Contact us at: sooddram@gmail.com

 

மக்களின் பிழையான முடிவுகளும், ஆதரவுகளும்

பிழையான தலைவர்களையே அவர்களுக்கு வழங்கும்

(அ.வரதராஜப் பெருமாள்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.! புலிகளை யாரும் வெல்ல முடியாது.! புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படைகளையும் கொண்டிருக்கிறார்கள்.! காற்றுப் போக முடியாத இடங்களுக்குள் கூட புலிகளின் உளவுப்படை புகுந்து எதிரியின் தகவல்களை எடுத்து விடும்.! புலிகள் இலங்கையின் தேவேந்திர முனையிலிருந்து இமயத்தின் அடிவரை யாரையும் மனிதக் குண்டால் வெடித்துக் கொல்லும் வல்லமை கொண்டவர்கள்.!

புலிகள் தீர்மானித்தால் சங்கானை தொடக்கம் சென்னைவரை, வல்லை தொடக்கம் டெல்லி வரை, பலாலி தொடக்கம் பாரிஸ் வரை, அரியாலை தொடக்கம் அயர்லாந்து வரை, தொண்டமானாறு தொடக்கம் ரொறன்ரோ வரை, பூநகரி தொடக்கம் பெர்லின் வரை யாரையும் அவர்கள் கொல்லுவார்கள். அவர்கள் யார் காலையும் கையையும் அடித்து முறிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.!

உலகின் நான்காவது பெரும் படையையே தோற்கடித்தவர்கள் புலிகள்.! உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரையும் புலிகளின் துப்பாக்கிகளுக்குப் பயந்து நடுங்கி பிடரி குளிரும் நிலையில் ஒவ்வொரு கண நேரமும் வைத்திருந்தவர்கள்! ஹிட்லரே அறிந்திடாத வகையான சித்திரவதை முகாம்களை கண்டுபிடித்து நிறுவுவதில் புலிகள் மிகத்தேர்ந்த படுகொலை விற்பன்னர்கள்! அவர்கள் தமிbழம் எடுக்காமல் விடவேமாட்டார்கள்.!

உலகில் எந்த சக்தியாலும் புலிகளின் ஓர் அணுவைக் கூட அசைக்க முடியாது.... பிரபாகரனின் நிழலைக் கூட நெருங்க முடியாது! இப்படியான கருத்துக்களே இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் வரை தமிழர்களில் பெருந்தொகையானோரின் சிந்தனைகளை நிறைத்து நின்றன.

ஆனால் இராணுவம் ஒரு மூச்சுப்பிடித்து தாக்கிய போதுதான் புலிகளின் இராணுவ பலவீனங்களும் போலித்தனங்களும் வெளிப்பட்டன.

புலிகள் ஒரு தொடர் நேரடி யுத்தத்துக்கு தகுதியற்றவர்கள் என்பது தெரிய வந்தது. கொரில்லாப் போர்த் தந்திரத்துக்கு மாறும் வல்லமையையும் புலிகள் இழந்து விட்டார்கள் என்பது புரிந்தது.

புலிகள் கட்டியிருந்ததெல்லாம் ஒரு மாயமாளிகையே என்பது அம்பலமானது.

மாவிலாறில் ஓடத் தொடங்கிய புலிகள் கடைசியாக முள்ளிவாய்க்காலில் சரணடைகின்ற வரை ஒரு இடத்தில் கூட அரச படைகளுக்கு முன்னால் புலிகளின் தரைப்படை ஏன் நின்று பிடிக்க முடியாமற் போனது.

ஏனென்றால் வன்னியின் பள்ளிக் கூடங்கள் ஒவ்வொன்றிலுமிருந்தும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மிரட்டி விட்டு வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான சிறுவர்களைக் கொண்டு கட்டப்பட்டதே புலிகளின் பிரமாண்டமான தரைப்படை.

அரசின் எத்தனையோ நவீன போர்ப்படகுகளையும் பல கப்பல்களையும் அடித்து கடலில் மூழ்கடித்த புலிகளின் கடற்படை எப்படி காணாமற் போனது.

1980 களில் பிரபாகரனை சிலர் சேகுவேரா மற்றும் அமில்கார் கப்ராலுடன் ஒப்பிட்டார்கள்... புலிகள் இந்திய இராணுவத்துடன் சண்டையிட்ட போது பிரபாகரனை ஒரு சிலர் மாவோ சே துங் மற்றும் ஹோ சி மின்னுக்கு கொஞ்சமும் சளைக்காதவர் என்றார்கள்.... 1990களில் புலிப் பிரசாரகர்கள் பிரபாகரனை யசீர் அரபாத்துடனும் மற்றும் நெல்சன் மண்டேலாவுடனும் சமப்படுத்தினார்கள்....

ஆனால் 2009 ஆம் ஆண்டு அதே பிரபாகரன் கைகளைத் தூக்கியபடி சிங்கள இராணுவ வீரர்கள் முன்னால் சினிமாப் படங்களில் வரும் வில்லன் கடைசியாக கதாநாயகன் காலில் விழுந்து உயிர்ப்பிச்சை கேட்பது போல சரணாகதி அடைந்த போதுதான் அவரது வலிமை தெரிந்தது.

ஒவ்வொரு தமிழரையும் கடந்த காலத்தை மீட்டுப் பார்க்கும்படி செய்யுங்கள் எமக்கேற்பட்ட எல்லா அவமானங்களையும் புறக்கணித்து எல்லா அவச்சொற்களையும் தாங்கியபடி விடாப்பிடியாக இந்தியாவின் நண்பர்களாக கூடி நின்று அதன் துணையை முறையாக்கி வடக்கு - கிழக்கு மாகாண சபை மூலம் நாம் தேடிவைத்த நன்மைகளையெல்லாம் புலிகள் பிரேமதாசாவுடன் கூடி நாசம் செய்தார்கள்.

பிரேமதாசாவினதும் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சக்திகளினதும் சதிவலைக்குள் விழுந்த புலிகள் தமிழர்களோடு நின்ற இந்தியாவை தமிழர்களிடமிருந்து தூரம் போகும்படி விலக்கினார்கள்.

சந்திரிகா தமிழர்களுக்கு அநியாயம் நடந்திருக்கின்றது என்பதை ஒரு இயக்கமாக்கி அதனை தானாகவே சிங்கள மக்கள் மத்தியில் பரப்பினார். ஆகவே தமிழர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமென்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துரைத்தார். அவர் தானாக நாடி வந்து முன்வைத்த அரசியல் தீர்வு நன்மையை புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் யு.என்.பியுடன் கூட்டமைத்துக் கொண்டு நின்று எட்டியுதைத்து தூர ஓட்டினார்கள்.

ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் ஆரம்பத்தில் ஜெனீவாவில் புலிகளுடன் பேசி சமாதானமாக ஒரு தீர்வைக் கண்டுவிட நோர்வேயின் துணையை நாடினார்கள். ஆனால் ஜெனீவா சென்ற புலிகளோ இலங்கை அரசினதும் உலக நாடுகளினதும் முயற்சிகளை கிண்டலடிக்கும் வகையில் பேச்சுவார்த்தையில் அக்கறை காட்டாமல் ஐரோப்பிய நாடுகளின் உல்லாச பகுதிகளில் சுற்றுலா வந்தார்கள்.....

தமிbழப் பிரிவினையைத் தவிர வேறெந்தத் தீர்வைப் பற்றி எந்த ஒரு தமிழர் பேசினாலும் அதற்காக முயற்சித்தாலும் அவரைத் துரோகியெனப் பிரகடனப்படுத்தினார்கள். படுகொலை செய்து கொண்டாடினார்கள். புலிகள் தமிழர்கள் மீது நடத்திய படுகொலைகளைத் தட்டிக் கேட்பதற்கு யாருமே இருக்கவில்லை.

1957 தொடக்கம் 1983 வரைக்கும் சிங்களத் தலைவர்கள் தமிழ்த் தலைவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தவில்லை கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்பது வரலாறு. பிரபாகரனின் புலி அமைப்பானது தமிழர்களுக்கு எந்த நன்மையும் எவராலும் கிடைத்து விடாமல் தடுத்து விட்டமையும் தமிழர்களின் வரலாறே. சிங்களத் தலைவர்களுக்கும் ஜனநாயக ரீதியான தமிழ்த் தலைவர்களுக்குமிடையே ஒரு நியாயமான அரசியல் உடன்பாடு ஏற்பட்டு விடாமல் புலிகள் பெரும் முட்டுக்கட்டையாக இருந்ததும் நடந்து முடிந்தது மறுக்கமுடியாத மறைக்க முடியாத வரலாறே.

எனவே புலிகளின் இந்த அழிவு தமிழர்களை முற்போக்கான பாதையில் வழி நடப்பதற்கான வாய்ப்புக்களைத் திறந்து விட்டிருக்கிறது. சிங்கள இனவாதத்தின் தமிழருக்கு எதிரான குறுகிய நோக்கங்களை பின்னடையச் செய்திருக்கிறது என்பதில் தமிழர்களுக்கு தெளிவான கண்ணோட்டம் வேண்டும். புலிகளின் அழிவை சிங்களவர்கள் கொண்டாடியதைவிட அதிகமாக தமிழர்களே உண்மையில் கொண்டாடியிருக்க வேண்டும். ஏனென்றால் புலிகள் தொடர்ந்தும் இருந்திருந்தால் இன்னும் சில ஆண்டுகளில்:

இன்னும் சில இலட்சம் தமிழர்கள் சுடுகாடுகளில் கல்லாகியிருப்பார்கள்.

இன்னுமொரு எட்டு இலட்சம் பேர் கனடாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் போய்ச்சேர்ந்திருப்பார்கள்.

எஞ்சியிருக்கும் ஜனநாயக ரீதியான தமிழ்த் தலைவர்களும் துரோகிகளென கொல்லப்பட்டிருப்பார்கள்.

பிரபாகரன் உருப்போட்டுக் கொடுத்தைத் தவிர வேறேதைப்பற்றியும் பேசக் கூடாத பேசத் தெரியாதவாறு நலமடிக்கப்பட்டவர்களே கடந்த இருபது வருடங்களாக தமிழ் மக்கள் மத்தியில் தலைவர்களாக அறிவாளிகளாக, நடமாட வாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள்.

அந்த நிலைமையில் மாற்றங்களை உருவாக்குவதற்கான வழிகளைக் கொண்ட கதவுகள் இப்போது திறக்கப்பட்டிருக்கின்றன.

இனி தமிழர்கள் மத்தியில் விவாதங்கள் நடக்கட்டும்! ஆயிரம் கருத்துக்கள் மோதட்டும்!

திறந்த மனதுடன் விமர்சனங்கள் வெளிவரட்டும்!

ஆக்கபூர்வமான கருத்துக்கள் மக்கள் அரங்கங்களை ஆக்கிரமிக்கட்டும்.

அவையே ஒரு சமூகத்தின் ஆரோக்கியமான முற்போக்கான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

நேர்மையும், உண்மையும், அறிவாற்றலும், அனுபவமும், சமூகப் பொறுப்புணர்ச்சியும், பொறுமையாகவும் அதேவேளை உறுதியாகவும் விடயங்களைக் கையாளும் தகுதியும், ஜனநாயகக் கலாசாரத்தில் மனமார்ந்த கடைப்பிடிப்பும், மாற்றுக் கருத்துக்களையும் மதித்து கணக்கில் எடுத்துக் கொள்ளும் பண்பாடும். எதிர்க் கட்சிக்காரர்களாயினும் மனிதாபிமானத்தோடும் பண்போடும் நடந்து கொள்ளும் குணாம்சமும் கொண்ட தலைவர்கள் சமூகத்தில் இருந்து உருவாக வேண்டும். அவர்கள் மக்களின் உண்மையான அன்புக்குப் பாத்திரமான பிரதிநிதிகளாத் தலையெடுக்க வேண்டும். புலிகள் அழிக்கப்படாமல் இருந்திருந்தால் அதற்கான எந்த வாய்ப்பும் தமிழர் சமூகத்தில் ஏற்பட்டிருக்க மாட்டாது.

தமது சுய அறிவு மற்றும் தமது அரசியல் ஆற்றல் மீது நம்பிக்கையற்றவர்கள் ஆனால், தாம் மட்டும் தனித் தலைவர்களாக அரசியல் வியாபாரம் நடத்தும் நிலைமை இருக்க வேண்டும் என்பதற்காக சமூகத்தில் தனிமனித அடிப்படைச் சுதந்திரங்கள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், முயற்சிப்பவர்களின் கதைகளும் புலிகளின் முடிவோடு முடிவடைந்தவையாகட்டும்.

தமிழர்களின் போராட்டம் இலங்கையைப் பிரிக்கும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக தமிழர்களுக்கு நியாயமானதொரு அரசியற் தீர்வையே கோரி நிற்கின்றது என்பதைத் தெளிவாக சிங்கள மக்களுக்கும் உலகுக்கும் எடுத்துக் கூறுவதற்கான சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது.

தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கைகளை நிலைநாட்டுவதற்கு ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாத அவசியம் என ஒரு கட்டத்தில் உணரப்பட்டது. ஆனால், ஆயுதப் போராட்டம் புலிகளால் பிழையான மார்க்கத்துக்கும் நோக்கங்களுக்கும் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டது. அது தமிழ் மக்கள் மத்தியில் இருந்த கொஞ்ச நஞ்ச ஜனநாயக அம்சங்களையும் குழி தோண்டிப்புதைத்து, தமிழர்கள் மத்தியில் நிலவிய ஒற்றுமையைச் சீர்குலைத்து பெருந்தொகையான தமிழர்களை விரக்தியின் எல்லைக்குத் தள்ளியது.

புலிப்பிரசாரங்களைத் தவிர வேறெதுவும் தமிழ் மக்களை நாட முடியாது என்று இருந்த நிலைமையில் இனி மாற்றங்கள் ஏற்படும்.

புலிகளைத் தவிர வேறெவருடனும் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகத் தொடர்பு கொள்ள முடியாது என்று இருந்த நிலைமையும் இனி மாறும்.

எனினும் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களெல்லாம் திடீரென நிகழ்ந்துவிடமாட்டார். புலிகள் கடந்த இருபது ஆண்டுகளாக தனிக்காட்டு ராசாக்களாக தமிழர்களின் மூளையில் ஊட்டிய மாயையிலிருந்து விடுபட சில காலங்கள் எடுக்கவே செய்யும். தமிழ் மக்களின் நலன்கள் மீது உண்மையான தெளிவான நிலைப்பாடு கொண்டவர்கள் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

பலரிடமும் உள்ள கேள்வி தமிழர்களுக்குத் திருத்தியளிக்கக் கூடிய அரசியற் தீர்வு முன்வைக்கப்படுமா?

நடைமுறைப்படுத்தப்படுமா? என்பதே. இப்போதைக்கு விரைவில் குறைந்த பட்சமாவது திருப்தி அளிக்கக் கூடியதோர் அரசியற் தீர்வு முன்வைக்கப்படுமா? நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்ப்போம். முதலில் அழிந்துபோன எமது நகரங்கள் கிராமங்கள் அனைத்தும் மீண்டும் புத்துணர்ச்சி கொண்டவையாக இயங்கும் வகையில் புனர் நிர்மாணங்கள் செய்யப்படட்டும்.

எமது தேசத்தின் தெருக்கள், புகையிரதப் பாதைகள் கல்விச்சாலைகள் வைத்தியசாலைகள் பொது நிர்வாகக் கட்டடங்கள் அனைத்தும் மீண்டும் கட்டப்படட்டும், எமது மண்ணில் விவசாயம் மீன்பிடித்தொழில்கள், கைத்தொழிற்சாலைகள், சுற்றுலாத் தொழில்கள், வர்த்தகங்கள் போன்றன மீண்டும் புது உற்சாகத்துடன் செயற்படும் நிலை ஏற்படட்டும். சிதைந்து போன எமது சமூகம் மீண்டும் அதன் அரசியல் பொருளாதார கலாசார சமய சமூக நிறுவனங்களுடன் ஒன்று திரண்டு புது ஊக்கங்களுடனும் நம்பிக்கைகளுடனும் முற்போக்காக வாழும் நிலை ஏற்படட்டும்.

சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையே உள்ள பரஸ்பர அரசியல் பொருளாதார சமூக நலன்களை நம்பிக்கைகளோடு இணைக்கும் உறவுகளுக்கான புதியதோர் சமூக ஒப்பந்தம் உருவாகுவதற்கான தளங்களும் களங்களும் பரந்துவிரியட்டும்.

தமிழ் மக்கள் இனியாவது இங்கு கீழே குறிப்பிடப்படும் விடயத்தில் மிகத் தெளிவாக சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும்.

மக்களே தமது அரசியற் தலைமையைத் தீர்மானிக்க வேண்டும்!

அந்தத் தலைமையே மக்களை சரியாக வழிநடத்த வேண்டும்!

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பது அன்று!

மக்கள் எவ்வழி தலைவர்களும் அவ்வழியே என்பது இன்று!

மக்களின் பிழையான முடிவுகளும் ஆதரவுகளும் பிழையான தலைவர்களையே அவர்களுக்கு வழங்கும்.

ஆற்றிலே போட்டு விட்டு குளத்திலே தேடாதே என்பது பழமொழி! அதேபோல பிழையான சக்திகளுக்கு ஆதரவைக் கொடுத்துக்கொண்டு வேறு கட்சிகளிடத்தில் மக்கள் தமக்கான அரசியற் தீர்வைத் தேடுவதை தவறாகும்.

மக்கள் தவறான பாதையில் போய்க் கொண்டிருந்தாலும் அவர்களை சரியான பாதையை நோக்கி வழி நடத்துவதற்கு விடாது முயற்சிப்பதே உண்மையான மக்கள் தலைவர்களின் கடமை.

எனினும் ஒரு சமூகத்தில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு உண்மையான தலைவர்களுக்குக் கிடைக்கும் வரை அச்சமூக மக்களை சரியான இலக்குகளை நோக்கி சரியான பாதைகளில் வழிநடத்திச் செல்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் அரசியல் முயற்சிகள் எந்தச் சபையிலும் அங்கீகாரம் பெறமாட்டாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுவரை தமிழ் மக்கள் தவறான சக்திகளை நம்பியிருந்ததற்கும் அந்த சக்திகளுக்கு ஆதரவளித்ததற்கும் தமிழர்கள் மத்தியில் இருக்கும் பெருந்தொகையான புத்திஜீவிகள், மதத் தலைவர்கள், வர்த்தகர்கள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் இலக்கிப்படைப்பாள ர்கள் என பலதரப்பட்டவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

அவர்கள் இனியாவது உண்மையான சமூக அக்கறையோடு நேர்மையாக தமது கடந்த காலத் தவறுகளை தாமாக உணர்ந்து தமிழ்ச் சமூகத்தின் நல்வாழ்வுக்காக தமது நிலைப்பாடுகளை சரியான பாதைக்கு மாற்றி தமது சமூகப் பங்கை வழங்க வேண்டும்.

அதேவேளை புலிகளின் காரணமாக சமூகத்திலிருந்து அந்நியப்பட்டுப்போன கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் மக்களோடு நேரடியாகவும் மக்களின் பொது நலன்களோடும் தம்மை பரவலாகவும் விரிவாகவும் நெருக்கமாக்கிக் கொள்ளல் வேண்டும். ஜனநாயக ரீதியான கட்சிகள் பமுடிந்தளவுக்கு குறைந்தபட்ச அரசியற் புரிதல்களின் அடிப்படையிலாயினும் ஐக்கியப்பட்டு செயற்படுவதன் மூலம் மக்கள் மத்தியில் எதிர்காலம் பற்றிய புதிய நம்பிக்கைகளை வளர்க்க வேண்டும்.

எமது சமூகம் இதுவரை யுத்தத்தால் இழந்தது போதும்!

எமது மக்கள் இதுவரை யுத்தத்தால் அழிந்தது போதும்!

எமது இனம் இதுவரை போலிகளால் ஏமாற்றப்பட்டது போதும்!

இனியாவது எமது சமூக மக்களுக்கு,

நல்ல வல்லவர்கள் தலைவர்களாகட்டும்!

நேர்மையானவர்கள் வெற்றிகரமான பிரதிநிதிகளாகட்டும்!

உண்மையானவர்கள் சரியான தடத்தில் மக்களை வழி நடத்தட்டும்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com