| 
 | ||||
| 
 | இலங்கையின் மாகாணசபைகளை மக்களுக்குப்
பயனுடையவைகளாக
ஆக்குவதற்கு ஏதாவது
வழியுண்டா! 
(கடிதத்
தொடர் – 11) 
அன்பார்ந்த
நண்பர்களே! 
ஆற்றல்
மிகு தோழர்களே! 
இதுவரை
பத்து கடிதங்களை
இத்தொடரில் உங்களின்
கவனத்துக்கும்
கருத்துக்கும்
எழுதியிருக்கிறேன். இந்தக்
கடிதத் தொடருக்கான
தலையங்கத்துக்கு
உரிய பதிலை “ஆம்”
அல்லது “இல்லை”
என்ற அறுதியிட்டுக்
கூறும் வடிவில்
தருவது எனது நோக்கமாக
இருக்கவில்லை.
 
மாறாக,
இலங்கையில் நடைமுறையில்
இருக்கும் மாகாண
சபைகளை தமிழர்களின்
நலன்களுக்காகப்
பயன்படுத்துவதற்கு
வேண்டிய முன்னெடுப்புகளை
மேற்கொள்வது அவசியமா? அல்லது
இல்லையா?   
வடக்கு
மாகாணசபைக்கு
பெரும்பான்மையாக
மக்களால் தெரிவு
செய்யப்ப்பட்டு
ஆட்சியமைத்துள்ள
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பினர்கள்
ஏதாவது அவ்வாறான
முன்னெடுப்புகளை
மேற்கொள்ளுகிறார்களா? 
எவ்வளவு
தூரம் ததேகூக்காரர்கள்
அக்கறையோடு மேற்கொள்கிறார்கள்?
  
அல்லது
எதுவுமே முயற்சிக்காமல்
மஹிந்தவின் அரசாங்கத்தின்
மீது குற்றச்சாட்டுகளை
அடுக்கியபடி ததேகூக்காரர்கள்
அடுத்த மாகாணசபைத்
தேர்தல் வரை காலத்தைக்
கடத்துகிறார்களா? அல்லது 
மாகாண
சபையால் எதுவும்
செய்ய முடியாது
என ததேக்கூக்காரர்கள்
இருக்கிறார்களா?
  
அல்லது
அவர்கள் மாகாண
சபையால் மக்களுக்குப்
பயனடையதாக எதுவுமே
செய்து விடக்கூடாது
என இருக்கிறார்களா?
  
என
உங்களை நோக்கி
கேள்விகளை எழுப்பி
அதற்கான பதில்களை
நீங்கள் கண்டு
பிடிக்கவும் தெளிவான
அரசியற் புரிதல்களைப்
பெறுவதற்குமென
உங்களது சிந்தனைகளைத்
தூண்டுவதே எனது
நோக்கமாக இருந்தது. 
எனது
எழுத்து ஓரு நாவல்
படிப்பதாக அல்லது
ஒரு சிறுகதை வாசிப்பதாக
இருக்காது. இது
ஓர் அரசியல் ரசாயனம்.
 
எனது
இலக்கை அடையும்
விதமாக எனது இந்த
கடிதத் தொடர் அமைந்திருக்கிறதா? இல்லையா
என்பது எனக்குத்
தெரியவில்லை.
முழுமையாக இல்லாவிட்டாலும்
உங்களிற் சிலர்
மத்தியிலாயினும்
ஒரு சிறு பொறியை
மூட்டியிருப்பேன்
என்ற நம்பிக்கையோடு
இத்தொடரை இக்கடிதத்தோடு
முடித்துக் கொள்ள
விரும்புகிறேன்.  
 
இந்தக்
கடிதத் தொடரானது
மாகாண சபை தொடர்பான
கவனமுள்ள அக்கறையுள்ள
தமிழர்கள் மத்தியில்
ஓர் சிறிய தாக்கத்தை
ஏற்படுத்துமாயினும்
எனக்கு மகிழ்ச்சியே. 
நாளை
கிடைக்கக் கூடுமென
இருக்கும் பலாக்காயை
விட கையிலிருக்கும்
களாக்காய் பயன்
தருவது நிச்சயமானது
என்பது பழமொழி.
 அதை
எப்படிப் பயன்படுத்துகிறோம்
என்பதுவே பிரதானம். 
சுயநிர்ணய
உரிமையுன் கூடிய
அமைப்பு, கனடாவில்
இருப்பது போன்ற
அமைப்பு, இந்தியாவில்
இருப்பது போன்ற
மாநில அரசுகள்
ஏற்பாடு, சுயாட்சி,
சமஷ்டி எனப்பல
கோஷங்கள் கோரிக்கைகள்
காணப்படடாலும்
80 வருட நாடாளுமன்றத்
தேர்தல் அரசியலூடாகவும்
30 வருட யுத்த அரசியலினூடாகவும்
தமிழர்கள் யதார்த்தத்தில்
இதுவரை பெற்றுக்
கொண்ட ஒரேயோரு
அரசியற் தீர்வு
13வது அரசியல் யாப்பு
திருத்தத்தினூடாக
ஆக்கப்பட்டுள்ள
மாகாண சபை மட்டுமே. 
இந்த
மாகாண சபை அமைப்பும்
அது உருவாக்கப்பட்ட
1987ம் ஆண்டு கொண்டிருந்த
சட்டவாக்க, நிதிவருமான
மற்றும் நிறைவேற்றதிகாரங்களிற்
பலவற்றை இழந்து
விட்ட நிலையிலேயே
இன்று இருக்கின்றது
என்பதை மறுப்பதற்கில்லை 
இருப்பினும்,
13வது திருத்தம்
மூலமாக உள்ள மாகாண
சபை அமைப்பை முற்றாகப்
புறக்கணித்து
விட்டு வேறோரு
அரசியற் தீர்வை
நோக்கி தமிழர்களின்
அரசியல் செல்வதாகவும்
இல்லை என்பதோடு,
அவ்வாறு செல்வதற்கான
வாய்ப்புகளையும்
காண முடியவில்லை
என்பதை ஏற்கனவே
கூறியுள்ளேன். 
13வது
திருத்தத்தை தமிழர்கள்
எந்த வகையிலும்
பயனற்றது என்று
கருதினால், பின்னர்,
அதனால் உருவாக்கப்பட்ட
மாகாண சபைத் தேர்தல்களிற்
பங்கு பற்றுவதுவோ
அல்லது அதன் பதவிகளிற்
குந்திக் கொண்டு
இருப்பதுவோ முரணான
அணுகுமுறையாகும்
- பொய்யான, ஏமாற்றுத்
தனமான ஒன்றாகும். 
13வது
திருத்தம் பயனற்றது
என்றால் அதனால்
உருவான ஒரு மாகாண
சபையில் அரசாங்கச்
சார்பான ஒரு கட்சி
பதவியில் இருந்தாலென்ன
அல்லது அரசாங்கத்துக்கு
எதிரான ஒரு கட்சி
பதவியில் இருந்தாலென்ன
தமிழர்களுக்கு
அதனாலென்ன வேறுபாடு?
 
அரசாங்கச்
சார்பான ஒரு கட்சி
மாகாண சபையில்
இருந்தால் சிறிலங்கா
அரசாங்கம் அதற்கு
அதிகாரரீதியாகவும்
நிதிரீதியாகவும்
ஒத்துழைப்புக்
கொடுத்து பல்வேறு
அபிவிருத்தி வேலைகளை
மேற்கொண்டு தமிழர்கள்
மத்தில் செல்வாக்குப்
பெற்றுவிடும்
என்று கருதித்தான்
ததேகூக்காரர்கள்
மாகாண சபையைத்
தாங்கள் கைப்பற்றி
வைத்திருப்பதாகக்
கூறினால் அது தமிழர்களின்
நலன்களுக்கு விரோதமான
செயலல்லவா?  தங்களால் முடியாத
ஒன்றை அரசாங்க
சார்பான கட்சியொன்று
செய்தால் அது தமிழர்களுக்கு
நன்மையானது என்றுதானே
கருத வேண்டும். 
ஒன்றில்
மாகாண சபையைக்
கைப்பற்றி இருக்கும்
ததேகூக்காரர்கள்
அதனைத் தமிழர்களுக்குப்
பயனுடைய விதமாக
கொழும்பு மைய அரசாங்கத்தை
ஏதோ வழிமுறைகளைக்
கையாண்டு ஒத்துழைக்க
வைத்து காரியங்களை
ஆற்ற வேண்டும்.
 
அல்லது 
மாகாண
சபையில் உள்ள வள
வாய்ப்புகளையும்,
சட்டரீதியான நியாயாதிக்க
வாய்ப்புகளையும்
பயன்படுத்தி இந்த
மாகாண சபைகளை பயனுள்ளதாக
- காரிய ஆற்றல்ரீதியல்
அர்த்தம் உள்ளதாக
ஆக்குவதற்கு வேண்டிய
செயற்திட்டங்களை
ஆற்ற வேண்டும். 
அல்லது
இந்த மாகாண சபை
அமைப்பை முற்றாகப்
புறக்கணித்துவிட்டு
வேறொரு சரியான
முறையான முழுமையான
அரசியற் தீர்வுக்காக
தங்களை முழுமையாக
அர்ப்பணித்து
எந்த வழிமுறைகள்
சரியோ சாத்தியமோ
அந்த வழி முறைகளில்
எந்தத் தியாகத்துக்கும்
தயங்காது அயராது
உறுதியாக வீதிகளில்
இறங்கி மக்களைத்
திரட்டிப்  போராட வேண்டும்.     
 
ஆனால்,
வீராவேச மேடைப்
பேச்சுக்களையும்
உணர்ச்சியூட்டும்
பத்திரிகை அறிக்கைகளையம்
அரசின் மீது மாறிமாறி
குறைகள் பாடும்
ஒப்பாரிகளையும்
தவிர ததேகூக்காரர்கள்
எதனையும் செய்ய
மாட்டார்கள் என்பது
வெளிப்படை. 
நிச்சயமாக
தேர்தலில் வெற்றி
பெறலாம் என்பதற்காகவும்,
 
ஆபத்தெதுவுமில்லாமல்
பதவிகளை அனுபவிக்கலாம்
என்பதற்காகவும்,
 
நோகாமல்
வசதிகளைப் பெற்றுக்
கொள்ளலாம் என்பதற்காகவும்,
 
தமிழ்த்
துரோகிகள் என்ற
பேர் கிடைக்காமல்
ரகசியமாக அரச உறவுகளைப்
பேணிக் கொள்ளலாம்
என்பதற்காகவும்,
 
ஆடைகளில்
அழுக்கு எதுவும்
படாமல் உலகத் தமிழர்கள்
மாவீரர்களாக வலம்
வரலாம் என்பதற்காகவும்,
 
அரசாங்கத்துக்கு
எதிரானவர்கள்
என்ற பெயரில் வெளிநாட்டு
அரசுகளின் அரவணைப்புகளையும்
பெற்றுக் கொள்ளலாம்
என்பதற்காகவுமே
 
ததேகூவில்
பெரும்பான்மையானவர்கள்
ஒட்டிக் கொண்டு
இருக்கிறார்கள்
என்பது அனைவருக்கும்
புரிந்த ஒரு விடயம். 
இப்படிப்பட்டவர்கள்
போராட்டம், தியாகம்,
கஷ்டங்கள், துன்பங்கள்,
சிறைவாசங்கள்,
சித்திரவதைகள்
கொண்ட அரச விசாரணைகள்;,
குடும்பங்களைப்
பிரிந்திருக்க
வேண்டும், ஊருராக
நடந்து திரிய வேண்டும்
என்ற ஒரு நிலைமை
வந்தால் மீண்டும்
துண்டும் வேண்டாம்
துணியும் வேண்டாம்
என ஓடி ஒழிந்து
விடுவார்கள் என்பதுவும்
பொது அறிவு. 
போராட்டம்,
போராளிகள், தியாகங்கள்
தொடர்பாக கடந்த
ஐந்து ஆண்டுகாலமாக
தமிழ்ச் சமூகம்
நடந்து கொண்டுள்ள
விதமானது தமிழ்
இளைஞர்கள் மத்தியில்
மீண்டும் ஒருமுறை
தம்மைத் தியாகங்கள்
செய்யும் போரட்டங்களில்
ஈடுபட்டு விடாத  மனநிலையை
ஏற்பத்தியுள்ளது.
அதில் மாற்றம்
ஏற்பட இனிப் பல
தசாப்தங்கள் ஆகலாம். 
கடந்த
ஐந்து ஆண்டுகால
தமிழ் அரசியலானது
தமிழ் இளைஞர்கள்
மத்தியில் அரசாங்கத்துக்கு
எதிராக மட்டுமல்ல
தமது சொந்த சமூகத்தின்
மீதான வெறுப்பையும்
விரக்தியையும்
கணிசமாக ஏற்படுத்தி
விட்டுள்ளது. 
எனவே,
தமிழர்கள் மத்தியில்
மாற்று அரசியற்
தீர்வுக்கோரிக்கை
என்பது இன்று தமிழ்
அரசியல் வியாபாரப்
பொருளாகவே உள்ளது. பத்திரிகை
அறிக்கை, மேடைப்
பேச்சுகள் என்பதற்கு
மேல் அவை செல்லாது
என்ற நிலையிலிருந்தே
இன்றைய மாகாண சபை
அமைப்பைப் பார்க்க
வேண்டியுள்ளது.
 
இப்போதிருக்கும்
மாகாண சபை அமைப்பை
பயனள்ளதாக நகர்த்துவதன்
மூலம் மேலும் ஒரு
படி முன்னேற்றகரமான
அரசியல் நிலையை
நோக்கி விடயங்களை
முன்னேற்றுவது
என்பதே யதார்த்தபூர்வமான
நேர்மையான அரசியலாக
அமைய முடியும். 
இப்போதிருக்கும்
மாகாணசபை ஒன்றுக்குமே
உதவாதது என்பதை
என்னால் ஏற்க முடியாது. 
ஆனால்
எப்படி அதனைப்
பயனுடையதாக்குவது,
 
அதனை
எப்படி காரிய ஆற்றல்
கொண்டதாக ஆக்குவது,
 
அதனூடாக
அரசியல் முன்னேற்றங்களை
எப்படி நடைமுறைச்
சாத்தியமாக்குவது
என்பதைக் கண்டு
பிடிப்பது மக்களால்
தெரிவு செய்யப்பட்ட
தலைவர்களின் கடமையாகும்.
 அதற்கு
வேண்டிய அறிவும்
வளமும் வாய்ப்புக்களும்
அவர்களிடமே உள்ளது. 
விதைத்தது
தினையாக இருந்தால்
அறுப்பதுவும்
தினையாகத்தானே
இருக்க வேண்டும்!
 
அன்பார்ந்த
நண்பர்களே! தோழர்களே! 
ஆளுநரும்
அரசாங்கமாக உள்ளார்
என்கிறார் முதலமைச்சர். 
வடக்கு
மாகாண முதலமைச்சர்
கௌரவ விக்கினேஸ்வரன்
அவர்கள் ஹிந்து
பத்திரிகைக்கு
அண்மையில் வழங்கியுள்ள
பேட்டியில் அவர்
கூறியுள்ள சில
விடயங்கள் என்னுள்
சில கேள்விகளை
எழுப்பியுள்ளது.
அவர் ஓர்; இடத்தில்
“ஆளுநர் சமாந்தரமாக
ஓர் அரசாங்கத்தை
நடத்துகிறார்”
என்கிறார்.   
சட்டங்களால்
தரப்பட்டுள்ள,
பெறப்பட்டுள்ள
கடமைகளையும், அதிகாரங்களையும்
சட்ட வரையறைகளுக்கு
உட்பட்டு நிறைவேற்றுகின்ற
அரச நிறுவனமே அரசாங்கம்.
  
வடக்கு
மாகாண முதலமைச்சரின்
கருத்துப்படி
பார்த்தால் மாகாண
மட்டத்தில் தனது
தலைமையில் உள்ள
அரசாங்கத்துக்குச்
சமாந்திரமாக ஆளுநரும்
அரசாங்கத்தை நடத்துகிறாhர்
என்பதுதான். ஆக,
மக்களால் தெரிவு
செய்யப்பட்ட வடக்கு
மாகாண அமைச்சரவையும்
இங்கு ஓர் அரசாங்கமாக
செயற்பட்டுக்
கொண்டிருக்கின்றது
என்றுதானே அவர்
கூறுகிறார்! 
தங்களால்
ஒன்றுமே செய்ய
முடியவில்லை! ஒன்றுமே
செய்ய விடாது ஆளுநரும்
மத்திய அரசாங்கமும்
தங்களை முடக்கி;வைத்திருக்கின்றது
என்ற நிலை இங்கு  முழுமையாக
இல்லை என்பதுதானே
அதன் அர்த்தம்!
 
மாகாண
சபை அமைப்பின்
பல்வேறு குறைபாடுகளின்
மத்தியிலும் அரை
குறையாகத்தானும்;
காரியங்களை ஆற்றக்
கூடிய வாய்ப்புக்களை
முதலமைச்சரும்  கொண்டிருப்பதாகத்தானே
அவர் கூறுகிறார்! 
முதலமைச்சர்
தாங்கள் ஓர் அரசாங்கமாகச்
செயற்படுகிறார்களா? இல்லையா?
என்று அவரின் பேட்டியிருந்து
ஒரு தெளிவான முடிவுக்கு
என்னால் வர முடியவில்லையென்றாலும்,
ஆளுநர் முதலமைச்சருக்குச்
சமாந்தரமான ஓர்
அரசாங்கமாகச்
செயற்படுகிறார்
என்று கூறுவதிலிருந்து
முதலமைச்சரும்
ஒரு அரசாங்கமாக
இருக்கிறார் என்ற
புரிதலைப் பெற
முயலுகிறேன். 
நண்பர்களே!
தோழர்களே! 
இதுவரை
என்ன செய்திருக்கிறார்கள்! 
இதுவரை
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பினர்
தங்களால் எந்தவித
சட்டமும் இயற்ற
முடியாத வகையிற்தான்
மாகாண சபை இருப்பதாகக்
கூறவில்லையே! ஆனால் மாகாண
சபையில் சட்டங்களை
விரைந்து ஆக்குவது
தொடர்பாக தாங்கள்
எந்தளவு தூரம்
முயற்சிகளை எடுத்திருக்கிறாhர்கள்.
எத்தனை சட்டங்களை
இதுவரை ஆக்குகின்ற
தயாரிப்பில் இருக்கிறார்கள்
என்று எந்தத் தகவலையும்
ஏன் வெளியிடாமல்
இருக்கிறார்கள்.
 
அரசியல்
யாப்பிலுள்ள மாகாணசபைக்கான
சட்டவாக்க நிரல்கள்
தொடர்பாக நிறைவேற்றதிகாரங்களைப்
பிரயோகிப்பதற்கான
சட்ட ஏற்பாடுகள்
1989ம் ஆண்டு பாராளுமன்றத்தினால்
ஆக்கப்பட்டுள்ள
“மாகாணசபைகள்
(மறுமையில் ஏற்பாடுகள்)
சட்டம் Provincial Councils (Consequential
Provisions) Act 1989” என்னும் சட்டத்தின்
மூலம் மாகாண அரசாங்கத்துக்கு
வழங்கப்பட்டுள்ளமையை
ஏற்கனவே முன்னைய
ஒரு கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளளேன்.
 
இங்கு
எனது கேள்வி என்னவென்றால்,
முதலமைச்சரும்
மற்ற மாகாண அமைச்சர்களும்
அந்த சட்டம் வழங்கியுள்ள
அதிகாரங்களைப்
பிரயோகித்து எவ்வளவு
தூரம் நிர்வாக
மற்றும் அபிவிருத்தி
விடயங்களை முன்னெடுத்திருக்கிறார்கள்
- முன்னெடுக்கிறார்கள்
என்பதே.   
இதற்கான
விடை இன்னமும்
யாருக்கும் தெரியாத
மர்மமாகவே உள்ளது. அது
பற்றி இவர்கள்
ஏன் இதுவரை எதுவும்
கூறாமல் இருக்கிறார்கள்?   
 
13வது
திருத்தம் தமிழர்களுக்கான
முழுமையான அரசியற்
தீர்வு அல்ல எனவும்
அதனால் அதனை தாங்கள்
ஏற்கவில்லை எனவும்
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின்
ஆள்மாறி ஆள் கூறுகிறார்கள். 
இது
ஒன்றும் புதிய
விடயம் அல்லவே!.   
13வது
திருத்தம் தொடர்பான
விமர்சனங்கள்
அது தொடங்கிய காலத்திலிருந்தே
தமிழர்கள் மத்தியில்
உள்ள எல்லாக் கட்சிக்காரர்களிடமும்
நீண்டகாலமாகவே
உள்ளது. 
இங்கு
பிரதானமானது என்னவென்றால்
அதைவிட மேலதிகமாக
இப்போதைக்கு யார்
எடுத்துத் தருவார்கள். 
இந்தியப்
பிரதமர் ராஜீவ்
காந்தி தனது நேரத்தில்
கணிசமான காலத்தை
இலங்கைத் தமிழர்
விவகாரத்தில்
ஈடுபடுத்தினார். அவரது
அமைச்சர்களான
திரு சிதம்பரமும்,
திரு நட்வார்சிங்கும்
பல மாதக்கணக்கில்
தமிழர்களின் தீர்வுக்காக
ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்திய வெளியுறவு
அமைச்சு அன்றைய
காலகட்டத்தில்
பாகிஸ்த்தான்
விவகாரங்களுக்குச்
சமமாக இலங்கை விவகாரத்திலும்
ஈடுபடுத்தப்பட்;டது. இந்திய
வெளியுறவு உளவுத்
துறையின் மிகப்பிரதானமான
வேலைத்திட்டங்களில்
இலங்கை பிரதானமான
இடத்தை வகித்தது.
இந்தியாவில் ஈழத்
தமிழர் பயிற்சி
முகாம்கள், ஈழப்
போராளிகள் கையில்
இந்தியாவின் ஆயுதங்கள்
என்றிருந்த காலத்திற்
கூட இந்தியாவால்
13வது திருத்தத்துக்கு
மேலாக ஒன்றைப்
பெற முடியாத போது  
 
இப்போது
இலங்கைத் தமிழர்
விவகாரம் இந்தியாவின்
விவகாரங்களில்
நூற்றில் ஒன்று. 
இந்த
நிலையில் இந்தியாவும்
அமெரிக்காவும்
சுயநிர்ணய உரிமை
கொண்ட மாநில சுயாட்சியை
எடுத்துத் தரும்
என்று நம்பி கையில்
இருப்பதை இழப்பதா? 
அவற்றை
நம்பி 13வது திருத்தத்தைப்
பயனற்றதாக ஆக்க
வேண்டும் என்பது
கட்டாய தேவையா? 
13வது திருத்தம்
குறைவானது என்பது
வேறு!   
அது குறைபாடானது
என்பது வேறு 
அன்பார்ந்த
நண்பர்களே! தோழர்களே! 
13வது
திருத்தம் பற்றி
என்னிடம் கேட்டால்
அது தொடர்பாக இரண்டு
மட்டத்தில் அது
பார்க்கப்பட வேண்டும்
அணுகப்பட வேண்டும். 
ஒன்று
– 13வது திருத்தம்
போதிய அளவு அதிகாரங்களைத்
தரவில்லை என்பது. அதாவது
மாகாணசபை அமைப்பு
முறை ஒரு காத்திரமான
ஆற்றல் கொண்ட சபையாகவும்
அரசாங்கமாகவும்
செயற்படுவதற்கும்
அபிவிருத்திகளை
மேற்கொள்வதற்கும்,
மக்களுக்கு அடிப்படையாக
வேண்டிய அனைத்து
சேவைகளையும் செய்வதற்கு
வேண்டிய சட்டவாக்க,
நிதி மற்றும் நிறைவேற்றதிகாரங்களைக்
கொண்டதல்ல என்பது. 
அதாவது,
13வது திருத்தம்
மாகாணசபைகளுக்கு
குறைந்த அளவு அதிகாரங்களையே
தந்திருக்கின்றது
என்பது.
  
மற்றது,
13வது திருத்தமே
குறைபாடானது என்பது.
  
அதாவது
அளவுக்கு மீறியதாக
மத்திய அரசின்
தலையீடுகளைக்
கொண்டதாக உள்ளது
என்பது: 
ஒரு
கையால் கொடுத்து
மறு கையால் எடுப்பது
போல அதிலுள்ள சட்ட
ஏற்பாடுகள் உள்ளன
என்பது: 
மாகாண
சபைக்கான நிர்வாகக்
கட்டமைப்புக்கள்
தொடர்பாக 13வது
திருத்தம் சரியான
ஏற்பாடுகளை தெளிவாகத்
தராமல் விட்டுவிட்டது
என்பது: 
தேசியக்
கொள்கை, தேசிய
முக்கியத்துவம்
என்பவற்றின் பெயரில்
மாகாண சபைகளுக்குக்
கொடுக்கப்பட்டுள்ள
அதிகாரங்களை அர்த்தமற்றதாக
ஆக்கும் வகையாக
சட்ட ஏற்பாடுகளை
13வது திருத்தமே
கொண்டிருக்கின்றது
என்பது, 
அத்துடன்
இலங்கையின் அரசியல்
யாப்பில் அடிப்படையாக
உள்ள பொதவான குறைபாடுகள்
13வது திருத்த ஏற்பாடுகளிலும்
பாதிப்புகளை ஏற்படுத்துவது,;   
இவ்வாறாக
13வது திருத்தம்
அதற்குள்ளேயே
குறைபாடுகளைக்
கொண்டிருக்கின்றது
என்ற விமர்சனம். 
இந்த
வகையில், 13வது திருத்த
அரசியல் யாப்பு
ஏற்பாட்டை 
1)         ஒன்று, குறைவான
அதிகாரங்களைக்
கொண்டிருக்கின்றது
என்பது: 
2)         மற்றது,
குறைபாடான வகையில்
அதிகார ஏற்பாடுகளைக்
கொண்டிருக்கின்றது
என்பது. 
13வது
திருத்தம் குறைவான
அதிகாரங்களைக்
கொண்டிருக்கின்றது
என்பதிலிருந்தே
13வது திருத்தத்துக்கும்
மேலதிகமான அதிகாரங்கள்
வேண்டும் என்ற
கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. 
இது
13வது திருத்தத்துக்கும்
அப்பால் நடைபெற
வேண்டிய விடயமாகும். 
ஆனால்
13வது திருத்தமானது
அதனால் கொடுக்கப்பட்டுள்ள
அதிகாரங்களைக்
கூட பிரயோகிக்க
– பயன்படுத்த முடியாத
வகையில் குறைபாடாக
அமைந்திருக்கின்றது
– அமைக்கப்பபட்டிருக்கின்றது
என்பது 13வது திருத்ததுக்கு
உள்ளார்ந்த விடயமாகும். 
13வது
திருத்தத்தில்
கொடுக்கப்பட்டுள்ளவற்றையும்
விட அதிகமாக அதிகாரங்களைப்
பெறுதல் அல்லது
கொடுத்தல் என்ற
விடயம் இன்னொரு
அரசியல் யாப்புத்
திருத்தத்தாலேயே
முடியும். 
ஆனால்
13வது திருத்தத்தில்
உள்ளார்ந்தமாக
உள்ள குறைபாடுகளை
 
சரியான
சட்ட விளக்கங்கள்
ஊடாகவும்,   
உரிய
நிர்வாக ஏற்பாடுகள்
மூலமாகவும்   
தேவையான
சாதாரண சட்டங்கள்
மூலமும்   
அந்தக்
குறைபாடுகளை நீக்க
முடியும். 
13வது திருத்தத்தை
முழுமையாக நிறைவேற்றும்படி
கோருதல் வேறு: 
அதனை
உடனடியாக முறையாக
நிறைவேற்றும்படி
கோருவது வேறு. 
13வது
திருத்தத்தை முழுமையாக
நிறைவேற்ற வேண்டும்
என்று கூறுபவர்கள்
எவரும் 13வது திருத்தம்
முறையாக நிறைவேற்றப்பட
வேண்டும் என்று
ஏன் கோருவதில்லை
என்பதுவும் என்னுள்
உள்ள பிரதானமான
கேள்வியாகும். 
13வது
திருத்தத்தை முழுமையாக
நிறைவேற்றும்படி
கோருபவர்களின்
கருத்தில் பெரும்பாலும்
உள்ள உள்ளடக்கம்
மற்றும் புரிதல்
என்னவெனில்:- மாகாண
சபைக்கு பொலிஸ்
மற்றும் நில அதிகாரங்களும்
போதிய அளவு நிதி
வளங்களும் வழங்கப்பட
வேண்டும் என்பதே. 
அப்படியானால்,
அரசியல் யாப்பு
ர்Pதியாக மாகாண
சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள
ஏனைய அனைத்து சட்டவாக்க
மற்றும் நிறைவேற்றதிகாரங்கள்
முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா?
என்ற கேள்விக்கு
தெளிவான பதிலை
யாரும் தரவில்லை
என்பதோடு அவற்றின்
மீது இன்று வரை
யாரும் அக்கறை
செலுத்தவில்லை
என்பதுவும் உண்மையாகும். 
என்னுடைய
புரிதலின்படி
மக்களால் தெரிவு
செய்யப்பட்டுள்ள
அமைச்சரவை இன்னமும்
ஒரு அரசாங்கமாக
செயற்படவில்லை
என்பதே.
 அதனை
ஓர் வெறும் ஆலோசனைச்
சபையாகவே கொழும்பு
மைய அரசாங்கம்
நடாத்துகிறது. 
அதேவேளை
அந்த அமைச்சரவையும்
தாம்தான் அரசாங்கம்
என்பதை நிலைநாட்டுவதற்கான
எந்த நடவடிக்கையிலும்
ஈடுபடாமல் தம்மை
ஓர் ஒப்பாரி வைக்கும்
குழுவாக மட்டுமே
ஆக்கி வைத்திருக்கின்றது. 
இப்போதைய
நிலையில் பொலிஸ்
அதிகாரம் கொடுத்தாலும்
அது ஆளுநரின் பொலிசாக
மட்டுமே அமையும்.
  
நிதிவளம்
ஆளுநரின் அதிகாரத்துக்குக்
கொடுத்தாலென்ன
அல்லது மத்திய
அரசாங்கமே நேரடியாகச்
செலவழித்தாலென்ன
அதில் எந்த வேறுபாடும்
ஏற்பட மாட்டாது. 
எனவே
மாகாண சபைகள்
13வது திருத்தத்தின்படி
முழுமையாக நிறைவேற்றப்பட
வேண்டியது அவசியமே
அதற்கு முதலில்
அவை முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால்த்தான்
இப்போதுள்ள குறைந்த
அதிகார அளவின்
மத்தியிலும் அவை
பயன்களை மக்களுக்கு
வழங்கக் கூடியதாக
அமையும்;. 
மாகாண
சபைகளின் அதிகாரங்கள்
தொடர்பாக 13வது
திருத்த ஏற்பாடுகளில்
உள்ளார்ந்த ரீதியாக
உள்ள குறைபாடுகளை
நீக்குவதற்கு
வடக்கு மாகாண அரசாங்கம்:- 
1.         ஜனாதிபதியுடன்
பேச வேண்டும்.
இனவாதிகளல்லாத
சட்ட நிபுணர்களும்
நிர்வாக அனுபவசாலிகளும்
கொண்டதொரு அதிகாரப்
பகிர்வு  ஆணைக்குழு
வொன்றை அமைக்கும்படி
கோர வேண்டும்: 
2.         மக்களால்
தெரிவு செய்யப்பட்ட
மாகாண அமைச்சரவை
இருக்கும் போது
ஆளுநர் மாகாண அரசின்
ஒரு சம்பிரதாயத்
தலைவர் மட்டுமே
என்பதே 13வது திருத்த
அரசியல் யாப்பு
ஏற்பாடுகளின்
அர்த்தம் என்பதையும்,
அதற்குத் தக்கபடியே
1987ம் ஆண்டின் மாகாண
சபைகள் சட்டத்தின்
ஒவ்வொரு பிரிவும்
விளக்கம் கொள்ளப்பட
வேண்டும் என்பதையும்
சட்டபூர்வமாக
உச்ச நீதிமன்றத்தின்
ஊடாக நிலைநாட்டுதல்
வேண்டும். அதேவேளை
மத்திய அரசாங்கம்
சட்டத்துக்குப்
பிழையாகவும் சட்டத்துக்குப்
புறம்பாகவும்
நடந்து கொள்ளும்
விடயம் ஒவ்வொன்றின்
மீதும் உச்சநீதிமன்றத்தில்
வழக்குத் தொடுத்தல்
வேண்டும். நீதித்துறை
சுதந்திரமானது
அல்ல நீதியரசர்
ஜனாதிபதிக்கு
வேண்டியவர் என்ற
விவாதங்கள் முக்கியமானவை
அல்ல. அதை அவர்
நிலைநாட்டினால்
உலகம் உண்மையை
அறியட்டும், 
3.         இலங்கையின்
முன்னாள் உயர்நீதிபதி;கள் பிரபல வழக்கறிஞர்களைக்
கொண்ட ஒரு நிழல்
நீதி மன்றத்தை
ஆக்கி அதன் மூலம்
13வது திருத்தம்
தொடர்பான சரியான
சட்ட விளக்கங்களை
வெளிக் கொண்டு
வருதல்;. 
4.         அதிகாரப்
பகிர்வு தொடர்பாக
13வது திருத்தத்தில்
உள்ள குறைபாடுகளையும்
மத்திய அரசாங்கம்
இழைக்கும் தவறுகளையும்
தெளிவாக விளக்கும்
அறிக்கைகளை  வெளிக்
கொணர்ந்து அதன்
அடிப்படையில்
பல்வேறு மட்டத்திலும்
விளக்கச் சந்திப்புகளையும்
அரசியற் பிரச்சாரங்களையும்
மேற் கொள்ளுதல் 
5.         13வது திருத்தத்தில்
உள்ள குறைபாடுகளை
நீக்குவதற்கு
ஆதரவான அனைத்து
இன அரசியல் சமூக
சக்திகளையும்
ஒரு அதிகாரப் பகிர்வு
இயக்கமாக – மன்றமாக
அணிதிரட்டுதல்
 
6.         13வது திருத்தத்தில்
உள்ள குறைபாடுகளை
நீக்கும் கோரிக்கைகளைக்
கொண்ட தீர்மானங்களை
தெளிவாக வரையறுத்து
அவற்றை முன்னுரிமை
வரிசையின் அடிப்படையில்
ஒன்றின் பின் ஒன்றாக
மாகாண சபையின்
தீhமானங்களாக நிறைவேற்றி
அதனை அனைத்து மட்டத்திலும்
கவனத்துக்குக்
கொண்டு வருதல் 
7.         மக்களால்
தெரிவு செய்யப்பட்டுள்ள
அமைச்சரவையே மாகாண
அரசாங்கம் ஆளுநரல்ல
என்பதையும் மத்திய
அரசாங்கம் அரசியல்
யாப்பின்படி நடந்து
கொள்ள வேண்டும்
என்பதையும்  நிலைநாட்டுவதற்கான
சட்ட நியாயங்களை
மையமாக வைத்து
வன்முறை எதுவும்
அற்ற தொடர்ச்சியான
மக்கள் போராட்டங்களை
நடாத்துதல் 
8.         மாகாண சபை
மக்களுக்கு முடிந்த
அளவு உடனடியாக
சேவையாற்றுவதற்கு
என்னென்ன சட்டங்களெல்லாம்
உடனடியாக ஆக்க
வேண்டுமோ அவற்றையெல்லாம்
கால தாமதமின்றி
ஆக்குதல் வேண்டும், 
9.         மாகாண அரசாங்கத்தால்
மேற்கொள்ளக் கூடிய
அபிவிருத்தித்
திட்டங்கள், விதவைகள்
மறுவாழ்வு, உடல்
ஊனமுற்றோருக்கு
புனர்வாழ்வு, இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்புகள்,
மீள்குடியேறியோருக்கு
மேலதிக உதவிகளை
தொடர்ந்து வழங்குதல்
போன்ற விடயங்களுக்கு
உரிய நிதியங்களை
சட்டபூர்வமாக
உருவாக்கி அவற்றிற்கான
திட்டங்களையும்
தெளிவாக வெளியிட்டு
அவற்றிற்கான நிதிவளங்களை
சாத்தியமான எல்லா
வழிகளிலும் மூலங்களிடமிருந்தும்
முறைப்படி பெற்று
திரட்டி மக்களுக்குப்
பயனுடைய வகையில்
காரியங்களை ஆற்ற
வேண்டும் 
என
மாகாண ஆட்சித்
தலைமை பல்முனையில்
காரியசித்தியும்
நடைமுறையாக்கும்
புத்தியும் கொண்டதாக
செயற்பட வேண்;டும் - செயற்பட
முடியும் - செயற்படுவதற்கான
எல்லா வளங்களும்
வாய்ப்புகளும்
துணைகளும் நியாயாதிக்கங்களும்
வடக்கு மாகாண ஆட்சித்
தலைமைக்கு உண்டு.
வடக்கு மாகாண சபையே
ஏனைய மாகாணங்களுக்கு
வழிகாட்டியாக
அமையும் 
இங்கு
தேவைப்படுவது 
செய்ய
வேண்டும் என்ற
விருப்பம் - சமூகநலன்
மீதான உண்மையான
ஈடுபாடு - தீhமானகரமான
நிலைப்பாடுகள்
- உறுதியான அர்ப்பணிப்பு
– அயராத உழைப்பு. 
வாக்கில்
உண்மையும், நெஞ்சில்
உரமும், நேர்மைத்
திறனும் கொண்ட
மக்கள் தலைமை உண்டாயின்
சத்தியமே வெல்லும்
- நீதியே நிலை பெறும். 
“மனமுண்டானால்
இடமுண்டு’ 
“அடிக்கு
மேல் அடியடித்தால்
அம்மியும் நகரும்” 
“எறும்பூரக்
கற்குழியும்” 
“முயற்சி
திருவினையாக்கும்”
இவை வெறும் பழமொழிகள்
அல்ல. தமிழர்களின்
வரலாற்று அனுபவங்களின்
வெளிப்பாடு 
எனக்
கூறி இக்கடிதத்
தொடரை இத்துடன்
முடித்துக் கொள்கிறேன். மீண்டம்
இன்னொரு தொடரில்
உங்களைச் சந்திக்கிறேன் 
இப்படிக்கு 
உங்கள்
அன்பு நண்பன்
- தோழன் 
வரதராஜப்
பெருமாள் | உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......  
 
 ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E.  was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s  beck  and call. From:  Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010  (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம்  - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும்  (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம்,  துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?
 (சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா?  (சாகரன்)  ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்'  (சாகரன்) மகிந்த  ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா.  (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்!  (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா?  (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும்  (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி  (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!!  (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல்  (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம்  (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும்  (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா?     (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்) 
 | ||
| அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com | ||||