Contact us at: sooddram@gmail.com

 

செய்தியும் சிந்தனையும்(3)

(அபிமன்யு)

செய்தி

வட மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (11-10-2013) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வினை அக்கட்சியின் ஒன்பது உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

சிந்தனை

வட மாகாண சபைத் தேர்தல் முடிந்து மூன்று வாரங்கள் கூட முற்றாக முடியவில்லை. 

--அதற்குள்தான் எத்தனை குடுமிச் சண்டைகள், குழிபறிப்புகள், வாதப் பிரதிவாதங்கள்!. 

இத்தனைக்கும் அத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம்  வகிக்கும் அனைத்துக் கட்சிகளாலும் முன்வைக்கப்பட்ட முதன்மைக் கோஷம் “ஒற்றுமையே தமிழர்களின் பலம்”.

வட மாகாணசபைத் தமிழர்கள் ஒற்றுமையாகத்தான், தெளிவாகத்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் முன்னிறுத்தப்பட்ட வேட்பாளர்களுக்கு  பெருவாரியாக வாக்களித்து அமோக வெற்றி பெற வைத்துள்ளனர்.  

ஆனால், அந்தக் கோஷத்தை முன்வைத்து வெற்றி பெற்றவர்களோ, அவர்களுக்கு வாக்களித்தவர்களின் கையிலுள்ள மை காயும் முன்னரே, “ஒற்றுமை” என்பதெல்லாம் காலாகாலமாக தேர்தலில் சுலபமாக வெல்வதற்கு மட்டும்--தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கையாலாகாத்தனங்களை, அரசியல் வங்குரோத்தை மறைப்பதற்காக எழுப்பப்படும்--வெற்றுக் கோஷம், வெறும் பம்மாத்து --என்று சொன்னவர்களின் கூற்றின் உண்மைத்தனத்தை வெகு விரைவாகவே நிரூபித்து விட்டார்கள்.

ஒற்றுமையின் வெளிப்பாடாக, கூட்டாகச் செய்ய வேண்டிய சத்தியப் பிரமாணத்தை,

ரெலோ அமைப்பின் ஆட்சிப் பீட உறுப்பினர்களில் ஒருவரான எம்.கே. சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் செய்தார்.

அதே அமைப்பின் இன்னொரு உறுப்பினர் முதலைமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின்  கொழும்பு வாசஸ்தலத்திற்குச் சென்று  அவர் முன்னிலையில் செய்துகொண்டுள்ளார். 
புளொட்டின் உறுப்பினர்களான சித்தார்த்தன் மற்றும் லிங்கநாதன் ஆகியோர் அக் கட்சியின் செயலாளர் முன்னிலையில் செய்தார்கள். 
அதே அமைப்பைச் சேர்ந்த வேறு இருவர் முதலைமைச்சர் முன்னிலையில் செய்து கொண்டுள்ளார்கள்.
ஈபீஆர்எல்எவ் (சுரேஷ் அணி ) உறுப்பினர்களில் மூன்று பேர் வவுனியாவில்  ஒரு சட்டத்தரணி முன்னிலையில் மேற்கொண்டனர். 
அக் கட்சியின் வவுனியாவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அந்த வவுனியா நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தான் முதலைமைச்ர் முன்னிலையில் செய்துகொள்ள தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் இன்னொரு உறுப்பினர் ஏற்கனவே முதலைமைச்சரின் கொழும்பு வாசஸ்தலத்திற்குச் சென்று அவரின் முன்னிலையில் செய்துகொண்டுள்ளார்.
ஒரே குழப்பமாக இருக்கிறதா?. ஒரே வேடிக்கையாக இருக்கிறதா?  தலையைச் சுற்றுகிறதா?.  தமிழ்ப் பிரதிநிதிகளின் ஒற்றுமை மெய் சிலிர்க்க வைக்கிறதா?
யாழ்ப்பைணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியைப் புறக்கணித்தமைக்கு  அவர்களது  சால்ஜாப்பு-
“தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தனிப்பட்ட சிலர் முடிவுகளை எடுப்பது பிழையனெவும் அதனை மக்களுக்காக தெரியப்படுத்தும் வகையிலேயே நாம் நேற்று இடம் பெற்ற வட மாகாண சபைக்கான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வை பகிஷ்கரித்தோம்”.

ஆகா! மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் எத்துணை கரிசனை!

என்னதான் சாக்குப்போக்குகளைச்  சொன்னாலும், அந்தப் புறக்கணிப்புக்கு, அந்த முரண்பாடுகளுக்கு நிஜமான காரணம், இவர்கள் எதிர்பார்த்ததுபோல் இவர்களுக்கோ, இவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்களுக்கோ வடமாகாண சபை அமைச்சரவையில் இடங்கள் கிடைக்கவில்லை என்பதுதான்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடமாகாணத் தமிழ் மக்களால் அதிகப் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், முன்னாள் நீதியரசர், இதுவரை ஊழல் போன்ற கறைகள் எதுவும் படிந்திராதவர்.

அவர் வெளிப்படையாகவே கூறுகிறார்௰

“தனது தம்பி சர்வேஸ்வரனுக்கு அமைச்சர் பதவி அளிக்கும்படி சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டிருந்தார். ஆனால் அதனை என்னால் கொடுக்க முடியவில்லை. அதனால்தான் அவருக்குக கோபம்”.

சுரேஷ் பிரேமச்சந்திரன் சொல்கிறார்-

“இல்லையில்லை! எனது கோபத்திற்குக் காரணம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்குக் கொடுக்கும்படி முதலைமைசரைக் கேட்டிருந்தேன். அவர் கொடுக்கவில்லை”.  

யாரோ ஒருவர் பொய் சொல்கிறார்.௰முதலமைச்சர், முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனா? பிரேமச்சந்திரனா?

அவரின் முல்லைத்தீவு மாவட்ட விசுவாசத்தால்தான் அவரது கட்சியைச் சேர்ந்த ஜங்கரநேசனுக்கு--அத் துறையில் அவர் திறமையுள்ளவர்  என்ற காரணத்தால் அவருக்கு அமைச்சர் பதவி அளிகப்பட்டு அவர் அதனை ஏற்றுக் கொண்டமையினால்-- அவரைக் கட்சியிலிருந்து விலக்குமளவிற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் போய்விட்டார் என்றால் பாருங்களேன்!

அதனை நாம் நம்ப வேண்டுமாம்! 

சித்தார்த்தனதும், சிவாஜிலிங்கத்தினதும் புறக்கணிப்பும் அவர்கள் எதிர்பார்த்த அமைச்சர் பதவி தமக்கு தரப்படவில்லை என்பது தெரிந்ததே.

--இதற்கு ஏன் முழுப் பூசணிக்காயை உள்ளங்கை அளவு சோற்றில் மறைக்கும்  நகைச்சுவை நாடகம்?

வட மாகாண சபைக்கு இருப்பதோ நான்கு அமைச்சுகள்தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கென்றும், அவர்கள் கேட்கும் ஆட்களுக்கென்றும், சாதி, சமயம், பெண் பிரதிநிதித்துவம் என்ற அடிப்படைகளிலும் இந்த நான்கு அமைச்சுப் பதவிகளை பகர்ந்தளிக்கப்பட வேண்டும் என முதலைமைச்சரைக்  கட்டாயப்படுத்தினால், பாவம் அவர் எங்கே போவார்?.

இது கணித மேதை ராமானுஜம் உயிர்பெற்று வந்தாலுமே தீர்க்க முடியாத விடயமாயிற்றே!.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகச் சரியாகவே, அந்த நான்கு அமைச்சுப் பதவிகளையும் தகுதியடைப்படையிலேயே அளித்திருக்கிறார்.

அத்துடன், அமைச்சர்கள் தங்கள் பணிகளை காத்திரமான வகையில் மேற்கொள்வதற்கு உறுதுணையாக ஒவ்வொரு இலாகாவுக்கும், தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் அத்துறைகள் சம்பந்தமான திறமைசாலிகளை நியமித்துள்ளதோடு, 13வது அரசியல் திருத்தத்தின் எந்தச் ஷரத்துகளின் அடிப்படையில் அப் பணிகள் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது என்பதையும் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளார். 

இது வரையிலான அவரது செயற்பாடுகள், வட மாகாண சபைக்கு மட்டுமல்லாது, கிழக்கு மாகாண சபை உட்பட இதர மாகாண சபைகளுக்கும், ஏன் ஸ்ரீலங்கா அரசிற்குமே ஒரு நல்ல முன்னுதாரணமாகும். 

தமிழ்ப் பிரதேசம், தமிழர்களின் பூர்வீகம் என்றெல்லாம் வாய் கிழியக் கத்துகிறார்கள்.

ஆனால் அமைச்சுப் பதவிகள் என்றால் பிரதேசம், மாவட்டம்   என்று பேசி, தங்களின் அசிங்கங்களை, நிர்வாணமாகத் தெரியும் சுயநலன்களை மறைக்க, அவற்றை முன்னிறுத்தியும், நியாயப்படுத்தியும்,  ஒட்டு மொத்த தமிழினத்தையே அசிங்கப்படுத்துகிறார்கள்.

அத்துடன் சேர்த்து அவர்களது கட்சிகளின் ஆதரவாளர்களையும், அக் கட்சிகளுக்காக உடமைகளையும் உயிர்களையும் அர்ப்பணித்தவர்களையும் அசிங்கப்படுத்துகிறார்கள். கொச்சைப்படுத்துகிறார்கள். 

ஒரு தமிழ் அமைச்சர், கட்சி, சாதி. சமய, பால், பிரதேசம், மாவட்டம் ஆகியவற்றைக் கடந்தவராகச் செயற்படும் தன்மையற்றவராக, குறுகிய மனப்பான்மை கொண்டவராக ஏன் செயற்படவேண்டும்?

மொத்தத் தமிழ் இனமே இன்னலுற்றிருக்கும் இவ் வேளையில் அப்படி ஒருவர் செயற்படுவாரானால் அவர் ஒரு தமிழ் அமைச்சராக மட்டுமல்ல, ஒரு தமிழராக இருக்கும் தகுதியையே இழந்தவராக, தமிழ் மக்கள் அவரை ஒதுக்கி ஓரம் கட்டி விட வேண்டும். 
  
தமது அவலங்கள் தீர, தமது வாழ்வாதாரங்கள் மேம்பட வேண்டிய வழிவகைகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையால்தான்--ஒரு புதிய காற்றாகச் செயற்படுவார் என்ற நம்பிக்கையால்தான்--முதலைமைச்சர் விக்னேஸ்வரனைத் தமிழ் மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள்.

இப்பொழுதுதான் அவர் பதவி ஏற்றிருக்கிறார். அவர் தனது பணிகளைச்  சரிவரச் செய்யாதிருப்பதற்குத் தடையாக ஸ்ரீலங்கா அரசாங்கத்திலிருக்கும் கடும்போக்காளர்களும், சிங்களப் பேரினவாதிகளும்தான் முட்டுக்கட்டை போட முனைவார்கள்.

ஆனால், தமிழ்ப் பிரதிநிதிகளே அந்தக் கைங்கரியத்தைச் செய்கிறார்கள்!

முதலைமைச்சர் விக்னேஸ்வரன் தனது பணிகளில் சறுக்கலாம். அதைக் காலம் கணிக்கும்.

ஆனால் அவர் சறுக்க வேண்டும் என்றே “கால்தடக்குக்கள்” போட்டுக் கொண்டிருப்பது என்ன நியாயம்?

இப்படிச் செய்பவர்கள்தான் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான கைக்கூலிகள் என்று நாம் நினைத்தால் என்ன தவறு இருக்கிறது?.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த வடமாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் கடுமையாக உழைக்கட்டும்.

வடமாகாணசபைத் தேர்தலில் மாகாணசபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின தலைமையில், அவர்களுக்கு வாக்களித்தவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றட்டும். அவர்களது வாழ்வாதாரங்களை செழுமைப்படுத்தட்டும்.

அந்தப் பணிகளை அவர்களுக்கு விட்டுவிட்டு,
தமிழ் மக்களால் .இலங்கைப் பாராளுமன்றத்திற்கு தமிழ் பேசும் வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்ட ரிஎன்ஏயைச் சேர்ந்த 13 பிரதிநிதிகளுக்கும் அரசாங்கம் மாதாமாதம் கைநிறையச் சம்பளம், மற்றும் கொடுப்பனவுகள், வாகன வசதிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

இவர்கள் அனைவரும் கொழும்பிலும், சிங்களப் பிரதேசங்களிலும இருந்து கொண்டு, அதிகாரப் பரவலாக்கத்திற்கும், தமிழர்களின் உரிமைகளுக்கும் வேண்டிய செயற்பாடுகளை மேற்கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு  வேண்டிய அழுத்தங்களைக கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

வேண்டுமானால் மாவீரர்களின் கல்லறைகளுக்கு மலர் தூவுவது சம்பந்தமான செயற்பாடுகளையும் அவர்கள் மேற்கொள்ளட்டும்.

“ஐனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டாம் என்று நாம் அனைவரும் இணைந்து நின்று கூறினோம்” என்பது இவர்களின் இன்னொரு குற்றச்சாட்டு!.

இப்படிக் கூறுபவர்கள் பாராளுமன்றப் பிரதிநிதிகளாக ஏற்பு நிகழ்ச்சியில் இவர்கள் செய்து கொண்ட சத்தியப் பிரமாணத்தின் சில வரிகளை தமிழ் மக்கள் நினைவு கொள்வது அவசியம்.

இலங்கை குடியரசிற்கு விசுவாசமுள்ளவனாக இருப்பேன். அதன் அரசியல் அமைப்பிற்கும் சட்டத்திற்கும் இணங்க பற்றுதியோடு பணியாற்றுவேன். அவற்றை உறுதியாக போற்றிக் காப்பேன். தனிநாடொன்று ஸ்தாபிக்கப்படுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவளிக்கவோ, ஆக்கமளிக்கவோ ஊக்குவிக்கவோ பரிந்துரைக்கவோ மாட்டேன்.

இதென்ன இரட்டை வேடம்? இதை விடவா அது மோசம்?. ஏமாற்றுப் பேச்சுகளுக்கு ஒரு எல்லை இல்லையா?

“நாம் விலக மாட்டோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி எந்த சந்தர்ப்பத்திலும் தனித்து இயங்கப் போவது இல்லை” என்ற வக்கணை வேறு.

இதென்ன வாதம்? இதென்ன நேர்மை அரசியல்?.

விலகினால் அரசியலில் செல்லாக் காசாகி விடுவோம் என்கிறார்களா?

அல்லது, உள்ளுக்குள் இருந்து கொண்டு குழி பறித்துக கொண்டே இருப்போம் என்கிறார்களா?

        [17 ஒக்ரோபர், 2013]

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com