Contact us at: sooddram@gmail.com

 

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி 11)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம

ஆம்! பாப்பா நமது மூத்த தளபதிகளில் ஒருவர்தான். அவர் சமாதானக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டு நல்ல சுகபோகமாக வாழ்வை அனுபவித்து வந்ததை யாரும் மறக்க மாட்டார்கள். இந்த சுகபோக அனுபவிப்பால் பல பெண்களுடன் இவர் தொடர்பு கொண்டமையால் மறுபடியும் வன்னிக்கு அழைக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார். இவர் நமது விளையாட்டு துறைப்பொருப்பை கவனித்து வந்தவர்.
இப்படி அந்த சமாதான காலகட்டத்தில் இவர் யாழ்மாவட்ட புலனாய்வுத்துறையினருடன் நன்கு தொடர்பை கொண்டுள்ளார் என அப்போது யாழப்பானத்திலிருந்த மற்றைய பொறுப்பாளர்கள் மற்றும் இரகசிய புலனாய்வுத்துறையினர் தகவல் கொடுத்தமையால் இவர்மீது எம்
தலைமைக்கு ஒரு கண் இருந்தது.
ஆனாலும் அவர்மீது நடவடிக்கை எடுக்க அப்போது நமக்கு போதுமான உறுதிமிக்க தடையங்கள் கிடைக்கவில்லை. மேலும் மூத்த தலைவர்கள் மீது உறுதியான சாட்சியம் இல்லாமையால் நடவடிக்கை எடுக்க எம் தலைமை பீடம் சற்று தயங்கியது, காரணம் மறுபடியும் எமக்குள் ஒரு பிரிவு ஏற்படுவதை தலைமை விரும்பவில்லை.

இது பழைய கதை. ஆனால் இதில்தான் தொடர்பு இருக்கின்றது இந்த குழி பறிப்பில்.
இந்த நிலைமையில் யுத்தம் நம்மை நெருங்கிக்கொண்டுவந்த வேளையில் இந்த பாப்பாதான் மக்களை வழிப்படுத்தும் நடவடிக்கைகளை துல்லியமாக செய்துவந்தமையால் அவரிடமே நம் தலைமை அந்த பொறுப்பை ஒப்படைத்தது.

மக்களும் நாம் போகும் திசை எல்லாம் வந்தார்கள். இந்த மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் போதுதான் பாப்பாதனது கைவரிசையை காட்டி நமது தலைமை மீதும் போராளிகள் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை உலகத்தின் முன் இந்த கொடிய சிங்கள தேசம் முன்வைக்க உதவி புரிந்தார்.
ஆம் சிங்கள படைகளுடன் சேர்ந்து இயங்கிவந்த கருணா குழுவினருடன் இந்த பாப்பா தொடர்பு கொண்டு நாம் இப்போது இந்த இடத்தில் நிற்கின்றோம் அந்த இடத்தில் நிற்கின்றோம் என உடனுக்குடன் தகவல்களை கொடுத்து நம் நிலைகள் மீது விமானம் மூலமும் எறிகணை மூலமும் துல்லியமாக் தாக்குதலை படையினர் நடத்த உள்ளுக்குள்ளேயே இருந்து தகவல்களை கச்சிதமாகக்கொடுத்துக்கொண்டிடுந்தார்.
அதன் விளைவுதான் நம் அண்ணன் தீபன் உட்பட சுமார் 287 போராளிகள் ஒரே நேரத்தில் சிங்களவன் வீசிய எரிகுண்டுக்கு இரையாகி கருகி சாவடைந்தனர். இதில் நம் இரண்டாம் நிலை தளபதிகள் ஐம்பதுக்குமேற்பட்டவர்கள் மரணமடைந்தனர்.
திட்டமிட்டு காலம் வரும்வரை காத்திருந்து குழிபறித்த பாப்பா
மக்களை தன்னுடன் வைத்திருந்த து மட்டுமல்லாது ஏற்கனவே தனக்கு நெருக்கமான சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளை தனது கட்டுப்பாடுக்குள் வைத்திருந்து கொண்டதனால் நமது தலைமையால் அவனை உடனடியாக நெருங்க முடியவில்லை.
இந்த பாப்பாவை எப்படியாவது அகற்றவேண்டும் என தலைமை நினைத்து நமது சிலபோரளிகளை அந்த மக்கள் கூட்டத்துக்குள் அனுப்பிவைத்தது. இதனை அந்த பாப்பா அறிந்து கொண்டதனால் அந்த போராளிகளை மக்கள் முன்சுட்டு கொன்றுவிட்டு மக்களுக்கு ஒரு கதை விட்டான் இவர்கள் துரோகிகள் எங்களை அழிப்பதற்காக சிங்களவனின் கைக்கூலிகளாக வந்தவர்கள், அதனால் தான் சுடுகின்றோம்.
இதனால் நம் போராளிகளுக்குள்ளேயே ஒரு பிளவு ஏற்படத்தொடங்கியது. அதனால் நம் தலைமை பீடம் முக்கியமான போராளிகள் தவிர்ந்த மற்றைய அனைவரையும் ஆயுதங்களை வைத்துவிட்டு மக்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு பணித்துவிட்டது.
இதன் பின் அந்த பாப்பாவை நம் தலைமை பீடத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போனது உண்மையே.

இதனை பயன்படுத்திக்கொண்ட அவன் தனக்கு எதிரான சாதாரண பொதுமக்களையும் சுட்டுவிட்டு தப்பித்து போக பார்த்தவர்கள் என்றும் புலிகளுடன் முரண்டு பிடிக்கும் கும்பல் அதனால் புலிகள்தான் சுடுகின்றனர் என்றும் தகவல்களை சிங்களதேசத்துக்கு கொடுத்து வெளியிட்டது மட்டுமல்லாது வன்னி மக்களையும் புலிகளிடமிருந்து பிரிக்க நல்ல திட்டத்தை சிங்கள தேசத்துடன் இருந்து செய்து சிங்கள இராணுவத்தின் உத்தரவின் பேரில் படுகொலை செய்து விட்டு புலிகள் தான் தமது சொல்லைக்கேட்காத மக்களை கொலை செய்வதாக வெளி உலகுக்கும் செய்தியை பரப்பினார்கள்.
அதுமட்டுமல்ல நம்முடன் இருந்த அந்த அப்பாவி மக்களுக்கு அப்போது தெரியாது இந்த பாப்பாவும் அவனுடன் சேர்ந்து கொண்டு இருந்த அந்த போராளிகளும் சிங்களவன் கைக்கூலியாக இப்போது சேயற்பட்டு கொண்டிருப்பதை .அதுவரை நாளும் பாப்பாவும் புலிகளின் முக்கிய உறுப்பினர் தானே .
அதனால் அந்த மக்கள் புலிகள் தான் மக்களை கொள்கின்றார்கள் என புலிகள் மீது கடும் கோபம் கொண்டதும் உண்மைதான். இந்த பாப்பா என்ற ஒரு தனி நபர் தனக்கு நல்ல வாழ்வு தருவதாக சொன்ன அந்த சிங்களவனின் சொல்லுக்காக, கூட இருந்த போராளிகளை மட்டுமல்ல தன் இன மக்களையுமே கதறக்கதற படுகொலை செய்து கொண்டான் .
இதைவிட இன்னுமொரு செய்தியையும் சொல்ல விரும்புகின்றேன்.
அதாவது நீங்கள் இப்பொழுது அறிந்துகொண்ட இசைப்பிரியா கொலைக்கும் இவன்தான் சூழ்ச்சி செய்து கொடுத்தான் என்பது ஒரு சிலருக்கே தெரிந்த உண்மை.
ஆம்!
எம் இனத்தின் அவல நிலைமைகளை வெளி உலகுக்கு கொண்டுசெல்லும் ஊடகப்பிரிவிலும் கலை பண்பாட்டுக்கழகத்திலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு போராடிய அந்த இசைப்பிரியா ஒரு போராளியின் மனைவி. ஒரு குழந்தையின் தாய். இப்படிபட்ட அந்த பெண் தனது கணவனை முதலில் ஒரு சம்பவத்தில் இழந்து பட்டமரமாகி தானும் தன் குழந்தையும் என இருந்தவளுக்கு மறுபடியும் ஒரு இழப்பு ஆம் அவழ் குழந்தையையும் அந்த கொடிய கடவுள் எறிகணைத்தாக்குதல் மூலம் எடுத்துக்கொண்டான்.
அவள் தனிமரமாக நின்றவேலையில் அப்போதைய கடுமையான களநிலைமையால் ஆயிரக்கணக்கான மக்களும் போரளிகளும் காயப்பட்டும் கொல்லப்பட்டும் கொண்டிருந்த பொழுது அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்காக தன்னை மருத்துவ பிரிவினருடன் இணைத்துக்கொண்டாள்.

இப்படி மருத்துவ உதவி செய்ய சென்ற அந்த போராளியை சூசகமாக கைதுசெய்து கொடுத்தான் இந்த பாப்பா.
ஆம். இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது வீதிகளிலும் காணிகளிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் காயப்பட்டிருந்தபொழுது அவர்களை மீட்கும் பணியில் இவளும் இன்னும் பலரும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் .

(தொடரும்....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com