Contact us at: sooddram@gmail.com

 

செய்தியும் சிந்தனையும்(2)

(அபிமன்யு)

செய்தி :

நேற்றைய தினம் (07-10-2013) இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா முன்னிலையில் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

சிந்தனை:

பல வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டிய இந் நிகழ்வு, காலம் தாழ்த்தி இப்பொழுது நடைபெற்றிருக்கிறது. அதுவும், எண்ணிக்கையற்ற அனாவசிய அழிவுகள், அனர்த்தங்கள், இன்னல்கள், இழப்புகள், இடப் பெயர்வுகளின் பின்னர் நடைபெற்றிருக்கிறது. யுத்தம் தொடர்ந்தால், மேற்குறிப்பிட்ட அத்தனையும் தவிர்க்க முடியாது, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதரங்களின் வீழ்ச்சிக்கும், சமூகத்தின் அழிவிற்குமே இட்டுச் செல்லும் என்று தீரக்கதரிசனத்துடன் எடுத்துக் கூறியும், அவற்றைத் தடுக்க முயன்றும் செயற்பட்ட தமிழ்த் தலைவர்கள் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டு விரட்டப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள். வன்முறைகளுக்கு அடி பணிந்தும், மனச்சாட்சியை ஒதுக்கியும், அறம் சாராத வாழ்வும் வாழ வல்லவர்களே தமிழர்களின் தலைவர்களெனக் கோலோச்சி வலம் வந்தார்கள்.

அந்தத் தலைவர்களில் அனேகர் இரத்தக்கறைகள் படிந்தவர்கள், கெட்டித்தனமாக போருக்குப் பின்னரான புதிய அரசியலை எடுத்துச் செல்லத் தகுந்த புத்திசாலித்தனம் இல்லாதவர்கள், தலைவர்களாகச் செயற்படத் திறனற்றவர்கள், முரண் அரசியலை முன்னெடுத்து தங்களின் பதவிகளுக்காக குறுக்கு வழிகளைக் கையாண்டு நிலைமைகளை மோசமாக்கக் கூடியவர்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுவது போலவும்............  

இதுவும் முப்பது வருடப் போராட்டத்தின் ஒரு பலாபலன் போலவும்............

தமிழ் மக்களின் அரசியலிலோ, இலங்கை அரசியலிலோ, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையிலோ  எதுவித பங்களிப்பும் வழங்காத ஒருவர் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்மக்களின் முக்கிய கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்பட்டார்.  

படித்தவர், ஆயுதப் போராட்டத்தில் பங்களிக்காதவர், அதனை ஆதரிக்காதவர், இலங்கையின் பல பாகங்களில் நீதிபதியாகவும், இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர், நல்லவர், நேர்மையானவர், ஆன்மீகத்தில் ஈடுபாடுடையவர், சிங்கள மொழியில் சரளமாகப் பேசக்கூடியவர், சிங்களமக்கள் தலைவர்கள் மத்தியிலும் மதிப்புடையவர்.-இதுவே அவரது தகுதிகள்.

இந்தியாவின் விருப்பும் அவரே!.

அவர் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்களின் அதிகப் பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்றவராகிறார். வடக்கு மாகாணசபையின் முதலைமைச்சர் ஆகிறார். இப்பொழுது முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் புதிய நம்பிக்கை நட்சத்திரம்! அவர் எடுக்க வேண்டிய சத்தியப் பிரமாணமே தமிழர்கள் சிலரால் சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டது. மகிந்த ராஜபக்சா முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணம் எடுக்கக் கூடாது என்பது இலங்கையில் இருக்கும் மெத்தப்படித்த தமிழர்கள் சிலரும், தூர இருந்து கொண்டு விண்ணாணம் பேசும் புலம் பெயர்ந்து வசதியாக வாழ்க்கை நடாத்தும்  தமிழ்ப் பிரமுகர்களும் விடுத்த கட்டளை!.  

அவற்றிற்கு மத்தியிலும், வடக்கு மாகாணசபை அமைச்சர்களுக்கான  இழுபறிப்புகளின் மத்தியிலும், இன்றைய அரசியல் நிலைமையின் யதார்த்தத்திற்கு முகம் கொடுத்து சரியாகவே இலங்கை ஜனாதிபதி முன் சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறார். தமிழில் செய்திருக்கிறார். மகிந்த ராஜபக்சாவிடமிருந்து ஒரு பிள்ளையார் சிலையையும் அன்பளிப்பாகப் பெற்றிருக்கிறார்!. அவர் (நீதியரசர்) எடுத்த சத்தியப் பிரமாணம், பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்து சத்தியம் செய்தது:

  • இலங்கை குடியரசிற்கு விசுவாசமுள்ளவனாக இருப்பேன்.

  • அதன் அரசியல் அமைப்பிற்கும் சட்டத்திற்கும் இணங்க பற்றுதியோடு பணியாற்றுவேன். அவற்றை உறுதியாக போற்றிக் காப்பேன்.

  • தனிநாடொன்று ஸ்தாபிக்கப்படுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவளிக்கவோ, ஆக்கமளிக்கவோ ஊக்குவிக்கவோ பரிந்துரைக்கவோ மாட்டேன்.

அப்பதவி ஏற்பின் பின்னர் இடம்பெற்ற தேநீர் விருந்துபசார நிகழ்வில்  கலந்துரையாடும்போதஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா கூறியதாக செய்திகள் தெரிவிப்பது:

  • அரசாங்கத்தோடு ஒத்துழைத்து செயற்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரென்றால் வடக்கின் அபிவிருத்தி, மேம்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க நான் தயார்.

  • எக்காரணம் கொண்டும் எவ்விதமான பாரபட்சத்தையும் நான் காட்டமாட்டேன்.

  • தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நடந்துகொள்ளுமானால் அபிவிருத்தி, மேம்பாடுகள் வழமைபோல் சுமூகமாக நடைபெறும்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் முதலமைச்சர் விடுத்த அறிக்கையில்  தெரிவித்திருப்பது:

  • ஐக்கிய இலங்கைக்குள்ளேயே நாம் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்க்கிறோம்.

  • உள்ளக சுயநிர்ணயம் ஒரு நாட்டைப் பிளவுபடுத்தாமல் ஒற்றுமைப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

  • நாம் எமது கடந்தகாலப் போராட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றே முன்னேற வேண்டி உள்ளது.

  • இங்கு வன்முறைக்கு இடமில்லை. பலாத்காரத்திற்கு இடமில்லை.

  • புரிந்துணர்வு ஒன்றே எம்மை சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் நோக்கிச் செல்ல வழிவகுக்கும்.

இவை அனுபவ முதிர்ச்சியும் அறிவுபூர்வமானதும் யதார்த்தங்களை மனதில் நிறுத்தி மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறைகளுக்கான அத்திவாரங்களைக் கொண்டுள்ளதாகக் கொள்ளலாம்.

ஆனாலும், தமது சொந்தச் சுயநல நிகழ்ச்சி நிரல்களுக்கும், பதவி மோகங்களுக்கும் கற்பனைகளிலும் கனவுகளிலும் மக்களை வாழ வைத்து மக்கள் மேலும் அழுந்துவதற்கு வழி வகுப்போரால் அவரும் இழுக்கப்பட்டு மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை வீணடித்து விடுவாரா? அல்லது, அத்தகையோரின் இழிபறிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும், குழிபறிப்புகளுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் போதுமடா சாமி!--ஆளை விட்டால் போதும்!” என்று ஒதுங்கி விடுவாரா? அல்லது, இலங்கை அரசின் கடும்போக்குகளை எதிர்கொள்ள நேரும்  பட்சத்தில் மக்களின் சக்தியைத் திரட்டியும் ஒருங்கிணைத்தும், விவேகமானதும் ஆக்கபூர்வமானமானதுமான நடவடிக்கைகளைத் தொடராது கைவிட்டு விடுவாரா? அல்லது, துணிச்சலுடன், மனத் திண்மையுடன் தமிழர்களின் உண்மையான நலன்கள் சார்ந்ததும், அறம் சார்ந்ததுமான செயற்பாடுகளை எடுத்து தமிழர்களின் அவலங்கள் தீர, அவர்கள் வாழ்வு தழைக்க, வேண்டிய வழிமுறைகளை மேற்கொள்வாரா? அவருக்கும், அவர் சார்ந்த ரிஎன்ஏயினருக்கும் அமோகமாக வாக்களித்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா?

அவர் தனது அறிக்கையின் இறுதியில் கூறியிருப்பது:

இறைவன் ஆசி சகலருக்கும் கிடைப்பதாக”!

நல்லவையையே செய்ய, நன்மைகளையே எய்த, தமிழ்மக்களின் இன்னல்கள் தீர, இறைவன் ஆசி அவருக்கும் கிடைப்பதாக!

[08 ஒக்ரோபர், 2013]

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com