Contact us at: sooddram@gmail.com

 

கூட்டமைப்பு எல்லோரையும் எப்போதும் ஏமாற்றுவது சாத்தியமா?  -  சாந்தன்

வடமாகாண சபை தேர்தல் தமிழ் மக்களை பொறுத்தவரையில்இந்த அரசாங்கம் என்ன செய்தது அல்லது என்ன செய்யும் என்பது பற்றியதல்ல.மாறாக TNA யினர் என்ன செய்கின்றனர்நடை முறையில் என்ன செய்யப்போகின்றனர் என்பது பற்றியதே! ஒளிவு மறைவு இன்றி இந்த அரசாங்கம் அதிகார பரவலாக்கம் தொடர்பாகதனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்திருக்கின்றது. சுருக்கமாக சொல்வதானால்; அதிகாரப்பரவலாக்கம் பிரிவினைக்கு இட்டு செல்லும் என்றும் நாட்டை பிளவு படுத்த விடமாட்டோம் என்பதுமேஆட்சியாளர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது. அரசாங்கம்TNA இனருடன் பல சுற்றுக்கள் பேசியிருக்கின்றதுஎனவேசாதாரண பொதுஅறிவுள்ள அனைவருக்குமே தெரிந்த இந்த விடயம் TNA இனருக்கும் நன்றாகவேதெரியும்.

அரசின் இந்த நிலைப்பாட்டை நிர்ணயிக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானது விமல் வீரவன்சா, சம்பிக்க, பொது பல சேனா போன்ற சக்திகளின் அடிப்படைவாதமே என்பதுவும் தெரிகின்றது. அரசாங்கத்தின்   தீர்வு தொடர்பான போக்கு அரசில் அங்கம் வகிக்கும் LSSP, CP, வாசுதேவா, EPDP மற்றும் ராஜித போன்றவர்களுக்குமே திருப்தி அளிப்பதாக இருக்கவில்லை என்பதை வெளிப்படையாகவும் தொடர்ச்சியாகவும் தெரிவித்து வந்திருக்கின்றனர்.

பெரும்பாலான தமிழ் மக்களுக்கும் அரசின் அதிகார பரவலாக்கம்தொடர்பான தற்போதைய நிலைப்பாடு திருப்தியாக இல்லை.இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான நியாயமாக சிந்திக்கும் சிங்கள முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களுக்கு கௌரவமான தீர்வு ஒன்று வேண்டும் என்றே கருதுகிறார்கள்.

மொத்தத்தில் அரசியல் தீர்வு தொடர்பாக காத்‌திரமான நகர்வுகளை  இன்றைய UPFA அரசு துணிவுடன் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை தமிழ் வாக்காளர்களுக்கு இல்லை என்பதும் உண்மையே.

அதே நேரம்தமிழ் மக்களை பொறுத்த வரையில் தங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான TNA யினர் இது தொடர்பாக என்ன செய்தார்கள், செய்கின்றார்கள் என்பதே இன்றுள்ளமுதன்மையானகேள்வியாகும்.

கடந்த தேர்தல்களில்  பெரும்பான்மையாகதெரிவுசெய்யப்பட்ட  TNA யினர் இந்த நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து தமிழ் மக்களை   கௌரவாமான தீர்வை நோக்கி சமயோசிதமாக முன்நகர்த்தவேண்டும்  என்றஎதிர்பார்ப்புபலருக்கு  இருந்தது. ஆனால் TNA யினரின் கதைகளும் போக்குகளும் அப்படி எந்த வித நம்பிக்கையையும் தருவதாக இல்லை.

உயர் நீதிபதி விக்னேஸ்வரனின் வருகை

உயர் நீதிபதி விக்னேஸ்வரன் இந்த சிக்கலான ஆடு களத்திற்க்குள்  சம்பந்தரால் கொண்டுவரப்பட்டபோது  மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தது,இன்னும் இருக்கின்றது. புதிய துடைப்பம் நன்றாக கூட்டும்என்பார்களே அது போல. நீதிபதியாக இருந்தவர்சட்டவல்லுர், சிங்கள மக்களுக்கு நிதானமாக தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை சொல்ல கூடியவர், ஊழலற்ற நேர்மையான நடைமுறைகளை பின்பற்றுவார்என்று நம்பினார்கள், நம்புகிறார்கள்.

இன்று தமிழ் அரசியல் அரங்கில் இருக்கும் TNA தலைவர்கள் தங்களது இயலாமையை, ஊழல்களை, அங்கிடுதத்தி தனங்களை மறைக்கவவே தமிழ் வீர காட்டு கூச்சல் போடுகிறார்கள் என்பது பொது அறிவுள்ளவர்களுக்கு தெரியும்.

ஆனால் உயர் நீதி அரசரின் தேர்தல் பிரச்சார சாகச பேச்சுக்களும், வெளியிடப்பட்டிருக்கும்  விஞாபனத்தையும் பார்த்தால்  இவரும்இந்தசித்திரக்குள்ளர்களுடன்சேர்ந்துதமிழ்மக்களின்கண்களைகட்‌டி, “எவடம் எவடம் புளியடி புளியடி என்ற விளையாட்டை மீண்டும் தொடங்க போகிறார்கள் போல் தெரிகின்றது.

தமிழ், சிங்கள அடிப்படைவாத அரசியல்:

ஒருகணம் நீங்கள் சாதாரண இனவாதமில்லாத சிங்கள பொது மகனாக இருப்பதாக நினைத்துக்கொண்டு சம்பந்தன் சுரேஷ் போன்றவர்களின் வெட்டி வீராப்பு கதைகளை கேட்டு பார்ப்பதாக நினையுங்கள்; எங்களுக்கு பொது பல சேனா போன்ற அடிப்படைவாதிகளின் கதைகளை கேட்கும் போது தோன்றும் அதே உணர்வுதானே அவர்களுக்கும் ஏற்படும்.

ஸ்ரீ லங்கா அரசியலை பொறுத்த வரையில் பொது பல சேனாவின் இனவாத அரசியலும்TNA இனரின் பிரிவினை கோஷமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகும். பொது பல சேனா போன்ற அடிப்படைவாதிகளால் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்க முடியாது என்று தமிழர்கள் எவ்வாறு நம்புகிறார்களோ அதே போல் தான் சிங்கள மக்களும் TNA யினரின் வெட்டி வீராப்பு கதைகள்நாட்டை பிரிப்பதற்க்கும் அதனை தொடர்ந்து அந்நிய சக்திகளுடன் இணைந்து சிங்கள மக்கள் ஆக்கிரமிக்கப்படுத்தலுக்குமே வழி கோலும் என்று நம்புவதில் என்ன தவறு இருக்கின்றது?

இரு தரப்பிலும் உள்ள இவர்கள்;அடிப்படை வாதத்தை பூஜித்து,  போசித்து வருகின்றார்கள். ஒன்றில்லாமல் மற்றது உயிர் வாழ முடியாது என்பதே உண்மை. உண்மையிலேயே நாட்டில் சுமூகமான நிலை தோன்ற வேண்டும் என்றால் சிங்கள தமிழ் அடிப்படை வாத போக்குகள்இரண்டுமே அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்படல் வேண்டும்.இதுவே இன்று ஸ்ரீ லங்கா மக்களுக்கான முதன்மையானதும் முக்கிய மானதுமான அரசியற் கடமையாகும்.

இந்த பின்னணியில் தான் TNA இனரின் கோசங்களும் அணுகுமுறைகளும் பொது அறிவுள்ளவர்களினால் நிதானமாகவும் நுணுக்கமாகவும் பரிசீலிக்கப்படல் வேண்டும்.தமிழ் பேசும் மக்களை  பொறுத்தவரையில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம்  வாய்ந்ததேர்தலாகும்.

தமிழ் அடிப்படை வாத அரசியல் கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு இழைத்த சொல்லொணா துன்ப துயரங்கள் இன்னும் தொடரத்தான் வேண்டுமா என்பதை தீர்மானிக்கப்போகும் தேர்தல் இது.

மாவை சேனாதிராசா  போன்றஅப்பாவிதேசியவாதிகளைஒரங்கட்டிதமிழ்அடிப்பதைவாதஅரசியலைமுன்னோக்கி நகர்த்த்துவதன் மூலம் தொடர்ந்தும்  அரசியல்பிழைப்புநடத்தமுயலும்சுரேஷ்,  ஸ்ரீதரன் போன்றவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வாக்காளர்களுக்கு கிடைத்திருக்கும் பொன்னான சந்தர்ப்பம் இதுவாகும். ஆகவேஅனைவரும்தவறாதுவாக்களிக்கவேண்டும்.சிந்திக்கும் மக்கள் நூறு சத விகிதம் வாக்களிப்பு நடைபெற ஊக்குவிக்க வேண்டும்.

வட மாகாணதமிழ் வாக்காளர்கள் முன்னாலுள்ள தெரிவுகள் என்ன?

இருபதுக்கு மேற்பட்ட குழுக்கள் போட்‌டி இடுகின்றன என்று சொல்லப்பட்டாலும் முக்கியமாக ஐக்கிய சுதந்திர முன்னணியும்(UPFA) தமிழ் தேசிய கூட்டமைப்புமே (TNA) பிரதானமான போட்டியாளர்களாகும்.

2.     ஐக்கிய தேசியக்கட்சிக்கு(UNP) யாழ் வர்த்தக சமூகத்தினரிடம் உள்ள ஆதரவு,ஊர்க்காரன்மற்றும்முன்னைய வாக்களிக்கும் விதங்கள்,போன்றகாரணிகளைவைத்து பார்க்கும் போது யாழ் மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைக்கலாம்.

3.     மிகுதி முப்பத்தைந்து ஆசனங்‌களும் TNA க்கும் UPFA க்கும் இடையே தான் பகிர்ந்து கொள்ளப்படும். ஏனைய குழுக்களுக்கு அளிக்கும் வாக்குகள் வீணாகப்போகும் வாக்குகள் என்பதை மனங்கொள்ளல் வேண்டும்.

4.     எனவே இந்த தேர்தலில் TNA க்கு வாக்கு போடும் போது எதற்காக போடுகிறோம் UPFA க்கு வாக்கு போடும் போது என்ன செய்தியை சொல்ல விரும்புகிறோம்; என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அதன் விளைவுகளையும் புரிந்துகொண்டு நேர்மையாக வாக்களிக்க வேண்டும். இந்த அடிப்படையில் பின்வரும் விடயங்களை கவனத்தில் எடுக்கவும்.

 

கூட்டமைப்பு பற்றிய  உண்மையானநிலைசுருக்கமாக:

 

1.     கூட்டமைப்பானது இன்று 13 பாராளுமன்ற உறுப்பினர்களையும், கிழக்கு மாகாணத்தில் 11மாகாண சபை உறுப்பினர்களையும் உள்ளுர் ஆட்சி சபைகளில் 400 வரையிலான உறுப்பினர்களையும் கொண்டுள்ளது

2.     இவர்கள் அனைவரும் அரச சம்பளம்அரசபாதுகாப்புசலுகைகள், சொகுசு வாகனங்கள், மானியங்கள் இலவச பிரயாணங்‌கள் போன்ற எல்லாவற்றையும் மக்களின் பெயரால் அனுபவித்து வருகிறார்கள்.

3.     இவ்வளவு பொறுப்புகளையும் இவர்களிடம் கொடுத்திருந்த போதும், தமிழ் மக்கள் அரசியற் பலமும் இழந்து வாழ்வாதார தேவைகளுக்கே நித்தமும்,  எதற்க்கும்,  எல்லோரிடமும் யாசிக்கும் இன்றைய கேவலமான நிலைக்கு யார் காரணமானவர்கள் என்றால் அதற்க்கு பொறுப்பு கூற யாரும் இல்லை. இந்த முறை வாக்களித்த்தால் எல்லாம் தீர்க்கப்படும் என்பதே ஒவொரு தேர்தல்களிலும் இவர்களதுஒரே பதில்.

4.     இவ்வளவு பொறுப்புக்களையும் தமிழ் மக்கள் இவர்களை  நம்பிகொடுத்தும் இவர்கள்தமிழ்மக்களுக்குசெய்ததுஎன்ன? குறைந்த பட்சம் ஒரு நேர்த்தியான ஜனநாயக அமைப்பாகவாவது இருக்கிறார்களா? என்றால் இல்லை என்பதே உண்மையாகும்.

5.     இவர்களிடம்;  கூட்டமைப்பை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அமைப்பாக பதிவு செய்யும் பக்குவம் கூடஇருக்கவில்லை. இது விடயத்தில் இவர்களுக்குள் நடந்த குத்துவெட்டுக்களும் குழிபறிப்புக்களும் ஊரறிந்தவிடயமே. தேர்தல் முடிவடைந்ததும்  மீண்டும் இந்த சுயநல குடுமி பிடி சண்டை தொடரும் என்பது பொது அறிவுள்ள அனைவருக்கும் தெரியும்.

6.     கூட்டமைப்பிற்கு இன்றுவரை வடக்கு கிழக்கில் உத்தியோக பூர்வமான அலுவலகமும் கிடையாது. ஆளுக்காள் தங்களது வியாபாரங்களை தொடர்வதற்க்காக கடைகள் பரப்பி இருக்கிறார்கள்.

7.     கூட்டமைப்பிற்குஉத்தியோக பூர்வமானபத்திரிகையோ, இணையத்த்தளமோ, பேச்சாளரோ இன்று வரை இல்லை. இவர்களுக்கு வாக்களித்த நேர்மையான பெரும்பாலான வாக்காளர்களுக்கு எந்த ஒரு விடயத்திலும் இவர்களது நிலைப்பாடு என்ன என்பதும் தெரியாது.ஏன்? நேர்மையாக ஊழலற்ற நிர்வாகம் நடத்த விரும்பும் TNA உள்ளூர் ஆட்சி உறுப்பினர்களுக்குமே தெரியுமா என்பதும் சந்தேகமே.  

8.     மொத்தத்தில் TNA அரசியல் என்பது அடிப்படை வாத அரசியலை தொடர்ந்து தக்க வைத்து கொள்வதன் மூலம் தத்தமது பதவி சுகங்களை காப்பாற்றி கொள்வதென்பதே

 

UPFA க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி ஓரிரு குறிப்புக்கள்:

கூட்டமைப்பு தொடர்பாக தமிழ் சமூகம் தங்களது அதிருப்தியை பதிவு செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் இதுவாகும்.

2.     தமிழ் மக்கள் இனவாத அடிப்படை வாத அரசியலை நிராகரிக்கிறார்கள் என்று உறுதியாக கூறுவதற்கான சந்தர்ப்பமும் இதுவாகும்

3.     கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் மூன்று வருடங்களுக்கு, அதாவது 2016 ம் ஆண்டுவரை பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க தான் போகிறார்கள். எனவே அவர்கள் உண்மையாகவேநிரந்தர அரசியல் தீர்வு நோக்கி முயற்சிகள் மேற்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் எடுக்கும்  முயற்சிக்களுக்குஇத்தேர்தல் தோல்விதடையாக இருக்காது.

4.     UPFA க்குள் இருக்கக்கூடிய அதிகார பரவலாக்கலுக்கு ஆதரவான CP, LSSP, EPDP போன்றவற்றின் கரங்களை பலப்படுத்துவதன் மூலம் அரசின் மீது அரசியல் தீர்வு தொடர்பான அழுத்தத்தை அதிகரிக்கலாம்.

 

முடிவாக தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டிய  விடயம்அடிப்படைவாதஅரசியலைதொடர்வதா? இல்லையேல் இந்த மாகாண சபை தேர்தலில் ஒரே ஒரு மாற்றாக உள்ள அணியை ஆதரிப்பதன் மூலம் ஒரு புதிய அணுகுமுறையை ஆரம்பிப்பதா என்பதே.

முடிவு வாக்காளர்களின் கைகளிலேயே உள்ளது!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com