Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் – 6)

(அ. வரதராஜப்பெருமாள்)

அன்பார்ந்த நண்பர்களே! ஆற்றல் மிகு தோழர்களே!

கடந்த ஆண்டு நடுப்பகுதியில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே ஏதோ இலங்கையின் ஓர் அரசியல் மாற்றத்துக்கான புயல் அடிப்பதற்கு ஆரம்பமாகிவிட்டது போலவும், அந்த மாகாண சபைக்கான தேர்தற் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு அரசியற் சூறாவளிகளைக் கிளப்பியபோது ஏதோ இலங்கைத் தமிழர்களின் அரசியல் வாழ்வு ஒரு தீர்மானகரமாக முன்னோக்கிச் செல்லும் கட்டத்தை நோக்கி நகரப் போகிறது என்பது போலவும் காட்சிகள் நடமாடின.

சட்டமேதைகளான கௌரவ சம்பந்தர் மற்றும் மாண்புமிகு விக்கினேஸ்வரன் அவர்களையும், கௌரவ சுமந்திரன் மற்றும் டெனீஸ்வரன் போன்ற சட்ட நியுணர்களையும், இருபது ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் சட்டங்களை ஆக்கும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்து வரும் கௌரவ திரு சேனாதிராஜா, திரு அடைக்கலநாதன் செல்வம், திரு சுரேஷ் பிரேமச்சந்திரன், திரு. சிவசக்தி, திரு.செல்வராசா மற்றும் திரு. அரியநேந்திரன் போன்ற அரசியல் ஆளுமை மிக்க தலைவர்களையும், நிர்வாகத் துறையில் நிபுணர்களான கௌரவ திரு சிவஞானம் மற்றும் திரு குருகுலராஜா போன்றோரையும், சமூக மற்றும் இயற்கைவள அறிஞர்களான கௌரவ திரு ஐங்கரநேசன் மற்றும் திரு சர்வேஸ்வரன் போன்றவர்களையும் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் ஆட்சியை அமைத்த வடக்கு மாகாண சபையானது இலங்கையில் ஓர் அரசியற் புரட்சிப் புயலை கிளர்ந்தெழ வைக்கும் என தமிழர்கள் நம்பியதைத் தவறெனக் கொள்ள முடியுமா?

முப்பது வருட கால வன்முறைகளாலும் பயங்கரவாதத்தாலும், கண்மூடித்தனமான யுத்தத்தாலும் உயிர்களை இழந்து, உடல் அவயவங்களை இழந்து, சொத்துக்களை இழந்து, சொந்த வாழிடங்களை இழந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் வடக்கு மாகாண சபை ஆட்சிமூலம் தமது வாழ்வில் முன்னேற்றகரமான ஒளியேற்பட த.தே.கூக்காவினர் தீபம் ஏற்றிவைப்பார்கள் என்று எதிர்பார்த்ததில் தவறு காண முடியுமா?

மாகாண சபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளால் வடக்கில் சாந்தியும் சமாதானமும் நிலவும், அரசபடைகளின் தொல்லைகள் நீக்கப்பட்டுவிடும், கல்விச்சாலைகள் அத்தனையிலும் மாணவர்கள் நிம்மதியாகப் படிப்பார்கள், வைத்தியசாலைகள் எங்கும் வைத்தியர் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடின்றி சுகாதார சேவைகள் கிடைக்கும், உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல விலையும் தாராளமாக சந்தைகளும் கிடைக்கும், வர்த்தகங்கள் பெருகும், விதவைகளான பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்போடு கௌரவமான வருமான உத்தரவாதங்கள் கிடைக்கும், சுதந்திரமாக மீன்பிடித் தொழில்கள் பெருகும், படித்த அனைத்து இளைஞர்களுக்கும் உரிய வேலைகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் தேவையாள அளவு கிடைக்கும் என தமிழ் மக்கள் காத்திருப்பது தவறாகுமா?

அப்படித்தானே ததேகூக்காரர்கள் தமிழர்களுக்கு மேடைமேடையாக அறிக்கை அறிக்கையாக சத்தியவாக்களித்தார்கள்! மக்களின் எதிர்பார்க்கைகள் இவ்வாறிருக்கையில் வடக்கு மாகாண சபை அதற்கு உரியவகையாகச் செயற்படுகிறதா? பொருத்தமான வேலைகளைச் செய்கிறதா? அவசியமான சேவைகளை மேற்கொள்கிறதா? என்பது இப்போது பெருத்த ஒரு கேள்வியாக உள்ளது.

இங்கு வடக்கு மாகாண சபையைப் பற்றி மட்டுமே குறிக்கிறேன்! கிழக்கு மாகாண சபையைப் பற்றி அக்கறை எதுவும் காட்டவில்லையே என குறை நினைக்காதீர்கள். வடக்கு மாகாண சபை சரியாகவும் வலுவாகவும் செயற்பட்டால் அது கிழக்கு மாகாண சபைக்கு மட்டுமல்ல இலங்கையின் அனைத்து மாகாண சபைகளுக்கும் அது முன்னுதாரணமாகவும் உந்து சக்தியாகவும் விளங்கும் என்பதே எனது கருத்து.

இலங்கையின் அரசியல் யாப்பின் மூலம் மாகாணசபைகளுக்கென கடமைகளும் பொறுப்புகளும் அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அந்தக் கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கான நிதிவளங்களைத் திரட்டிக் கொள்ளவும், பெற்றுக் கொள்ளவும் வழிவகைகளும் அவற்றுக்கான அதிகாரங்களும் 13வது திருத்த அரசியல் யாப்பு மூலம் தரப்பட்டுள்ளன. மாகாணசபைகளுக்கு மட்டுமென தரப்பட்டுள்ள அதிகாரப்பட்டியலில் 34 வகைப்பட்ட தலைப்புக்களில் கடமைகளும் பொறுப்புக்களும் அவற்றுக்கான அதிகாரங்களும் தரப்பட்டுள்ளன. அதே பட்டியலில் 21 வகையான தலைப்புகளில் மாகாண ஆட்சிக்கான நிதிவருமான மூலங்கள் - வழிகள் தரப்பட்டுள்ளன. அதேவேளை நாடாளுமன்ற சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் சட்டங்களை ஆக்கவும் அவை தொடர்பாக நிறைவேற்று அதிகாரங்களைப் பிரயோகிக்கவும் முப்பத்தி ஆறு வகையான தலையங்கங்களின் கீழ் விடயங்கள் அரசியல் யாப்பின் மூலம் தரப்பட்டுள்ளன.

அந்தப்பட்டியல்களில் உள்ள விடயங்களை இங்கு நான் மறுபதிப்புச் செய்ய வேண்டியது அவசியமற்றது எனக் கருதுகிறேன். மக்கள் மீதும் அரசியல் மீதும் அக்கறையுள்ளவர்கள் 13வது திருத்த அரசியல் யாப்பை வாசித்து அல்லது யாரையாவது வாசித்து சொல்லும்படி கேட்டு அறிந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் அவற்றைத் தெரியப்பண்ணுங்கள்.

இப்படியெல்லாம் இருக்கையில், எதற்காக, என்ன காரணங்களுக்காக இதுவரை வடக்கு மாகாண சபை இதுவரை ஒரு சட்டத்தைக் கூட ஆக்காமல் இருக்கின்றது என்பது இங்கு ஒரு மிகப் பெரும் கேள்வியாகும். அரசியல் யாப்ப மூலம் ஒரு மக்கள் மன்றத்துக்கு சட்டவாக்க அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால் பின்னர் அதனை யாரிடமும் பிச்சை கேட்டுத் திரிவது ஒன்றில் அறியாமையாக இருக்க வேண்டும் அல்லது இயலாமையின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.

சட்டங்களை வரையும் சட்டவரைவாளர்கள் இல்லையென்று சொல்லுகிறார்களா? அல்லது வடக்கு மாகாண அமைச்சரவை எந்தவொரு சட்டத்தையும் ஆக்கும் முன்முயற்சியை மேற்கொள்ளக் கூடாது என்று இருக்கிறார்களா? அல்லது வடக்கு மாகாண அமைச்சரவை எந்தவொரு சட்டத்தையும் ஆக்கும் முன்முயற்சியை மேற்கொள்ளக் கூடாது என்று ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறாரா? அப்படியான ஆளுநரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டுத்தான் இன்றுவரை எந்தவொரு சட்டத்தையும் ஆக்காது இருக்கிறார்களா? ஆளுநரையே மாற்றச் சொல்லிக் குரலெழுப்பும் வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மாகாண ஆளுநரின் சட்டமுறையற்ற கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டிருப்பதாகக் கூறினாலோ அல்லது கருதினாலோ அது பொருத்தமற்றதல்லவா?

மாகாண சபைகளின் மீது ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமல்ல, சில மத்திய அமைச்சர்கள் கூட வடக்கு மாகாண சபை எந்த ஆக்கபூர்வமான சட்டத்தையும் ஆக்குவதில் இதுவரை எந்தவித அக்கறையும் காட்டவில்லை என்று குற்றம் சாட்டும் அளவுக்குத் தான் வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் இருக்கின்றன. ஆனால் வடக்கு மாகாண சபை இதுவரை ஒரேயோரு சட்டத்தை மட்டும் நிறைவேற்றியிருக்கிறது. அதாவது மாகாண சபையின் நிர்வாகம் 2014ம் ஆண்டுக்கு   என பெற்றுள்ள மற்றும் பெறுகின்ற வருமானம் தொடர்பாகவும் மற்றும், அந்த வருமானத்தைக் கொண்டு செலவினங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் மாகாண நிர்வாகத்துக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை மட்டுமே நிறைவேற்றியிருக்கிறது.

இந்தச் சட்டம் இல்லாமல் மாகாண நிர்வாகம் ஒரு சதத்தைக் கூட செலவழிக்க முடியாது. ஆளுநர்தான் நிறைவேற்றதிகாரத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு தன் எண்ணப்படி மட்டுமே செயற்படுகின்றார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அந்த ஆளுநரும் இந்தச் சட்டம் இல்லாமல் ஒரு சதத்தைக் கூட செலவழிக்க முடியாது. அதாவது இந்த வரவு செலவுத் திட்ட சட்டம் இல்லாமல் ஆளுநர் எந்தவொரு நிறைவேற்று அதிகாரத்தையும் பிரயோகிக்க முடியாது.  அதைத் தவிர வேறு ஏதொரு சட்டத்தையும் இதுவரை மாகாண சபை நிறைவேற்றவில்லை. அதற்கான எந்தவொரு முயற்சியிலும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த தகவலே.

இந்த நிதி வரவு, செலவுத் திட்டத்துக்கான சட்டத்தை நிறைவேற்றியது ஏன்? அவசியம் தானா? அதன் மூலம் யாருக்கு அந்த நிதிகளை செலவழிக்கும் அதிகாரங்களை மாகாண சபை வழங்கியிருக்கின்றது? இந்த நிதிச்சட்டத்தை நிறைவேற்றாமல் இருந்திருந்தால் என்ன விளைவுகள் ஏற்படும்? என்ற கேள்விகளை வேறோரு இடத்தில் எழுப்பி விடை காண முற்படுவோம்.

வடக்கு மாகாண சபை இதுவரை நிறைவேற்றியுள்ள தீர்மானங்களைப் பார்த்தால், அவை எதுவும் மாகாண சபைகளுக்கு சட்டபூர்வமாகத் தரப்பட்ட கடமைகள், பொறுப்புக்கள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பானவை அல்ல. மாறாக அதிதீவிர அரசியற் பிரச்சாரத் தீர்மானங்களாக மட்டுமே உள்ளன. உண்மையில் த.தே.கூக்காரர்கள் தமது கட்சி மாநாடுகள் அல்லது தமது கட்சிகளின் பொதுச் சபைக் கூட்டங்களில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களையே அவற்றிற்குப் பொருத்தமற்ற மன்றமான மாகாண சபையில் நிறைவேற்றி மாகாண சபையை ஒரு கட்சி மண்டபமாக மாற்றியிருக்கிறார்கள்.

மாகாண சபை என்பது சட்டவாக்க மன்றம். அது மக்கள் ஆட்சியின் ஒரு பிரதான இருப்பிடம். அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஒரு சட்ட ஆளுமை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. அவ்வப்போது மக்களின் பொதுநலன்கள் மற்றும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள், தேவைகள் தொடர்பாக அரசியல் யாப்புக்கு முரணாகாத வகையில் நாடாளுமன்றத்தையோ அல்லது மத்திய அமைச்சரவையையோ நோக்கி முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கான தீர்மானங்களாகவும் அமையலாம்.

ஆனால் இதவரை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ள தீரமானங்கள் இலங்கை ஜனாதிபதிக்கும் மத்திய அரசுக்கும் எதிரானவையாகவும், சவால் விடுபவையாகவும் மட்டுமே உள்ளன. மாகாண சபை என்பது ஒரு மாகாண அளவிலான பிரதேச ஆட்சி மன்றம். அதனை ஓர் எதிர்க்கட்சி அரசியல் மன்றமாக ஆக்குவது அதன் தரத்தைத் தாழ்த்தும் விடயமாகும். நாம் பிரிட்டிஷ்காரர்களிடமிருந்த கற்று பெற்றுக் கொண்டுள்ள ஜனநாயக ஆட்சிமுறைப் பாரம்பரியத்தில், ஆளுங்கட்சிகளில் சிலரும் எதிர்க்கட்சிகளில் சிலரும் ஆட்சி மன்றங்களை தமது குழப்பம் விளைவிக்கும் கூச்சல் மேடைகளாகவோ அல்லது தமது மாவீரபிரதாபங்களை வெளிக்காட்டும் களமாகவோ ஆக்குவது விதிவிலக்கு அல்ல.

எனினும் அந்த ஆட்சி மன்றங்களின் பொறுப்பான தலைவரும், அமைச்சர்களும், பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களும் தாம் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் ஆட்சி மன்றத்தை கூச்சல் குழப்பக்காரர்களின் கூடாரமாக ஆகிவிட இடமளிக்கக் கூடாது, வீதிப் போராட்டங்களை நடத்தும் தெருக்கடைச் சந்தியாக பயன்படுத்த சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது. மாறாக ஒரு மக்கள் ஆட்சி மன்றப் பிரதிநிதிகள் என்ற பொறுப்போடு கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும். சட்டரீதியான ஏற்றுக்கொண்டுள்ள கடமைகளை உரியவகையாக பொறுப்போடு நிறைவேற்ற வேண்டும். ஒரு மக்களாட்சி மன்றத்துக்கேயுரிய கட்டுப்பாடுகளையும் தர்மங்களையும் மரபுகளையும் காப்பாற்ற வேண்டும் நிலைநிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த மகக்ள் ஆட்சி மன்றம் ஒரு கட்டாக்காலிக் கூட்டத்தின் சந்தைக்கடையாகிவிடும்.

வடக்கு மாகாண சபையில் ஆட்சியாளர்களாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்களல்ல. அது பல்வேறு போக்குடையவர்களை உள்ளடக்கிய ஒரு கதம்ப அரசியற் கூட்டு என்பதனால் அதிலிருக்கும் சிலரின் அரசியல் ஆசைகளைத் திருப்திப்படுத்த அவர்களுக்கும் அவ்வப்போது இடமளிப்பது தவிர்க்கமுடியாத ஒன்று என்பதை நாம் முற்றாகப் புறக்கணிக்கவில்லை. அதனால் ஆட்சியிலுள்ள கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் கொண்டுவரும் தீர்மானங்கள் சாராம்சம் அற்றவையாக இருந்தாலும் அல்லது சட்டரீதியான அர்த்தம் அற்றவையாயினும் அவற்றிற்கும் சிறிது இடமளிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றே. அந்த உறுப்பினர்களின் அரசியற் சிற்றின்பங்களுக்கும் சிறு இடம் அளிப்பது தவிர்க்கமுடியாததுதான். ஆனால் அந்தவாறான சிலரின் அரசியற் சிற்றின்ப தீர்மானங்களுக்கான மன்றமாக மட்டுமே வடக்கு மாகாண சபை மாற்றப்பட்டிருப்பதுதான் இங்கு விமர்சனத்துக்குரியது.

மாகாண சபை அதனது பிரதேச முன்னேற்றங்களுக்கும் மக்களுக்கும் உரிய வகையாக செயற்பட வேண்டியய அவசியம் இல்லையா? மாகாணசபையைப் பயனுடைய விதமாக நடத்தவே, செயற்படுத்தவே கூடாது என்று த.தே.கூக்காரர்கள் கருதுகிறார்களா? அல்லது முடியவே முடியாது என்று கருதுகிறார்களா? அல்லது இந்த மாகாண சபையில் உருப்படியான சட்டம் எதனையும் ஆக்குவது எந்தவகையிலும் தமிழர்களுக்கு பயன்தரமாட்டாது என்று கருதுகிறார்களா? அல்லது முழுமையாக இல்லாவிடினும் கணிசமாக பயன்தரக்கூடிய ஒன்றேயாயினும் அதனை எந்தவகையிலும் பயனற்றது என்று காட்டவேண்டும் என்ற பிடிவாதத்தோடு செயற்படுகிறார்களா? அல்லது அப்படி ஏதாவது ஆக்கபூர்வமாக செயற்பட முயன்று அதனால் ஏதாவது பலன் மக்களுக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டால் தங்களது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு அது தீங்காக அமைந்து விடும் என்று அஞ்சுகிறார்களா?

தனித் தமிழீழநாடு கிடைக்கும் வரை வேறெந்த வகையான அரசியல் தீர்வும் இப்போதைய உடனடியான மக்களின் தேவைகளுக்குப் பயனுடையதாக இருந்தாலும் அதனை ஏற்கக் கூடாது என்று இருப்பவர்களை விட்டுவிடுவோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்களில் பெரும்பாலானவர்கள் அப்படியானவர்களில்லையே! மாகாணசபையால் ஏதாவது பலன் தமிழர்களுக்குக் கிடைக்குமாக இருந்தாலும் அதனால் தமக்கு தனிப்பட்டரீதியில் என்ன பலன் கிடைக்கும் என்ற  ினைப்பவர்களையும் விட்டுவிடுவோம். ஆனால் இங்கு த.தே.கூக்காரர்களை உன்னிப்பாக அவதானித்தால், அவர்கள் அறியாதவர்கள் அல்லது இயலாதவர்கள், நெழிவு சுழிவு தெரியாதவர்கள் என்று கூற முடியாது.

மாறாக, இராணுவம் வெளியேற வேண்டும்! முள்ளிவாய்க்காலில் நடந்தவைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்தி மஹிந்தவையும் அவரது ஆட்களையும் சர்வதேசக் கூண்டில் ஏத்த வேணும்! என்று செய்கிற அரசியலால் இப்போது சர்வதேச சமூகம் காட்டிவரும் அக்கறையும், அதைக்காட்டி தமிழர்கள் மத்தியில் உசுப்பி விடப்பட்டுள்ள இனஉணர்ச்சிமயமும் மாகாண சபைகளை ஆக்கபூர்வமாகச் செயற்படுத்துவதால் கெட்டுப் போய்விடும், தணிந்து போய்விடும் என்று கருதி இந்த மாகாண சபையை அசைய மாட்டாத ஒன்றாக இவர்கள் ஆக்கி வைத்திருக்கிறார்களா? என்பதே இங்கு வலுவான கேள்வியாகத் தோன்றுகிறது.

இந்த விடயத்தின் தொடர் கேள்விகள் அடுத்த தொடரிலும் தொடரும்

இப்படிக்கு

உங்கள் அன்பிற்குரிய – தோழமைக்குரிய

அ. வரதராஜப்பெருமாள்    

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com