Contact us at: sooddram@gmail.com

 

என்று முடியும் இந்த ஏமாற்று வேலை? (பகுதி 3)

தாமே புலிகள் என சொல்லித்திரிவோருக்கும் அவர்களின் புலி விசுவாசிகளுக்கும் எது உண்மை என்பது தெரியும். ஆனால் சொல்லமாட்டார்கள். அது அவர்களின் விடுதலை வியாபாரத்துக்கு ஆபத்து. இவர்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு தமிழரின் தலையில் மிளகாய் அரைக்கப்போகின்றார்கள்.  சிலர் தெரிந்தாலும் சொல்ல மறுக்கிறார்கள் மற்றும் சிலரோ யதார்த்த நிலையை உணர மறுக்கிறார்கள்.

ஒரு வேளை பிரபாகரன் நோயினால் யுத்தகளத்திற்குவெளியே மரணித்திருந்தால் கூட நீங்கள் சிங்கள அரசிற்கு எமது பலவீனத்தை காட்டாது மறைக்கலாம். ஆனால் முள்ளிவாய்க்கால் முடிவுரையை எழுதிய எதிரிக்கு எல்லா உண்மைகளும் தெரியுமே. பிரபாகரனும் அவர் கூட்டமும் தலைக்குமேல் கையைத் தூக்கியது முதல் பிரபாகரன்  தல பிளந்து செத்ததுவரை எல்லாமே அவர்களுக்குத் தெரியும்இனியும் எதற்காக ஏமாற்றுகிறீர்கள். மக்களுக்குப் பொய் கூறிக்கொண்டிருப்பதனை நிறுத்துங்கள்.

 இனியும்  ிரபாகரன் விடயத்தில் உண்மை உறங்கக்கூடாது. உரியவர்களை உண்மை பேசவைப்பது உலகிலுள்ள  தமிழ் மக்களின் கடமை'. சீமான் போன்றோரும் நெடுமாறனும் வை.கோ வும் சொல்கின்றார்கள் பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் இருக்கின்றார். மீண்டும் வருவார் ஐந்தாம் கட்ட ஈழப்போரை நடத்துவார் என்று. அத்துடன் நின்று விடாது குறிப்பாக சுவிஸ்ஸர்லாந்து நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்களே உங்களை உரிமையுடன் கேட்கிறேன் என்று கூறுகின்றார் என்றால்..... சுவிஸில் வாழ்கின்றாரா? அப்படி வாழ்வதானால் அவர் வாழும் இடத்தைச் சொல்வது துரோகம் அல்லவா? அப்படியிருந்தும் சொல்லியிருக்கின்றார் என்றால் அதில் உண்மை இருக்குமா?

 நாளை எல்லாமே பொய் என்றாகும் போது எல்லோரும் வரலாற்றுத் தவறை சுமந்தவர்களாக கூனிக் குறுகி தமிழர்கள் மத்தியில் நம்பிக்கை இழந்தவர்களாகவே இருப்பர். அந்த நேரத்தில் அவர் சொல்லித்தான் நான் சொன்னேன் என்ற குற்றச்சாட்டையே மாறி மாறி கூறப்போகின்றார்கள். இந்த உலகத்தில் பிறந்த அத்தனை பேரும் ஓர் நாள் சாவடையத்தான் வேண்டும். இதிலிருந்து யாரும் தப்பமுடியாது. எனவே நாம் அதிகம் நம்பும் மக்களே பிரபாகரனையோ அல்லது புலிகளையோ இனிமேல் எதிர்பார்க்காதீர்கள்.

 பொதுவாக விடுதலைப் போராட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடிவடைய வேண்டும். மாறாக நீண்டு சென்றால் பல சிக்கல்களை உளவியல் ரீதியாக எதிர் கொள்ளவேண்டியநிலை ஏற்படும். எமது விடுதலைப் போராட்டமும் இதே பிரச்சனையைத் தான் சந்தித்தது.

ஈழத் தமிழரிற்காக குரல்கொடுப்பதாக சொல்லும் தமிழ் நாட்டில்கூட சிலோன்காரன் என்றால் வெறுப்பாகவும் கேவலமாகவும் இன்னும் சிலர் அருவருப்பாகவும் பார்க்கின்றனர். இதற்காக யாருமே சிலோன்காரர் என்று கூற முன்வருவதில்லை பதிலுக்கு கேரளாக்காரன் என்றே கூறுவர். சிலோன்காரரிற்கு யாரும் வேலை கொடுக்க முன்வருவதில்லை. குறைந்த பட்சம் வாடகைக்குக் கூட வீடு கொடுக்க முன் வரமாட்டார்கள். இந்த நிலையிலும் பல ஆயிரம் பேர் செந்தமாக வீடு, காணி, கார் என்று வெளிநாட்டுப் பணங்களைக் கொண்டு பந்தா காட்டுபவர்களும் கேட்டால் நாம் சிலோன் இல்லை இந்திய குடிமக்கள் என்கிறனர். இந்த நிலை தொடரவேண்டுமா?

இலங்கையில் இப்போ என்ன நடக்கின்றது. நேற்றுவரையும் புலிகள் என்று சொல்லி மக்களைச் சுரண்டித் திரிந்தவர்கள் எல்லாம் இப்போ இராணுவப் புலனாய்வாளர்களாம். நாங்கள் யாரையெல்லாம் கோழைகளாக பார்த்தோமோ அவர்கள் எல்லோரையும் பார்த்து வீரர்கள் பயப்பட வேண்டுமாம். நேற்றுவரை விடுதலைக்காகப் போராடுகின்றோம் என்றவர்களில் பலர் இன்று இராணுவத்துடனும் இராணுவபுலனாய்வுப்பிரிவுடனும் எந்த விடுதலைக்கு போராடுகின்றனர்?.
'யாரைப்பார்த்து முன்பு மக்கள் பயந்தார்களோ அவர்களைப்பார்த்து இப்போதும் அதே மக்கள் பயப்படுகின்றார்கள்.  இதுவரை எப்படி இருந்தீர்கள் என்பது முக்கியமில்லை. இனிமேல் என்ன செய்யப்போகிறீர்கள் என்பது தான் முக்கியம். உலகெல்லாம் தமிழர்கள் தெருத் தெருவாக போராடினார்களே. எதற்காகப் போராடினார்கள். பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களைக் காப்பாற்றுங்கள் என்று எவனாவது உளசுத்தியோடு குரல்கொடுத்தானா என்றால் இல்லவே இல்லை. பிரபாகரன் பிடிபடப்போகிறார். ஐயோ அவரையும் புலிகளையும் காப்பாற்றுங்கள். அதற்காகத் தான் தெருக்களில் இறங்கி தமிழனின் மானத்தை கப்பலேற்றினார்கள்.

(தொடரும்.....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com