Contact us at: sooddram@gmail.com

 

என்று முடியும் இந்த ஏமாற்று வேலை? (பகுதி 4)

கிளிநொச்சி பிடிபட்ட போது மக்களை வெளியேற அனுமதிக்கும்படி யாழ் ஆயர் அவர்கள் பிரபாகரனிடம் வேண்டுகொள் விடுத்தார். இதே வேண்டுகோளை புலம்பெயர்ந்த நாடுகளில் தெருக்களில் இறங்கியவர்களும் விடுத்திருந்தால், இன்று, இறந்த அந்த மக்களுக்காக கவலைப்படுவதற்கு உரிமை இருக்கும்.

2009 சித்திரை மாதத்தில் ஒருநாள் நான் ஒரு வியாபார ஸ்தாபனத்துக்குச் சென்றிருந்தேன். அதன் உரிமையாளர் ஒரு புலி ஆதரவாளர். என்னிடம் இராணுவம் சனங்களை அநியாயமாக கொல்லுகிறார்கள் என அங்கலாய்த்துக்கொண்டார். அதற்கு நான் புலிகள் சனத்தை வெளியேற அனுமதித்தால் ஒரு பிரச்சனையும் இல்லையே என அவரிடம் கூறினேன். சனத்தைப் போகவிட்டுட்டு பொடியள் என்ன செய்வது என்ற சர்வசாதாரணமாகக் கேட்டார். புலன்பெயர்ந்த புலித்தமிழன் புலத்திலுள்ள மக்கள் மட்டில் கொண்டுள்ள அக்கறை இம்மட்டுந்தான்.
நாமோ அவரவர் பாட்டில் களியாட்டங்களும் கூத்தும் கும்மாளமும் என்று  இருப்பது தான் வேதனையாக உள்ளது. இன்றைய சூழலில் செய்யவேண்டிய வேலைகள் எமக்கு முன் மலையென நிற்கிறது. அதை
முடிந்தளவு வேகமாக முன்னெடுத்துச் செல்ல ஒவ்வொரு வரும் சுயநலம் இல்லாது முன்வர வேண்டும்.

ஒரு பாதை மூடும் போது தான் இன்னுமொரு பாதை திறக்கின்றது. திறக்கும் புதிய பாதையில் பயணிக்கப் போகின்றோமா அல்லது இன்னும் குருட்டு நம்பிக்கையுடன் இருக்கப்போகின்றோமா? இதுவரை புலிகளுடனும், கூட்டமைப்புக்காரர்களுடனும் பயணித்த நாம் இனி எமக்கான ஒரு புதிய பாதையை உருவாக்கிக் கொள்ளவேண்டும். ஏனெனில் முள்ளிவாய்க்காலின் பின் புலிகளின் செயற்பாட்டாளர்கள் தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தகமையை இழந்து விட்டார்கள். ஒரு சிக்கலான பயங்கரவாத அரசியற் பின்னணியுடன் உள்ள புலிகள் அமைப்பால் சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைக்கப் போவதில்லை. எப்படியோ இனி புதிதாகத் தான் எமக்கான அரசியல் ரீதியான பலத்தை உருவாக்கப்போகின்றோம்.

அங்கே பயங்கரவாத சகவாசம் உள்ள யாருமே இருக்கக் கூடாது. எனவே பலப்படுத்தவேண்டியிருக்கும் தமிழர்களின் அரசியல் பலம் புதிய ஒரு அமைப்பூடாக கொண்டு சென்றால் தான் நாம் வெற்றிபெற முடியும . இந்த யதார்த்த நிலைமையை உணர்ந்து கொள்ளாமல் நாம் முட்டாள்த்தனமாக ஏதாவது செய்தால் மாபெரும் அரசியல் சிக்கலுக்குள் தள்ளப்படுவோம். நாம் இரண்டுபட்டு எல்லாவற்றையும் சிதைத்து மீண்டும் மீண்டும் நாம் முரண்பாடுகளுடன் பயணித்துக் கொண்டிருப்போமேயானால் எதிர்காலத்திலும் தமிழர்களின் அரசியற்போராட்டம் இப்போதும் வெறும் பயங்கரவாதந்தான் என்ற முடிவிற்கு சர்வதேச சமூகம் வந்துவிடும்.

இதை ஒவ்வொருவரும் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் இன்றைய காகிதப் புலிகளின் செயற்பாடுகளாலும், தற்போதுள்ள அரசியற் சிக்கல்களாலும் நாம் எமக்கான புதிய சக்தியை உருவாக்கித்தான் ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உண்மையான அரசியல் சிக்கலை உணர்ந்துகொண்டு புலி என்ற மாயையிலிருந்து முதலில் வெளியே வாருங்கள். பிரபாகரனும் பிரேமதாஸாவுமாகச் சேர்ந்து தமிழர்களுக்குக் கிடைத்த நல்தொரு தீர்வான வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையை செயற்படவிடாமல் செய்தார்கள். மகிந்தாவோ அப்படி ஒரு மாகாணசபை இருந்தது என்ற அடிச்சுவடே இல்லாது செய்துவிட்டார். தமிழர்களிற்கு நிரந்தரமானது அரசியல் தீர்வு தான் என்பதை உலக நாடுகள் உண்மையாக உணரத் தொடங்கியுள்ளன.

ஏற்கனவே பிரபாகரனால் பயங்கரவாத சாயம் பூசப்பட்ட தமிழர்களின் நியாயமான போராட்டம் மேலும் சிக்கலாகிவிடும். எனவே தற்போது செய்யக் கூடிய பணிகள் நிறையவே உள்ளன. நியாயமான வழிகளில் சாத்தியப்படக்கூடிய வழிகளில் ஓரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இலக்கை அடையக்கூடியவாறு சரியாக காய்களை நகர்த்தி முயற்சி செய்தால் நிச்சயம் இலகுவாக வெற்றி பெறலாம். அதைஅடைய அதுவரைக்கும் நகர்த்தவேண்டிய காய்களும், செய்யவேண்டிய வேலைகள் நிறையவே உள்ளது. சாத்தியமான மார்க்கங்களில்  சரியாக முயற்சி செய்ய அரசியல் அனுபவமும் நேர்மையும் உள்ளவர்கள் மீண்டும் வரவேண்டும். நாங்கள் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றிபெறலாம். இளைஞர்களின் எழுச்சியே புதிய தொரு புரட்சிக்கு வழிவகுக்கும். 

உலக விடுதலை வரலாற்றில் யாருமே எதிர்கொள்ளாத துயரம் எமது இனம் எதிர்நோக்கக் காரணம் என்ன.... சிங்களவனா? இல்லை சர்வதேசமா? இல்லவே இல்லை! தமிழனே தான் தமிழன் விடுதலைக்குத் தடையாக இருக்கின்றான். இந்த உலகத்திலேயே மிகவும் மோசமான துரோகக் கூட்டங்களை கொண்ட ஒரே இனம் தமிழினம் தான். அதில் தலையானவன் பிரபாகரனே. எனது நண்பர் ஒருவர் வேடிக்கையாகச் சொன்ன ஒன்றைக் கூறி அடுத்த மடலில் சந்திக்கும் வரை விடைபெறுகிறேன்.
'ஹிட்லர் தனது வாழ்நாளில் தமிழ்சாதி என்று ஒன்று இருப்பதை அறிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் ஹிட்லர் யூதரைக் கொன்றிருக்கமாட்டான்.
 
அல்பேட்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com