Contact us at: sooddram@gmail.com

 

தோழர் பத்மநாபா

ஒரு புரட்சி அரசியற் புனிதன் தர்மத்தின் எழுச்சிக்காக வாழ்வாங்கு வாழ்ந்தவர்

தோழர் பத்மநாபா அவர்கள், சரீரரீதியாக எம்மிடையேயிருந்து 25 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிக்கப்பட்டார். தாங்கள் எதைச் செய்கிறார்கள் என்று அறியாமற் செய்த ஏகாதிக்க அதிகாரவெறிபிடித்த மனோவியாதிக்காரர்களின் கொலைவெறிக்கு அவரும் அவரோடு அன்று கூடியிருந்த பன்னிரு தோழர்களும் பலியெடுக்கப்பட்டார்கள். அவர் எம்மை விட்டுப் பிரிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஆனி மாதம் 19ம் நாளை அவரது அனைத்துத் தோழர்களும் அவரோடு பழகிய நண்பர்களும் அவரை அறிந்தவர்களும் மறவாது தவறாது தொடர்ந்து நினைவு கூர்ந்து கொண்டே இருக்கின்றனர். தோழர் நாபாவை நினைவு கூறுகின்ற தனித்துவமான வகையைப் பார்க்கின்ற போது ஒருவரோடு பழகியவர்கள், அறிந்தவர்கள் இந்த அளவுக்கு வேறெவரையும் தொடர்ச்சியாக மறவாது தவறாது நினைத்துப் பார்ப்பதென்பது நடப்பதில்லை. இது தோழர் நாபா அவர்கள் வாழ்ந்த வாழ்வின் பெருமைகளைக் காட்டுகிறது, அவர் பல்லாயிரக் கணக்கானவர்களின் இதயங்களில் நல் அரியாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் என்பதைக் கூறுகிறது.

தோழர் நாபாவை நினைவு கூருதல் என்பது பழகிய ஒருவர், தெரிந்த ஒருவர், உறவினர் ஒருவர் இறந்து விட்டால் நினைவு கூரப்படுவது போன்றதல்ல. இங்கு தோழர் நாபாவின் பண்புகள், குணங்கள், பழகும் பாங்குகள், அவரின் நட்பழகு, தோழமையுள்ளம், உயர்ந்த மனிதாபிமானத்துக்கான உதாரணங்கள், புரட்சிகரப் போராளிக்கான அடையாளங்கள் என ஒருவர் வாழ்வில் கற்பதற்கும் கடைப்பிடிக்கப் படுவதற்கும் சின்னமான ஒரு மாண்புமிக்க மானிடனின் நினைவு தினமாகவே அவரின் நினைவுக் கூடல்களும் கூறல்களும் நிகழ்கின்றன. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்ற வள்ளுவன் குறள் இங்கு நாம் வாழும் காலத்து ஒரு நிஜத்தால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தோழர் நாபா ஓர் உயர்ந்த தோழனாக, அற்புதமான நண்பனாக, சிறந்த மனிதாபிமானியாக, தர்மநியாயங்களின் பிரதிநிதியாக வாழ்ந்தார். அவர் ஒரு சர்வதேச புரட்சியாளன், உறுதியானதொரு சமூக சமத்துவவாதி, மொழி, மதம், நிறங்கள் கடந்து எல்லா இனத்தவர்களையும் நேசித்த உண்மையான சகோதரன். கர்மவீரர் என்று பெயரெடுத்த பல தலைவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் கர்மவீரன் நாபா அவர்களின் சிறப்பே ஒரு தனித்துவமானது. அவர் எங்கும் எந்த வேளையிலும் நடந்தும் சைக்கிள்களிலும் இரவுபகலென்று பாராமல் திரிந்து தன் கடமைகளை முன்னெடுத்தவர். அவரை இன்ன நேரம்தான் பார்க்கலாம், முன் கூட்டி நியமனம் பெற்றுத்தான் சந்திக்கலாம் என்ற நிலைமை எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருக்கும் இருக்கவில்லை. அவரை யாரும் எப்போதும் சந்திக்கலாம் அவரோடு பழகலாம் என்றே அவர் வாழ்ந்தார். அவரைக் கொலை செய்த வெறியர்கள் கூட அவரின் அந்த நல்ல பண்புகளையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதுவும் பலருக்கும் தெரிந்ததே. அரசியல் உபாயங்களைக் கூட அவரால் குள்ளநரித்தனமாக சிந்திக்கத் தெரியாது, மாறாக நல்லவற்றையே சிந்திப்பவர், அரசியல் வழிகளையும் முறைகளையும் நேர்மையாகவே கண்டறிய முனைபவர். மாறாக, குறுக்குவழிகளில் சுருக்கமாகச் செயற்படுவது என்பதற்கும் தோழர் நாபாவுக்கும் எட்டாத தூரம். தோழர் நாபா அவர்கள் எந்தக் கட்டத்திலும் பதவி அதிகாரம் பெயர் புகழ் என்ற எதனையும் பொருட்படுத்தாத ஓர் அரசியற் துறவியாக வாழ்ந்தவர். மொத்தத்தில் தோழர் நாபா ஒரு சமூகப் புரட்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றிய ஒரு புனிதன்.

ஈழமக்கள் புரட்சிகர முன்னணித் தோழர்கள் மத்தியிலும் அவரோடு நெருங்கிப் பழகிய நண்பர்கள் மத்தியிலும் பெயர் எதுவும் குறிப்பிடாமல் 'தோழர் பேசினார்', தோழர் சொன்னார்', 'தோழர் அழைத்தார்' என்றால் அங்கு தோழர் என்று குறிப்பிடப்படும் சொல் தோழர் நாபாவையே குறிக்கும். அந்த அளவுக்கு முதற் தோழனாக, தோழமை என்பதற்கு உதாரண புருஷனாக அவர் வாழ்ந்தார்.

தோழர் நாபா தான் புரிந்த தத்துவங்களை தொகுப்பாக பகுப்பாக தொடராக பேசுவதில் வித்தகனாக இருக்கவில்லை. அவர் கடைப்பிடித்த தத்துவமும், சித்தாந்தமும் அவரது குணத்தில் பழக்கத்தில் செயல்களில் நடைமுறைகளிலேயே பிரதிபலித்தன. பல ஆயிரக்கணக்கான தோழர்களைக் கொண்ட கட்சியின் தலைவனான அவர் எப்போதும் எவரோடும் எந்த நிலையிலும் சாதாரண மனிதனாக, யாராலும் நெருங்கக் கூடியவராக, எவரது கேள்விக்கும் அஞ்சாதவராக, நல்ல மனிதராகவே நடந்து கொண்டார். மக்களின் பொதுநலன்கள் சார்ந்த கொள்கைப்பிடிப்பாளனாக இருந்த போதும் தனது கொள்கைகளை தனது நம்பிக்கைகளை யார் மீதும் திணிக்கும் பழக்கமோ முயற்சியோ அவரிடம் இருந்ததில்லை. அவர் மற்றவர்களோடு நட்பாகவும் பண்பாகவும் நடந்து கொண்ட விதமே பெரும்பாலும் அவரது கருத்துக்கள் மீது மற்றவர்களுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கள் என்ன? அவரது நம்பிக்கைகள் என்ன? அவரது சித்தாந்தம் எது என்பதை அவர் விளக்கிச் சொல்லக் கேட்டவர்களின் எண்ணிக்கை மிக அரிதாகவே இருக்கும் அவற்றை அவரது ஈடுபாடுகள் மற்றும் செயற்பாடுகளிலிருந்தே, அவரது நடத்தைகளிலிருந்தே மற்றவர்கள் கற்றிருப்பார்கள்.

தோழர் நாபாவோடு இணைந்து இயங்கியவர்கள் மட்டுமல்ல, அவரோடு நட்பாக இருந்தவர்கள் மட்டுமல்ல, ஒரு காலகட்டத்தில் அவரைக் கொல்லவெனத் திரிந்தவர்கள் கூட தமக்கென தவிர்க்கமுடியாத ஓர் அவசியம் ஏற்பட்ட போது தோழர் நாபாவிடம் தயங்காமல் உதவி கேட்டுப் போகலாம். அவர் எப்படியும் தன்னால் முடிந்த அளவுக்கு தவறாது துணை புரிவார், உதவி செய்வார் என்ற நம்பிக்கையை அவரோடு பழகிய, அவரைத் தெரிந்த எல்லோருக்கும் அவர் ஏற்படுத்தியிருந்தார். இதற்கு வெ'வ்'வேறு ஈழவிடுதலை இயக்கங்களில் இருந்த பலர் இன்றும் சாட்சிகளாக உள்ளனர்.

தோழர் நாபா தார்மீக நியாயங்களின் ஒரு பிரதிநிதி. தான் தலைமை தாங்கிய இயக்கத்தில் உள்ள யாரும் போதைப் பொருட்களின் வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல அந்த வகையான தொழில்களில் உள்ளவர்களின் தொடர்புகளையும் அவர் தவிர்த்துக் கொண்டார், 'இயக்கத்துக்கு ஆட்களும் ஆயுதங்களும் பிரதானம் அதற்கு பணம் முக்கியம். ஆகவே பணத்தை எப்படியாயினும் எந்த வழியாயினும் திரட்டிக் கொள்ள வேண்டும்' என்ற கொள்கையை தோழர் நாபா ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. கையில் பத்து ரூபா இல்லாத வேளையிலும் 'நோ பிராப்ளம்' என்று சொல்லிக் கொண்டு தனது செயற்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டு தன்னோடு சேர்ந்தவர்களையும் முன்னோக்கி நடக்க வைத்த ஒரு புரட்சிகர அரசியல் மந்திரவாதி. அது யாராலும் பிரதியீடு செய்து பிரயோகிக்க முடியாத அளவுக்கு அவருக்கே உரித்தான ஒரு கலை.

தோழர் நாபா உலகின் மிகப் பெரிய போராட்ட இயக்கங்களில் ஒன்றான பாலஸ்தீன விடுதலைப் போராட்ட இயக்கத்திடம் ஆயுதப் போராட்ட பயிற்சி பெற்றவர். ஆனால் அவர் ஒரு குருவியைக் கூட சுட்டதாகவோ எந்தவொரு தனிநபரையும் என்ன காரணத்துக்காகவும் சுடச் சொன்னதாகவோ நான் பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை கேள்விப்பட்டதுமில்லை. சில சந்தர்ப்பங்களில் அவர் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் மண்ணை நோக்கி கற்களை நோக்கிச் சுட்டதை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஓர் அரசுக்கு எதிரான ஆயுதப்போராட்டத்தில் அரசபடையினருக்கு ஏற்படுத்தப்படும் இழப்புகளை போராட்டத்தின் தவிர்க்கமுடியாத ஒரு பாகமாக ஏற்றுக்கொண்ட போதிலும் அதில் எந்தவகையிலும் அதர்மமான முறைகளைக் கடைப்பிடிப்பதையோ, போராட்டம் என்ற பெயரில் யாரும் கொலை வெறியர்களாகவோ அல்லது எந்தவகையிலும் பயங்கரவாதிகளாகவோ செயற்படுவதை அவர் எள்ளளவும் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.

தோழர் நாபா மற்றவர்களோடு பழகுவதில் மட்டுமல்ல அவரது பேச்சிலும் சொல்லும் சொற்களிலும் மென்மையான பண்புகளே நிறைந்திருந்தன. அவர் ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையை ஏற்றிருந்தவராயினும் அவரது கருத்துக்களில் மனிதாபிமானமே நிறைந்திருந்தது. அவர் தனதோ தனது கட்சியினதோ வெற்றிக்காகச் செயற்பட்டதில்லை. மாறாக எல்லா வேளைகளிலும் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பொது மக்களின் வெற்றிக்காகவே முன்னேற்றத்துக்காகவே செயற்பட்டார். அவர் ஒரு சர்வதேச புரட்சிக்கான சந்நியாசியாக வாழ்ந்தவர். அவர் ஈழப்பிரிவினைவாதியோ அல்லது எவ்வகையிலுமான குறுகிய தேசியவாதியோ அல்ல. இலங்கையின் சமூகப் புரட்சியை உலகப் புரட்சியின் ஒரு பாகமாகப் பார்த்தார்.

இலங்கையின் அரசியற் தளத்தில் இனமுரண்பாடும் அதற்கான தீர்வின் தேவையும் முன்னிலை பெற்று இருந்ததனால் ஒட்டு மொத்த இலங்கைக்கான சமூகப் புரட்சியை நோக்கிய முன்னேற்றத்துக்கு ஈழவிடுதலைப் போராட்டத்தை தவிர்க்க முடியாத மூலோபாயமாகவே பார்த்தார். அதுவும் ஒரு பரந்தபட்ட மக்களின் புரட்சிகரமான விடுதலைப் போராட்டமாக அமைய வேண்டும் என்ற வகையாகவே செயற்பட்டார். ஆனால், என்றைக்கு ஈழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தமிழர்களின் போராட்டம் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை சரிவர வறையறுக்காத, அடிப்படை அறம் எதுவுமின்றி நெறிகெட்டு பயங்கரவாதப் பாதையில் பாசிச இயக்கத்தின் கட்டுக்குள் சென்றதோ அன்றே அவர் ஈழவிடுதலைப் போராட்டம் என்பது அதற்கு மேல் மக்கள் விரோத இயக்கமாக அழிவுப்பாதையில் இறங்கி விட்டதை அவர் உறுதியாக அடையாளம் கண்டு கொண்டார்.

அதனாலேயே அவர் இந்திய -- இலங்கை சமாதான ஒப்பந்தத்தைச் சந்தர்ப்பமாகக் கொண்டு இலங்கையின் இன முரண்பாட்டுக்கான அரசியற் தீர்வுக்கு மாற்று மூலோபாயங்களைக் கொண்ட அரசியல் இயக்கத்தை முன்னெடுக்க முயன்றார். ஆனால், தமிழ்ச் சமூகமோ வெறித்தனமான சிங்கள இன விரோதப் பிரச்சாரங்களுக்கு எடுபட்டு நிதானமாகச் சிந்திக்கும் திறனை இழந்து போயிருந்தது, இளைஞர்களின் கைகளில் இருந்த ஆயுதங்கள் எப்படியும் தனித் தமிழீழ அரசைப் பெற்றுத் தந்துவிடும் எனத் தமிழ்ப் புத்திஜீவிகள் தமது எல்லா வல்லமைகளையும் பயன்படுத்தி தமிழ்ச் சமூகத்தை ஒரு கள்வெறி மயக்க மகிழ்ச்சி நிலையில் தக்கவைப்பதில் மிகவும் கெட்டித்தனமாக செயற்பட்டுக் கொண்டிருந்தனர். இவற்றால், தோழர் நாபாவின் முயற்சிகளும் முன்னெடுப்புகளும் பயன் விளைவிக்காது போய்விட்டன. அதன்பின்னரான 20 ஆண்டுகளாக இலங்கைக்கு குறிப்பாக தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் அழிவுகளையும், அவை கடைசியில் முள்ளிவாய்க்கால் அவலங்கள் வரை செல்வதையும் தவிர்க்க முடியாமற் போய்விட்டது. இன்றைக்கு 'நான் அவனில்லை' என்று மனச்சாட்சியைப் புதைத்து வைத்து 'இரத்தக் கறை படியாதவர்கள்' என அப்பாவி வேஷம் போட்டு பாசாங்கு பண்ணுபவர்கள் உண்மையாக நேர்மையாக கொஞ்சமாகவேனும் தாம் கடந்த காலங்களில் சொன்னதை செய்ததை எழுதியதை நினைத்துப் பார்த்தார்களானால் முள்ளிவாய்க்காலுக்கு தமிழ்ச் சமூகம் இழுபட்டுச் சென்றதில் அவரவர் செய்த பங்களிப்பினைப் புரிந்து கொள்ள முடியும்.

தோழர் நாபா சாதி, மதம், மொழி, பிராந்தியம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு சமூக நீதிப் புரட்சியாளன். அவர் எல்லா இனத்தவர்களையும் எல்லா மதத்தவர்களையும் எந்த நாட்டவர்களையும் சகோதரர்களாகப் பார்த்தவர். அவர் சாதிப்பிரிவினை ஒடுக்குமுறைகளுக்கு எதிரானவர், மதப் பிளவுகளால் விளையும் குரோதங்களை வெறுத்தவர். சுரண்டல்களற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட ஓயாது உழைத்தவர். உலகில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஏகாதிபத்திய மற்றும் நவகாலனித்துவ எதிர்ப்புத் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கும், சோசலிசப் போராட்டங்களுக்கும், சியோனிசத்துக்கு எதிரான பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கும், தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கெதிரான போராட்டத்துக்கும் நண்பனாக உற்ற தோழனாகச் செயற்பட்டார். தென்னிலங்கையிலும் சமகாலத்தில் ஒரு சரியான சமூகப் புரட்சிக்கான இயக்கம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்குத் துணையாக நின்றார்.

இந்தியாவோடு தோழர் நாபா ஏற்படுத்திக் கொண்ட உறவை சிலர் பிற்போக்கு முதலாளித்துவத்தோடு ஏற்படுத்திக் கொண்ட உறவாக விமர்சித்தனர். ஆனால் அவரோ வியட்நாமின் ஹோ சி மின், கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ, தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா, பாலத்தீனத்தின் அரபாட் போன்றோரின் கண்ணோட்டத்திலேயே இந்தியாவினுடனான உறவைப் பார்த்தார், இந்தியா சர்வதேச அரங்கில் மூன்றாம் உலக நாடுகளின் தலைமைப் பாத்திரத்தை வகிப்பதைப் பார்த்தார். இந்திய அரசோடு நட்புறவு கொண்டிருந்த அதே சமகாலத்தில் இந்தியாவின் பல்வேறுபட்ட சமூகப்புரட்சிக் கட்சிகள் மற்றும் இயக்கங்களோடும் நட்புறவு பேணி வந்தார்.

தோழர் நாபா தத்துவங்களை வரட்டுத்தனமாகப் பார்த்தவரல்ல, அவர் தான் ஏற்றுக் கொண்ட சித்தாந்தத்தை மதக் கோட்பாடாகக் கொண்டவரல்ல. புரட்சிகளும் போராட்டங்களும் யாராலோ எழுதப்பட்ட தத்துவங்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் உரியவை அல்ல. தியாகங்கள் சுலோகங்களுக்காக அல்ல. மாறாக அவை பரந்து பட்ட மக்கள் சமூகத்தை சுரண்டல்களில் இருந்தும் அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை செய்து புரட்சிகரமான அரசியல்பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகிக்க அவசியமானவை என்றே தோழர் நாபா கொண்டார். அவர் புரட்சிகரமான முற்போக்கான பல்வேறு சமூக அரசியற் பரிமாணங்களின் ஒருங்கிணைந்த பிரதிநிதியாக வாழ்ந்தவர், சத்திய வேள்வி நடத்திய புரட்சியாளன். அவரை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பது எம்மை நாம் சரிப்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்குமான ஒரு யோகம். அவர் வணக்கத்துக்கு உரியவரா? அல்லவ?ா என்பது விவாதத்துக்கு உரியதாக இருக்கலாம். ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் அவரது வாழ்வு வழிகாட்டலுக்கு உரியது என்பதில் அவரைத் தெரிந்த அறிந்த எவருக்கும் சந்தேகமிருக்க முடியாது.

(வரதராஜப்பெருமாள்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com