Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதை நோக்கி முயற்சிக்க ஏதாவது வழியண்டா! (கடிதத் தொடர் – 5)

(அ. வரதராஜப்பெருமாள்)

அன்பார்ந்த நண்பர்களே!

ஆற்றல் மிகு தோழர்களே!

 மஹிந்த அவர்களின் தலைமையிலான இன்றைய அரசாங்கம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அப்படியே நாம் ஏற்றுக் கொள்வதாகவே வைத்துக் கொள்வோம். அதாவது,

1.   அரசாங்கம் மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரங்களையும் வளங்ளையும் தரவில்லை - தரத்தயாராக இல்லை, அத்துடன் நம்பமுடியாத நாடாளுமன்றத் தெரிவுக் குழுவைக் காரணம் காட்டி இந்த அரசாங்கம் அரசியற் தீர்வுக்கான எந்த முயற்சியையும் முன்னெடுக்காமல் வேண்டுமென்றே காலத்தைக் கடத்துகிறது:

2.   நாட்டிலுள்ள இரண்டு லட்சம் ஆமிக்காரர்களில் ஒன்றரை லட்சம் பேரை அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே வைத்திருக்கிறது. அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கம் அரசாங்கத்துக்குக் கிடையாது, பொதுமக்கள் விடயங்களிலோ அல்லது சிவில் நிர்வாகங்களிலோ தலையிடாமல் அவர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நோக்கமும் இந்த அரசாங்கத்துக்கு இல்லை:

3.   அரசபடைகளில் கமாண்டர்களாக இருந்த முன்னாள் அதிகாரிகளையே தொடர்ந்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆளுநர்களாக வைத்திருக்கும் அரசாங்கம் அதில் எந்த மாற்றத்தையும் செய்யத் தயாராக இல்லை:

4.   வடக்கு கிழக்கு மாகாணங்களில் பரவலாக பெரும் நிலப்பரப்புகளை சுவீகரித்து ஆயிரக்கணக்கான இராணுவக் குடியிருப்புகளை உள்ளடக்கியதாக அரசாங்கம் பெரிய பெரிய இராணுவ நிர்வாக நகரங்களைக் கட்டியெழுப்பி வருகின்றது:

5.   யாழ்ப்பாணத்திலுள்ள வலிகாமம் பிரதேசத்திலும் மற்றும் திகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூரிலும் அரசாங்கம் வலுக்கட்டாயமாக கைப்பற்றி உருவாக்கிய பாதுகாப்பு வலயங்களை விட்டு வெளியேறாமல், அவற்றை நிரந்தரமாக வைத்திருக்கும் நோக்குடனேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இதனால் கடந்த இருபந்தைந்து வருடங்களாக அகதி முகாம்களில் பெரும் சிரமங்களுடனும் சீரழிவுகளுடனும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான வலிகாம மக்களும, கடந்த ஏழு வருடங்களாக அவ்வாறு வாழ்ந்து வரும் சம்பூர் மக்களும்; மீண்டும் அவரவரது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று வாழுவதற்கு அனுமதிக்காமல் சாக்குப் போக்குகள் சொல்லி அரசாங்கம் காலம் கடத்தி வருகின்றது

இப்படியாக மேலும் பல குற்றச்சாட்டுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர  ொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு எதிராகக் கூறிவருகின்றனர். கூட்டமைப்பினரின் இந்தக் குற்றச்சாட்டுகள் முழுமையாகச் சரியானவையா? எந்த அளவுக்கு மட்டும் சரியானவை? என்பவை பற்றியதல்ல எனது கேள்விகள். 

இவை பற்றி தமிழர்களுக்கு விடாப்பிடியாக உசுப்பேத்தும் - உணர்ச்சி பொங்க வைக்கும் மேடைப் பேச்சுக்களை முழங்குவதால், அல்லது யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் சிங்கள எதிர்ப்பு வெறியேற்றும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பதால் தேர்தல் ஒவ்வொன்றின் போதும் வாக்குகளை ததேகூக்காரர்கள் அள்ளுகொள்ளையாகப் பெற்றுக் கொள்ளமுடியும். ஆனால் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியுமா – உரிய தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியுமா?

இந்த நாட்டில் மக்களின் மனித உரிமைகள் சரியான முறையில் மதிக்கப்படவில்லை என்றும்,

இனம் மதம் மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் இங்கு மக்கள் ஒவ்வொருவரினதும அடிப்படைச் சுதந்திரங்கள் பாதிக்கப்படா நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், 

இந்த நாட்டில் இனம் மதம் சாதி மதம் என்ற வேறுபாடுகளின்றி சமத்துவம் பேணப்பட வேண்டும் என்றும்,

அவை இந்த நாட்டின் சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் அவை நடைமுறையில் பாரபட்சமாகவே - பிழையான முறையிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றும்,

வடக்கு-கிழக்கு தமிழர்களிடமிருந்து மட்டுமல்ல, அதற்கும் மேலாக தென்னிலங்கையிலுள்ள சிங்களத் தலைவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள சமூக சக்திகள் மத்தியிலிருந்தும் இவைகள் பற்றி வலுவாகவே குரல்கள் எழுப்பப்படுகின்றன என்பதை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது.

இங்கு மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜேவிபியினர்) அதிகாரப் பகிர்வு விடயத்தில் வேறுபாடான கருத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் உட்பட பெருந்தொகையான சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் தொடர்ந்து குரலெழுப்புகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

மஹிந்த தலைமையிலான மத்திய அரசாங்கமானது நேரடியாகவும் மறைமுகமாகவும் மாகாண சபைகள் அவற்றிற்கு அரசியல் யாப்பின் மூலமாக வழங்கப்பட்டுள்ள சட்டவாக்க அதிகாரங்களைப் பிரயோகிக்க விடாமல் முட்டுக்கட்டைகள் போட்டுக் கொண்டும்,

அதேபோல மாகாண அரசாங்கள் அவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களைச் செயற்படுத்த விடாமல் பல தடைகளைப் போட்டுக் கொண்டும் இருக்கின்றது என்றும்,

அது நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட சட்டங்களுக்கு முரணாணது எனவும் எனவே மத்திய அரசாங்கம் மாகாண சபைகளையும் அவற்றின் அரசாங்க நிர்வாகங்ளையும் முழுமையாக செயற்படும் வகையாக அனுமதிக்க வேண்டும்; எனவும்

அவற்றிற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல தென்னிலங்கைக் கட்சிகளின் தலைவர்களும் முற்போக்கான சிந்தனைகள் கொண்ட பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள், சட்டத்தரணிகள், சமூக நிறுவனங்கள், தொழிலதிபர்கள் பெருந்தொகையானோர் தொடர்ந்து குரலெழுப்பி வருவதையும் எழுதி வருவதையும் தமது தீர்மானங்கள் மூலம் அரசைக் கேட்டுவருவதையும் நாம் அறிவோம்.

தெவிநெகும சட்டமூலமானது மாகாணசபைகளுக்கு எதிரானது, எனவே அது சட்டவிரோதமானது என்ற தீர்ப்பை அளித்தபடியாற்தான இலங்கை உச்சநீதியரசராக இருந்த திருமதி சிராணி பண்டாரநாயக்கா அவர்கள் தமது பதவியையே இழக்க நேரிட்டது. அதற்கு எதிரான போராட்டத்திலிருந்து இன்னமும் மஹிந்த அரசு முழுமையாக மீளவில்லை. 

இந்த அரசாங்கமானது நாட்டின் அரச நிர்வாகம் முழுவதையும் இராணுவமயமாக்க முயற்சிக்கின்றது, இராணுவநிர்வாகங்களைக் கொண்ட பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பப்பார்க்கிறது, பொலிஸாரால் கையாளப்பட வேண்டிய விடயங்களையெல்லாம் அரசாங்கம் இராணுவத்தை ஈடுபடுத்தி மக்களைப் பயமுறுத்தி கையாள்கிறது என்ற பல குற்றச்சாட்டுக்கள் தென்னிலங்கையில் வலுவாக எழுந்து விரிவு பெற்று வருவதைப் பார்க்கிறோம்

ஐக்கிய முன்னணிக்காரர்களில் ஒரு பகுதியினரும், சரத் பொன்சேகா அவர்களின் கட்சிக்காரர்களும்ஈ ஜேவிபிக்காரர்களும்; மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் வேறுபட்ட கருத்துக்களை - நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையே.

இருப்பினும் இந்தக்கட்சிகள் - தலைவர்கள் வடக்க  ிழக்கு மாகாண மக்கள் இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் - அடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற கருத்தையே கொண்டிருக்கிறார்கள், அது பற்றி அவர்கள் அவ்வப்போது அறிக்கை விடுகிறார்கள் , நாடாளுமன்றத்திலும் பேசுகிறார்கள். அவர்களும் வடக்கு - கிழக்கில் இருக்கும் இராணுவ அளவை அரசாங்கம் குறைக்க வேண்டும என்றே கோரி வருகிறார்கள்,

வடக்கு கிழக்கில் தவிர்க்க முடியாத காரணங்களால் தொடர்ந்து நிலைகொண்டிருக்க வேண்டியுள்ள இராணுவத்தினர்; வடக்கு கிழக்கின் சிவில் நிர்வாகங்களில் எந்த வகையிலும் தலையீடு செய்யாமல் இருக்கும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசைக் கோருகின்றனர்.

பாதுகாப்பு நெருக்கடி என்ற ஒரு நிலை ஏற்பட்டால் ஒழிய மற்றப்படி இராணுவத்தினர் முகாம்களுக்கு உட்பட்டவர்களாகவே இருக்க வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த தென்னிலங்கைத் தலைவர்களும் அவர்களின் கட்சிகளும் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவமயமாக்கம் இலங்கையின் அரசியல் பொருளாதாரம் முழுவதையும் இராணுவ மயமாக்குவதன் ஒரு பகுதி என்றே கருதுகிறார்கள். அதனால் அதனை முளையிலேயே தடுத்துவிட வேண்டும் என அதனை எதிர்க்கிறார்கள்;.

இப்படியுள்ள ஒரு நாட்டில் ஏன் தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் தென்னிலங்கை சக்திகளிடம் தமது கோரிக்கைகளைக் கொண்டு செல்லவில்லை? ஏன் தென்னிலங்கை சக்திகளை – தலைவர்களை அடிக்கடி அழைத்து தமிழர்களின் நிலைமைகளை நேரடியாக முழுமையாகத் தெரிந்து கொள்ள வைப்பதில்லை?.

ஒரு பொது இலக்கை இலட்சியமாகக் கொண்ட இயக்கத்தின் தலைமையானது தனது அணியின் உள்ளடக்கமாக உள்ள அவசியமான அம்சங்கள் அனைத்தையும் தொடர்ந்து வளப்படுத்திக் கொண்டும், பலப்படுத்திக் கொண்டும் இருக்க வேண்டும் என்பதோடு தனக்குத் துணையாக இருக்க வேண்டிய, திரட்டிக் கொள்ள வேண்டிய,  ிரண்டு வரக்கூடிய – துணையாக நிற்கக் கூடிய சக்திகளை தொடர்ந்து திரட்டி விரிவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறான துணைச்சக்திகளிற் சில குறுகிய காலத்துக்கு ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைக்கும் என இருக்கும், ஏனையவை சில நீண்ட காலத்துக்கு என இருக்கும். இந்த அடிப்படை அரசியற் சூத்திரம் சாணக்கியன் காலம் மற்றும் திருவள்ளுவர் காலத்துக்கு மட்டுமல்ல இன்றைய காலத்துக்கும் மேலும் நாளைய காலத்துக்கும் பொருத்தமானதாகும்.    

இலங்கைவாழ் தமிழர்களுக்கு இன்றிருக்கும் நெருக்கடிகளின் விளைவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா மற்றும் சர்வதேசங்கள்; எனத் தேடி அலைவதைத் தவறு என்றோ பயனற்றது என்றோ இங்கு நான் கூறவில்லை. இங்கு எனது கேள்வி என்ன வென்றால், இந்த ஒரேநாட்டில் எமது தோழர்களாக, நண்பர்களாக, சகோதரர்களாக இருக்கின்ற - இருக்கக் கூடிய சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஏன் உதவிக்கு வாருங்கள் என்றோ, எங்களுக்குத் துணை தாருங்கள் என்றோ, எங்களோடு சேர்ந்த  அணி திரளுங்கள் என்றோ இங்கு ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் கேட்கவில்லைஈ தேடவில்லை, நாடவில்லை என்ற கேள்வியையே இங்கு நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

தமிழர்களின் நிலை கண்டு அனுதாபப்படுகின்ற சிங்களத் தலைவர்களை – சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளை அடிக்கடி சாரிசாரியாகக் கூட்டி வந்து 'எங்கள் மக்களைப் பாருங்கள்', 'எங்கள் நிலையைப் பாருங்கள்', 'எங்கள் மக்களின் இந்த சிக்கலான சிரமமான நிலை பற்றி சிங்கள மக்களிடம் கொண்டு செல்லுங்கள் - பரந்து பட்ட சிங்கள மக்களுக்கு இவற்றைத் தெரியப் பண்ணுங்கள்' என  சிங்கள மக்களின் அனுதாபங்களைத் திரட்டி அதனூடாக சிங்களத் தலைவர்களினது அரசியல் ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் எந்தவித ஈடுபாட்டையும் தமிழ்த் தேசியக்காரர்கள் இதுவரை காட்டவில்லையே! ஏன்?.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கு ஆதரவான சிங்களவர்களையும் தமிழர்களையும ஆயிரக்கணக்கில் திரட்டி அரசாங்கத்தை சரியான நிலை நோக்கி இணங்க வைக்கும் வலுவான ஒருங்கிணைந்த உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் வன்முறையற்ற மறியற் போராட்டங்கள், மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் என எதனையும் நடத்துவதற்கு இன்று வரை முயற்சித்ததாக எந்த வரலாறும் தமிழ்த் தலைவர்களுக்கு கிடையாது.

புலிகள் இருக்கும் வரை அவர்கள் விடவில்லை, அதனால் அது சாத்தியப்படவில்லை எனலாம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னதான் தடை?. புத்து லட்சம் தமிழர்களின் வாக்கி சிதறவிடாமல் அள்ளிக் குவித்து வாங்க முடிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்க ஒரு பத்தாயிரம் பேரைத் திரட்ட முடியாமலா இருக்கின்றது. உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒன்றரை லட்சம் தமிழர்களை யுத்தத்தில் பலி கொடுத்த இவர்களால் ஒரு பத்தாயிரம் பேரை வன்முறையற்ற போராட்டத்துக்கு வீதியில் இறக்கமுடியாதா?

மாகாண சபைகளுக்கு போதிய அளவு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், மாகாண சபைகள் அர்த்தமுள்ளவைகளாக மக்களுக்குச் சேவை செய்யும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற அக்கறை கொண்ட சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர். அவ்வாறான சிங்கள மாகாண சபை உறுப்பினர்களாக நூற்றுக்கணக்கானவர்கள் உளளனர். அவர்களை அழைத்து ஒரு கலந்துரையாடலையாவது நடத்திய – அவர்களின் ஆதரவைக் கோரிய வரலாறு என்று ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்;பினருக்கு உண்டா? அதில் ஏன் ததேகூக்காரர்கள் அக்கறை காட்டவில்லை? அல்லது அது தமத வாக்க வேட்டைனக்கு அவசியமற்றது எனக் கருதுகிறார்களா?

இப்போதுள்ள மஹிந்த அரசாங்கத்தில் போராசியர் திஸ்ஸ விதாரண, தோழர் டியூ குணசேகரா, தோழர் வாசுதேவ நாயக்கார மற்றும் திரு அத்தாவுட செனிவிரத்னா, திரு ராஜித செனிவிரத்னா, திரு டிலான் பெரேரா, திரு றெஜினாலட் கூரே, மேலும் திரு டக்ளஸ் தேவானந்தா, ஜனாப் ஹக்கீம், ஜனாப் பௌஸி, மற்றும் மலையகத் தலைவரான திரு ஆறுமுகம் தொண்டமான் போன்றவர்களென பதினைந்துக்கும் மேற்பட்ட கபினெட் அமைச்சர்கள் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் தொடர்பாக அக்கறை கொண்டவர்கள் உள்ளனர். எப்போதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் மேற்குறிப்பிட்ட அமைச்சர்களை வடக்கு மாகாண சபைக்கு வரும்படி அழைத்து பேச வைத்ததுண்டா? தமது பிரச்சினைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் துணையாகவும் உதவியாகவும் அமைச்சரவை மட்டத்தில் எப்படி கூட்டாக செயற்படுத்தலாம் - செயற்படுத்த வேண்டும் என்ற ஆலோசனைக் கூட்டங்கள் எதையாவது நடத்தியிருக்கிறார்களா? அரசாங்க அமைச்சர்கள் என்பதால் ததேகூக்காரர்கள் அவர்களை அழைப்பது தீட்டு என்று கருதியிருக்கிறார்களா? தமது தனிப்பட்ட தேவைகளுக்காக புதுப்புது ஐடியாவாகப் போட்டு தமது காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள்தானே!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாருக்கு அஞ்சி அரசியல் பண்ணுகிறார்கள்? நிச்சயமாக அரசாங்கத்துக்கோ, படையினருக்கோ அஞ்சியல்ல என்பது மிகவும் தெளிவு.

இவர்களது தமிழ் மாவீரம் சிங்கள அரசியற் தலைவர்களின் அநுதாபத்தையும் ஆதரவையும் திரட்டத் தடையான ஒரு சுயமரியாதைப் பிரச்சினையாக இருக்கின்றதா? சிங்களவர்களோடு சேர்ந்து போராட்டம் நடாத்தினால் தமிழர்கள் பெரும்பான்மையானவர்களின் வாக்குகளைத் தாங்கள் இழந்து விடக் கூடும் என்று கருதுகிறாhகள்? தாங்கள் என்னதான் செய்தாலும் நிச்சயமாக தமிழர்கள் தங்களைத் தவறாகக் கருதப் போவதில்லை என்பதை ததேகூக்காரர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் சாக்குப் போக்குக்கு வேண்டுமென்றால் தாங்கள் அடிக்கடி சிங்களத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதாகக் கூறலாம் அல்லது அவ்வப்போது அவர்களோடு சேர்ந்து யாழ்பபாணத்தில் போன வருஷம் பொதுக்கூட்டம் போட்டதாகக்; கூறலாம் அல்லது காணாமற் போனோர் தொடர்பாக கொழும்பிலுள்ள சமூகத் தொண்டு நிறுவனங்களிலுள்ள சிங்களவர்களோடு சேர்ந்து தாங்களும் கொழும்பு றெயில்வே நிலையத்துக்கு முன்னால் நின்று கடந்த ஐந்து வருடத்தில் மூன்று முறை கொடி பிடித்ததாகத் கூறலாம்.

உண்மையில் இவர்கள் சிங்களவர்கள் மத்தியில் சிறிதும் மனமாற்றத்தை ஏற்படுத்தவே முடியாது என்றும் எந்தச் சிங்களத் தலைவரும் ஆட்சிக்கு வந்தால் ஏமாற்றவே செய்வார்கள் என்றும் உறுதியான கருத்தைக் கொண்டிருக்கிறார்களா? அல்லதுஇ தமக்கு சிங்களத் தலைவர்களின் ஆதரவை நர்ட வேண்டீய அவசியம் இல்லை, அவர்களால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை திட்டவட்டமான நம்பிககை கொண்டிருக்கிறார்களா? அப்படியானால் இவர்கள் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் கொண்டு சிங்களவர்களைப் பயமுறுத்தி பணியவைத்து விடலாம் என்று நம்புகிறார்களா?. இந்தியா அப்படியான ஒன்றுக்கு எந்தக் கட்டத்திலும் ஆதரவு தராது என்பதை இப்போதாவது தமிழ்த் தேசியக்காரர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

எனது கேள்விகள் அடுத்ததிலும் தொடரும்

இப்படிக்கு

உங்கள் அன்பிற்குரிய – தோழமைக்குரிய

(அ. வரதராஜப்பெருமாள்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com