Contact us at: sooddram@gmail.com

 

புலிகளின் பிரதித்தலைவர்
மாத்தையாவுக்கு மரண தண்டனை!
காட்டிக் கொடுத்த தேசத்துரோகி எனக் குற்றம்'
துணை புரிந்த இருநூறு புலிகளும் படுகொலை.
பெரிய புலி பிரபாகரனின் தீர்ப்பு.

இந்தப் புலிகளை வளர்ப்பவர்களுக்கும் ஆதரவளிப்பவர்களுக்கும் இவர்களின் கதை ஒரு பாடமாகட்டும்.


1977ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் ஒரு தீவிர உறுப்பினராகவும், 1987ம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும்படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்த நாட்தொட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராகவும் இருந்து வந்த மாத்தையா எனவும், மாத்தையா சிறி எனவும் நெருக்கமானவர்களால் சிறி எனவும் அழைக்கப்பட்ட வல்வெட்டித் துறையைச் சேர்ந்த மகேந்திரராஜா புலிகளாலேயே மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக புலிகளின் இருப்பிலும், வாழ்விலும், வளர்ச்சியிலும்......எனைய தமிழ் அணிகளுடைய
பிரதானமான தலைவர்களையும்......சாதாரண உறுப்பினர்களையும் படு கொலைகள் செய்து....புலிகளின் அமைப்பைக் கட்டிக்காப்பதிலும் தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்து வந்துள்ள மாத்தையா சிறி மகேந்திரராஜாவுக்கு இறுதியாக பிரபாகரன் வழங்கியுள்ள பரிசு மரண தண்டனை.!!!!! அளித்துள்ள பட்டம் சமூகத் துரோகி.காட்டிக் கொடுத்த தேசத் துரோகி.
இது மாத்தையாவோடு மட்டும் முடியவில்லை. மாத்தையாவோடு சேர்ந்து திரிந்து புலி அமைப்புக்காக உழைத்து வந்த இருநூறு துணைப் புலிகளும் பிரபாகரனின் மரணதண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக்கப் பட்டு படுகொலை செய்யப்பட்டுள்னனர்.
மாத்தையா மற்றும் எண்பது என்ற எண்ணிக்கையானது பிரபாகரனின் புலிகளால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மாத்தையாவுக்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, மாத்தையாவுக்குச் சார்பாகச் செயற்பட்டுவந்த இருநூறுக்கு மேற்பட்ட புலிகளும், அத்துடன் மாத்தையாவுடன் பணம், மற்றம் ஆயுதங்களின் மறைவிடங்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்டிருந்த நூற்றக்கணக்கான ஆதரவாளர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மாத்தையா பிரபாகரனின் சொந்த ஊர்க்காரன் என்பது மட்டுமல்ல நெருங்கிய உறவினனும் கூட. புலிகளின் அமைப்பானது ஒருவகையில் ஒரே ஊரைச் சேர்ந்த உறவினர்களின் தலைமையில் அமைந்த இயக்கமாகவே அமைக்கப்பட்டது.
மாபியா மொடல் மாவீரர்கள்
அது ஆரம்ப காலங்களில் அவ்வாறானதாக இருக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் அவ்வாறானதோர் அமைப்பாகவே மாற்றம் பெற்றது. புலிகள் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்காக காலத்துக்குக் காலம் மிகவும் பிற்போக்குத்தனமான முறைகளில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஈழத் தமிழர்கள் மத்தியில் கமுக்கமான முறைகளில் ஊர், சாதி, தொழில் ஆகிய பிரச்சாரங்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
1987ம் ஆண்டு இந்திய இலங்கை சமாதான காலகட்டத்தில் புலிகளின் தலைமையை நோக்குவோமாயின், பிரபாகரன் மாத்தையா கிட்டு, புலிகளின் கிழக்குமாகாணத் தளபதியாக இருந்த குமரப்பா ஆகிய அனைவருமே ஒரே ஊர்க்கரர்களும் உறவினர்களுமாவர்.
புலிகளின் உத்தியோகபூர்வமான வெளியீடுகளின் பிரகாரம் மாத்தையாவுக்கான மரணதண்டனை கடந்துபோன தைமாதம் 16ம் திகதி நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் புலிகளின் ஒருவட்டாரத்தினால் கூறப்படும் செய்திகளின்படி மாத்தையா ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்......பலரும் இது பற்றிக் கேள்வி எழுப்பத் தொடங்கியதனாலேயே , இப்போது பிரபாகரன் தனது நடவடிக்கையை நியாயப்படுத்த குற்றச்சாட்டுக்கள் என்றும், விசாரணை என்றும், மரணதண்டனைக்கான திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டதெனக் கூறுவதாகச் சொல்லுகின்றனர்........
இன்னொரு பகுதியினர் இன்னமும் மாத்தையா கொல்லப்படவில்லை என்றும், மாத்தையாவைக் n;கான்றால் புலிகளுக்குள் நெருக்கடிகள் அதிகரிக்கும் என்பதனால் மாத்தையா இன்னமும் பிரபாகரனின் சிறைக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஏவ்வாறாயினும் இவை புலிகளின் உறுப்பினர்களுக்கு மட்டுமே உரிய பிரச்சனைகளாகும்........ஆனால் புலிகளுக்கும் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது....... நேற்றுவரை புலிகளின் பிரதித் தலைவர், தியாகச் செம்மல், மகத்தான மாவீரன், அஞ்சா நெஞ்சன் என்று தங்களால் புகழாரம் சூட்டப்பட்டுவந்த ஒரு நபரை திடீரென அதே நாக்கால் தேசத் துரோகி, சமூகத்துரோகி, இந்திய உளவுப்படையின் ஒற்றன், தேசத்தின் விடுதலைக்காக தனது காலைப் பறிகொடுத்த தேசத் தியாகி கிட்டனை இந்தியக் கடற்படைக்குக் காட்டிக் கொடுத்த துரோகி என்று நீண்ட ஒரு துரோகப் பட்டியலை மக்கள் மத்தியில் கொண்டுசென்று பிரச்சாரம் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள்.
மாத்தையாவின் மரணதண்டனையோடு தொடர்புபடுத்தப்பட்ட தை மாதம் 16 என்பது மற்றொரு பிரதான புலியாகிய கிட்டன் இந்திய கடற்கரைப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டபோது எரிந்து இறந்த ஒரு வருட பூர்த்தி தினமாகும். கிட்டனின் ரகசிய கடற் பயணத்தின் விபரங்களை இந்திய அரசுக்கு மாத்தையா தான் அறிவித்ததாக மாத்தையா மீது பிரபாகரன் வைத்துள்ள ஒரு குற்றச்சாட்டு.....மாத்தையாவும் கிட்டனும் பல ஆண்டுகளாகவே பரம எதிரிகள்.....மாத்தையாவுக்கு எதிராக பிரபாகரனால் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட ஆள்தான் கிட்டு.
வெலிக்கடையை வென்ற கந்தன் கருணை
இதனால் தான் 1987 பங்குனி மாதத்தில் மாத்தையா தனது ஆட்களை வைத்து கிட்டனின் மீது வெடிகுண்டு எறிந்ததுவும், அதனால் கிட்டனின் கால் இழக்க நேர்ந்ததுவும். பின்னர் அச் சம்பவத்தை திசைதிருப்பும் வகையில் தமது சிறைகளில் இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள் அனைவரையும் (சுமார்57 பேர்) பூட்டப்பட்ட அறைகளுக்கு உள்ளேயே வைத்து சுட்டுப் படுகொலை செய்ததையும், கிட்டனின் மீது அவ்வாறு குண்டெறிந்தவர்கள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்காரர்கள் தான் எனப் பிரச்சாரம் செய்ததையும் இங்கு நினைவு படுத்துவது பொருத்தமாகும்.
காட்டிக் கொடுக்கும் பாரம்பரியம்
மேலும் புலிகள் தம்மால் முடியாத கொலைகளையும் மற்றும் அழிப்பு வேலைகளையும் தமது மற்றொரு எதிரிக்கு அறிவித்து அவற்றைச் சாதிப்பது என்னும் தந்திரத்தை நீண்டகாலமாகவே பிரயோகித்து வருகின்றனர்......1985—1986ம் ஆண்டுகளில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் பலர் சிறிலங்கா அரச படையினரால் கடலிலும் தரையிலும் சுற்றிவளைக்கப்பட்ட பலசம்பவங்கள் புலிகளினால் கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன.
கிட்டனின் ரகசியக் கடற்பயணம் பற்றி மாத்தையா இந்திய அரசுக்கு ரகசியத் தகவல்கொடுத்ததாகச் சொல்லப்படம் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யாகவே இருக்கும் என்று கூறுவதற்கில்லை......மாத்தையாவின் அவ்வாறானதொரு நடவடிக்கையானது, புலிகளின் அடிப்படைக் குணாம்சத்தின் பகுதிகளே....இவ்விடயத்தில் பிரபாகரனோ அல்லது மாத்தையாவோ வேறுபட்டவர்களல்ல.
இதேவேளை மாத்தையா மீது மரணதண்டனை விதிப்பதற்காகப் பிரபாகரன் வைத்துள்ள குற்றச் சாட்டுக்கள் உண்மையானவைதான் என்று சொல்வதற்கும் இல்லை......ஏனெனில் மாத்தையாவுக்கும் பிரபாகரனுக்கும் இடையல் கடந்த 10 வருடங்களாகவே பகைமை இருந்து வந்துள்ளது. அதிலும் மேலாக மாத்தையா மீது பிரபாகரனுக்கு 1979ம் ஆண்டிலிருந்தே ஒரு கறள் இருந்து வந்தது.......இந்த விடயங்களைத் தெரிந்து கொண்டால்தான் மாத்தையாவுக்கான பிரபாகரனின் மரணதண்டனையையும் புரிந்து கொள்ள முடியும்.
1974ம் ஆண்டு பிற்பகுதியில் புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில், பிரபாகரனின் மானசீகக் குருவான செட்டி என அழைக்கப்பட்ட தனபாலசிங்கத்தின் தலைமையில்(இவன் ஒரு பக்கா திருடன்) புலிகள் அமைப்பு உருவானது. ....1975ல் செட்டி சிறிலங்கா அரசபடையினரால் கைது செய்யப்பட்டான். 1976ல் அந்தப் புலிகள் தமக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் எனப் பெயரிட்டுக் கொண்டனர்.
புலிகளின் முதலாவது கட்டுப்பாடு
1979ம்ஆண்டு இந்தப் புலிகளுக்குள் உமாமகேஸ்வரன்-ஊர்மிளா தொடர்பு என்ற வடிவில் பிரபாகரனுக்கும் உமாமகேஸ்வரனுக்கும் இடையில் பகைமை தொடங்கியது. இந்த விடயத்தில் அப்போது பிரபாகரனுக்குச் சார்பாகவே புலிகளின் உறுப்பினர்களிற் பெரும்பாலானோர் கருத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது புலிகளின் அமைப்பில் கடைப்பிடிக்கப்பட்டஇரண்டு பிரதான கட்டுப்பாடுகளில் ஒன்று புலி உறப்பினர்கள் எவரும் காதலிக்கக்கூடாது. இரண்டாவது புலியில் உறுப்பினராக உள்ள எவரும் புலி அமைப்பை விட்டுப் பிரிந்து வேறெந்த அமைப்பிலும் சேரக்கூடாது. அத்துடன் அரசியலை விட்டு முற்றாக ஒதுங்கினாலும் கூட எந்த வேளையிலும் புலிகளின் நலன்களுக்குப் பாதகமாகச் செயற்படக் கூடாது என்பவையாகும்.
இதில் முதலாவது கட்டுப்பாட்டை மீறிய குற்றத்துக்காக அப்போது புலிகளின் உத்தியோக பூர்வமான தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடைசியில் அந்த ஒழுங்கு நடவடிக்கையானது உமாமகேஸ்வரன் கொல்லப்பட வேண்டியவர் என புலிகள் தீர்மானிப்பதில் முடிவடைந்தது.
உமாமகேஸ்வரனை ஒதுக்கி விட்டதன் பலனாக புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனே என்னும் நிலை ஏற்பட்டது......உமாமகேஸ்வரன் புலிகளின் தலைவராக இருந்த காலத்திலும் கூட பிரபாகரனின் கைகளிலேயே உத்தியோக பூர்வமற்ற ரீதியில் புலிகளின் தலைமை ஆதிக்கம் இருந்தது என்பதுதான் உண்மை......புலிகள் தொடர்பான மிகப் பிரதானமான முடிவுகள் எப்பொதும் பிரபாகரனாலேயே நிர்ணயிக்கப்பட்டன.

முதலாவது கட்டுப்பாட்டை மீறிய முதலாவது நபர்.
புலிகள் காதலிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு பின்னர் 1984ம் ஆண்டு பிரபாகரன் மதிவதனியை காதலித்துக் கலியாணம் செய்த போது இல்லாமல் ஆக்கப்பட்டது. இதன் பின்னரே மாத்ihயா, கிட்டு, குமரப்பா மற்றும் புலிகளின் தலைவர்கள் வேக வேகமாக காதல்களிலும், கலியாணங்களிலும் இறங்கினர். அதற்கு முதலில் பிரபாகரனைப் பற்றி புலிகள்---------
காதல்,,,கலியாணம்,,, குடும்பம்,,, உறவு,,, பந்தம்,,,பாசம்,,,தேனீர்(பால் மட்டும் தான் குடிப்பார்) சாதாரண தண்ணீர் (அடைக்கப்பட்ட போத்தல நீர் அல்லது தரமான குளிர்பானங்கள் மட்டமே தான் அருந்துவார்),,, பொழுது பொக்குகள் ஆகிய சிற்றின்ப ஆசைகளை எல்லாம் துறந்து ,,,,,, தமிழீழத்தையே தனது தாயாகவும்,,,,,,,துப்பாக்கிகனையே தனது மனைவிகளாகவும் வரித்துக்கொண்டு,,,,,,தேசத்துக்காக தன்னை வருத்தி அளப்பரிய தியாகங்கள் செய்துவரும் அண்ணல் பிரபாகரன் அடிகளார் என்றனர்...தன்னைப்பற்றி பிரபாகரனும் அவ்வாறே கதையளந்தார்.
ஆனால் பின்னர் மதிவதனியைக் கண்டதும்; 'உபதேசம் உனக்கல்லடி கண்ணே அது ஊருக்குத்தான்' என்ற பிரபாகரன் , தனக்கென்று வந்த போது தனது சட்டங்களைத் தலைகீழாக மாற்றக் கொண்டார்.

புலிகளுக்குள் ஏற்பட்ட முதல் முறுகல்.
புலிகள் காதல் கலியாணம் தொடர்பாகக் கொண்டிருந்த கட்டுப்பாடு விவகாரத்தில் மட்டுமல்ல . புலிகளின் அடுத்த பிரதான கட்டுப்பாட்டிலும் அதே மாதிரியான இன்னொரு கதையும் இருக்கிறது..... அங்குதான் மாத்தையா பிரபாகரனின் பகைமையும் ஆரம்பமாகின்றது.
1979ம் ஆண்டு புலிகளுக்குள் உமாமகேஸ்வரனின் பிரச்சனை ஒரு பக்கம் இருக்க அடுத்த கட்டமாக போராட்டம் தொடர்பான மூல உபாய நிர்ணயங்கள் தொடர்பாகவும், ஸ்தாபன அமைப்பு தொடர்பாகவம் கருத்து முரண்பாடுகள் ஆரம்பித்தன.
அப்போதைய புலிகளின் மற்றொரு பிரதானமான தலைவரான வாத்தி என அழைக்கப்பட்ட நாகராஜாவின் தலைமையில் புலிகளுக்குள் இந்த உட்கட்சிப் போராட்டம் ஆரம்பமாகியது.
மக்கள் சமுதாயம் ஒன்றின் விடுதலையை இலட்சியமாகக் கொண்டு செயற்படும் கட்சியானது, வெறுமனே தனது இறுதி இலக்கை மட்டும் குறித்துக் காட்டவது மட்டும் போதியதாகாது.....அந்த இறதி இலக்கை அடைவது தொடர்பான அரசியற் கொள்கைகள், கோட்பாடுகள், அவற்றை நடைமுறையாக்குவதற்கான அரசியல் மூலஉபாயங்கள், இவற்றுக்கான ஸ்தாபன வடிவம், அந்த ஸ்தாபன அமைப்புக்கான கொள்கைகள், கோட்பாடுகள், என்பவற்றை அந்த ஸ்தாபனம் தெளிவான முறையில் வரையறுத்ததாகவும், அவற்றின் அடிப்படையில் உண்மையிற் செயற்படுவதாகவும் இருத்தல் வேண்டும்.
1979ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கள் ஏற்பட்ட உட்கட்சி முரண்பாடானது இவ்வாறானதொரு அடிப்படையிலே தான் தோற்றம் பெற்றது. இந்த விடயமானது புலிகளுக்குள்ளே மட்டும் திடீரெனத் தோன்றிய ஒரு தோற்றப்பாடல்ல.....ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் பரவலாகவே குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், அதற்கான ஒரு அடிப்படை வளர்ச்சி நிலை அன்று ஏற்பட்டிருந்தது.....வெறமனே
சுதந்திரமும், இறைமையும் கொண்ட சாதி, சமய,பிரதேச வேறுபாடற்ற, சமத்துவ சமதர்ம தமிழீழமே எமது இலட்சியம் என்ற பிரகடனமோ அல்லது
தமிழீழத் தாயகமே எமது தாகம் என்ற வாக்கியமோ அல்லது மதத்தால் இஸ்லாமியன் ஆனாலும் வேதம் பயிலும் கிறிஸ்தவனாயினும், வீரச் சைவன் என்றாலும் பருத்தித்துறை முனை தொடக்கம் பொத்துவில் வரை மன்னார், பதுளை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ஈழத்தவர்கள் அனைவரும் ஈழவரே என்ற சுலோகமோ.....
அன்றைய நிலையில் அரசியலில் தீவிர ஈடுபாடும் அக்கறையும் கொண்டிருந்த தமிழ் இளைஞர்களிடையே ஏற்பட்டிருந்த அரசியல் அறிவு மற்றும் அநுபவ வளர்ச்சியின் விளைவாக எழுந்த கேள்விகளுக்குத் திருப்திகரமான பதிலைத் தருவதற்குப் போதியனவாக இருக்கவில்லை....
இவ்வாறாக ஈழப் போராளிகளிடையே அன்று ஏற்பட்டிருந்த அரசியல் வளர்ச்சி மாற்றங்களின் ஒரு வெளிப்பாடுதான் அன்று புலிகளுக்குள் ஏற்பட்ட கருத்து மோதலுமாகும்.
புலிகளுக்குள்ளே இவ்வாறானதொரு கருத்து மோதல்களைத் தொடங்கியவர்கள் மேலே குறிப்பிட்ட அடிப்படைகளைத் தெளிவாக பூரணமாக விளங்கிக் கொண்டுதான் மேற்கொண்டார்கள் என்று கூற முடியாவிட்டாலும், புலிகளுக்குள் அந்த மாற்றங்களை வேண்டியவர்கள்- கோரியவர்களின் கருத்துக்களும் செயற்பாடுகளும் மேலே குறிப்பிட்ட விடயத்தின் அடிப்படையையே கொண்டதாகும்.
புலிகளுக்குள் அவ்வாறானதொரு கருத்து மோதல் ஏற்பட்டதைப் பிரபாகரனால் புரிந்து கொள்ளவோ, ஏற்றக் கொள்ளவோ அல்லது அதற்குரியவாறு இசைவாக நடந்து கொள்ளவோமுடியவில்லை.....
மாறாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தமிழ் மக்கள் சமூகத்திற்கும் இடையேயுள்ள உறவை நிர்ணயிப்பதற்கான கொள்கைகள், கோட்பாடுகள், அரசியல் மற்றம் ஸ்தாபன நிலைப்பாடுகள் தொடர்பாக ஏனைய புலி உறுப்பினர்கள் பெரும்பாலானோர் முன் வைத்த கோரிக்கைகளை பிரபாகரனால் தனது தலைமைக்கு எதிரான சதியாகவும் சவாலெனவுமே விளங்கிக் கொள்ள முடிந்தது.
.......உண்மையில் புலிகளின் தலைமையைத் தீர்மானிக்கும் விடயமும் அந்த உட்கட்சிப் பிரச்சினையினால் முன்னணிக்கு வந்தது. இந்த நிரமையில் நாகராஜாவின் தலைமையில் ஒரு பகுதிப் புலிகள் தமது அமைப்பை விட்டு வெளியேறாமலே 'புதிய பாதை' என்ற பத்திரிகையொன்றை வெளியிட ஆரம்பித்தார்கள். இவர்கள் புதியபாதைக் குழுவினர் என அழைக்கப்பட்டனர். இவர்களின் செயற்பாடுகளும் வெளியீடுகளும் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவையும், புதிய மாற்றம் ஒன்றை வேண்டி நின்றதையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
ஜனநாயகம் பிரபாகரனின் பிறவி எதிரி.
புலிகளுக்குள்ளே ஏற்பட்ட பிளவை சமாதான பூர்வமான முறையில் தீர்த்து வைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளின் போது ஒரு கட்டத்தில் புலிகளின் தலைமையை, அதன் கருத்தூண் புலி உறுப்பினர்கள் மத்தியில் ரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தித் தீர்மானிப்பது என பிரபாகரன், மற்றும் புதியபாதைக் குழுவினர் உட்பட அனைத்துப் புலி உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டனர்.
1979ன் இறுதிப் பகுதியில் புலிகளின் அமைப்பில் இருந்த 40 கருத்தூண் உறுப்பினர்கள் மத்தியில் புலிகளின் தலைவராக பிரபாகரனை ஏற்பதா? இல்லையா? ஏன இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
புலிகளில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பிரபாகரனை நிராகரித்தனர்.....பிரபாகரனுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபாகரன் தனது ஆட்கள் எனத் தன்னால் நம்பப்பட்டவர்கள் கூட தன்னை ஏற்கவில்லை என்பதைக்கண்டு மிகவும் விரக்தியுற்று ,,,,,, புலி அமைப்பிலிருந்து விலகி ஒதுங்கி,,,,,,,,, அப்போது தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் செயற்பட்டுக் கொண்டிருந்த தங்கத்துரை – குட்டிமணி ஆட்களுடன் போய் அடைக்கலம் பெற்றுக் கொண்டார்.....தங்கத்துரை-குட்டிமணி ஆகியோரும் கூட பிரபாகரனின் உறவினர்கள் தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அதே குட்டிமணி- தங்கத்துரை ஆகியோர் 1981ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் ரகசியமாக இந்தியாவக்குத் தமது விசைப்படகின் துணை கொண்டு புறப்படவிருந்த வேளையில் இக்கட்டுரையில் ஏற்கனவே புலிகளின் குணாம்சம் பற்றிக் குறிப்பிட்டுள்ள பிரகாரம், சிறிலங்கா அரசின் கடற்படையினருக்கு ரகசியத் தகவல் கொடுத்து அவர்கள் சிறி லங்கா அரச படையினரால் கைது செய்யப்படும் வகையில் காட்டிக் கொடுத்த நபர் பிரபாகரனே என்பது இஙகு கவனத்திற்குரியதாகும்.
இந்தத் துரோக ரகசியமானது தங்கத்துரை-குட்டிமணி ஆகியோரின் நெருங்கிய உறவினர்களுக்கும், அவர்களுக்காக நீதி மன்றத்தில் வழக்காடிய சில வழக்கறிஞர்களுக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் அச்சத்தின் காரணமாக, இவ்விடயத்தை எவரும் இதுவரை பகிரங்கப் படுத்தவில்லை......ஆனால் இப்போதுதான் மாத்தையாவின் ஆதரவாளர்கள் அந்த உண்மையின் ஒரு பகுதியை சொல்ல ஆரம்பித்திருக்கின்றார்கள்.
ஒரு போராளியாக இருந்து பின்னர், ஈழப் போராட்ட வரலாற்றிலேயே, சிறி லங்கா அரசின் ஒற்றனாக மாறிய முதலாவது நபர் பிரபாகரனின் மகாகுருவும் புலிகள் இயக்கத்தின் முதல் தலைவருமாகிய செட்டி என அழைக்கப்பட்ட தனபாலசிங்கமே என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

மாத்தையாவின் முதலாவது குற்றம்.
இது ஒரு புறமிருக்க, புலிகளை விட்டுவிலகிய பிரபாகரன் தங்கத்துரை, குழுவில் போய் சேர்ந்தமையானது புலிகளின் சட்டப்படி மரண தண்டனைக்குரிய குற்றமாகும். அந்த அடிப்படையில் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஏனைய புலி உறுப்பினர்கள் மத்தியில் பிரச்சனை கிளப்பிய நபர் யாரெனில்..??????;;;;;;;....அந்த நபர் வேறு யாருமல்ல. இன்று அதே பிரபாகரனால் மரணதண்டனைக்கு உள்ளாக்கப் பட்டுள்ள இதே மாத்தையா சிறி என்பவர்தான்.......மாத்தையா அன்று புலிகளால் கடைப்பிடிக்கப்பட்ட சட்டப்படி (இந்தச் சட்டம் செட்டியினால் உருவாக்கப்பட்டு புலிகளினால் ஏற்கப்பட்டிருந்த சட்டமாகும். இதே அடிப்படையிலேயே சுதுமலை பற்குணம், மட்டக்களப்பு மைக்கல் ஆகிய புலி உறுப்பினர்கள் பிரபாகரனால் கொல்லப்பட்டனர். புpரபாகரன் நடைமுறைப்படுத்தி வந்த அதை சட்டத்தின் அடிப்படையிலேயே மாத்தையாவும்) பிரபாகரனுக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்ற வேண்டும் என்ற வலியுறுத்தியது தான் முதன் முதலாக பிரபாகரனுக்கு மாத்தையா மீது ஆரம்பித்த ஆத்திரத்தின் ஆரம்பமாகும்.
பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற மாத்தையாவின் கருத்தை புலிகளிற் பெரும்பான்மையோர் ஏற்கவில்லை......புதியபாதை குழுவினர் அவ்வாறான போக்கையே ஏற்கவில்லை......ஏற்பட்ட பிரச்சினைகளினால் ஒதுங்கிக் கொள்ளும் முடிவோடு இருந்தவர்கள் எவரும் கூட அதன்மீது அக்கறை காட்டவில்லை....
....பிரபாகரனின் ஆதரவாளர்களான ராகவன் (இவரும் 1984ம் ஆண்டு பிரபாகரின் மரண தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளானவர்.எனினும் பிரபாகரனின் பிடியில் அகப்படாமல் தப்பிக்கொண்டார். அரசியலில் இருந்தும் முற்றாக ஒதுங்கிக் கொண்டார்.) சீலன் (1983ம் ஆண்டு இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட போது தற்கொலை செய்து கொண்டார்.) போன்றோரின் கைகளிலேயே புலிகள் அமைப்பின் பிரதானமான ஆயுதங்கள் அனைத்தும் இருந்தன. அவர்கள் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை ஏற்கவில்லை.
இரண்டாவது சட்டத்துக்கும் பாய்.....பாய்
புலிகளி;ன் கட்டுப்பாட்டுக்க எதிராகப் பிரபாகரன் நடந்து கொண்டதனால் மாத்தையா ஆத்திரம் கொண்ட போதிலும், மாத்தையாவும் அன்று ஒரு பிரபாகரன் விசுவாசியே. ஆனாலும். மாத்தையா பிரபாகரன் தொடர்பாக, அன்று காட்டிய நேர்மையான ஆத்திரத்தை முற்று முழுதாக மறந்து, பிரபாகரனின் தலைமையை ஏற்று விசுவாசமாகச் செயற்பட்ட போதும், பிரபாகரன் அந்த சம்பவத்தை மறக்கவில்லை என்பதை பிரபாகரனைப் பற்றி நெருக்கமாகத் தெரிந்தவர்கள் அறிவர்.
இவ்வாறாகப் புலிகளின் இரண்டாவது கட்டுப்பாடும் பிரபாகரனால் மீறப்பட்டது. ஆனால் இன்றும் புலி உறுப்பினர்களில் வேறு எவராவது புலிகளை விட்டு விலகி வேறொரு அமைப்பில் சேர்ந்தால் பிரபாகரனால் மரண தண்டனை விதிக்கப்படுவார்கள்.....
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரபாகரன் விலகிச் சென்றபோதிலும், புலிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் தீர்ந்து விடவில்லை.....புதிய பாதைக் குழுவினர் தனிக் குழுவாக தமிழீழ விடுதலை, சோசலிசப் புரட்சி, மக்கள் இயக்கம் என்ற கருத்துக்களோடு செயற்பட ஆரம்பித்தனர்.(ஆயினும் இவர்கள் தொடர்ந்து அவ்வாறு செயற்படவில்லை.)
இவர்களோடு, இடையில் சேர்ந்து கொண்ட உமாமகேஸ்வரன் மீண்டும் புலிகளின் பழைய பாணியிலேயே, ஆனால் புதிதான சில சுலோகங்களோடு ஒரு கழுவாகச் செயற்படத் தொடங்கினர்.
புதிய பாதைக் குழுவைச் சேர்ந்த பலர் உமாமகேஸ்வரன் பின்னால் எடுபட்டுச் சென்றனர்..... அத்தோடு புதிய பாதைக் குழு முடிவுற்றது.
பிளவுபட்ட புலிகளில் இருந்து விலகி பிரபாகரன் தங்கத்துரை குழுவினருடன் சேர.....புதிய பாதைக் குழுவினர் தனியாகப் போக,,,,ஒரு பகுதியினர் போராட்டத்தை விட்டு ஒதுங்கிக்கொள்ள , சீலன், மாத்தையா உட்பட ஏனையவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்தில் பிரபாகரனோடு சேர்ந்து கொண்டனர்.
1981ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் தங்கத்துரை குட்டிமணி ஆகியோர் சிறிலங்கா அரச படையினரால் கைது செய்யப்பட்டதனாலும், அவ்வேளை சிறி சபாரத்தினம் தமிழ்நாட்டில் இருந்ததினாலும், பிரபாகரன் தமிழீழ விடுதலை இயக்கத்துக்குள் தனது நிலையை மாத்தையா, சீலன் போன்றோரின் துணையுடன் பலப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது.
ஆனால் சிறையில் இருந்த தங்கத்துரை-குட்டிமணி ஆகியோர் பிரபாகரனின் துரோகத்தனத்தை ரகசியமாக ஐவத்துக் கொண்டு, சிறி சபாரத்தினத்தை தமிழீழ விடுதலை இயக்கத்தின் தற்காலிக தலைவராக நியமித்தனர்........... தனது ஊரவர்களான தங்கத்துரை-குட்டிமணி ஆகியோர் தன்னையே தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக நியமிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த பிரபாகரனுக்கு இது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

ஈழத்தில் புலிகளின் தலைவன் மாத்தையாவே!
ஏற்கனவே தங்கத்துரை-குட்டிமணி ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலை இயக்கத்துக்குள்ளே தன்னை மையப்படுத்தியபடி ஒரு தனிக் குழுவாகச் செயற்பட்டுவந்த பிரபாகரன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை தனக்குத் தரப்படவில்லை என்பதனால், தனது பழைய புலி உறுப்பினர்களோடு பிரிந்து, முன்னர் தாம் கைவிட்டுப் போன தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் மீண்டும் தனிக் குழுவாகச் செயற்படத் தொடங்கினார்.
.....1981ம் ஆண்டு நடுப்பகுதியில் பிரபாகரன் மீண்டும் இந்தியாவில் வசிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, களத்தில் சீலன் மாத்தையா ஆகியோரே புலிகளுக்குத் தலைமை தாங்கினர்..... சிறிது காலத்துக்குள் சீலன் நோய்வாய்ப்பட, உண்மையில் புலிகளின் பொறுப்புக்ளைக் கொண்டு செலுத்திய நபர் மாத்தையாவே......பிரபாகரன் தனது தலைமையைத் தற்காத்துக் கொள்வதற்கு முழுக்க முழுக்க மாத்தையாவையே நம்பியிருக்க வேண்டியிருந்தது.
........அந்த நேரத்தில் மாத்தையாவும் பிரபாகரனின் தலைமையின் மீது தனக்குள்ள விசுவாசத்தில் களங்கமில்லாமல் மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வந்தார்........
முன்னர் புலிகள் பிளவுபட்ட போது ஒதுங்கிய சிலர் மீண்டும் நம்பிக்கையோடு சேர்ந்து இயங்கத் தொடங்கினர்.

களத்தில் நின்ற செல்லக்கிளியை
ஒளிந்து நின்று கொன்ற மாவீரன்
........அந்த நேரத்தில் மாத்தையாவும் பிரபாகரனின் தலைமையின் மீது தனக்குள்ள விசுவாசத்தில் களங்கமில்லாமல் மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வந்தார்........
முன்னர் புலிகள் பிளவுபட்ட போது ஒதுங்கிய சிலர் மீண்டும் நம்பிக்கையோடு சேர்ந்து இயங்கத் தொடங்கினர்.....புலிகளை மீண்டும் ஒரு பரபரப்பு நிலைமைக்குக் கொண்டு வந்ததில் பெரும் பங்கு மாத்தையாவுக்கே உர்pயதாகும்.......விட்டுப் போனவர்களில் மீண்டும் சேர்ந்து இயங்தத் தொடங்கியவர்களில் செல்லக்கிளி என்பவரும் ஒருவர்.
.....இந்த செல்லக்கிளிதான் 1983ம் ஆண்டு ஆடி மாதம் 23ந் திகதி இரவு சிறிலங்கா இராணுவத்தின் மீதான புலிகளின் தாக்குதலுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்று முன்னின்று நடாத்திய நபர். அந்தச் சண்டையில் இந்த செல்லக்கிளி, பிரபாகரனாலேயே கொல்லப்பட்டார் என்றே உத்தியோகபூர்வமான புலிகளில் ஒரு பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, 1983ம் ஆண்டு சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா, ஈழத்தமிழர் விவகாரத்தில் தீவிரமான அக்கறை காட்டத் தொடங்கியதைத் தொடர்ந்து, பிரபாகரன் இந்தியாவில் தொடர்ந்து இருக்க வேண்டியதாயிற்று.
இந்திய அரசின் உளவுப் பிரிவான றோ வினால் புலிகளுக்கு அள்ளி வழங்கப்பட்ட ஆயுதங்களையும் பிரபாகரனே பெற்றுக் கொண்டார்...... அத்துடன் அதே றோக்காரர்கள் புலிகள் மீது ஒரு அரசியற் பிடிமானத்தை ஏற்படுத்துவற்காக எம் ஜி ஆர் ஊடாகக் கொடுத்த நாற்பது கோடி ரூபா பணமும் பிரபாகரனின் கஜானாவையே சென்றடைந்தன.
இக்காலகட்டத்தில் களத்தில் நடைமுறைத் தலைமையை ஏற்று நடத்திய நபர் மாத்தையாவே......
நீண்ட காலமாகவே மாத்தையா மீது ஆத்திரம் மட்டுமல்லாது, ஒரு வகையான பயமும் பிரபாகரனுக்கு இருந்து வந்தது. பிரபாகரனை விட அரசியல் விவகாரங்களை விவாதிப்பதிலும், மக்கள் மத்தியில் குறிப்பாக யாழ்ப்பாண புத்திஜீவிகள் மத்தியில் தந்திரமாக அரசியல் விடுவதிலும் ஒப்பீட்டு ரீதியில் மாத்தையாவிடம் பல திறமைகள் இருந்தன என்பது உண்மையாகும்......மாத்தையாவிடம் காணப்பட்ட இந்த திறமை அம்சங்களைக் கண்டு அஞ்சிய பிரதானமான நபர் பிரபாகரனே என்பதில் சந்தேகமில்லை.
இதன் காரணமாகவே, யாழப்பாணத்தில் மாத்தையாவை விட ஸ்டண்ட் அடிப்பதில் மாவீரனான கிட்டுவை, பிரபாகரன் முன்னணிக்குக் கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
1984ம் ஆண்டு எம் ஜி ஆரிடமிருந்து எதிர்பாராத விதமாக 5 கோடி ரூபா பணம் முதற்கட்டமாகப் பிரபாகரனை வந்தடைந்தது....அதே ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் இந்திய றோக்காரர்கள் பிரபாகரன் கையில் ஆயுதங்களை முதற்கட்டமாக அள்ளிக் கொடுத்தனர்.

கணக்குப் போட்டி நோட்டீஸ் புலிகள்
இவற்றைத் தொடர்ந்து பிரபாகரன் இந்தியாவின் பணம், ஆயுதங்கள் ஆகியவற்றின் துணையுடன் புலிகள் அமைப்பின் அனைத்து மட்டத்திலும் தனது தலமையைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டார்.
ஈழத்தில் புலிகளைத் தலைமை தாங்கிய மாத்தையா, பிரபாகரன் தனக்கு எதிராகச் செயற்படுவதைக் கண்டு, தானும் அதற்குப் போட்டியாக தனது தலைமையை நிலைநாட்டிக் கொள்வதில் நாசூக்காக ஈடுபட ஆரம்பித்தார்.
......முதலாவது கட்டமாக பிரபாகரன் எம் ஜி ஆரிடமிருந்து வாங்கிச் செலவளித்த பணத்துக்குக் கணக்குக் கேட்டு மாத்தையா பிரபாகரனுக்கு அறிவித்தல் நோட்டீஸ் அனுப்பினார்.......இதற்குப் பதிலாக பிரபாகரன் மாத்தையா கலியாணத்துக்காகச் செலவளித்த இயக்கப் பணத்தின் கணக்கை அறிவிக்கும் படி நோட்டீஸ் அனுப்பினார்......இவ்வாறான முறையில் பிரபாகரனுக்கும்- மாத்தையாவுக்கும் இடையில் ஆரம்பித்த தலைமைப் போட்டிப் போரே இப்போது மரண தண்டனையாகவும், துரோகத்துக்கான பரிசுகளாகவும் ஆகின்ற கட்டத்தை வந்து சேர்ந்திருக்கின்றன.
ஈழ தேசத்து மக்களின் நோக்கில் இந்த இருவருமே பயங்கரவாதிகள், நம்பத்தகாதவர்கள்,,,, கொலைகாரர்கள்,,,, பதவிவெறியர்கள்,,,ஈழப்போராட்டத்தை சீரழித்த பாதகர்கள்,,.,தேச
விரோதிகள்,,,,மக்கள் விரோதிகள்,,,,ரகசியமாக எதிரியோடு கூட்டுச் சேர்ந்து நண்பர்களை தமிழர்களை அழிக்கும் அயோக்கியர்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்வதெல்லாம் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காகவே தவிர, வேறல்ல.
மாத்தையாவைத் தியாகி என்று சொல்பவர்களும் பொய்யர்கள். அதே போலவே அதற்குச் சமனாகவே மாத்தையாவைத் துரோகி என்று சொல்லும் பிரபாகரன் கூட்டத்தினரும் அயோக்கியர்களே,,,,,,,,, வெறி பிடித்த பைத்தியக்கார கொலைகாரர்களே........
இந்த இருவருமே கொலை வெறி மனநோயாளிகள்.
தங்களின் முன்னேற்றத்திற்காக ஏனைய தமிழ்ப் போராளிகளைக் கொலை செய்வதில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கவில்லை.
மாத்தையாவும் பிரபாகரனும் தங்களுக்குள் தலைமைப் போட்டி, பணக் கணக்குப் போட்டி ஆகியவற்றை மட்டுமல்லாது ,ஏனைய போராளிகளை அதிகமாகக் கொலை செய்தது யார்? என்ற போட்டியையும் தமக்குள்ளே தொடர்ந்து நடத்தி வந்த நபர்கள்.
யாழ்ப்பாணக் குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இங்கு வேறெந்த கட்சிக்காரர்களும் மருந்துக்கும் கிடையாது. அப்படி இருக்கும் போது பிரபாகரன் ஏன் இருநூறு புலிகளைத் தனது பாதுகாப்புக்காகக் கொண்டு திரிய வேண்டும். அதே போல் மறுபுறம் மாத்தையா ஏன் நூற்றிஐம்பது பேரை சொந்தப்பாதுகாப்புக்கு வைத்திருக்க வேண்டும்.....உண்மையில் இவர்கள் தங்களுக்கத் தாங்களே பகைவர்கள்.

இதற்கு மேலும் புலிகளை ஆதரவு அளிப்பவர்கள்.......அது கொலை செய்து திரிவதற்குத் துணை போகின்றவர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம்....!!!!----புலிகள் அவர்களுக்கும், அவர்களோடு செர்ந்தவர்களுக்கும் எப்பொழுதோ மரண தண்டனை விதித்து விட்டார்கள்.....புலிகள் அவர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் வழங்கியுள்ள சுதந்திரம் சாவதா? அல்லது வாழ்வதா? என்பதைத் தீர்மானிப்பதற்கல்ல. மாறாக, பிரபாகரனின் பார்வையில் தியாகி என்று புலிகளால் வழங்கப்படும் பட்டத்தோடு சாகப் போகின்றார்களா? அல்லது அதே புலிகளினால் வழங்கப்படும் துரோகிப் பட்டத்துடன் சாகப்போகின்றார்களா? என அவர்கள் என்ன பட்டத்துடன் சாவது என்பதைப் பற்றி முடிவு செய்ய மட்டுமே.
இந்த இரண்டு கால் புலிகளின் அமைப்பில் சேருபவர்களுக்கும், அதற்கு ஆதரவு தருபவர்களுக்கும் முடிவு நாலு கால் புலியின் வாலைப் பிடித்தவன் கதைதான்.
இந்தப் பரிதாபகரமான நிலைமை ஈழத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் நாட்டைச் சேர்ந்த பென்னம் பெரிய அரசியற் புள்ளிகள் கூட இன்று இந்த புலிச் சிக்கலுக்குள் மாட்டுப்பட்டு கவலைக்கிடமான நிலையிலுள்ளனர்.
பிரபாகரன் புலிகளின் கழுத்தில் மாட்டிவிட்டுள்ள சயனற் குப்பிகள் தற்கொலை மாவீரத்தின் அடையாளங்களல்ல...மாறாக,, அதை மாட்டிக்கொண்டு திரிபவர்களில் எவராயினும் மற்றவர்களால் கொல்லப்பட்டு தியாகப் புலிகளில் ஒரு ஆளாக ஆகாவிட்டால் பிரபாகரனால் துரோகி என்ற பட்டம் வழங்கப்பட்டு கொல்லப்படுவார்கள் என்பதைக் காட்டும் மரணச் சீட்டே அதுவாகும்.
புலிகளின் ஆதரவாளர்கள் பிரபாகரனைத் துதி பாடுவதில் ஒரு இம்மியளவேனும் இசை தவறித் தன்னும் பாடுவார்களேயானால் அவர்களுக்கும் முடிவு அதுவே.
புலிகளின் உறுப்பினரானவர் அல்லது புலிகளை ஆதரிப்பவர் எவராயினும், இன்றோ நாளையோ, அந்த நபர் மைக்கல் என்றாலும்.சரி மாத்தையா என்றாலம் சரி, அல்லது அவர் ஈரோஸ் பாலகுமாராக இருந்தாலென்ன,வையாபுரி கோபாலசாமியாக இருந்தாலென்ன, அவரின் இருப்பிடம் கோண்டாவிலாயினும் சரி, கோபாலபுரமாயினும் சரி, ஏன் பன்னிரண்டாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள கனடாவாக இருந்தாலும் சரி, அவர் பத்திரிகை எழுத்தாளராக இருந்தாலென்ன, பேராசிரியராக இருந்தாலென்ன, பிரபாகரன்- மாத்தையா போன்றோர் உயிரோடிருக்கும் வரை இந்த மாதிரியான படுகொலைகளில் இருந்தும், துரோகப் பட்டம் சாத்தப்படுதலில் இருந்தும் யாரையும் அவர்கள் தப்ப விடமாட்டார்கள்.

(இது 1994ம் ஆண்டு மாசி மாதம் பெரிய சூத்திரனால் எழுதப்பட்டு சூத்திரம் சஞ்சிகையில் வெளிவந்தது)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com