Contact us at: sooddram@gmail.com

 

கண்ணீருடன் ஒரு கடிதம் . . . . (பாகம் 2)

(நல்லையா குலோத்துங்கன்) (ஈழத்திலிருந்து)

1984ம் ஆண்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைத் தவிர்த்து ஏனைய மூன்று விடுதலை அமைப்புக்களுடன் கைகோர்த்தார் தானைத் தலைவர , தமிழினத்தின் ஒட்டு மொத்தமான பிரதிநிதி வே.பிரபாகரன் . கைகோர்த்துக் கொண்டது மட்டுமில்லாமல் மற்றைய அமைப்புக்களின் தலைவர்களுடன் கரங்களை இணைத்து புகைப்படம் எடுத்து அவ்விணைவை பிரபலப்படுத்தினார்.

என் இனிய தமிழீழ உறவுகள !

பின்பு நடந்ததென்ன "ஈரோஸ்" எனும் அமைப்பின் தலைவர் வே. பாலகுமாரன் அவர்களைத் முழுத் தலையாட்டியாக்கி தம்முள் விழுங்கிக் கொண்டதோடு தளத்தில் நின்று போராடிய மற்றைய தலைவர்களைத் தான் கைகோர்த்து உறவாடியவர்களின் உயிரைப் பறித்துக் கொண்டார் அவ்வுன்னதத் தலைவர்.

சரி அவர்கள் தான் தலைவர்கள , ஆனால் இவரது இயக்கத்தில் இவரது கொள்கைகளை நம்பி வந்த இளம் தமிழ்த்தளிர்ளைப்போல மற்றைய இயக்கங்களில் இணைந்திருந்த மறவர்களை உயிரோடு கொளுத்தியும், துப்பாக்கிக்கு இலக்காக்கியும், சித்திரவதை செய்தும் அழித்தொழித்தார் இம்மேதகுத் தலைவர்.

இன்று பதாகைகளைத் தூக்கிக் கோஷமிடும் என் இனிய உறவுகள ! அன்று நீங்களும் நானும் என்ன செய்து கொண்டிருந்தோம ? ஞாபகமிருக்கிறத ?

பிரபாகரன் அவர்களின் அரசியல் குரு "தேசத்தின் குரல்" அண்டன் பாலசிங்கம் அவர்களின் அழகிய அரசியல் விளக்கங்களினால் இம்மரணங்களை நியாயப் படுத்திக் கொண்டிருந்தோம். அன்று ராஜபக்சாவும், சிங்களர்களும் எங்கள் கண்ணுக்கு எதிரிகளாகப் படவில்லை இந்த அப்பாவி தமிழுணர்வு மிக்க இளைஞர்கள் எதிரிகளாகச் சித்திரிக்கப்பட்டார்கள்.

எத்தனை புத்திஜீவிகள் மெளனமாய் அன்று கண்ணீர் சிந்தித் தம் உணர்வுகளை உள்ளத்தின் அடியில் புதைத்து வைத்தார்கள் தெரியும ?

நடந்து போன பழைய சரித்திரத்தைக் கிளறுவதால் என்ன பயன் ? இன்றைய ஈழத் தமிழரின் இன்னல்களைப் போக்கும் செயல்களை ஆதரிப்பதை விடுத்து அலட்டுகிறாயே என்று என்னைத் திட்டாதீர்கள். எனது நோக்கம் அதுவல்ல. சிந்திக்காமல் செயல்பட்டதன் விளைவைச் சித்திரிக்கவே நடந்தவைகளைக் குறிப்பிடுகிறேன்.

தமக்கு ஆதரவளிக்காமல் தம்மை விமர்சித்ததினால் "கூத்தாடிகள்" என தென்னிந்தியத் திரைக்கலைஞர்களை விமர்ச்சித்தவர்கள் தான் இவர்கள். அவர்களால் கூத்தாடிகள் என அழைக்கப்பட்டவர்களில் ஒருவரான மாண்புமிகு மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நிதி உதவி இல்லாதிருந்திருந்தால் விடுதலைப்புலிகள் எனும் அமைப்பு பின்பு கோலோச்சிய அளவிற்கு என்றுமே வளர்ந்திருக்க முடியாது.

இன்று இவர்களின் எச்சங்களாகிய புலம்பெயர் புலிப்பினாமிகள் தாம் வாழும் நாடுகளில் தென்னிந்திய திரைப்படங்களை ஓடாமல் பகிஷ்கரிக்கப்பண்ணுவதன் மூலம் தென்னிந்திய திரைக்கலைஞர்களை பயமுறுத்தி அவர்களது மனசாட்சியை அடகு வைத்து விட்டு இவர்களின் அரசியல் வியாபாரத்தில் விற்பனைப்பொருட்களாக அவர்கள் பயன் படுகிறார்கள். (நடிகர் அஜித்திற்கு நடந்ததை அறிந்திருப்பீர்கள )

அன்று செய்ததைப் போலவே இன்றும் ஈழமக்களின் உண்மைத் தேவைகள் என்ன என்பதை உணரத் தலைப்படாமல் அரசியல் அறிவிலிகள் போல என் இனிய தமிழ்நாட்டுச் சொந்தங்கள் நடத்தப்படுவதைப் பார்க்கும் போது என் மனம் வருந்திக் கண்களில் கண்ணீர் முட்டுகிறது.

இன்று மஹிந்த ராஜபக்ச போய் நாளை ஒரு ரணில் பதவிக்கு வந்ததும் தமிழ் ஈழம் பிரித்துக் கொடுக்கப்பட்டு விடும் என்று உண்மையாக நம்புகிறீர்கள ? நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்கள்.

ஈழத்தமிழரின் வாழ்க்கை இனி ஒன்று பட்ட ஈழத்தினுள்ளே அவர்களின் சகோதரகளாகிய சிங்கள மக்களுடன் ஜக்கியப்பட்ட ஒன்றாகவே இருக்கப் போகிறது. அத்தகைய கட்டமைப்புக்குள் ஈழத்தமிழருக்கு எத்தகைய சுயாதீன உரிமைகள் வரையறுக்கப்பட முடியும் என்பதைத் தீர்மனிப்பதே இன்று நாம் அவர்களுக்குச் செய்யக்கூடிய உதவியாகும்.

இதைச் செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கத்தை எதிர்த்து மகிந்த ராஜபக்ச்வைக் கூண்டிலேற்றுவது எவ்வகையில் உதவும் எண்ணிப்பார்த்தீர்கள ?

சதாமில்லாத ஈராக்கும , கடாபி இல்லாத லெபனானும் இப்போது என்ன சந்தனத்திலா குளித்துக் கொண்டிருக்கிறது ?

இந்தியா எனும் மாபெரும் தேசம் தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசாகும். இன்றைய மேற்குலக நாடுகளின் பொருளாதார நெருக்கடியத் தீர்க்கும் தேவைக்கு இந்தியாவைப் பெருமளவில் அவர்கள் நம்பியிருக்கிறார்கள்.

ஈழத்தமிழரின் நியாயமான தீர்விற்கு இந்தியா எடுக்கப்போகும் முக்கியமான பாத்திரத்திற்கு வலுச் சேர்க்கப்போகிறீர்கள ? அன்றி அதை வலுவிலக்கச் செய்யப் போகிறீர்கள ?

உங்களது போராட்டங்கள் இந்தியாவின் பலத்தைக் குன்றச் செய்யுமேயல்லாது அதற்கு உதவாது. ஈழத்தமிழர் அனைவரும் இந்தியாவைத் தமது பெரிய அண்ணன் போலவே நோக்குகிறார்கள். ஆனால் அவ்வண்ணனின் கைகளைக் கட்டும் கயிறை நீங்கள் உங்கள் போராட்டங்களால் திரித்துக் கொண்டிருப்பதை உணர்கிறீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால் அதன் வலியை உங்கள் தொப்புள்கொடி உறவுகள் நிச்சயம் உணரத்தான் செய்வார்கள்.

அரசியல் உரிமை மறுக்கப்பட்டத , பேச்சுச் சுதந்திரம் பறிக்கப்பட்டது, மனித உரிமைகள் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது எனும் கோஷங்களை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டதே ஈழத்தமிழரின் போராட்டம். ஆனால் அதே பேச்சுச் சுதந்திரம , கருத்துச் சுதந்திரம் , மனிதச் சுதந்திரம் எமது தேசியத் தலைவர் "மேதகு வே.பிரபாகரனால் " ஈழத்தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டதா? எந்த உரிமைகளுக்காகப் போராடுகிறோம் என்று விடுதலைப் புலிகள் கோஷித்தார்களோ அதே உரிமை மாற்று இயக்கத் ஈழத்தமிழ் போராளிகளுக்கும், மாற்றுக் கருத்துக் கொண்ட ஈழத் தமிழர்களுக்கும் அவரால் வழங்கப்பட்டத ?

சிறீலங்காச் சிறைகளில் தமிழ்க்கைதிகளுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளிலும், கொடுமைகளிலும் பார்க்க அதிக அளவிலான கொடுமைகள் புலிகளின் சித்திரவதை முகாம்களில் ஈழத் தமிழ் போராட்டக் வீரர்களும், மாற்றுக் கருத்துக் கொண்ட தமிழ் மக்களும் அனுபவித்தார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள? இல்லையெனில் அவைகள் மேதகு எனப்படும் மேதாவியினால் நடத்தப்பட்டன என்பதால் அதைச் சரியென ஏற்றுக் கொள்கிறீர்கள ?

எனதருமை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள !

உங்கள் உணர்வுப்பானைகள் மூன்று வருடங்கள் கழித்து கொதிக்கின்றன . இதன் கொதிப்புக்குப் பின்னனி உங்கள் கட்சிகளின் அரசியல் லாபங்கள் என்பதை அறியாதவர்கள் மிகச் சிலர ! உங்கள் மத்திய அரசைச் சங்கடங்களில் மாட்டி உங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக நிறைவேற முடியாத கோரிக்கைகள் எனும் பந்தங்களுக்கு தமிழ் மீதுள்ள உணர்வு எனும் எண்ணெய் வார்த்து தீ மூட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

தமிழ் மொழி மீது உள்ள மோகம் வெறியாக மாறி விட்டால் அது உங்களையே பிடித்துத் தின்னும் பூதமாக மாறிவிடும் என்பதை நீங்கள் அறியாதவர்கள் என்பதை நான் நம்பத் தாயாரில்லை.

சீமான், திருமாவளவன் போன்றோர்கள் இத்தகைய பொறுப்பற்ற முறையில் நடப்பதை எதிர்பார்க்கலாம் ஆனால் பழகாலம் அரசியலில் அனுபவம் பெற்ற கலைஞர், முதல்வர் செல்வி ஜெயலலிதா, வை.க , ஜயா நெடுமாறன் போன்றோரும் இதே குட்டையில் ஊற முற்பட்டதுதான் மனதை வருத்துகிறது.

வலிமையான இந்தியா தான் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம். தயவு செய்து உங்கள் சுயநலத்திற்காக இந்தியாவின் வலிமையைச் சிதைத்து விடாதீர்கள். அது ஈழத்தமிழர்களுக்கு எவ்வகையிலும் உதவக்கூடிய செய்கையல்ல

(தொடரும்…..)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com