Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதை நோக்கி முயற்சிக்க ஏதாவது வழியண்டா! (கடிதத் தொடர் – 3)

(அ. வரதராஜப்பெருமாள்)

அன்பார்ந்த நண்பர்களே!

ஆற்றல் மிகு தோழர்களே!

எனது நண்பர்களாகவும் என் மீது நல்லபிப்பிராயமும் கொண்ட பலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மட்டத்திலும் ஏனைய மட்டங்களிலும் உள்ளனர். அவர்களிற் சிலரோடு நான் பேசியதில் இருந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்ன செய்கிறார்கள்?, எவ்வாறு செயற்படுகிறார்கள்? அவர்கள் மக்களுக்காகச் செய்ய வேண்டியவைகளில் எதையாவது செய்கிறார்களா?   அல்லது எதுவுமே செய்ய முடியாமல் இருக்கிறார்களா? அவ்வாறு செய்ய முடியாமல் இருப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்ன காரணம் கூறுகிறார்கள் போன்ற கேள்விகளுக்கான தகவல்களைத் திரட்டுவதில் அந்த நண்பர்கள் எனக்கு உதவியாக உள்ளனர். அவர்களிற் சிலர் எனது கடந்த இரண்டு கடிதங்களிலுமுள்ள சில வசனங்களை உணர்ச்சிவசப்பட்டு பார்த்து விட்டு இந்தக் கடிதத் தொடர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பிரச்சார நோக்கம் கொண்டதா என ஒரு சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியுள்ளதாக அறிகிறேன். அவர்களுக்கும் ஏனையோருக்கும் நான் கூறக்கூடியதென்னவெனில் எனக்கு அவ்வாறான எந்த நோக்கமும் கிடையாது – அப்படிப்பட்ட எந்தத் தேவையும் கிடையாது.

ஏனென்றால் நான் இப்போது எந்த வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஆட்கள் சேர்க்கும் போட்டியாளனோ அல்லது அவ்வாறான போட்டியாளர்களின் கூட்டாளியோ அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டி போடக் கூடிய அளவுக்கு சக்தியுள்ளனவோ அல்லது செல்வாக்கு உடையவனோ அல்ல, அல்லது அவ்வாறான செல்வாக்கு உள்ளவர்களுடன் தொடர்புடையவனோ அல்ல என்பதை நீங்கள் நன்கு தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான எனது தனிப்பட்டரீதியிலான பிரச்சார விமர்சனம் என்னும் கண்ணோட்டத்தில் எனது இந்தக் கடிதத் தொடரை யாரும் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மாறாக நான் எழுதும் இந்தத் தொடரில் ஏதாவது இலங்கை மக்களுக்கும் நாட்டுக்கும் குறிப்பாக இப்போதிருக்கும் மாகாண சபைகள் மக்களுக்குப் பயனுள்ள வகையில் செயற்பட - வல்லமையைப்பெறவைக்க ஏதாவது இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதுதான்.

அஃது ஒருபுறமிருக்க, இந்தக் கடிதத் தொடரிலுள்ள கேள்விகளும் அந்தக் கேள்விகளுக்கான அடிப்படைகளும் யாருக்காக? என்பது பற்றிய தெளிவை இங்கு வரையறுப்பது அவசியம் என்று கருதுகிறேன். இந்தக் கடிதத் தொடரை வாசித்து புரிந்து கொள்ள முற்படும் ஒவ்வொருவரும் இந்தக் கடிதத் தொடர்ரில் உள்ள கேள்விகள் யாரை நோக்கியது என்பது மிக அவசியமாகும். இலங்கையிலுள்ள மாகாண சபையின் நிர்வாகக் கட்டமைப்பைப் பற்றியும், அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்கிர்வு பற்றியும், அதற்கும் இலங்கை மத்திய அரசுக்கும் இடையேயுள்ள நிதி மற்றம் நிர்வாக உறவுகள் பற்றியும் பல்வேறுபட்ட - மாறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே.

இலங்கையில் சிங்களவர்களில் கணிசமானவர்கள் அவரவர்களுக்கேயுரிய காரணங்களைக் காட்டி இலங்கைக்கு மாகாணசபை கூடாது – தேவையில்லை,  பிரயோசனமற்றது, பாதகமானது எனும் அபிப்பிராயம் கொண்டுள்ளனர். அவ்வாறானவர்களின் அபிப்பிராயங்களை நான் இங்கு எடுத்துக் கொள்ளவில்லை. எனது கேள்வி அவர்களை நோக்கியதல்ல.

தமிழர்களில் ஒரு பகுதியினர் ஒரே இலங்கைக்குள் சிங்களவர்களோடு எந்தவகையிலும் எந்த வகையான அதிகாரப் பகிர்வு முறையினாலும் தமிழர்கள் ஒரு தனித்துவமான, பாதுகாப்பான, சம அபிவிருத்தியை அடையக் கூடியதான ஒரு தேசிய இனமாக வாழ முடியாது என்றும் எனவே தனிஈழநாடு அமைவது மட்டுமே தமிழர்களுக்கான அரசியற் தீர்வாக அமைய முடியும் என இன்னமும் நம்பியிருப்பவர்களை நோக்கியும்,  அதற்காக வாதாடுபவர்களை நோக்கியும் நான் எந்தவொரு கேளிவியையும் இங்கு ழுப்பவில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறேன். அவர்களது நிலைப்பாடு சரியா? பிழையா? அல்லது அவர்களது கருத்துக்களில் ஏதும் அர்த்தமிருக்கிறதா? இல்லையா? என்ற விவாதங்களுக்கும் நான் இங்கே இடமளிக்கவில்லை.

அதேவேளை, இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் உள்ள மாகாண சபைகளால் பயனில்லை!. அதற்கான தேர்தல்களில் பங்குபற்றுவது கூட மக்களுக்கு உதவாதது! அவை எந்தவகையிலும் தமிழர்களின் அபிலாஷைகளுக்குப் பயனுடையவை அல்ல என்பதோடு அவை தமிழர்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளுக்குப் பொருத்தமான அரசியற் தீர்வு பற்றிய கோரிக்கைகளைத் திசை திருப்புவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன!. ஆகவே இந்த மாகாண சபைகளை எந்தவகையிலும் ஏற்கக் கூடாது, அதற்கான தேர்தல்களில் எக்காரணம் கொண்டும் பங்குபற்றுவது கூடத் தவறானது – தமிழர்களுக்கு எதிரானது எனக் கூறுகின்ற இன்னொரு பகுதியினர் இங்கே கணிசமா  உள்ளனர். அவர்கள் தமிழர்களுக்கு தேசிய சுயநிர்ணய உரிமைகள் கொண்ட - குறைந்த பட்சம் உள்ளகமாகவாவது பூரண சுயநிர்ணய அதிகாரங்களையும் உரிமைகளையும் திட்டவட்டமான கொண்ட,  முழுமையான சமஷ்டி முறையைத் தவிர வேறெந்த ஆட்சி அமைப்பு முறையையும் அது எந்தளவு அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும் தமிழர்கள் ஏற்கக் கூடாது என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை நோக்கியும் நான் இங்கே கேள்வி எழுப்பவில்லை. அவர்கள் எனது இந்தக் கடிதத் தொடரில் உள்ள கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களோடு கலந்துரையாடப்பட வேண்டிய, விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களும் அடிப்படைகளும் வேறொரு தளத்தைக் கொண்டவையாகும்.

மேலும் மற்றொரு பகுதியினர், 13வது திருத்தத்தின் மூலம் அமைந்துள்ள மாகாண சபைகள் போதிய அளவு அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கவில்லை என்றும், ஆகவே இந்தியாவில் மாநில அரசுகளுக்கு எந்த அளவு அதிகாரங்கள் வழங்கபட்டுள்ளனவோ அவ்வளவு அதிகாரங்கள் இலங்கையின் மாகாண சபைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்குக் குறைவான எதுவும் தமிழர்களுக்கான அரசியற் தீர்வாக அமைய முடியாது என்றவாறான நிலைப்பாடுகள்,  கருத்துக்களை கொண்டிருக்கின்றனர். அத்தோடு இலங்கையின் அரச கட்டமைப்பு ஓர் ஒற்றையாட்சி அமைப்பு என அரசியல் யாப்பில் வரையறுத்திருப்பதை சட்டபூர்வமாக நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கப்படாவிட்டால் இலங்கையில் எந்தவொரு அதிகாரப் பகிர்வு முறையும் செயற்பட மாட்டாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலைப்பாடுகள்,  கருத்துக்கள் கொண்டிருப்பவர்களை நோக்கியும் இந்தக் கடிதத் தொடரில் நான் இங்கு எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்படியானால் இந்தக் கடிதத் தொடர் எவ்வகையினரை நோக்கியது என நீங்கள் கேள்வி எழுப்பக்கூடும். இங்கு எனது கேள்விகளெல்லாம்,

ஒன்று - இப்போதுள்ள இலங்கையிலுள்ள மாகாண சபைகளை ஏற்று அதில் மந்திரிகளாகவும் உறுப்பினர்களாகவும் இருப்பவர்களை நோக்கியவை!

மற்றது, தமது ஆதரவான கட்சி - கூட்டமைப்பைப் சேர்ந்தவர்கள் இந்த மாகாண சபைகளைக் கைப்பற்ற வேண்டும் - ஆள வேண்டும் என்று கருதி செயற்பட்ட,  வாக்களித்த, மக்களை வாக்களிக்குமபடி கேட்டுக் கொண்ட சமூகப் பிரமுகர்கள் எழுத்தாளர்கள் ஊடகவிலாளர்கள், சமயத் தலைவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் உயர்கல்வி மாணவர்கள் போன்றேரை நோக்கியவை!

மேலும், இலங்கையில் எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் பெறப்பட்ட மாகாண சபைகளைத் தவிர இப்போதைக்கு வேறெதுவும் தமிழர்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் குறுகியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இப்போதைக்குக் கையிலிருக்கும் மாகாண சபைகளை பயனுள்ளதாக்க முடியவே முடியாதா? - இந்த மாகாண சபைகள் இயங்குவதில் இருக்கும் சிரமங்கள் எதனால் ஏற்படுகின்றன?. அந்தச் சிரமங்களை நீக்க எனனென்ன முயற்சிகளை எடுத்துப் பார்க்கலாம்? என ஆர்வம் கொண்டிருப்போரின் சிந்தனைக்கு சில விடயங்களைக் கொண்டு செலுத்தவுமே இங்கு முயற்சிக்கிறேன்.

தமிழர்களின் அரசியல் சமூக அபிலாஷைகளுக்குச் சார்பாக இலங்கையின் அரசியல் யாப்பில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்வதாயினும் அது எவ்வளவு சிரமமானது என்பதை நீங்கள் அனுபவபூர்வமாகக் கண்டிருக்கின்றீர்கள். அதற்காக இலகுவாகக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் பேராசையால் இந்த தமிழ்ச் சமூகம் நழுவ விட்டது. இது பஸ் அல்ல ஓடிப் பிடிப்பதற்கு. அது வரலாறாகிவிட்டது. அது மீண்டும் எப்போது எப்படி சுழன்று வரும் என்று சொல்ல முடியாது. அதிலும் இங்கே கடைசித் தமிழனும் கப்பலேறி மேலைத் தேச நாடொன்றைச் சென்றடையும் வரை ஓய மாட்டான் என்ற போக்கைக் கொண்டிருக்கின்றது.  

இப்போதிருக்கும் மாகாண சபைகள் தமிழர்களின் இன்றைய கால கட்ட நிலைமையில் குறைந்த பட்சமாயினும் அவை அவற்றின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்ின் அபிவிருத்திக்கும் அப்பிரதேசத்தில் இருக்கும் மக்களில் வாழ்வில் முன்னேற்றங்களை ஆக்குவதற்கும் உரிய அதிகாரங்கள் கொண்ட நிறுவன அமைப்பாக இருக்க முடியாத ஒரு அமைப்பா? அல்லது அவை எந்தவகையிலும் பயனற்றவையாக இருக்கும் வகையிற்தான் அதன  சட்டங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றனவா?

அல்லது, சட்டப்படி அவை குறைந்த பட்ச அதிகாரங்கள் கொண்டவையாயினும் இவை முன்னர் எக்காலத்திலும் இருந்த மாவட்ட மாகாண அமைப்புக்கள் எதனையும் விட ஒரு முன்னேற்றகரமான பயன்பாட்டைத் தரக் கூடியனவாக இருந்தும் இலங்கை அரசாங்கத்தினாற்தான் அது பயனற்றதொரு நிறுவனமாக ஆக்கப்பட்டிருக்கிறதா?

அல்லது, இந்த மாகாண சபைகளுக்கு மக்களால் பெரும்பான்மையாக தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள கட்சிக்காரர்கள் அல்லது கூட்டமைப்புக்காரர்கள் தங்களை நம்பிக்கைகளோடு தெரிவு செய்த மக்களுக்கு உரிய சேவைகளைச் செய்வதற்குத் தேவையான திறமை ஆற்றல் அற்றவர்களாக இருக்கின்றனரா? அல்லது அறவே விருப்பம் அற்றவர்களாக இருக்கின்றனரா?

அல்லது, மாகாண சபைகள் பயனுடையவோ அல்லவோ, இப்போதிருக்கும் ராஜபக்ஷாக்களின் அரசாங்கமும் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழத் தேசியக் கூட்டமைப்பினரும் ஆளுக்கு ஆள் வரிந்து கட்டிக் கொண்டு எப்பாடுபட்டாயினும் இந்த மாகாண சபைகளை எந்தவகையிலும் பயனற்றவையே என்று உலகத்துக்கு நிரூபிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனரா?

ஏனைய மாகாண சபைகளைப் பற்றி இங்கே பேசவில்லை. வடக்கு மாகாண சபையை மையமாக வைத்தே இலங்கையின் மாகாண சபைகள் தொடர்பான கேள்விகளை எழுப்புவதே பொருத்தமானது எனக் கருதுகிறேன். ஏனைய மாகாண சபையின் ஆளுங்கட்சிக்காரர்கள் மாகாண சபையிருந்தாலென்ன அல்ல்து கட்சிக்காரியாலயத்தில் இருந்தாலென்ன தமக்கு வேண்டியவற்றை இருந்த இடத்தில் இருந்தே அவர்களாற் செய்ய முடியும். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் தமது மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை வடக்கு மற்றும் மாகாண சபைகளுக்க அதிகாரங்கள் பகிரப்பட்டு விடக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என்றும் நாம் கருதிக்கொள்ள இங்கு இடமுண்டு.

உலகின் பல்வேறு நாடுகளிலும் இவ்வாறான மாகாண அரசாங்கங்கள் வெ'வ்ேறு பெயர்களில் சிறப்பாகவே இயங்கி வருகின்றன. இலங்கையின் சட்டங்களும் அரசாங்க நிர்வாகக் கட்டமைப்புகளும் பிரித்தானிய பாரம்பரியத்தை அடிப்டையாகக் கொண்டு உருவாகி அமைந்தவை, வளர்ந்தவைதான். 1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் இப்போதும் இலங்கையின் நாடாளுமன்றம், சட்டவாக்க முறைகள், நிறைவேற்று நிர்வாக அமைப்புகள், நீதித்துறை போன்ற எல்லாம் பிரித்தானியப் பாரம்பரியத்திலிருந்து விலகாமலேயே இன்னமும் உள்ளன. பிரதமரைத் தலமையாகக் கொண்ட அமைச்சரவைக்குப் பதிலாக நாடாளுமன்றத்துக்கு வெளியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியே அமைச்சரவைக்குத் தலைவராக்கப்பட்டிருக்கிறார் என்பதைத் தவிர அடிப்படையில் இங்கு வேறு எந்த வேறுபாடும் ஏற்பட்டு விடவில்லை.

ஆனால் இலங்கையின் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் பிரித்தானியப் பாராளுமன்ற பாரம்பரியத்தின் அடிப்படையிலேயெ உருவாக்கப்பட்டுள்ளன.  அந்த வழியாகவே இந்தியாவின் அரச கட்டமைப்பும் உள்ளது. மத்திய அரச அமைப்பின் ஒரு பிராந்திய வடிவமாகவே இந்தியாவிலுள்ள மாநில அரச அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன. அதே வகையான மாகாண அரச வடிவ அமைப்புகளையே அவுஸ்த்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளும் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளில் லட்சக் கணக்கான இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் ஆட்சியமைப்பு முறைகளோடு இலங்கையின் மாகாண சபைகளையும  ஒப்பிட்டுப்பார்த்து ஒற்றமைகளையும் வேற்றுமைகளையும் காண்பதோடு, இந்தியா, கனடா மற்றும் அவுஸ்த்திரேலியா ஆகிய நாடுகளில் மாகாண ஆட்சிமுறை வெற்றிகரமாக செயற்படுவதற்கும் இலங்கையில் அது முடங்கிப்போய் ஒரு விவாதப் பொருளாக ஆகியிருப்பதற்கான காரணங்களைப் புரிந்து கொள்ளலாம். நான் இங்கே நாடுகளுக்கிடையில் அதிகாரப் பகிர்வில் உள்ள அளவுகளைப்பற்றிக் குறிப்பிடவில்லை. மத்திய, மாநில அரச அமைப்புகளுக்கிடையிலான உறவுமுறைகளை,  தொடர்புகளைப் பற்றி புரிந்து கொள்வதையே குறிப்பிடுகிறேன்.

இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்குவதற்கு இந்தியத் தலைவர்கள் இடையாட்களாக செயற்பட்டமை அனைவரும் அறிந்ததே. 13வது திருத்த அரசியல் யாப்பு இந்தியாவிலுள்ள மாநில அரசுகளின் தன்மையை ஒத்தே உருவாக்கப்பட்டன. எனவே இந்தியாவின் அரசியல் யாப்பு செயற்பாட்டையும் இலங்கையின் அரசியல் யாப்பு செயற்பாட்டையும் தொடர்புபடுத்திப் பார்ப்பது இங்கு பிரதானமாகும். இந்தியாவில் வெற்றிகரமாக உள்ள ஓர் அரசியல் அதிகாரக் கட்டமைப்ப  இலங்கையில் மட்டுமல்ல தோல்வியடைந்து போவதற்கு, செயற்பட முடியாதபடி குழப்பங்களுக்கு உள்ளாகுவதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன என கேள்விகள் எழுகின்றன. இந்தியாவில் பலநூற்றுக்கணக்கான முரண்பாடுகள் மத்திய ஆட்சிக்கும் மாநில ஆட்சிகளுக்குமிடையில் ஏற்பட்டிருக்கின்றன, அதேபோல, மத்திய மாநில அரசுகளுக்கிடையான சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தனிநபர்கள  ொடுத்த பல நூற்றுக்கணக்கான வழக்குகளும் நீதிமன்றங்களில் எடுக்கப்பட்டன. அவைகள் அனைத்தும் இந்திய உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அவ்வாறான அனுபவங்களிலிருந்து எதையாவது கற்று, பெற்று இலங்கையின் மாகாண சபைகளை வலுவுள்ளதாக, பயனுள்ளதாக ஆக்குவதற்கு முயற்சிக்கலாமா என்று பார்ப்பதுவும் பொருத்தமானதே.

எனது கேள்விகள் அடுத்ததிலும் தொடரும்

இப்படிக்கு

உங்கள் அன்பிற்குரிய – தோழமைக்குரிய

(அ. வரதராஜப்பெருமாள்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com