Contact us at: sooddram@gmail.com

 

மார்கழி 13

(சங்கரன்)

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாறு கடந்து வந்த பாதையில் மார்கழி 13 துயரம்மிக்க ஒரு நாளாகும். தமிழ் இன விடுதலையின் போராலேயே இக் கொடூரம் நிகழ்த்தப்பட்டது. இந்தக் கொடுமையை புரிந்தவர்கள் அரச படைகளோ, சிங்கள இனவெறியர்களோ அல்ல பிரபாகரன், புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம் ஆகியோரது திட்டத்திற்கு கிட்டு, திலீபன், மாத்தையா போன்றவர்களே செயல்வடிவம் கொடுத்தார்கள். விடுதலை வேட்கையோடு புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்ட தமிழ் இளைஞர்களே சக போராளிகளை அழித்தொழிக்கும் இந்த ஈனச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்டார்கள்.

மக்களின் விடிவிற்காக, அனைவரதும் சுபிட்சமான எதிர்காலத்திற்காக தமது உயிரையும் அர்ப்பணிக்க தயாராயிருந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் ஒரே நாளில் போராட்டத்திலிருந்து அந்நியமாக்கப்பட்டார்கள். துரோகிகள் என்றும், சமூக விரோதிகள் என்றும், நடத்தை கெட்டவர்கள் என்றும் புலிகளால் இழித்தும் பழித்தும் பேசப்பட்டார்கள். துன்புறுத்தப்பட்டார்கள் பலர் கொல்லவும்பட்டார்கள்.

தமிழ் இன விடுதலை என்ற அதே நோக்கத்திற்காக அர்ப்பண உணர்வோடு புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட இளைஞர்கள், ஏக தலைவனாய் வீற்றிருக்க வேண்டும் என்ற பிரபாகரனின் பேராசை காரணமாக தவறாக வழிநடத்தப்பட்டார்கள். ஏனைய இயக்கங்கள் மீது ஏவி விடப்பட்டார்கள்.

சமூகத்தின் பங்கு

பிரபாகரனின் தனிப்பட்ட இயல்புகள், பலவீனங்கள் இந்த அக்கிரமங்களுக்கு மூலகாரணம் என்பது வெளிப்படையாகத் தெரிந்த உண்மை என்றபோதும் பிரபாகரனை இவ்வாறு கட்டமைத்ததில் தமிழ் சமூகத்தின் பங்கு பிரதானமானதாகும்.

அவரை இத்தகைய செயல்களுக்கு தூண்டியவர்கள், உருவேற்றியவர்கள் தொடர்ந்து அவற்றை நியாயப்படுத்தி அதே போன்று அடுக்கடுக்காக பல அக்கிரமங்கள் நிகழ காரணமாயிருந்தார்கள். அவர்கள் முழு சமூகத்திற்கும் எத்தகைய தீங்கை இழைத்தார்கள் என்பதை மறைத்து எல்லாப் பழியையும் பிரபாகரன் மீது சுமத்திவிட்டு இப்போதும் நம் மத்தியில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்கள் இன்று அனுபவிக்கும் அத்தனை துன்ப துயரங்களுக்கும் பங்காளிகள் வேறு ரூபத்தில் சமூகத்தை வழிநடாத்தத் தலைப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் சமூகத்றிற்கு விளைவித்த நாசம் பிரபாகரனின் பங்கை விடவும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. ஆனாலும் உண்மையை அறியாத தமிழ் சமூகம் அவர்களால் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.

கொலைகள் பகரும் செய்தி

தோழர் மஜித் என்ற கந்தையா மோகனேஸ்வரன  எமது வானொலி தொடர்பு சேவையில் பணிபுரிந்தவர் புலிகள் நடாத்திய தாக்குதலை அடுத்து,  சரணடையுமாறு விடுத்த அச்சுறுத்தலை தொடர்ந்து தோழர் மஜித்  புலிகளின் வாக்குறுதியை நம்பிய அவரது உறவினர்களால் புலிகளின் வைமன் வீதி முகாமிற்கு அழைத்துவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டார். ஒப்படைத்தவர்களுக்கு கண்ணீரே மிஞ்சியது.

பொகவந்தலாவையை சேர்ந்த தோழர் பெஞ்சமின் தனது மருத்துவத் துறையில் கல்விபயில்வதற்கு கிடைத்த வாய்ப்பை உதறித்தள்ளி தமிழ் இனவிடுதலைப்போராட்டத்தில் இணைந்து கொண்டவர். ஆயுதப் பயிற்சி பெற்றுத் திரும்பிய அவர் யாழ்ப்பாணத்தில் ஈபிஆர்எல்எவ் இன் மருத்துவப் பிரிவை உருவாக்கி பொறுப்பாயிருந்து செயற்பட்டு வந்தார். தோழர்களின் மருத்துவ தேவைகளை கவனித்ததுடன் ஆரம்பித்த அவரது சேவை பொதுமக்கள் மத்தியிலும் விஸ்தரிக்கப்பட்டது.  மார்கழி 13 அன்று உரும்பிராயில் உள்ள ஈபிஆர்எல்எவ் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தோழர் பெஞ்சமின் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

தோழர் ஈஸ்வரன் என அழைக்கப்பட்ட நிர்மலன் பெருமாள் கோவிலடியை சேர்ந்தவர் ஆரம்பத்தில் ஈபிஆர்எல்எவ் அரசியல் நடவடிக்கைகளோடு ஈடுபாடு காட்டிவந்த இவர் ஜேர்மனி சென்று திரும்பி வந்திருந்தார். மீண்டும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் இணைந்து ஆயுதப்பயிற்சி பெற்று யாழ் நகர இராணுவ பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்டார். ஈபிஆர்எல்எவ் இளைஞர்களை சரணடையுமாறு கோரி சுற்றிவளைப்புக்களை புலிகள் மேற்கொண்டிருந்த வேளையில் உறவினர்களால் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் கடத்தப்பட்டதை கண்டித்து அவரை விடுவிக்கக் கோரி நடாத்தப்பட்ட ஊர்வலத்தை குழப்ப முயன்றவர்களை எதிர்த்து நின்றவர் தோழர் ஈஸ்வரன். அவரிடம் புலிகள் நடாத்திய விசாரணைகளில் இந்த விவகாரமே பிரதான விடயமாயிருந்தது. புலிகளின் சிறையிலேயே கொல்லப்பட்டவர்களில் அவரும் ஒருவராவார். 

தோழர் கதிர் என அழைக்கப்பட்ட கணேசரத்தினம் பூநகரியை சேர்ந்தவர் ஈபிஆர்எல்எவ் கிளிநொச்சி பிரதேச இராணுவ பிரிவு தலைவராக செயற்பட்டவர். வன்னியில் புலிகள் மீத  இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களை தொடர்ந்து சாவகச்சேரிக்கு அழைத்துவரப்பட்ட தோழர் கதிர் மீசாலையில் உள்ள புலிகளின் முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். இந்த முகாம் மீது நடாத்தப்பட்ட விமானத் தாக்குதலின் போது தப்பியோடி மயிரிழையில் உயிர்பிழைத்த தோழர் கதிர் புலிகளை நம்பி மீண்டும் அந்த முகாமுக்கு திரும்பிவந்திருந்தார்.  அவரை யாழ்ப்பாணத்திற்கு இடம்மாற்றிய புலிகள் அதனையே அவரது இறுதிப் பயணமாயாக்கினர்.

தோழர் கபூர் என அழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் பருத்தித்துறையை சேர்ந்தவர். குடும்பத்தினருடன் கொழும்பில் வசித்துவந்தார். அங்கு கல்விகற்றுக்கொண்டிருந்த அவர் ஈபிஆர்எல்எவ் இன் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஈபிஆர்எல்எவ் உடன் இணைந்துகொண்டவர். ஈபிஆர்எல்எவ் இயக்கத்ததின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர். பாலஸ்தீன விடுதலை இயக்க பயிற்சி பாசறையில் பயிற்சி பெற்றவர். மார்கழி 13 இல் புலிகள், ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல் தொடுத்த வேளையில் யாழ் மாவட்டத்தின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் கட்சியின் மத்திய குழுவில் இடம்பெற்றிருந்தவர்களிற்கிடையே நிலவிய முரண்பாடுகள் அவரோ, வேறெவருமோ இந்த பொறுப்பை சரிவர நிறைவேற்ற முடியாத ஒரு நிலை இயக்கத்திற்குள் தோற்றுவிக்கப்பட்டிருந்தது கசப்பான உண்மையாகும். மார்கழி 15 இல் சாவகச்சேரியில் ஈபிஆர்எல்எவ் தோழர் ஒருவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட தோழர் கபூர் காங்கேசன்துறை வீதியில், மனோகரா திரையரங்கிற்கு அருகில் அமைந்திருந்த புலிகளின் சிறைக்கூடத்திற்கு கொண்டுவரப்பட்டு சில தினங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவரை யாரும் காணமுடியவில்லை.

கிழக்கு மாகாணத்தில் பதில் தாக்குதல்கள்

மார்கழி 13 ம் திகதிக்கு பின்னரும் மட்டக்களப்பில் ஈபிஆர்எல்எவ் தோழர்கள் புலிகளின் தாக்குதலுக்கு முகங்கொடுத்து மறைந்திருந்து பதில் தாக்குதல்களை நடாத்தி வந்தனர் இவ்வாறு நடைபெற்ற மோதல் ஒன்றில் 16.12.1986 அன்று தோழர் ரஞ்சித் (கந்தப்பெருமாள் குமார்) கொல்லப்பட்டார். அவரது தலைமையில் செயற்பட்ட தோழர்கள் ரகு கே. கோகுலதாசன், எஸ்.கீர்த்திராஜா, சுதா (எஸ்.சிவசுப்பிரமணியம்), அன்பு (பி.வசந்தராஜா), ஞானம் (கே.கோகுலராஜ்), ரஞ்சன் (ஞானப்பிரகாசம்), கோபால் (பி. கோபாலபிள்ளை), செல்றியன் (சுப்பிரமணியம் செல்வகுமார்) ஆகியோரும் உயிரிழந்தனர். கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் அங்கு தலைமறைவாக இருந்து செயற்பட்டு தப்பிப்பிழைத்தவர்களில் ஒருவர் என்பதும் தோழர் ராசிக் புலிகளின் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து காடுகளில் அலைந்து இராணுவத்தின் உதவியோடு மீண்ட ஒருவர். இதுவே அவரது பிந்திய கால நிலைப்பாடுகளுக்கு அடிப்படை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கனவாகும். 

தாக்குதல் இடம்பெற்ற மார்கழி 13 அன்றும், அதன் பின்னர் இதனோடொட்டியும் கைது செய்யப்பட்டும், தடுத்து வைத்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் கொல்லப்பட்டவர்கள், காணாமற்போனவர்களுக்கு இவர்கள் எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே இங்கு பெயர் குறிப்பிடப்படாத இன்னும் பலர் இதே போன்று பலியெடுக்கப்பட்டனர்.

யார் குற்றம்?

காரணம் கற்பிக்கப்பட்டு புலிகளால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட மார்கழி 13 தாக்குதல் தமிழ் சமூகத்தின் கண்களை திறக்கவில்லை. சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படவுமில்லை. விடுதலைப் போராட்டம் என்ற பெரிய திரையினால் அனைத்தும் மூடிமறைக்கப்பட்டன. இதனை கண்டுகொள்ளாத தமிழ் சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் நோக்கி மிக விரைவிலேயே இந்த துப்பாக்கிகள் திரும்பின. தமிழ் சமூகம் முழுவதுமே தனது மௌனத்திற்கான விலையை முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து செலுத்திக் கொண்டிருந்தது.

தமிழ் இனத்தின் விடிவு, சமத்துவ சமுதாயம் என்பவற்றைக் கனவு கண்ட, எவ்வித குற்றமும் இழைக்காத, ஆற்றல் மிக்க இந்த இளைஞர்கள  அழித்தொழிக்கப்பட்டார்கள். அதேவேளை இவர்களது வயதை ஒத்தவர்களாயிருந்தபோதும் சமூகத்தின் அவல நிலையை கண்டுகொள்ளாது தான் தனது குடும்பம் தனது கல்வி என்ற எல்லைக்குள் நின்று கொண்டவர்கள் மட்டுமே அன்று புலிகளிடமிருந்து தப்பிப்பிழைக்க முடிந்தது. அவர்களே புலிகளின் அதிகாரம் உச்சத்திற்கு வந்தபோது போராட்டத்தின் முன்னணிச் சக்திகளாக அரங்கிற்கு வந்தனர்.

இன்று இறந்தவர்களுக்கு ஒரு அஞ்சலி செலுத்தக் கூட முடியாதா? என்று கேள்வி எழுப்புகின்  உரிமைகள் பற்றியும் ஜனநாயகம் குறித்தும் பேசுகின்ற பலரும், அவர்களது முன்னோடிகளும் சக இயக்கங்கள் செயற்படுவதற்கான அடிப்படை ஜனநாயக உரிமைகளை புலிகள் நிராகரித்த போது தமது புலமையை வெளிப்படுத்த முன்வரவில்லை. அது மாத்திரமன்றி புலிகள் மட்டுமே தொடர்ந்து போராடுகின்றார்கள் என தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் கருத்துக்களையே வெளியிட்டும் வந்தார்கள்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு

மார்கழி 13 இல் ஒரு இயக்க மோதல் நிகழ்ந்ததாகவும், துரோகிகளே கொல்லப்பட்டதாகவும் திரிபுபடுத்தப்பட்ட செய்தியே எமது இளம் சந்ததிக்கு கூறப்பட்டிருக்கின்றது. உள்நோக்கத்தோடு புலிகளுக்கு சார்பாக எழுதுபவர்கள், பேசுபவர்களிடமிருந்து வேறெதையும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், நடுநிலையானவர்கள் என்று தம்மை கூறிக்கொள்பவர்களும் எழுந்தமானமாக இதையே பின்பற்றிவந்தனர்.

ஏனைய இயக்கங்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற பிரபாகரனின் ஆசையை நிறைவேற்ற புலிகள் ஈபிஆர்எல்எவ் மீது திடீர் தாக்குதலை நடாத்தினர். ஏன் இத்தகையதொரு தாக்குதல் நடாத்தப்படுகிறது என்பதை ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் அறிந்திருக்கவில்லை என்பது மாத்திரமல்ல தாக்குதல் நடாத்திய புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கும் கூட தெரிந்திருக்கவில்லை. தலைமையின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே தாக்குதலில் ஈடுபட்டதாக பலர் தெரிவித்தார்கள். இது பற்றிய தெளிவின்மையால் இந்த தாக்குதலுக்கு பெறுப்பேற்றிருந்தவர்கள் தமது அறிவுக்கு எட்டியவரையில் ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொருவிதமாக விளக்கமளிக்க முற்பட்டனர். தாக்குதல் நடைபெற்ற மறு தினம் ஈபிஆர்எல்எவ், புலிகளை தாக்க திட்டமிட்டிருந்ததாக ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டை தயாரித்துக் கூறினார்கள். காரணம் ஒன்றை தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்தே இது உருவாகியிருந்தது புலப்பட்டது. ஆனாலும் புலிகள் மேற்கொண்ட இந்த மார்கழி 13 தாக்குதலை சில ஊடகவியலாளர்களும், புத்திஜீவிகளும், முற்போக்கானவர்கள் என்று கருதப்படுபவர்களும் கூட இயக்க மோதல் என்றே வர்ணித்து வருகின்றனர். 

விமர்சனங்கள்

புலிகள் 1986 மே 23 இல் ரெலோவை தாக்கிய போதே ஏனைய இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து புலிகளை தாக்கியிருக்க வேண்டும் என்று இப்போதும் கூட கூறுபவர்கள் இருக்கிறார்கள். போராட்டத்தில் மக்கள் தான் தீர்க்கமான சக்திகள் எங்களுடைய போராட்டம் மக்கள் போராட்டமாக இல்லாமல் இளைஞர் போராட்டமாக மாறியதே தோல்விக்கு காரணம் என்று விமர்சிப்பவர்களும் கூட இவ்வாறான கருத்தை முன்வைக்கின்றனர். ஆனால் இவர்களே இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிகாப்புப் படை இங்கு நிலைகொண்டிருந்த வேளையில், வடக்கு கிழக்கு மாகாணசபை நிறுவப்பட்டு அதனை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த சமயத்தில், 1987 இன் பின்னர் 1990 மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் ஈபிஆர்எல்எவ் இற்கும் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்கள், அதன் விளைவுகள் குறித்து வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

பாசிச இயக்கத்தின் முன்னால் மக்கள் வலுவிழந்துவிடுகிறார்கள் என்பதற்கு எமது வரலாற்றிலும், உலக வரலாற்றிலும் பல உதாரணங்கள் உள்ளன. ஆயினும், பாசிச குணாம்சம் கொண்ட புலிகள் இயக்கத்தை நுணாவில், வசந்தபுரம், உரும்பிராய், இடைக்காடு போன்ற இடங்களில் மக்கள் ஒன்றுதிரண்டு எதிர்த்து நிற்கத் துணிந்தனர். ஈபிஆர்எல்எவ் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்துக் குரல் கொடுத்தனர் என்பதும் இன்னும் பல இடங்களில் மக்கள் புலிகளின் அச்சுறுத்தலை பொருட்படுத்தாது பல தோழர்களை பல மாதங்கள் பாதுகாத்து உயிர்பிழைக்கச் செய்தார்கள் என்பதும் ஈபிஆர்எல்எவ் இன் வரலாற்றில், எமது போராட்ட வரலாற்றில் மறக்கப்பட முடியாத சம்பவங்களாகும்.  இதனை வைத்தே மக்களுக்கு ஆயுதப்பயிற்சியும், ஆயுதங்களும் கொடுத்திருந்தால் உங்களை பாதுகாத்திருப்பார்கள், நீங்கள் மக்களில் தங்கியிருக்கவில்லை என்று விமர்சிப்பவர்களும் உண்டு. 

இதர இயக்கங்களை வளரவிடாது அழித்தொழித்துவிட வேண்டும் என்பது பிரபாகரன் கொண்ட கொள்கை. ஆனாலும், உள்முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளாமல் காலத்தை இழுத்தடித்து இயக்கத்திற்குள் ஒற்றுமையையும், ஒருசீர் தன்மையையும் பேணத் தவறியதால் ஈபிஆர்எல்எவ் பலவீனமடைந்திருந்தது இதுவே, புலிகள் மார்கழி 13 தாக்குதலை நடாத்துவதற்கான உந்துதலை வழங்கியது என்ற விமர்சனம் நியாயமானதாகவே தோன்றுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்த அக்கறையுள்ள அரசியல் தலைமைகள் இன்றும் இதனை படிப்பினையாக கொள்ளலாம்.

(சங்கரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com