Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையின் மாகாணசபைகளை மக்களுக்குப் பயனுடையவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் - 10)

(வரதராஜப்பெருமாள்)

அன்பார்ந்த நண்பர்களே!

ஆற்றல் மிகு தோழர்களே! 

இக்கடிதத் தொடரை வாசித்த சிலர் என்னிடம் பின்வரும் கேள்விகளை எழுப்புகின்றனர்:-

1.         இலங்கை அரசியல் யாப்பின் 13வது திருத்த ஏற்பாடுகள் தமிழர்களுக்கு பயனுடையது மற்றும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக அமைகின்றது என்று நீங்கள் கருதுகிறீர்களா?

2.         இந்தப் 13வது திருத்தம் பயனற்றது என்றுதானே நீங்கள் ஒரு தலைப்பட்சமாக ஈழப் பிரகடனம் செய்தீர்கள்?

3.         இலங்கையில் ஒற்iறாட்சி அரசியல் அமைப்பு முறை இருக்கும் வரை எந்தவொரு அதிகாரப் பகிர்வும் மாகாண சபைகளை சுயாட்சியுடையவைகளாக இயங்குவதற்கு அனுமதிக்குமா?

4.         இலங்கையின் அரசியல் யாப்பு ஒற்றையாட்சி முறையைக் கொண்டிருக்கிற வரை மாகாண சபைகள் எந்த வகையிலும் சுயாட்சி உடையவையாகச் செயற்பட முடியாது என்று சொல்லித் தானே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா மாற்று அரசியல் யாப்புத் திட்டத்தை முன் வைத்தார்? அப்படித்தானே சட்டப் பேரராசிரியரும் இப்போதைய வெளிநாட்டு அமைச்சரும்,; முன்னாள் அரசியல் யாப்பு அமைச்சருமான கௌரவ பீரிஸ் அவர்கள் சந்திரிகா ஆட்சிக்காலத்தில் பல அறிக்கைகளை விட்டார், பல விளக்கவுரைக் கூட்டங்களை நடத்தினார்

5.         13வது திருத்தம் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் போதியதல்ல என்பதாற்தானே 2002 க்கும் 2004ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா வெளிநாடுகளின் முன்னால் ஒரு சமஷ்டி அரசியல் முறையை ஆக்குவதற்கு ஒப்புக் கொண்டார்?

6.         அதிஉத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட புலிகள் இருந்த காலத்தில் 13வது திருத்தத்துக்கும் அதிகமாக அதிகாரங்களைத் தமிழர்களுக்குத் தருவேன் என்றுதானே கூறினார்?

7.         இந்தியாவும் மற்றும் உலக நாடுகளும் 13வது திருத்த ஏற்பாடுகள் போதியதல்ல என்பதாற்தானே 13வது திருத்தத்தை உடனடியான முழுமையாக நிறைவேற்றுவதோடு 13வது திருத்தத்துக்கும் மேலதிமாக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு இலங்கை அரசாங்கம் பகிர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றன? 

நண்பர்களே! தோழர்களே! 

மேலே தொகுத்தடுக்கியுள்ள கேள்விகள் பிழையானவை என்றோ அல்லது அந்தக் கேள்விகளினூடாக கூறப்பட்டுள்ள கருத்துக்கள் தவறானவை என்றோ அல்லது இந்தக் கேள்விகளுக்கு பதில் காண்பது அர்த்தமற்றதென்றோ அல்லது இந்தக் கேள்விகளுக்கு பதில் கூறுவது எனது வேலையில்லையென்றோ நான் கூறவரவில்லை.

அவற்றுக்குரிய நேரடியான பதில்களை வேறு சந்தர்ப்பங்களில் கூற முயற்சிப்பேன். அதேவேளை இந்தத் தொடரிலுள்ள எனது முன்னைய கடிதங்களில் ஆங்காங்கே அவற்றுக்கான பதில்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.  

உண்மையில், என்னைப் பொறுத்தவரையில் இந்தக் கடிதத்தொடரினூடாக பல விடயங்களை உங்களுடன்; பகிர்வதன் மூலம் நான் தேடுவது என்னவென்றால் இப்போதுள்ள அரசியற் சூழ்நிலையில் இலங்கையில் ஒரு பாரிய மாற்றங்களைக் கொண்ட ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதற்கான நிலைமையை யாராலாவது காண முடிகிறதா என்ற கேள்விக்கான விடையையே. 

1983ம் ஆண்டுக்கும் 1987ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ் இயக்கங்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் கொடுத்த நெருக்கடிகளும் இந்தியாவின் நேரடியான தலையீடுமே இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்துக்கு வழிவகுத்தன. அதுவே இலங்கையின் அரசியல் யாப்பில் 13வது திருத்தத்துக்கு வழி வகுத்தது.

13வது திருத்தத்தை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதுவும்,

13வது திருத்தத்தை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென இந்திய அரசாங்கமும் மற்றும் சர்வதேச சமூகமும் நெருக்கடி கொடுப்பதுவும்,

13வது திருத்தப்படி உள்ள “பொலிஸ் அதிகாரங்களையும் நில அதிகாரங்களையம் மாகாண சபைகளுக்கு வழங்க மாட்டோம்” என ஜனாதிபதியும் அரசாங்கத் தரப்பினரும் முழு முயற்சி எடுத்து மறுத்து வருவதுவும்,

சிங்கள தேசவாதிகள் 13வது திருத்தத்தை முற்றாக அரசியல் யாப்பில் இருந்து நீக்கிவிட வேண்டுமென பிடிவாதமாக நிலைப்பாடு கொண்டிருப்பதுவும்

என உள்ள உண்மைகள்,

13வது திருத்த்தில் ஏதோவகையாக அடிப்படையான பயனுள்ள விடயங்கள் உள்ளன என்பதைத்தானே கோடு காட்டி நிற்கின்றன.  

ஆகையாற்தான், இப்போது இலங்கையின் அரசியல் யாப்பின் ஒரு பகுதியாக இருக்கும் மாகாண சபைகளை தமிழர்களுக்குப் பயனுடையவைகளாக பயன்படுத்திக் கொள்ள முடியாதா என்பது எனது அக்கறையாக உள்ளது.

தமிழ் மக்களால் ஜனநாயகபூர்வமாக சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட நிபுணர்கள், அரசியல் நிபுணர்கள் மற்றும் நிர்வாக நிபுணர்களென பல நூற்றுக் கணக்கான தமிழ்ப் பிரமுகர்கள் இருக்கையில் அவர்களை மனப்பூர்வமாக இலங்கையின் தமிழ்ப் பெருங்குடி பிரமுகர்களிற் பெரும்பான்மையானவர்கள் அங்கீகரிக்கும் நிலையில் 13வது திருத்தம் பயனுடையது என்றோ அல்லது பயனற்றது என்றோ அறுதியாகவும் உறுதியாகவும் சொல்வதற்கு நான் யார்? அதற்கு எனக்கென்ன தகுதியுண்டு?

13வது திருத்தத்தை மாற்றி அதைவிடவும் கணிசமான அளவு சிறப்பான ஓர் அரசியல் யாப்பு ஏற்பாடுகள் இப்போதைக்கு - இன்னும் சில ஆண்டுகளுக்குள் கிடைப்பதற்கு ஏதாவது வாய்ப்புக்கள் உண்டா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி ஏதும் ஒரு மாற்றம் ஏற்படக் கூடிய வாய்ப்பை அனுமானிக்கவும் எனது அறிவோ அல்லது எனது அனுபவமோ இடமளிக்கவில்லை. 

எனக்குத் தெரிந்த வரை, புரிந்த வரை இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு இந்தியா என்றாலென்ன தமிழர்கள் மீது அனுதாபம் கொண்ட உலக நாடுகளென்றாலென்ன இந்த 13வது திருத்தத்தை மையமாக வைத்தே குரலெழுப்பப்போகின்றன. 

அதிகபட்சம் எதிர்வரும் பத்தாண்டுகளுக்குள்ளாக இலங்கைவாழ் தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்கு இலங்கையில் அரசியல் யாப்பு வகையாக காத்திரமான ஓர் அரசியல் ஏற்பாடு நடைமுறைக்கு வரவில்லையெனில் அதன்பின்னர் தமிழர்கள் மத்தியில் அவ்வப்போது தேர்தல் மேடை அரசியல் நடைபெறுவதைத் தவிர வேறேதுவும் நடைபெற மாட்டாது என்பதே எனது அறிவுக்கு எட்டிய அபிப்பிராயம். 

இந்தியாவும் சர்வதேச சமூகமும் இலங்கைத் தமிழர்களை மறந்து போய் விடக் கூடியவை. அதற்குப் பின்னர் தமிழர்களின் தலைவர்கள் சுடுகாடு சுடுகாடாகச் சென்று கிடந்து புரண்டு அழுது புலம்பினாலும் அதனைக் கண்டு கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள்.

ஜெனீவா மனித உரிமை நாடகமெல்லாம் இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்குத்தான். அதன் பிறகு தமிழ்த் தலைவர்களும் களைத்துப் போய்விடுவார்கள். 

மேலைத்தேச நாடுகளில் இன்னும் சில லட்சம் பிரதானமாக வடக்குத் தமிழர்கள் புதிதாக புலம் பெயர்ந்து போய்; குடியேறுவார்கள்.

யாழ்ப்பாணத்தில் மேலும் சில ஆயிரம் வீடுகளும் சில ஆயிரம் ஏக்கர்கணக்கான காணிகளும் சொந்தக்காரர்கள் அற்றவைகளாக ஆகும். 

நண்பர்களே! தோழர்களே!

மேலே நான் குறிப்பிட்டுள்ள யதார்த்தங்களுடன் மேலும் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். இப்போது தமிழர்களுக்கு வாய்த்துள்ள தலைமையின் அரசியலானது சுத்தமாக சுயநலன்களை மையமாகக் கொண்டே செயற்படுகிறது -

மக்களுக்கு முழுப் பொய்யர்கள்>

மக்களை ஏமாற்றுவதைத் தெரிந்தே செய்கிறார்கள்,

தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள்,

இவர்களிற் பலர் தமிழர்களின் இழப்புகளையும் துன்பங்களையும் வியாபாரம் பண்ணி பணக்காரர்களானவர்கள்,

இவர்களிற் பலர் இப்போதும் அரச இராணுவ அதிகாரிகளுடன் இரவு விருந்துபசாரம், நல்லெண்ண சந்திப்பு என கள்ளமாக நல்ல பல உறவுகளை வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் மட்டும் அதே இராணுவத்துக்கு எதிராக விரவசனம் பேசும் அரசியலைக் கொண்டிருக்கின்றனர். 

மக்களை ஏமாற்றுவதற்கான பகிரங்க அரசியல் நடிப்பு வித்தைகளை இவர்கள் நன்றாகவே கற்று பயிற்சி பண்ணி வைத்திருக்கிறார்கள்.

கொழும்பு அரசாங்கத்தோடு மட்டுமல்ல இராணுவ உளவுத் துறையோடும் கள்ள உறவுகளை வைத்துக் கொண்டு தமக்கு வேண்டிய பாதுகாப்புகளை> நலன்களைத் தவறாது வெட்கமின்றி வாங்கி மடியிற் கட்டிக் கொள்ளும் பலர் இந்தத் தமிழ்த் தலைமைக்குள் செல்வாக்கு உள்ளவர்களாக இருக்கிறார்கள். 

எல்லாவற்றுக்கும் மேலாக, இவர்களை தமிழ்சமூகத்தில் வெற்றிகரமான அரசியல்வாதிகளாகக் காப்பாற்றி வைத்திருக்கும் சமூக சமய புத்திஜீவித் தமிழ்ப் பிரமுகர்களும் போலி இரட்டைவேடதாரிகளே! அரசாங்கத் தரப்பாராரோடு அறைகளுக்குள் தலை தாழ்த்தி சகஜ உறவு கொள்ளும் இவர்கள் தங்களைச் சுற்றியுள்ள அப்பாவிகளை அரசுக்கு எதிராக உசுப்பேத்திவிடுகின்றனர்.

இப்படியாக உள்ள நிலையில் 13வது திருத்தத்தை முற்றாகப் புறக்கணித்து விட்டு அரசியல் யதார்த்தங்களை வேறு மையங்களுக்கு நகர்த்துகின்ற தகுதியோ தயாரிப்போ இப்போதிருக்கும் தமிழ்த் தலைமைகளுக்கு இல்லை என்பதிலிருந்தே எனது அக்கறை 13வது திருத்தத்தை மையமாகக் கொண்டிருக்கின்றது. 

அதுமட்டுமல்ல, பகுத்தறிவுபூர்வமாக நாம் கழித்தல் அல்லது விலக்கல் தர்க்க முறையில் (Deductive Logical Method) பார்த்தோமானால்

(1) எந்த வகையிலும் ஆயுதப் போராட்டம் மூலம் சுதந்திர தனி ஈழம் சாத்தியமில்லை,

(2) வன்முறையற்ற போராட்டம் பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வுக்கே வழிவகுக்கும்.

அந்தப் பேச்சுவார்த்தைகள் தமிழீழப் பிரிவினை பற்றியதாகவோ அல்லது சோவியத் யூனியன் வடிவில் பிரியும் அதிகாரத்துடன் கூடிய குடியரசுகளின் ஒன்றியம் என்பதைப் பற்றியதாகவோ நடைபெற சாத்தியமில்லை.  

எமது இப்போதைய புவியியல் மற்றும் பிராந்திய உறவுகளின் சூழலில் அவற்றுக்குச் சாத்தியமில்லை என்பது பட்டறிவு அனுபவம்

(மணலைக் கயிராகத் திரிப்போம்! வானத்தில் கோட்டை கட்டுவோம்! என்ற நம்பிக்கை உள்ளவர்களோடு நான் விவாதிக்க விரும்பவில்லை.)

(சரியான ஒன்று சாத்தியமற்றது என்பதால் தவறான ஒன்றாகி விடுமா என்று சிலர் கேட்கலாம். உண்மையில். சாத்தியமில்லாத இலக்கு இலட்சியக் கனவாக இருக்கலாம் ஆனால் அது சாதிப்பதற்கான அரசியலுக்குச் சரியானதாகாது)    

மேற்கூறியவை தவிர மற்றப்படி இலங்கைத் தமிழர்களுக்கான அரசியற் தீர்வு என்னவாயினும் மாகாண சபைகளே அத்தீர்வின் அடிப்படை வடிவமாக அமையும்.

அதிகாரம் குறைவாக இருக்கலாம் கூடுதலாக இருக்கலாம். அவை மாகாண சபை என்னும் அரசியற் பாத்திரத்தில் இடப்படுபவையாகவே இருக்கும். 

மாகாண சபைக்கு வேண்டுமென்றால் மாநில சபை அல்லது மாநில ஆட்சி என்று பெயர் மாற்றம் செய்யலாம். ஆனால் அதன் மூலம் அடிப்படை மாற்றம் எதுவும் ஏற்படாது.

இந்தியாவில் சென்னை மாநிலம் என்றிருந்ததை 1967ல் அறிஞர் அண்ணாவின் ஆட்சி ஏற்பட்டதும் தமிழகம் என்று மாற்றினார்.

அது தமிழர்களுக்கு ஒரு உளரீதியான திருப்தியை – பெருமையைத் தந்திருக்கலாம். ஆனால் சென்னை மாநிலம் என்ற போது இருந்த அதிகாரங்கள்தான் தமிழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்னரும் தொடர்ந்தன. தமிழகத்துக்கு அதிகாரப் பகிர்வில் அடிப்படை மாற்றங்கள் என எதுவும் ஏற்படவில்லை.

அதேபோல இங்கும் எதிர்காலத்தில் மாகாண சபை என்னும் பெயரில் மாற்றங்கள் ஏற்படக் கூடும்.

ஏன்!

வட மாகாணத்துக்கு சங்கிலியன் மாகாணம் என்றோ அல்லது தமிழீழ மாகாணம் என்றோ ஒரு மாற்றத்தை சிறி லங்கா அரசாங்கம் ஏற்றுக் கொண்டாலும் கூட

அதற்கான அதிகாரப் பகிர்வு எந்த அளவு வழங்கப்பட்டிருக்கின்றது.

அது எந்த அளவுக்கு சுயாதீனமாக செயற்படுகிறது என்பதுதான் இங்கு பிரதானமே தவிர அந்த மாகாண ஆட்சி அமைப்புக்கு அல்லது பிரதேச ஆட்சி அமைப்புக்கு என்ன பெயர் வழங்கப்படுகிறது என்பதல்ல பிரதானம். 

நண்பர்களே! தோழர்களே! 

இங்ு இதுவரை மேலே கூறப்பட்டவைகள் ஒரு புறமிருக்க, கடந்த கடிதத்தின் தொடர்ச்சியாக சில விடயத்தை இங்கே தொடருவோம்.

13வது அரசியல் யாப்பு திருத்த ஏற்பாடுகளின்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சரவையே மாகாண அரசாங்கம். இந்த அமைச்சரவையின் தலைவர் மாகாண முதலமைச்சரே தவிர ஆளுநர் அல்ல. 

ஆளுநரையே தொடர்ந்தும  ாகாண அரசாங்கமாகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சரவையை வெறுமனே ஆலோசனைச் சபையாகவும் மத்திய அரசாங்கம் கருதினால் அது அரசியல் யாப்புக்கு விரோதமானதாகும்.

அது கொழும்பு மத்திய அரசாங்கம் தன்னிடம் ஆயுதப்படை இருக்கின்றது என்பதாற் செய்யும் அகங்காரத்தனமான செயற்பாடே தவிர சட்டப்படியான செயற்பாடு அல்ல. 

சுதந்திர இலங்கையில் 1972ம் ஆண்டு அரசியல் யாப்பு வரும் வரை இலங்கையின் மகாதேசாதிபதியாக இருந்தவரே இலங்கை அரசின் தலைவராக இருந்தார். அவர் இங்கிலாந்து மகாராணியின் பிரதிநிதியாக இருந்தார். ஆயினும் இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சரவையே இலங்கையின் அரசாங்கமாக இருந்தது. 

1972ம் ஆண்டு இலங்கை குடியரசாக ஆக்கப்பட்டதோடு சம்பிரதாய பூர்வமாக இங்கிலாந்தோடு இருந்த அரசியல் யாப்புத் தொடர்புகள் முற்றாக நீக்கப்பட்டன. 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பின்படி இலங்கையின் ஜனாதிபதியே இலங்கையின் அரச தலைவராக இருந்தார். எனினும் இலங்கையின் அரசாங்கமாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சரவையும் அதன் தலைவரே இலங்கையின் பிரதமர் எனவும் இருந்தது.  

இங்கு ஓர் அரசுக்கும் மற்றும் அரசாங்கத்துக்கும் இடையேயுள்ள அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்வது அரசறிவியலுக்கு அவசியமாகும். 

இறைமை ஆதிக்கம் கொண்டிருந்த இங்கிலாந்து மகாராஜாக்களுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களின் காரணமாக மகாராஜாக்களின் கைகளிலிருந்து அரச அதிகாரங்கள் மக்களின் பிரதிநிதிகளுக்கு மாறின. அதன் விளைவாக இந்கிலாந்து மாகாராஜாக்கள் அல்லது மகாராணிகள் வெறுமனே பெயரளவிலான அந்தஸ்த்துக்கு உரியவர்களானார்கள்.

இங்கிலாந்து மகாராணியிடம் நிறைவேற்றதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அவர்களின் அரசியல் யாப்பு கூறினாலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையின் முடீவுகளுக்கு அமையவே அந்த நிறைவேற்றதிகாரங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும். அமைச்சரவையின் முடிவுகளே நிறைவேற்றதிகார முடிவுகள்.

இதுவே இந்கிலாந்தில், கனடாவில், அவுஸ்திரேலியாவில் மற்றும் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதே பாரம்பரியத்திலேயே இந்தியா, கனடா மற்றும் அவுஸ்த்திரேலியா ஆகிய நாடுகளிலுள்ள மாகாணங்களில் ஆளுநர் மற்றும் மாகாண அமைச்சரவைக்கு இடையே உள்ள உறவுகளும் அமைந்துள்ளன. 

இலங்கையின் மாகாண சபைகள் தொடர்பான 13வது அரசியல் யாப்பு திருத்த ஏற்பாடுகள் வசனத்துக்கு வசனம் சொல்லுக்குச் சொல்லு இந்திய மாநில அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட வகையாகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

கனடாவில் மற்றும் அவுஸ்த்திரேலியாவில் உள்ள மாகாண ஆட்சிகளுக்கு உள்ள அரசியல் யாப்பு ஏற்பாடுகளை ஏறத்தாழ ஒத்த கருத்துடையாகவே இலங்கையின் அரசியல் யாப்பிலும் அடிப்படை விதிகள் உள்ளன. 

எனவே இந்திய, அவுஸ்த்திரேலிய மற்றும் கனடிய மாகாணங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சரவையே மாகாண அரசாங்கமாக இருக்கும் போது அதேவகையான அரசியல் யாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட இலங்கையில் மட்டும் மாகாண அமைச்சரவையானது நிறைவேற்றதிகாரங்கள் எதுவுமே அற்ற, வெறுமனே ஆளுநருக்கு ஆலோசனை வழங்கும் சபையாக மட்டுமே என எவ்வாறு அமைய முடியும். 

இலங்கையின் நீதிமன்றங்களும் இங்கிலாந்து சட்ட பாரம்பரியங்களை ஏற்றே இன்று வரை அனைத்து விடயங்களிலும் தீர்ப்பு வழங்கி வருகின்றன.

எனவே மாகாண அமைச்சரவையின் நிறைவேற்றதிகாரம் தொடர்பான விடயங்கள் இலங்கையின் உச்சநீதிமன்றத்தினால் பரிசோதிக்கப் படுமானால், இங்கும் இங்கிலாந்து, இந்திய, அவுஸ்த்திரேலிய, கனடிய சட்ட பாரம்பரியங்கள் மற்றும் அவை தொடர்பான கடந்த காலத் தீர்ப்புகள் ஆகியவை கவனத்துக்கு எடுக்கப்பட்டே இலங்கையின் உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.  

இது தொடர்பாக திரு சம்பந்தன் அவர்களுக்கோ அல்லது கௌரவ முன்னாள் நீதியரசரும் இந்நாள் முதலமைச்சருமான திரு விக்கினேஸ்வரன் அவர்களுக்கோ சட்ட ஆலோசனை வழங்கும் அளவுக்கோ அல்லது இவர்களை நோக்கி சட்ட விடயங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பும் அளவுக்கோ நான் அறிவுடையவன் அல்ல.

இங்கு யார் பூனைக்கு மணி கட்டுவது என்ற கேள்விக்கே இடமில்லை.

மாகாண அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் தொடர்பாக நீதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் மணி அடிக்கும் கடமையும் பொறுப்பும் தகுதியும் திரு விக்கினேஸ்வரன் அவர்களுக்கே உரியது.

அதற்கான வசதியும் வாய்ப்பும் மக்களாணையும் அவருக்கே மக்களால் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதன் தொடர்ச்சி அடுத்த கடிதத்தில் மேலும் தொடரும்

இப்படிக்கு

உங்கள் அன்பின்

(வரதராஜப்பெருமாள்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com