Contact us at: sooddram@gmail.com

 

மலையக மக்களுக்கு மறுக்கப்படும் மனித உரிமைகள் (பகுதி 1)

(S. மோகனராஜன்)

உலகம் இரு மகா யுத்தங்களை சந்தித்தப்பிறகு அதிகம் பேசப்படுகின்ற, அண்மைய காலங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்த விடயமாக மனித உரிமைகள் மாறியுள்ளன. இயற்கைச்சட்டம், இயற்கை நீதி, சனநாயக கோட்பாட்டின் வளர்ச்சி, தேசியரசுகளின் தோற்றம் என நாகரீகத்தினதும் அரசியல் கோட்பாட்டினதும் வளர்ச்சியினால் கொடுரமான ஆட்சி முறைமை ஏற்படவே மனித உரிமைகள் எனும் மனிதத்துவத்தினை பாதுகாக்கும் எண்ணம் வலுப்பெற்றது. கிரேக்க காலத்துக்கு முற்பட்ட காலம் முதலே கொடுரமாக நடாத்தப்பட்டு வந்த ஆட்சி முறைகளின் கீழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் இடையிடையே நமது எதிர்ப்புக்களை காட்டியும் வந்துள்ளனர் ஸ்பாட்டகஸ் போராட்டம், 1215, 1688 கால போராட்டங்கள் 1789 ஐக்கிய அமெரிக்க, பிரான்சிய சுதந்திரப்போராட்டங்கள் உட்பட, 18ம் 19ம் நூற்றாண்டுகளிலும் அதற்கு முற்பட்ட காலங்களில் தோன்றிய எதிர்ப்பு எண்ணமும் ஏதோ ஒரு வகையில் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களே.

முதலாளித்துவ சமூகத்தின் தோற்றத்துடன் ஏகாதிபத்திய ஆட்சிமுறைமை மக்களை அடிமைப்படுத்தவும், அதன் ஊடாக தமது இலட்சியத்தை சாதித்துக் கொள்ளவும் முயன்றப்போது மக்கள் துன்பப்படத் தொடங்கினா.; பொறுக்க முடியாத கொடுமைகளுக்கு எதிராக மக்கள் எழவே உலகில் மனித உரிமைகள் பற்றிய பேச்சுக்கள் அடிப்படத்தொடங்கின. ஆயின் புராதன கம்யூன் சமூகத்தில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என மாமேதை மார்க்ஸ் கூறுகின்றார்

ஆக பொருள் முதல் வாதம், மூலதனத்தின் தோற்றத்துடனே உள்ளோர் இல்லோரையும், இல்லார் உள்ளோரையும் பகைத்துக் கொள்ள வேண்டிய மிக மோசமான சூழல் உருவானது.

இந்த பின்னணியில் தான் உலகில் நடக்கும் ஏகாதிபத்திய சனநாயக ஆட்சி முறைகளில் எல்லாம் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம் பெற்று வருகின்றன. (இவை) முதலாளித்துவ நாடுகள் மக்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்குவதாக பாசாங்கு காட்டி, சலுகைகள் வழங்க முனைந்தபோதே சர்வதேச நாடுகளுக்கு ஏற்புடையதான அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் தோன்றியது (UDHR 1948). இது முதலாளித்துவ கொள்கையை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு முயற்சி இதன் வழி மக்கள் அனைவரும் பயனடைய முடியாது எனக் கண்ட பின்பே மக்களுடைய மனித உரிமைகள் வெறுமனே அரசியல் உரிமைகள் மட்டுமின்றி பொருளாதார உரிமைகளையும் உள்ளடக்க வேண்டும் எனும் கருத்தேற்பு சோசலிச நாடுகளால் முன்வைக்கப்பட்டது இவ்வடிப்படையிலேயே 1966 இல் ICCPR உம் ICESCR உம் கொண்டவரப்பட்டன.

இவை இரண்டும் இரு வேறு கோணங்களில் தோன்றியவை என்றாலும் பிரித்து பார்க்கும் போது ஒன்றின் இடைவெளியை மற்றையதே பூரணப்படுத்த முடியும். சுதந்திரம் என்பதும், தேவைகள் என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையல்ல எனவே சுதந்திரம், உரிமை பற்றி ICCPR கூறினாலும் இவற்றுக்கு அடிப்படையிலான தேவைகளை பூர்த்தி செய்தல் தொடர்பாக ICESCR ஏற்பாடு செய்துள்ளது உதாரணமாக உண்பதற்கு உணவு தேடுவதே பெரும் பிரச்சினையாக, நாதியற்றுத்திரியும் ஒருவனுக்கு வாக்குரிமை இருந்து என்ன பயன்? இந்த பின்னணியில் தான் மனித உரிமைகள் பிரிக்கப்பட முடியாதவைகளாக கருதப்படுகின்றன.

இலங்கை அரசின் சமூக பொருளாதார கொள்கை, நடைமுறையினால் இலங்கையில் சிறும்பான்மையினராக வாழும் மலையக மக்களுடைய மனித உரிமைகள் பாதிக்கப்படும் விதத்தினையும், அதற்கான காரணங்களையும் இதை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றியும் எனது ஆய்வு கூற முனைகின்றது.

மலையக மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவது பற்றி ஆராய்வதற்கான காரணங்கள்

கி.பி 1820-1840 காலகட்டத்தில் இந்தியாவின் தென் மாநிலத்திலிருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் காலனியாதிக்க ஆங்கிலேயரால் அழைத்து வரப்பட்டவர்களே மலையக தமிழ் மக்கள். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனியும், ஆளுநரும் சேர்ந்து மலையக பிரதேசங்களில் பெருந்தோட்ட வர்த்தக பயிர் செய்கையை மேற்கொள்ள மனித வளம் கிடைக்கப் பெறாத சூழ்நிலையில் இலங்கையின் அப்போதைய குடிகள் (ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தவர்கள்.) ஆங்கிலேயர் அடிப்பணிந்து வேலை செய்ய இணங்காமையினால், வறுமை நிலையை பயன்படுத்தி அழைத்து வரப்பட்ட இனமே மலையக தமிழ் இனம்.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், கொத்தடிமைகளாக அழைத்துவரப்பட்ட மக்கள் இடையில் கப்பல் மூழ்கியும் பயணத்தின் போது நோய்வாய்ப்பட்டு பலர் மாண்டும் மன்னாரை வந்தடைந்தனர். பின் நடையாக இலங்கையின் மத்திய பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர் தற்காலிக குதிரை லாயங்களில் தங்க வைக்கப்பட்ட இவர்கள் இன்று வரை ( அதையொத்த ) அதே வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். 1931ம் ஆண்டு டொனமூர் சீர்திருத்தம் மூலம் வாக்குரிமை பெற்ற போதும் அது 1947, 1948 களில் கொண்டு வரப்பட்ட இந்திய பாகிஸ்தானிய ஒப்பந்தம், சிறிமா-சாஸ்த்ரி ஒப்பந்தம், பிரஜாவுரிமை சட்டங்களின் மூலமாக பறிக்கப்பட்டு பலர் 2003ம் ஆண்டு வரை நாடற்றவர்களாக வாழந்து வந்துள்ளனர்

1972ம் ஆண்டில் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்ற போதும் பழைய விதமான கொத்தடிமை வாழ்க்கையும், சுரண்டலும், இன்னல்களும் இந்த மக்களை பொருத்த மட்டில் குறையவே இல்லை, அவர்கள் ஒரு தேசிய இனமாக கருதப்படவும் இல்லை.

உலகின் மிகவும் கொடுரமாக மக்களை நடாத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கி இருக்கக்கூடிய அளவுக்கு மக்கள் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டன. இவ்வாறான கொடுமைகளிலிருந்தே மீண்டு வருவதற்கு முடியாத இனமாக வாழும் மலையக மக்களின் மனித உரிமைகளின் நிலை பற்றி நான் எடுத்தாராய தீர்மானித்தேன்

(தொடரும்......) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com