Contact us at: sooddram@gmail.com

 

தோழர் பத்மநாபா 

உழைக்கும் மக்கள் பற்றிய சீரிய சிந்தனையாளன்

ஒடுக்கப்பட்டவர்களின் விடிவுக்கான அயராத உழைப்பாளி

எதிரிகளையும் மதித்த உயரிய மனிதாபிமானி,

இன மொழி மதங்களைக் கடந்த சர்வதேசப் புரட்சியாளன்

இன்று நவம்பர் 19. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களாலும், மற்றும் கட்சியின் நெருங்கிய நண்பர்களாலும் எஸ் ஜி தோழர் என அழைக்கப்பட்ட எமதினிய தோழர் நாபா அவர்களின் பிறந்த தினமான இன்று அவர் தொடர்பான மறக்க முடியாத நினைவுகளை கட்சியின் தோழர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நானும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

தோழர் நாபா அவர்களை முதன் முதலாக நான் சந்தித்து முப்பத்தெட்டு ஆண்டுகள் கடந்தோடி விட்டன. அவரோடு இணைபிரியாத நண்பனாக, அரசியற் தோழனாக, கட்சியில் அவரின் தலைமையின் கீழ் தொண்டனாக பதினெட்டு ஆண்டுகள் வாழும் - சேர்ந்து செயற்படும் பெரும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் என்றும் எந்தச் சூழலிலும் பெருமைப்படுவேன். விசேடமாக இன்றைய தினத்தில் அவர் பற்றி நான் அறிந்தவை, அவரிடம் நான் கண்டவை, அவரோடு இணைந்து செயற்பட்டதில் நான் உணர்ந்தவை கற்றவை என்பதையெல்லாம் மீட்டுப் பார்க்கிற போது ஒரு அற்புதமான நண்பனோடு, அரியதொரு தோழனோடு, உள்ளத்தாலும் உருவத்தாலும் உயர்ந்த மனிதனோடு பழக எனக்கு வாய்பபைத் தந்ததற்காக வரலாற்றுத் தெய்வத்தை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

தோழர் நாபா அவர்கள் ஈழத்தின் சாதாரண பாமர மகன் தொடக்கம் கட்சியின் தோழர்கள், நண்பர்கள், ஏனைய இயக்கத்தவர்கள், பெரும்படிப்பு படித்தோர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட இலங்கை இந்திய நாடுகளைச் சேர்ந்த பழம் பெரும் அரசியற் தலைவர்கள் வரை அவர் பழகிய எல்லோரிடமும் பெரும் நன்மதிப்பைப் பெற்றவராக வாழ்ந்தார். தோழர் நாபாவின் தனிப்பட்ட செயற்பாட்டால் நொந்தவர்களும் கிடையாது, அவரோடு நெருங்கிப் பழகுவதற்கு அஞ்சியவர்களும் கிடையாது. அவரோடு யாரும் பழகலாம், அவரோடு யாரும் எப்படியும் விவாதிக்கலாம், அவரின் முகத்துக்கு முன்னாலேயே அவரை விமர்சிக்கலாம் அவரை யாரும் எப்போதும் சந்திக்கலாம் என்ற வகையில் ஒரு சிறந்த திறந்த புத்தகமாகவே தோழர் நாபா அவர்கள் வாழ்ந்தார். தோழர் நாபா எந்தக் கட்டத்திலும் தனது தலைமை பற்றிய பிரமிப்பான ஒரு மாயையை ஏற்படுத்துவதற்கு முயற்சித்ததுமில்லை அவ்வாறான ஒன்றை அவர் எப்போதும் விரும்பியதுமில்லை. அவர் கட்சியின் தோழர்கள் மத்தியிலும் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியிலும் சாதாரண மனிதனாக, தோழனாக. நண்பனாகவே நடந்து கொண்டார். 

அவரோடு பழகியவர்கள், அவரைத் தெரிந்தவர்கள் ஒரு முறை மட்டுமே அவரைச் சந்தித்திருந்தாலும் கூட அவரது அரசியல் ஆளுமையைப் பாராட்டாதவர்கள் கிடையாது: அவரது அமைதியும் கண்ணியமும் மனிதாபிமானமும் கொண்ட செயற்பாடுகளை புகழாதார் இல்லை: அவரின் சிந்தனைத் தெளிவு, அயராத உழைப்பு, எந்த நெருக்கடிக்கும் கலங்காத உள்ளம் கண்டு வியக்காதவர்கள் கிடையாது.

1990ம் ஆண்டு சென்னையில் வைத்து தோழர் அவர்கள் புலிகளால் படுகொலை செயயப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் தமது இரங்கற் செய்தியில் தமது தாயார் மறைந்த இந்தியப் பிரதமர் அவர்களின் பிறந்த தினமும் தோழர் நாபா அவர்களின் பிறந்த தினமும் ஒரே தினத்தில் வருவதைக் குறிப்பிட்டு இருவரும் மக்களின் நல்வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்து பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டியதை இங்கு தொட்டுக் காட்டுவது பொருத்தமானது என நினைக்கிறேன்..

தோழர் நாபா அவர்கள் இலங்கைத் தமிழர்களின் அரசி;யல உரிமைகளுக்கான விடுதலைப் போராட்டத்தை சமூகரீதியான உரிமைகளுக்குகான போராட்டங்களோடு இணைத்தார்: அவர் தமிழர்களின் போராட்டத்தை இலங்கையின் அனைத்து மக்களுக்குமான சமூக பொருளாதார அரசியல் விடுதலையின் முதற்கட்டமாகக் கொண்டே வழி நடத்தினார்: அவர் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வை சர்வதேசரீதியான மக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்களின்; ஒரு பாகமாகவே கருதினார். அவரின் தீர்க்கதரிசமான முடிவுகளும் தீர்மானகரமான முயற்சிகளும் இன்றைக்கும் இலங்கைத் தமிழர் சமுதாயத்தின் அரசியற் தீர்வுக்கான மைய விடயங்களாகவே உள்ளன. 

தமிழர்களிடையேயுள்ள இயக்கங்கள், கட்சிகள் மற்றும் குழுக்களிடையே ஐக்கியம், தமிழர்களின் போராட்டத்துக்கும் மலையகத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கும் இடையே ஒருங்கிணைப்பு, தமிழர்களின் தலைவர்களுக்கும் முஸ்லிம் மக்களின் தலைவர்களுக்குமிடையே ஐக்கியம், தமிழர்களிடையே உள்ள முற்போக்கு சக்திகளுக்கும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள முற்போக்கு சக்திகளுக்கும் இடையே ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கும் வகையான போராட்டம், தமிழர்களின் மத்தியிலுள்ள புரட்சிகர சக்திகளுக்கும் சர்வதேச ரீதியான புரட்சிகர சக்திகளுக்கும் இடையே கைகோர்ப்பு என பரந்து விரிந்த அரசியல் மனோபாவத்துடனேயே தோழர் நாபா எப்போதும் செயற்பட்டார். அவர் மண்ணுக்காக மக்களை நேசிக்கவில்லை மாறாக மக்களுக்காகவே மண்ணை நேசித்தார். அவர் தமிழுக்காகப் போராடவில்லை தமிழர்களின் வாழ்வு உரிமைகளுக்காகப் போராடினார், அவர் மானுட குலத்தின், உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்டவர்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்து உழைத்தார்

அவர் நாடுகள் ஒவ்வொன்றிலும் இருக்கும் வர்க்க மற்றும் சமூக பொருளாதார முரண்பாடுகளுக்கும் நாடுகளுக்கிடையே நிலவும் உறவுகளுக்கும் இடையே குழப்பமான கருத்தையோ நிலைப்பாட்டையோ கொண்டிருக்கவில்லை. தமிழர்களின்; உரிமைகளுக்கான விடுதலைப் போராட்டத்துக்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதாரமாக இருக்க வேண்டுமென உழைத்தார்: இந்திய முற்போக்கு சக்திகளின்; ஆதரவைக் கட்சி பேதமின்றித் திரட்டினார்: தமிழர்களுக்கு இந்திய அரசின் துணையி;னுடைய தேவையைத் தெளிவாகப் புரிந்து கொண்டு தீர்க்கமாகச் செயலாற்றினார்: தமிழர்களின் போராட்டத்தின் முன்னேற்றத்துக்கு சர்வதேச புரட்சிகர மற்றும் முற்போக்கு சக்திகள் ஒருங்கிணைந்;து குரல் கொடுக்க வேண்டியதன் தேவையைப் புரிந்து கொண்டு அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார். அவர் எந்தக் கட்டத்திலும் தமிழகத்தின் உறவையோ இந்தியாவின் துணையையோ சர்வதேச நட்புகளையோ வெறும் பணத்துக்கும் ஆயுதங்களுக்குமான உறவாகக் கணித்ததில்லை. நட்புகள் பயன்படுத்தப்படுவதற்கான தந்திரங்களல்ல. மாறாக பரஸ்பர நலன்களின் சமநிலையைப் பேணுவதால் வலுப்படுத்தப்படுபவை என்பதை தோழர் அவர்கள் எப்போதும் தெளிவாகப் புரிந்தே செயற்பட்டார்.  

தோழர் நாபா அவர்களின் சிந்தனை வழியில் தமிழர்களின் தலைவர்கள் நடந்திருந்தால், அவரின  ெயன்முறை வழிகாட்டல்களை தமிழர் சமூகம் உரிய காலகட்டத்தில் புரிந்து ஏற்றிருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு இன்றைக்கு உலகில் எங்குமே உண்மையான நண்பர்கள் இல்லை என்று ஏற்பட்டிருக்கும் நிலை எற்பட்டிருக்கமாட்டாது. இன்னமும்; காலம் முற்றாகக் கடந்து விடவில்லை. தோழர் நாபா அவர்களின் அரசியற் சிந்தனைகளும் செயற்பாட்டு வழிமுறைகளும் இன்றைக்கும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விடிவுக்கு அவசியமானவைகளாகும். 

புலியிசத்தின் போலித்தனமான எச்சங்களால் இன்னமும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு செயற்திறன் கெட்டு சீரழிந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ்ச் சமதாயத்தில் முற்போக்கான சிந்தனைகளும் புரட்சிகரமான அரசியலும் முன்னணிக்கு வரவேண்டுமானால், மக்களின்; உரிமைகள் நிலைநாட்டப்படவும் சீரான வாழ்வை நோக்கி முன்னேற்றங்கள் ஏற்படவும் வேண்டுமானால் அந்த அடிப்படைகளில் புதிய தலைமுறையினர் அணிதிரட்டப்பட்டு வழிநடத்தப்பட வேண்டுமானால் பிரபாகரன்களல்ல மீண்டும் பத்மநாபாக்களே உயிர்த்தெழ வேண்டும் என்பதே இந்த நாளில் எமது சத்தியமாகட்டும்

அ. வரதராஜப்பெருமாள்

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com