Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் - 8)

அன்பார்ந்த நண்பர்களே!

ஆற்றல் மிகு தோழர்களே!

 தமிழ்த் தேசம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற சுலோகங்களை இது ஊருக்கடி பெண்ணே! உனக்கல்லடி கண்ணே! என்ற கணக்கில் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களிற் கணிசமானோர் ஒரு மகா தமிழ் உணர்ச்சி அரசியலை நடத்திவருவதைக் நாம் நாளும் பொழுதும் காண்கின்றோம். அவ்வாறிருந்தாலும், தமிழர்கள் மத்தியில் பெரும் மதிப்புக்கு உரியவரும் யாழ்ப்பாணத் தமிழர்களின் பெருந்தொகையான விருப்பு வாக்குகளைப் பெற்றவருமான கௌரவ முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் அப்படிப்பட்டவரல்ல என்பது புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒன்றே! இலங்கையின் நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த முப்பது ஆண்டு கால கட்டத்தில் அவர் எந்தக் கட்டத்திலும் தமிழ்த் தேசம், தமிழ்த் தேசியத்துக்காக உணர்ச்சிவசப்பட்டது கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அப்படிப்பட்டவருக்கு எழுபத்தைந்து வயதில் அவற்றுக்காக உணர்ச்சி வசப்பட்டு நிற்கிறார் என்றால் அது நம்பக் கூடிய ஓன்றல்ல.

எட்டுக் கிரகங்களும் கூடி வந்தாலும் சனியின் கண்பட்டால் நாசம் என்பார்கள். கம்பராமாயணம் சிவபுராணம் என்று இருந்த திரு விக்கினேஸ்வரனுக்கு சம்பந்தரின் கண்பட்டதால் அவரின் ஜாதகம் சுக்கிரதிசையில் ஏறியது. திரு சேனாதிராஜாவுக்கு அதுவே ஏழரைச் சனியனாகியது.  எவ்வாறாயினும் திரு விக்கினேஸ்வரன் அவர்கள்  அரசியலிற் புகுந்த அடுத்த கணத்திலேயே அவர் இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகினார். வயதால் அனுபவசாலி, சட்டத்தில் மேதாவி, நிர்வாகத்தில் நிபுணன், அரசைப்பற்றி அத்துபடியாக அறிந்தவர், கடவுள் நம்பிக்கைகளால் பண்பானவர், கறையற்றவர், குறையற்றவர் என்ற பல்வேறு சான்றிதழ்களால் தமிழ்ப் பிரமுகர் சமூகத்தில் எடுத்த எடுப்பிலேயே அவர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார்.

திரு விக்கினேஸ்வரன் அவர்கள் பற்றி அவரவர் தமது அளவில் உயர்வாகக் கருதிய அதேவேளை இலங்கை(யாழ்ப்பாண)த் தமிழர்கள் அவருக்கு 50 சதவீதமான விருப்பு வாக்குகளை அளித்து அவரை எந்த சந்தேகமுமற்ற ஒரு சட்டபூர்வமான நியாயாதிக்கம் உடைய தலைவராக அங்கீகரித்தார்கள்.

தமிழர்கள் தமது பூரணமான நம்பிக்கையையும் அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அதன் மூலம் அவர் தமிழர்களின் உடனடியான பொதுத் தேவைகள் மற்றும் தமிழர்களின் நீண்டகால அபிலாஷைகளை நடைமுறை யதார்த்தமாக்குவதற்கு வேண்டிய சரியான முடிவுகளை எடுத்துச் செயற்படுவார் - யாருக்கும் அஞ்சாது சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்துச் செயற்பட வேண்டும் என்பதே பரந்துபட்ட தமிழர்களின் எதிர்பார்க்கை. அதற்கான மக்களாணையையும் அவருக்கு வழங்கியிருக்கிறார்கள்.

திரு விக்கினேஸ்வரன் அவர்கள் சில சந்தர்ப்பங்களில் கூடக்கூடாத கூட்டத்தாரோடு கூடியதால் ஏற்படும் சில விளைவுகள் போல சில பிறழ்வான செயல்களையும் பேச்சுக்களையும் ஆற்றியிருந்தாலும், அதேநேரத்தில் அவரின் இயல்பான குணாம்சங்களையும் பல சந்தர்ப்பங்களில் துணிச்சலாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதையும் நாம் அவதானிக்கத் தவறக் கூடாது.

அவர் தொடர்பான கேள்வி மற்றும் சிக்கல் எங்கிருந்து நோக்கப்படுகிறது என்றால், இவ்வளவு அறிவும் ஆற்றலும் அங்கீகாரமும் உடைய திரு விக்கினேஸ்வரன் அவர்கள் இதுவரை வடக்கு மாகாண சபையை தமிழ்த் தேசிய நாடக அரசியல் வாதிகள் அவர்களின் சுயதிருப்திக்கான, சுயவெறுப்புக்கான மற்றும் சுயவிளம்பரம்பத்திற்கான அரசியற் சுலோகங்களை எழுப்பும் தளமாக மட்டுமே பயன்படுத்த இடமளித்திருக்கிறார் என்பதுதான். மாறாக இந்த மாகாண சபையை உரிய வகையில் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும், மாகாண சபைகளின் அதிகாரப் பகிர்வுக்கும் நாட்டின் ஜனநாயக மற்றும் பல முற்போக்கான அம்சங்களின் எழுச்சிக்கும் உரிய நிறுவனமாக ஏன் இன்னமும் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான்

இந்த மாகாண சபையானது, திரு விக்கினேஸ்வரன் அவர்கள் கற்பனை பண்ணியிருந்த அளவுக்கு அதிகாரங்களும் வசதிகளும் கொண்டதாக இல்லாவிடினும், முடிந்த அளவுக்கு இன்று கையில் கிடைத்திருக்கும் இந்த மாகாண சபையைப் பயன்படுத்தி தமிழர்களுக்கு இன்றைய நிலையில் அவசியமாக வேண்டியுள்ளனவற்றை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என்ற கருத்தோடு அவர் செயற்படாமல் இருப்பதுதான் இங்கு விசனத்துக்கும் விமர்சனத்துக்கும் உரியது.

வடக்கு மாகாணசபை வெறுமனே தமிழ்த் தேச சுயநிர்ணய அரசியற் களமாக மட்டும் தான் இருக்க வேண்டுமென்றால், திரு விக்கினேஸ்வரன் போன்ற ஒருவரை தமிழர்கள்  முதலமைச்சராக ஆக்கியிருக்கி வேண்டிய அவசியமில்லையே! இவரை விட அதனை திரு மாவை சேனாதிராஜாவையோ அல்லது கௌரவ அடைக்கலநாதன் செல்வத்தையோ  அல்லது கௌரவ சுரேஷ் பிரேமச்சந்திரனையோ முதலமைச்சர் ஆக்கியிருந்தால்  மிகத் திறமையாக ஆக்ரோஷம் கொப்பளிக்கும் களமாக மாகாண சபையை எப்போதும் சுடச்சுட வைத்துக் கொண்டிருப்பார்களே! எல்லோரையும் விட, சிவாஜிலிங்கமும், அனந்தியும் மாகாண சபையை முள்ளிவாய்க்காலில் நடத்தி எப்போதும் அதனை ஒரு சுடுகாட்டுக் கொதிநிலையிலேயே வைத்திருந்திருப்பார்களே!

தேர்தலில் போட்டிக்கு நின்று, வாக்குறுதிகளை வானளாவ அள்ளி வீசி போட்டிக்கு நின்றவர்கள மீது வாய்ககு வந்தபடியெல்லாம் வசைபாடி விட்டு, இலட்சக் கணக்கில் மக்களிடம் வாக்குகளையும் பெற்று வெற்றிப்பவனிகளையும் முடிசூடல்களையும் நடத்ிவிட்டு, அமைச்சர்களையும் நியமித்து விட்டு, ஆறு மாதங்களுக்கு மேலாக சம்பளம் மற்றும் அதனோடு சேர்ந்து பல தலைப்புகளில் வருமானஙகளையும் மாகாண சபையிலிருந்து எடுத்துக் கொண்டு, மேலும் என்ன வசதிகள் சலுகைகள் கிடைக்குமோ அவற்றிற்கெல்லாம் கொஞ்சமும் வெட்கப்படாமல் உணர்ச்சிவசப்படாமல் மான ரோசம் பார்க்காமல் முன்கதவுகளாலும் பின்படலைகளாலும் வேண்டிய யாசக ஏற்பாடுகளையும் செய்து கொண்டு, மாமன் மச்சான் அண்ணன் தம்பி என மாகாண சபையின் பல்வேறு பதவிகளில் சொந்தக்காரர்களையும் இருத்தி விட்டு, இப்போது சொல்கிறார்கள் - மீண்டும் அவர்களது பழைய பாட்டான '13வது திருத்த அரசியல் யாப்பை ஏற்கவில்லை', 'அதில் அதிகாரம் எதுவுமில்லை', 'எல்லா அதிகாரங்களும் ஆளுநருக்கே கொடுக்கப்பட்டுள்ளன' என்று மீண்டும் மீண்டும் பாடுகிறார்கள்.

இப்போதுள்ள மாகாண சபை முழுமையானது அல்ல என்பது பொது அறிவு. 13வது திருத்த அரசியல் யாப்பு இலங்கையின் இன முரண்பாடுகளுக்கு - தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு முழுமையான நிரந்தரத் தீர்வாக முடியாது என்பது ததேகூக்காரர்கள் புதிதாகக் கண்டு பிடித்த ஒன்றல்ல. கௌரவ விக்கினேஸ்வரனுக்கும் அவரது அமைச்சர்களுக்கும் சுமந்திரனுக்கும் இது புதிதாக இருக்கலாம். ஆனால் இது பற்றி முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண சபையின் அறிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் இதுபற்றி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே நிறையவே சொல்லியிருக்கின்றன. தமிழர்கள் மட்டுமல்ல, நியாயமான முற்போக்கான எண்ணம் கொண்ட சிங்களத் தலைவர்களும் புத்திஜீவிகளும இதனை கடந்த இருபந்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகவே சொல்லி வருகின்றனர். இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இங்கு அதுபற்றி ஒரு பெரிய விவாதமும் தேவையில்லை.

13வது திருத்த அரசியல் யாப்பு திருப்தி அற்றது என்பதாற்தான், பிரேமதாசா ஆட்சிக் காலத்தில் கௌரவ மங்கள முனசிங்கா அவர்களின் தலைமையிலான நாடாளுமன்றக் கமிட்டி இந்திய அரசியல் யாப்புக்குச் சமனான அதிகாரப் பகிர்வை சிபார்ச செய்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் மாகாணங்களுக்கு ஒரு பிரதேச சுயாட்சிக்கு அண்மித்த அதிகாரங்கள் கொண்ட ஓர் புதிய அரசியல் யாப்பு பிரேரணையை 1995ம் ஆண்டு தொடக்கம் சொல்லி வந்து அதனை 2000ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தார். ஆனபடியாற்தான் 2002ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கா உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு சமஷ்டி (மாநில சுயாட்சி) அமைப்பை வழங்குவதற்கு ஒப்புக் கொண்டார். ஆனபடியாற்தான் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களின் தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா அவர்களினால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் அமைப்பு மாகாண சபைகளுக்கு ஒரு மிக விரிவான அதிகாரங்கள் கொண்ட ஒரு பிரேரணையை சிபார்சு செய்தது.

13வது திருத்த அரசியல் யாப்பை இங்கு யாரும் திருப்தியானது என்றோ அல்லது அதுவே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இறுதியான உறுதியான தீர்வாக அமையும் என்றோ இங்கு யாரும் கூறவில்லை. இதிலொன்றும் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவர்கள் போல இங்கு புதிய ததேகூக்காரர்கள் பெரிய விளக்க உரைகள் தர வேண்டிய அவசியமில்லை.

மாற்றுக் கோரிக்கை என்ன?  

13வது திருத்த அரசியல் யாப்பின் பிரகாரமான மாகாண சபை முறையை ஏற்கவில்லை என்றால் வேறு எப்படிப்பட்ட ஓர் அரசியல் யாப்புத் திட்டத்தை ததேகூக்காரர்கள் தமக்குள் ஒரு முகமாக திட்டவட்டமாக கோருகின்றனர் என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. ஓன்று தவறானது, தப்பானது, ஏற்க முடியாதது என்பது மட்டும் போதியதாகுமா? ஒரு நியாயமான நீதியான கோரிக்கை உடையவர்கள் தங்களுக்கு எது தேவையானது, எது சரியானது, எது தமக்கு ஏற்புடையது என திட்டவட்டமாக அறுதியாகவும் உறுதியாகவும் தெரிவிக்க வேண்டுமல்லவா!. 

ததேககூக்காரர்கள் கற்பனையில் வாழ்கிறார்கள் என்றோ அல்லது யதார்த்தம் புரியாதவர்கள் என்றோ அர்்தம் கொள்ள வேண்டாம். தங்களுக்கு ஒன்று தேவையென்றால் அதற்காக யார் காலைப் பிடிப்பது, யார் காலை இழுத்து விழுத்துவது, எப்படி வேண்டுவது, எப்படி நசுங்கி நெழிந்து வளைந்து சுழிச்சு காரியம் சாதிப்பது என்பதில் மிக யதார்த்தபூர்வமாகத் தானே செயற்படுகிறார்கள்! பிரபாகரனுக்கும் அல்வாக் கொடுத்து அதே சமயத்தில் சந்திரிக்காவுக்கும் பூக்கொடுத்த நிபுணர்கள்தானே சம்பந்தரும், சுரேசும், சேனாதிராஜாவும், அடைக்கலநாதன் செல்வமும்.

இன்றைய சர்வதேச மற்றும் இந்து சமுத்திர பிராந்திய அரசியல் நிலையில் தமிழர்களுக்கு வேண்டியதென எப்படிப்பட்ட கோரிக்கையை முன்வைக்க வேண்டுமென்பதை திரு சம்பந்தரும், திரு விக்கினேஸ்வரனும், திரு சேனாதிராஜாவும், திரு சுரேசும், திரு சுமந்திரனும் நன்கு அறிவார்கள் என்பதை என்னைப் போன்ற பலரும் அறிவோம். அதன் அவசியத்தையும் அவர்கள் அறிவார்கள். ஆனாலும் அதனை அவ்வாறு அவர்கள் செய்யாமல் இருக்கும் அவர்களின் அரசியற் சூத்திரம் தான் கேள்விக்குரியது. யாழ்ப்பாணத்து மேற்குடிப் பிரமுகர்களையம் மேலைத்தேய நாடுகளில் அரசியல் வியாபாரம் பண்ணும் புலிவாதிகளையும் புளகாங்கிதப்படுத்தும் அரசியலை நடத்தும் இவர்கள் தமிழர்களின் தலைவர்களாகச் செயற்படுவார்களா? அல்லது மேலைத்தேச புலிவாத அரசியல் வியாபாரிகளின் எடுபிடிகளாவே இருப்பார்களா? என்பதற்கான விளக்கம்தான் அவர்களின் அரசியற் சூத்திரத்தைத் தெளிவுபடுத்தும். 

சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் இந்திய மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்த போது, அந்தக் கட்சிகாரர்களைத் திருப்திப்படுத்தவோ என்னவோ, திரு. இரா. சம்பந்தர் அவர்கள் இந்தியாவிலுள்ளது போன்ற ஓர் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை இலங்கை அரசு தர முன்வந்தால் தாங்கள் அதைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். இதுவேதான் திரு ஆனந்தசங்கரி அவர்கள் கடந்த பல ஆண்டுகளாகக் கூறி வருகின்றார். அவரைத் தமிழ்த் துரோகி என்று சொல்லிவிட்டு இப்போது சம்பந்தரும் அதையே கூறுகிறார். அவர் உண்மையாகவே அதைக் கூறியருந்தாலும் அவரது அந்தக் கூற்றின் மீது பல ததேகூக்காரர்களுக்கு உடன்பாடில்லை இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அழுதாலும் அவள்தானே பெற வேண்டும் பிள்ளையை!

அரசியல் யாப்பின் 13வது திருத்த ஏற்பாடுகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்றே ஜெனிவாத் தீர்மானத்தினூடாக உலகநாடுகள் கூறுகின்றன. இந்த விடயம் ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளடக்கப்படுவதற்குக் காரணமே இந்தியாதான். அதேவேளை 13வது திருத்த அரசியல் யாப்புக்கும் மேலாக சென்று அரசியற் தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென்று இந்தியாவும் பல முக்கியமான சர்வதேச நாடுகளும் மஹிந்த அரசை வலியுறுத்துவதாக ததேக்கூக்காரர்கள் கூறுகின்றனர். இந்தியாவும் மற்ற நாடுகளும் அவ்வாறு கூறுகின்றன என்றே வைத்துக் கொள்வோம். அப்படியாயினும், அரசியல் யாப்பின் விதிகள் மற்றும் ஏற்பாடுகள் எவ்வெ'வ்ாறெல்லாம் அமைந்திருக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தோடு அந்த நாடுகளா முழு விடயத்தையும் இது தொடர்பாக  பேச்சுவார்த்தை நடத்தப் போகின்றன? நிச்சயமாக இல்லை.  இந்தியாவும் மற்ற நாடுகளும் 13வது திருத்த அரசியல் யாப்புக்கும் மேலான ஒரு நிலைக்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசைக் கொண்டு வந்தாலும், ஒவ்வொரு விடயங்களையும் விபரங்களையும் பேச வேண்டியது தமிழ் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தானே.

அதேவேளை, இந்தியாவும் சரி எந்த நாடும் சரி தமிழ்த் தேசம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரித்தல் என்ற விடயத்தை ஏற்கப்போவதுமில்லை, அது தொடர்பாக இலங்கை அரசை அவை வலியுறுத்தப்போவதுமில்லை. என்னதான் நடந்தாலும் இப்போதிருக்கும் மாகாண சபைக்கு கொடுக்கப்பட வேண்டிய அதிகாரங்களை சற்று அதிகரிப்பதை இந்தியாவும் உலகநாடுகளும் அங்கீகரிக்கலாம். அத்துடன் கொடுக்கப்படும் அதிகாரங்களை தெளிவாக வழங்கப்பட வேண்டும் என்பதையும் இந்த நாடுகள் ஆதரிக்கும். எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கத்தை ஓர் அளவுக்கு மீறி உலகநாடுகள் வலியுறுத்தமாட்டா என்பதே எனது திண்ணம். எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டிய கடமை தமிழர்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகளுக்கே உரியதாகும். அது இப்போதைக்கு தமிழ்ப்பெருங்குடியினரின் பிரதிநிதிகளான ததேகூக்காரர்களிடமே அதற்கான பேச்சுவார்த்தை விடப்படும்.

ததேகூக்காரர்கள் நினைப்பது போல அரசியற் பேச்சுவார்த்தைகள் ஒரு ரகசிய, அந்தரங்க விடயமாக அமைய முடியாது. ஆரம்பக் கட்டம் அவ்வாறு அமையலாம். ஆனால் விரிவான பேச்சுவார்த்தைகள் மக்கள் மத்தியில் ஒரு பொது அங்கீகாரத்தைப் பெறாமல் வெற்றிகரமாக நடைமுறையாக முடியாது. பகிரங்கமாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த வரலாறுகள் இருக்கலாம். அதைவிட, ரகசியமான பேச்சுவார்த்தைகள் சபைக்கு வராமலே போன வரலாறுகளே அதிகம்.

தீர்மானகரமாக முடிவெடுக்க வேண்டிய விடயங்களில் திரு விக்கினேஸ்வரன் அவர்கள் ஓடி ஒளிந்து கொள்கிறார் அல்லது ஆஸ்பத்திரியிற் போய் நெஞ்சுவலி என்று படுத்துக் கொள்கிறார் என்பது இப்போது பலருக்கும் குசுகுசு கதையாகிவிட்டது. சம்பந்தரோ மாகாண சபை விடயமெல்லாம் விக்கினேஸ்வரனிடம் விடப்பட்டு விட்டது அவரே முடிவெடுப்பார் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டு விட்டார். சேனாதிராஜாவோ தனக்கும் மாகாண சபைகளுக்கும் சம்பந்தமில்லை என்பது  போலவே நடந்து கொள்கிறார். மாகாண அமைச்சர்களோ தாங்கள் எந்தக் கட்சிக்கும் தொடர்பற்றவர்கள் எனவே தமக்கும் தமது பதவிக்கும் தொடர்பிருந்தாலும் தமக்கும் அரசியல் முடிவுகளுக்கும் தொடர்பில்லை என்பது போல் தங்கள் சொந்த அலுவல்களில் சுறுசுறுப்பாக இருக்கின்றனர்.

மாறுவது மாறாமல நடக்கும்

எனவே, திம்புப் பேச்சுவார்த்தை என்ற கட்டத்திலிருந்து காலம் முப்பது ஆண்டுகள் உருண்டோடி எத்தனையோ பல மாற்றங்கள் உலக அரசியலிலும் இந்திய அரசியலிலும் இலங்கை அரசியலிலும் தமிழர்களின் போராட்ட வாழ்விலும் நடந்து முடிந்து விட்டன. ஆனாலும் தமிழர்களின் பொது அரசியல் நலன்கள் தொடர்பான விடயத்தில் இன்னமும் ததேகூக்காரர்கள் அந்தத் திம்பு அரசியற் பராயத்திலிருந்து விடுபட்டு வளர்ந்ததற்கான அல்லது புதிய யதார்த்தங்களைக் கிரகித்துக் கொண்டதற்கான அடையாளங்களைக் காண முடியவில்லை. இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் முன்னாலும் தமிழ்த் தேசியத்தையும், தமிழ்த் தாயகத்தையும், சுயநிர்ணயத்தையும் அங்கீகரி என்ற மூன்று அரை வசனங்களுக்கு அப்பால் வேறேதனையும் ததேகூக்காரர்கள் முன்வைக்கமாட்டார்கள் என்பது வெளிப்படை.

இது மீண்டும் தமிழர்களை முப்பது வருடங்களுக்குப் பின்தள்ளி பூட்டான் திம்பு என்ற நிலைக்குக் கொண்டுவிடும். ஆனால் அன்றைய ஆயுதப் போராட்ட இயக்க பின்பலம் தமிழர்களுக்கு இன்று இல்லை, திரு ராஜீவ் காந்தியைத் தலைமையாகக் கொண்ட இந்தியா இனி இல்லை. தமிழர்களின் கோரிக்கையில் அன்று இணைந்து நின்ற  கிழக்கு, மலையகம், முஸ்லிம்கள் ஆகிய மூன்று காரணிகளும் இப்போது கணிசமாக விலகியோ அல்லது எதிரணியிலோ உள்ளன.

1985ம் ஆண்டு பூட்டானில் அந்தக் கோரிக்கைகளைத் தமிழர் பிரதிநிதிகள் முன்வைத்த போது அன்றிருந்த சூழ்நிவைகள் வேறு அத்துடன் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்ததற்கான அடிப்படைக் காரணங்களும் வேறு. அந்தச் சூழ்நிலைகளோ அல்லது அந்தக் காரணங்களோ இன்றில்லை. எனவே அந்தச் சுலோகங்கள் இன்றைக்கு எவ்வகையிலும் பொருத்தமற்றவை. இன்று கையிலிருக்கும் மாகாண சபை இலங்கையின் அரசியற் சாசனத்தினபடி செயற்படுவதற்கு வடக்கு மாகாண சபையின் பக்கமிருந்து என்ன செய்யப்பட வேண்டும் என்பதை அடுத்த தொடரில் பார்க்கலாம்

இப்படிக்கு

உங்கள் அன்பிற்குரிய, தோழமைக்குரிய

அ. வரதராஜப்பெருமாள்   

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com