Contact us at: sooddram@gmail.com

 

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!!  (பகுதி -1)

(வரதர் பெருமாள்)

சகர வரிசைப் பெயர் கொண்ட தலைவர்கள்

இன்றைய இலங்கைத் தமிழர்களுக்கான தலைமைத் தகுதியை அடைவதற்கு சகர வரிசை எழுத்துக்களில் ஒன்றை அதாவது ஆங்கிலத்தில் எழுதினால் ‘S’   தமது பெயரின் முதலெழுத்தாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற வகையாக எண் சாஸ்த்திரத்தின் (ஆங்கிலத்தில் Numerology) ஒரு பகுதியாக அண்மைக் காலத்தில் சில சாஸ்த்திர வியாபாரிகளால் பிரபல்யப்படுத்தப்பட்டிருக்கும் 'பெயரியல்' (ஆங்கிலத்தில் ' Numerology') எனும் சாஸ்த்திரம் நிர்ணயிக்கிறது எனக் கொள்ளலாமா என்ற கேள்வி எழுகிறது.

அந்தவகையில் சங்கரியார், சம்பந்தர், சேனாதிராஜா, சித்தார்த்தர், சிறிதரன் (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்.), சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், சரவணபவன், சிறீதரன் (கிளிநொச்சி), சிவாஜிலிங்கம், சிறீகாந்தா, பேராசிரியர் சிற்றம்பலம், பேராசியர் சிவச்சந்திரன் மற்றும் சி.வி.கே.சிவஞானம் என சகர வரிசை எழுத்தொன்றை தமது பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்களே இன்று இலங்கைத் தமிழர்களின் அரசியலில் பிரபல்யமானவர்களாக உள்ளனர். திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த திரு தண்டாயுதபாணி அவர்கள் கிழக்கு மாகாண சபைக்கான எதிர்க்கட்சித் தலைவராக இருந்தப்பட்டிருந்தாலும் இங்கு சம்பந்தருக்கு அடுத்த வாரிசுகளின் வரிசையில் (திருமலை) சுந்தா மற்றும் சிறீஸ்கந்தராஜாவே உள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு செல்வராசா அவர்களே அங்கு தமிழ்த் தேசிய அரசியலின் முன்னணித் தலைவராக இருக்கிறார். அதேபோல அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சியில் திரு சந்திரகாந்தன் அவர்களே முன்னிலை வகிக்கிறார்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் சம்பந்தர், சேனாதிராஜா, சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், அடைக்கலம் செல்வநாதன், சரவணபவன் மற்றும் கிளிநொச்சி சிறீதரன் ஆகிய ஏழு பேருமே இன்று;

1)         இலங்கைத் தமிழர்களின் இனவாரியான அரசியல் அபிலாஷைகளையும், அந்த அபிலாஷைகளை திருப்தி செய்யும் வகையாக அரசை நோக்கி முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளையும் நிர்ணயிக்கின்றனர்,

2)         அந்தக் கோரிக்கைகளை வென்றடைவதற்கான அரசியற் போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான கால, சூழல், வர்த்தமானங்களையும், வழி முறைகளையும  அவற்றுக்கான அணுகுமுறைகளையும் தீர்மானிக்கின்றனர்,

3)         அவற்றுக்காக இலங்கைத் தமிழர்களை அணிதிரட்டித் தலைமை தாங்கி வழி நடத்துபவர்களாகவும்,

4)         அவ்வப்போது இலங்கைத் தமிழர்களின் அரசியல் நண்பர்கள் யார் யார்? எதிரிகள் யார் யார்? என்பதை முடிவு செய்கிறார்கள்.

1977ம் அண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஒப்பீட்டுரீதியில் ஒரு சுதந்திரமான சூழலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2010ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பின்னர் நடந்த தேர்தல்களே. இலங்கைத் தமிழர்களிற் பெரும்பான்மையினர் த.தே.கூவினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க 2010ம்ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் புலிகளைக் கூண்டோடு அழித்த அரச இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய முன்னாள் தளபதி திரு சரத் பொன்சேகா அவர்களுக்கு வாக்களித்தது மட்டுமல்லாது, தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கே அடுத்தடுத்து கடந்த தேர்தல்களில் வாக்களித்து வருகின்றமையானது த.தே.கூவின் தலைமைக் தமிழ்மக்கள் சட்டநியாய பூர்வமாக வழங்கி வரும் அரசியல் அங்கீகாரத்தையே உறுதிப்படுகின்றது.

சட்டபூர்வமாகப் பார்த்தால் இந்த ஏழு பேரும் தமிழரசுக் கட்சியின் பெயரிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களாக மக்களால் ஆக்கப்பட்டு உள்ளனர்.  தமிழரசுக் கட்சியின் தார்மீகத் தலைவர் திரு. சம்பந்தர் அவர்களே, அந்தக் கட்சியின் சார்பாக அனைத்துத் தேர்தல் விடயங்களிலும் சட்டபூர்வமாகக் கையெழுத்திடும் பொதுச் செயலாளர் அதிகாரம் திரு. சேனாதிராஜா அவர்களிடமே உள்ளது. இவர்கள் வாழும் காலம் வரை இந்த நிலைகளில் எந்தவித மாற்றமும் நிகழ மாட்டாது என்பது வெளிப்படை. எந்தவித மாற்றமும் நிகழ்ந்துவிடக்கூடாது என்றே யாழ்ப்பாணத் தமிழரசுக் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் விரும்புகின்றனர்.

மேற்குறிப்பிட்ட ஏழு பேரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டமை தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் அதன் வீட்டுச் சின்னத்திற்கு ஊடாகவே. எனினும் இவர்கள் உலக நடப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயருடனே வலம் வருகின்றனர்.

புலிகள் படைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்ட போது அது முதலில் சம்பிரதாய பூர்வமாக

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF),

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் (ACTC),

செல்வம் அடைக்கலநாதனின் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO),

சுரேஸின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) ஆகியன இணைக்கப்பட்டன.

புலிகள் தாங்களே தமிழர்களின் தனிப்பிரதிநிதிகள் - மேலும் பிரபாகரனே தமிழர்களின் தனிப்பெரும் தேசியத் தலைவர் - எனவே இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக புலிகளுடன் மட்டுமே அரசாங்கமாயினும் சரி வெளிநாடுகளாயினும் சரி உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பனவற்றை நிலை நாட்டவும், புலிகளின் அந்த இலக்கை உலகத்துக்கு சட்டபூர்வமான ஓர் அரசியல் நிறுவனத்தின் ஊடாக பிரச்சாரம் செய்யவும  தமிழ்த தேசியக் கூட்டமைப்பை புலிகள் படைத்தனர்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் அல்-கெய்தா பயங்கரவாதிகளால் விமானங்கள் கொண்டு தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச ரீதியில் ஏற்பட்ட மாற்றங்களால் புலிகள் அடுத்தடுத்து மேலைத்தேய நாடுகளால் பயங்கரவாத இயக்கம் எனப் பிரகடனம் செய்யப்பட்டன. இதனால் புலிகளின் பல பில்லியன் கணக்கிலான சர்வதேச நிதி இருப்புக்கள் முடக்கப்பட்டன. அவர்களின் தொடர்நிதி திரட்டல்கள் சர்வதேசரீதியில் வௌ;வேறு வகைப்பட்ட தடைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு உள்ளாயின.

இந்தியாவின் உதவிகளைப் பெற்று இலங்கை அரசை புலிகள் எதிர்த்து, பின்னர் இலங்கை அரசின் உதவிகளைப் பெற்று இந்தியப் படைகளை புலிகள் எதிர்த்தது மட்டுமல்லாது, இந்திய - இலங்கை சமாதான உடன்பாட்டின் மூலம் வராது வந்த மாமணி போல் கிடைத்த வடக்கு-கிழக்கு மாகாண சபையையும் புலிகள் இல்லாதொழித்து, அதன் பின்னர், எந்தவொரு சிங்களத் தலைவரும் தானாகச் செய்திருக்க மாட்டார்கள் என்ற வகையான ஓர் அரசியற் தீர்வை சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் தானாக முன்வந்து ஏறத்தாழ அதிகபட்சமான மாநில சுயாட்சி அதிகாரங்கள் கூடிய அரசியற் தீர்வை முன் வைத்த போதும் அதனை நடைமுறைக்கு வராது பண்ணிய புலிகள், பல சர்வதேச மேலைத்தேய நாடுகள் இந்திய அரசினது மறைமுக அங்கீகாரத்தையும் பெற்று ரணில் விக்கிரமசிங்காவை சமஷ்டி அரசியற் தீர்வுக்கு ஒப்புக்கொள்ள வைத்த போதும் அதனையும் ஏற்க மறுத்து சண்டையைத் தொடர்ந்த புலிகள்

கடைசியில் எந்த நாடும் தமது பயன்பாட்டுக்கு துணை தராமற் போய்விடுமோ என்ற நிலையைப் புரிந்து கொண்டதால் மீண்டும் தமிழ் மக்களின் வாக்குகளைத் தஞ்சமாகக் கொண்டனர். அதனால் தம்மைக் காப்பாற்றும் ஆயுதமாகத் தமிழ் மக்களின் வாக்குரிமைகளைப் பயன்படுத்தினர். அதற்கான ஏஜண்டுக் குரல்களாகச் செயற்பட சட்டபூர்வமாக இருந்த சில தமிழ்க் கட்சிகளை வளைத்துப் போட்டனர். அதன் விளைவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பதை அனைவரும் அறிவர்.

புலிகள் இந்தத் தமிழ்க் கட்சிகளைப் பயன்படுத்திக் கொண்டார்களா? அல்லது இந்தத் தமிழ்க் கட்சிகள் புலிகளின் அரசியல் அறியாமையைப் புரிந்து கொண்டுபுலிகளின் அரசியல் அறிவுப் பலயீனத்தை நன்கு அறிந்து கொண்டு தற்காலிகமாக தத்தமது சொந்த சுயநல அரசியல் லாபங்களை அடைந்து கொள்வதற்காக பிரபாகரனின் காலில் விழுவது போல் விழுந்து புலிகளைப் பயன்படுத்திக் கொண்டார்களா? என்ற விடைகளைக் காண முற்படுவது நீண்ட ஆய்வுக்குரியதொரு விடயம். எவ்வாறாயினும் புலிகளே த.தே.கூவைப் படைத்தார்கள் என்னும்வரலாற்று உண்மையில் எவருக்கும் மறுப்பிருக்க முடியாது.

புலிகள் தமது ஏக பிடியைகட்டுப்பாட்டை த.தே.கூ மீது வைத்திருப்பதற்காக அடிக்கடி தமிழ்த் தேசியக் கட்சிகளின் கைகளைக் கொண்டே அதில் அரசியற் 'களையெடுப்பு' களையும் மேற்கொண்டன. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பெயர் மற்றும் சின்னத்தின் மீது சட்டரீதியான பிடிமானங்களைக் கொண்டிருந்த சங்கரியார் புலிகளின் எஜமானத்தனத்துக்கு ஒத்துழைக்காமல் கிளர்ச்சி செய்தமையினால் அவரை திட்டமிட்டு ஒதுக்கிய புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பகிரங்கத்தில் ஒட்டியாலும் சட்டரீதியாகத் தவிர்க்க முடியாமல் தமிழரசுக் கட்சியின் பெயரையும் அதன் சின்னத்தையும் தமது நலனுக்காக 2004ம் ஆண்டுத் தேர்தலின் போது அரசியல் அரங்கத்தில் நிறுத்தினார்கள்.

இன்று தமிழரசுக் கட்சியின் பெயரும் அதன் வீட்டுச் சின்னமும் பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்களைச் சட்டநியாயபூர்வமாகப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியற் கட்சியாகவும் சின்னமாகவும் ஆகிவிட்டது. தமிழரசுக் கட்சியானது பெரியவர் திரு. செல்வநாயகம், நாவல்லர் திரு அமிர்தலிங்கம் போன்றோரால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. அது மட்டுமல்லாமல்,

அது இலங்கைத் தமிழர்கள் பெரும்பான்மையினரின் அரசியல் ஆதரவை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயக பூர்வமாகப் பெற்றிருந்த கட்சியென்பதனாலும் இப்போது தமிழரசுக் கட்சியானது தமிழர்களுக்கான உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடும் நீண்ட பாரம்பரியம் கொண்டது என்ற கருத்தோட்டத்தின் செல்வாக்கையும் தமிழர்கள் மத்தியில் மீண்டும் பெற்றுவிட்டது.

(தொடரும்.....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com