Contact us at: sooddram@gmail.com

 

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி 19)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்

இது இப்படி இருக்க இராணுவம் மூன்று வழித்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டது. இதனால் நம்மிடமிருந்து வலைஞர்மடம் - முள்ளிவாய்க்கால்- வட்டுவாகல் ஆகியவற்றை முற்றுகை செய்துவிட்டனர். இதன் பின் நாம் எடுத்த அந்த நடவடிக்கையும் கைநழுவிப்போனது.நெடியவன் , காஸ்ட்ரோ ஆகியோர் திட்டமிட்டு செய்த இந்த செயலாம் நாம் நிர்க்கதி நிலையை அடைந்துவிட்டோம். என்னைப்பொருத்தவரையில் நான் நினைக்கின்றேன் இது தனிப்பட்ட விரோதம் தான் காரணம் என்று. இதனால் நாம் கட்டி வழர்த்த அத்தனையும் பறிபோய்விட்டது. 

இதன் பின் நாம் எமது வலிமைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி இராணுவ முற்றுகையை ஊடறுத்து தாக்குதல் ஒன்றை செய்தோம் அதன்படி பொட்டம்மான் தலைமையில் ஒரு குழுவாக சேர்ந்து இரகசியமாக நந்திக்கடல் கரையூடாக வெளியேற தாக்குதல் செய்வதெனவும் மற்றைய ஒரு தலைவரான கடாபி தலைமையில் ஒரு குழுவும் சூசை தலைமையில் ஒரு குழுவும் வேறு இரண்டு குழுக்கள் வேறு திசையால் ஊடறுப்பு தாக்குதல் செய்வதெனவும் முடிவு செய்து நடவடிக்கைக்கு தயாரானோம். இத்திட்டத்தின் படி படையினரை ஊடறுத்து காட்டுக்குள் போவதுதான் நமது இலக்காக இருந்தது. எம்மை முற்றுகையிட்டிருந்த பகுதி மூன்று அடுக்குகளாக இராணுவம் நிற்பதை நமது புலனாய்வு தகவல்கள் கூறின. அப்போது வெளி உலகுடன் தொடர்பை சூசை மட்டுமே செய்வார் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

பொட்டம்மான் தலைமையில் தலைவர் பிரபாகரனும் அந்த மூன்று அடுக்கு காவலையும் தாண்ட கடுமையான தாக்குதல் செய்தார்கள. . சுமார் எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட கரும்புலிகள் இதில் தாக்குதலை மேற்கொண்டார்கள் .இப்பொழுது மக்கள் அதிகளவு இராணுவக்கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டாலும் ஒருபகுதியினர் நம்முடனேயே இருக்கின்றார்கள்.
 

ஆனால் நாம் நினைத்த மாதிரி அந்த முற்றுகையை நம்மால தாண்டிச்செல்ல முடியவில்லை. அந்த தாக்குதலில் மட்டும் நமது மூத்த தலைவர்கள் உட்பட அறுநூறு பேர் சாவைத்தளுவிக்கொண்டனர. . இத்தாக்குதலில் சிங்களராணுவமும் சமமான அளவினர் சிதறி மரணமடைந்தனர் என்பது நாம் அப்போது பரிவர்த்தனை மூலம் பெறப்பட்ட தகவல் இது. இத்தாக்குதல் மூலம் நாம் பெரிதும் எதிர்பார்த்த கடைசி இலக்கும் எட்டாமல் போனதால் அண்ணனும் சில போராளிகளும் மட்டும் திரும்பி வந்தார. . . ஆனால் போட்டு அம்மான் திரும்பி வரவில்லை. அவருடன் மேலும் பல முக்கிய உறுப்பினர்களும் திரும்பிவரவில்லை.

சாள்சின் மரணத்தின் பின் அண்ணனது ஒவ்வொரு நகர்வையும் கண்ணியமாக பார்த்துவந்த பொட்டுஅம்மான் தன்னால் இந்த ஊடறுப்பு தாக்குதலை செய்து அண்ணனை காட்டுப்பகுதிக்கு நகர வைக்க முடியாமல் போனால் தான் திரும்பி கடைசிவரை வரமாட்டேன் என்றும் இதுதான் நமது தலைவிதியை நிர்ணயிக்கும் கடைசி முயற்சி என்றும் தாக்குதலை செய்யும் சில நிமிடங்களுக்கு முன் போராளிகளுடன் உரையாடும்போது சொல்லியிருந்தார்.

ஏற்கனவே போட்டு அம்மான் விழுப்புண் அடைந்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. பொட்டு அம்மானின் இந்த உறுதி மிக்க வார்த்தைகளால் நமது போராளிகழும் மிகுந்த நம்பிக்கையுடன் இத்தாக்குதலுக்கு முகம் கொடுத்தனர்.

ஆனால் நாம் நினைத்த மாதிரி இத்தாக்குதல் அமையவில்லை. இந்த ஊடறுப்பு தாக்குதல் தொல்வியாடைந்த பின் பொட்டு அம்மான் திரும்பி வராமை நமக்கு மேலும் பெரும் இடியாக விழுந்தது. இதன் பின் அண்ணன் மிகவும் மனமுடைந்தவராகவும் வேறு எந்த வொரு தளபதிகளுடன் கதைப்பதைக்கூட தவிர்த்தும் வந்தார். .
இதனால் அண்ணனை பாதுகாக்க நாம் எடுத்த கடைசி நடவடிக்கையும் தோல்வியில் முடிந்தது.. நம் தலைமை பதறிப்போனது நாம் அனைவரும் இப்பொழுது பூரண முற்றுகைக்குள் வந்துவிட்டோம் என்பதால் எதுவும் செய்ய முடியாது இருந்ததனால் மேலும் அப்பொழுது ஆயுதங்களுடன் இருந்த ஆயிரம் போராளிகளை நிராயுத பாணிகளாக செல்லும்படியும் அவர்களை மக்களுடன் சேர்ந்து செல்லும்படியும் தலைவரால் பணிக்கப்பட்டது.

மேலும் நமது தலைவர்கள் ஒருபோதும் சரணடைவதை விரும்பவில்லை. இத்தனை போராளிகள் மக்கள் சொத்துக்களை இழந்த பின் நாம் சரணடைவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. மக்களுக்கும் என்னால் எந்தவிதமான பதிலும் சொல்லமுடியாது. நாம் நேசித்த அத்தனையும் போய்விட்டது.நீங்கள் செல்லுங்கள் உங்களுக்காக நம் புலம்பெயர்ந்த சமூகம் உள்ளது .அவர்கள் அடுத்த நகர்வுகளை செய்வார்கள். நீங்கள் அவர்களது செயல்களுக்கு உருவம் கொடுக்கும் போராளிகளாக இருங்கள் என சொல்லி அனுப்பினார்.
அதனால் தானும் சில முக்கிய போராளிகளும் கடைசியரை போராடவுள்ளதாகவும், நம்மை இனி நாமே பார்த்துக்கொள்ளுகின்றோம் நீங்கள் நல்ல நம்பிக்கையுடன் செல்லுங்கள். நான் கடைசி வரை சரணடைய மாட்டேன். அப்படி ஒரு நிலை வந்தால் நான் இருக்கமாட்டேன். என சொல்லி வற்புறுத்தி நம்மை மக்களுடன் செல்ல வைத்தார். சண்டை கடைசிக்கட்டத்தை எட்டிவிட்டது வெளியுலகுக்கு எந்த தகவலையும் அதன் பின் நமது கட்டுப்பாட்டிலிருந்து கொடுக்க முடியவில்லை.

[தலைவரின் இந்த கடைசி நேர கட்டளைப்படி மக்களுடன் சேர்ந்து வந்தவர்களில் நானும் ஒருவன்.][
தொடரும்....]

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com