார்கள். கற்களை எறிவார்கள் என எதிர்பார்க்காத இராணுவத்தினர் உடனடியாக ஜீப்பில் ஏறிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள். ஜீப்பைக் கலைத்துக் கொண்டு போய் கற்களை எறிந்தோம்.

அங்கிருந்தவர்கள் கல் எறிந்து பெரிய வெற்றியைக்க ண்டவர் போன்ற மனநிலையில் இருந்தோம். அது ஒரு சில நிமிடங்கள்தான் நடந்த போதிலும் அன்று எனக்கேற்பட்ட உணர்வு பின்பு முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு எனக்கு உதவியது.

பரமேஸ்வரன்கொலை

அந்தச் சம்பவங்களின் பின்பும், மிகவும் பதட்டமான சூழ்நிலைகளிலும் முதலில் சொன்னவாறு நான் வீட்டில் படுப்பதைத் தவிர்த்தேன். யாழ்ப்பாணத்திற்குச் சென்ற இரண்டாவது இரவு, அதாவது 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் நடந்த காலை பரமேஸ்வரனும் இன்னும் சில இளைஞர்களும் கொல்லப்பட்டதாகவும் அதுவரை நான்கு இடங்களில் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. பரமேஸ்வரனுடன் கடைசிநாள்வரையும் தொடர்புடைய எனக்கு அந்தத்தகவல் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.

பரமேஸ்வரன் மட்டும்தான் கொலை செய்த பொலிஸ், இராணுவத்தின் குறியா அல்லது அவர்களுடன் சேர்ந்தவர்களுமா என்றால் நாம் எப்படித் தப்புவது? கொலை செய்தவர்கள் யார்? பொலிஸா அல்லது இராணுவமா? யார் காட்டிக் கொடுத்தார்கள்? இனி என்ன செய்வது? மரணச் சடங்கை எவ்வாறு நடத்துவது? விசேஷமாக அன்று ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது இரவிலிருந்து காலைவரை. யாருடன் எவ்வாறு தொடர்பு கொண்டு எந்த முடிவை எடுப்பது? அவற்றை உடனடியான எடுக்க வேண்டிய தேவை இருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம் சென்ற மற்ற இருவரும் தலைமறைவாகிவிட்டனர். எனக்கு என் வீட்டிலிருந்தும் பரமேஸ்வரன் வீட்டிலிருந்தும் வந்த தகவல்கள் என்னை வெளியால் வர வேண்டாம் என்பதாகவே இருந்தது. செத்த வீட்டிற்கோ சுடலைக்கோ வர வேண்டாம் என்றார்கள். பரமேஸ்வரன்மீது எனது கிராமத்தவர்கள் பெரிய மரியாதை வைத்திருந்தார்கள். எனது கிராமத்தின் பயிர்ச் செய்கை உத்தியோகத்தராகப் (சிஓ) பரமேஸ்வரன் இருந்தவர். இருந்தும், அவரின் இறப்பிற்கு ஒழுங்கான மரியாதை செலுத்தக் கூட முடியாத சூழ்நிலையில் இருந்தார்கள். ஊரடங்குச் சட்டம், பொலிஸ், இராணுவக் கெடுபிடி போன்றவை அதிகம் இருந்தன.

அதுவரை காலமும் மாவட்டச் சபைத் தேர்தலை முழுதாக ஏற்றுக் கொள்ளாத மக்களும் அந்த நிலைமைகளினால் மாறி முழு உற்சாகத்தோடு 3  மணிக்குப் பின் திறக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் கூட்டணிக்கு வாக்களித்துவிட்டு வந்தனர்.

வேலுப்பிள்ளை என்ற விமானப்படை அதிகாரி போராளிகளுக்கு பயிற்சி

பரமேஸ்வரனுக்கும் மற்றும் சில இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்த வேலுப்பிள்ளையைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். இவர் சிறிலங்கா விமானப்படையில் அதிகாரியாக இருக்கும்போது விடுமுறைக்காக வீட்டிற்கு வரும்போது அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். இவரின் பங்களிப்பு அந்தக் காலகட்டத்தில் பெரிய பங்களிப்பாகும். அவர் பின்னர் வெளிநாடு சென்றுவிட்டார். இப்போ கனடாவில் இருக்கிறார்.

ஈழமாணவர்பொதுமன்றம்

1981 காலக்கடைசி அற்புதராஜா ஈழமாணவர் பொதுமன்றம் (GUES) அமைப்பைப்பற்றியும் தனது பங்களிப்பைப்பற்றியும் என்னையும் அதில் சேர்ந்து பங்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஒரு சில சந்திப்புக்களின் பின் அவர்களின் வகுப்புக்களுக்குச் சென்றேன். அவர்களின் வகுப்புக்களில் தான் பல் வேறுநாடுகளின் விடுதலைப் போராட்டங்கள்பற்றியும் மக்கள் போராட்டங்களைப்பற்றியும் அடிப்படை அறிவுகளைப் பெற்றேன். அவர்களின் பிரச்சார வேலைகளிலும் போஸ்ரர், பத்திரிகை விற்பனை போன்றவற்றிலும் கடைசியாக பாதயாத்திரையிலும் பங்குபற்றி வேலை செய்தேன்.

அந்த வேலைமுறைகளில் முழுமனதோடு ஈடுபட்டேன். ஆனால் இராணுவ நடவடிக்கைகள், இராணுவப் பயிற்சி என்று வரும்போது அவர்களிடமிருந்து ஒழுங்கான பதில் கிடைக்கவில்லை. அப்போது இருந்த என் மனநிலை என்னவென்றால் போஸ்ரர்கள் ஒட்டிக்கொண்டும் பத்திரிகை விற்றுக்கொண்டும் இருப்பதால் போராட்டம் நடத்தமுடியாது என்பதாகும். எப்போது இவர்கள் துவக்கைக் காட்டுவார்கள்? அதில் எப்போது எங்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள் என்பதேயாகும். அதனால் பாதயாத்திரையின் பின் எனது பங்களிப்பைக் குறைத்துக் கொண்டேன். அதற்கு என் ஏ.எல் பரீட்சைகள் நெருங்கி வந்தமையும், என்னுடன் வேலை செய்த GUES தோழர்களான சுகு, டேவிற்சன் போன்றவர்களின் கைதும்அற்புதன் போன்றவர்களின் தலைமறைவும் காரணங்களாகும்.

(தொடரும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com