Contact us at: sooddram@gmail.com

 

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!!  (பகுதி – 10)

(வரதர் பெருமாள்)

இதுவரை நாம் இந்தத் தொடர் கட்டுரையின் கடந்த ஒன்பது பகுதிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறைப் பலவீனங்கள் மற்றும் செயற்திறனின்மைகள் பற்றிய விடயங்களை ஓரளவு உன்னிப்பாக நோக்கினோம். இந்தத் தொடரை வாசித்த சிலர் இந்தக் கட்டுரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலயீனப்படுத்த முனையும் ஒன்றாக இருப்பதாகக் கருதுகின்றனர். அத்துடன் அவர்கள் 'என்னதான் த.தே.கூவில் தவறுகள் தப்புகள் பலயீனங்கள் இருந்தாலும் இன்றைய நிலையில் அது ஒன்றுதான் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பாக இருக்கின்றது. எனவே அதனை பகிரங்கத்தில் விமர்சிக்கக் கூடாது' என்கின்றனர். முதலில் இவ்வாறான தப்பான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களுக்கு சிறு தெளிவை ஏற்படுத்துவது கடமை என்று கருதுகிறேன்.

  • எந்தக் கட்சியையுமோ அல்லது எந்த ஒரு நபரையுமோ இங்கு அரசியல் ரீதியிலோ அல்லது சமூக ரீதியிலோ பலவீனப்படுத்தும் நோக்கமோ அல்லது இழிவுபடுத்தும் நோக்கமோ எனக்கு இங்கு கிஞ்சிற்றும் கிடையாது,

  • இன்னும் சொல்லப் போனால் இந்தத் தொடரை சரியாகப் புரிந்து கொண்டால் த.தே.கூவினர் விடயங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதெப்படி, அவர்கள் கையாள வேண்டிய விடயங்களைச் சரியான முறையிலும் காத்திரமான வகையிலும் அணுகுவதெப்படி என்பனவற்றை வழிகாட்டும் தன்மைகளை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டு கொள்ள முடியும்.

  • த.தே.கூக்காரர்களின் சார்பாக வக்காலாத்து வாங்கும் வேலையைச  ேண்டிய பொறுப்போ அல்லது அவசியமோ எனக்கில்லை. ஆனால், த.தே.கூக்காரர்கள் இலங்கைத் தமிழ் மக்களிற் பெரும்பான்மையானவர்களை சட்டபூர்வமாக பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் என்பதாலும் அவர்கள் மக்களிடமிருந்து வாக்குகளை வாங்குவதற்காக வாக்குறுதிகளையும் நம்பிக்கைகளையும் அள்ளி வழங்கியிருக்கிறார்கள் என்பதாலும் அவர்களை ஆக்கபூர்வமாக விமர்சிப்பதுவும் அவர்களது குறைகளையும் பிழைகளையும் சுட்டிக் காட்டுவதும் என்னைப் போன்றவர்களின் பொதுக்கடமையாகும்.

  • இப்டித்தான் புலிகள் காலத்தில் அவர்களை விமர்சித்த போது பலர் 'புலிகள் மட்டும்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் பிழையானவர்களாக இருந்தாலும் அவர்களை விமர்சிக்கக் கூடாது' என்  கருத்துக்கள் புலி ஆதரவுப் புத்திஜீவிகளால் வெளியிடப்பட்டமையை இன்று நினைவுக்குக் கொண்டு வர வேண்டியுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் பிரமுகர்களும், படித்த பெரிய மனிதர்களும் புலிகளுக்கு உரிய காலத்தில் உரிய விமர்சனக் கடிவாளங்களை உரியபடி போட்டிருந்தால் தமிழர்கள் 1987ம் ஆண்டே முன்னேற்றகரமான அரசியல் நல்வாழ்வுக்குள் அடியெடுத்து வைத்திருக்கலாம். இன்றைக்கு ஆசியாவிலேயே தலைசிறந்த சமூகமாக நிமிர்ந்திருக்கலாம்.

  • புலிகள் காலத்தில் விடப்பட்ட அதே பிழையை இலங்கைத் தமிழ்ச் சமூகம் மீண்டும் செய்துவிடக் கூடாதென்பதே இப்போதும் என்னிடம் எஞ்ியிருக்கும் அவா.

  • விமர்சனங்கள் இல்லாத சமூகம் ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கூடம் போன்றது. இடித்துரைப்பார் இல்லாத தலைமை இழவுகளுக்கும் இழிவுகளுக்குமே இட்டுச் செல்லும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அரசியல்ரீதியில் பொதிந்திருக்கும் பலயீனங்கள் மற்றும் அதன் செயற்திறனில் காணப்படும் காத்திரமின்மைகள் மேலும் அதன் தலைவர்களின் வாக்குகளில் ஒளிந்திருக்கும் பொய்மைகள், அவர்களின் செயல்களில் வெளிப்படும் நேர்மைத் திறனின்மைகள் போன்றன ஒருபுறமிருக்க, இப்போது இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எத்தனை மாதங்களுக்கு, ஏன்! எத்தனை வாரங்களுக்கு ஒர் கூட்டமைப்பாக நிலைக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்கள் தமது கூட்டமைப்பு பிளவுபடும் அளவுக்கு பிரச்சினைகள் ஏதும் இல்லை என்கிறார். எனினும் இப்போதுள்ள தமது கூட்டமைப்பை சட்டபூர்வமான ஓர் அரசியற்கட்சியாகப் பதிவு செய்வதற்கு அவர் தயாராக இல்லை என்பது வெளிப்படை. அவர் மட்டுமல்ல அனைத்து தமிழரசுக் கட்சிக்காரர்களும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளனர் என்பதுவும் தெளிவு.

அதேவேளை, தமிழ்க் தேசியக் கூட்டமைப்பை தனிக்கட்சியாகப்பதிவு செய்ய வேண்டும் இல்லையென்றால் அதிலிருந்து மற்றக் கட்சிகள் பிர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என சட்டபூர்வமாகப் பதிவு செய்து கொள்ள உள்ளன என்ற போக்குக்கு திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் மிகத் தீவிரமாகவும் வெளிப்படையாகவும் தலைமை தாங்குகிறார். அதற்கு அவரது கட்சிப் பங்காளியான வவுனியா திரு. ஆனந்தனும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் திரு செல்வம் அடைக்கலநாதனும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்  திரு ஆனந்த சங்கரி அவர்களும் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் திரு சித்தார்த்தன் அவர்களும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகின்றது. 

புலிகளின் முடிவுக்குப் பின்னர், 2004ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதம பேச்சாளாராக திரு சுரேஸே விளங்கினார். புலிகளின் அழிவுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவன் தானே என திரு சுரேஸ் கற்பனையில் இருந்தமை இலங்கைத் தமிழ் அரசியல் வட்டாரங்களில் பலராலும் உணரப்பட்ட ஒன்றே.

திரு சம்பந்தன் அவர்கள் எண்பது வயதையும் கடந்து மிகுந்த நோய்வாய்ப்படுதல்களுக்கு உள்ளாகிவிட்டார் என்பதாலும், அதற்கு அடுத்த மூத்த தலைவரான திரு மாவை சேனாதிராஜா அவர்களும் வயதில் எழுபதுகளில் உள்ளார் என்பதோடு களைப்பு, இழைப்பு என மூப்பின் தாக்கங்கள் சற்று மும்முரமாகவே அவரிடம் வெளிப்படத் தொடங்கிவிட்டன என்பதாலும் திரு பிரேமச்சந்திரன் அடுத்த தமிழ்த் தேசியத் தலைமை தன்னுடையதே என்ற உள்ளாசையை சற்று உரமாகவே கொண்டிருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்.

2010ம் ஆண்டுத் தேர்தல் மூலம் புதிதாக பாராளுமன்றத்துக்குள் காலடியெடுத்துவைத்த திரு சுமந்திரன், திரு சரவணபவன், மற்றும் திரு சிறீதரன் ஆகியோர் ஆரம்பத்தில் திரு பிரேமச்சந்திரனின் அந்தக் குரலுக்கு நம்பிக்கை கொடுப்பவர்களாகவே இருந்தனர். இதனால் திரு பிரேமச்சந்திரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனிக் கட்சியாகப் பதிவு செய்து தொடர்பாக சற்று அளவுக்கு அதிகமாகவே கூவினார்.

திரு சுமந்திரன், திரு சரவணபவன் மற்றும் திரு சிறீதரன் ஆகியோர் அரசியல் அரங்குக்கு திரு சுரேஸூக்குப் பின்னால் வந்து இரண்டு ஆண்டுக்குள்ளேயே அவருக்குச் சமமாக அரசியல் அரங்கில் நடைபோடத் தொடங்கிவிட்டார்கள். மேலும் அவர்கள் எந்த அரசியற் கட்சியும் இல்லாமல் வந்தவர்கள் என்பதால் எந்தச் சிரமமின்றி உற்ற தருணம் பார்த்து தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுமாகிவிட்டார்கள். அதனால் அவர்கள் த.தே.கூவை தனிக்கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பான தமது நிலைப்பாட்டை அமுக்கிப் புதைத்து விட்டார்கள். இப்போது அவர்களின் துணை பிரேமச்சந்திரனுக்கு இல்லாமற் போனமையானது அவரது கனவை நனவாக்கும் அவரது முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தியிருப்பதுவும் தெளிவு.

2010 மற்றும் 2011 ஆகிய இரண்டாண்டுகளிலும் இந்த மூவரும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் இணைபிரியா நெருங்கிய நண்பர்களாகத்தான் இருந்தார்கள். திரு. சரவணபவனுக்கு உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் உரிமையாளர் என்ற வகையில் ஒரு பெரிய மக்கள் தொடர்புப் பலம் கையிலிருக்கிறது. இந்த இரண்டாண்டுகளுக்குள் யாழ்ப்பாணத்தின் பிரதான நாளேட்டின் உரிமையாளன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற இரண்டையும் வைத்துக் கொண்டு அவர் ஆட்சியிலுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் என தனது தனிப்பட்ட உறவுகளை வளப்படுத்திக் கொண்டார்.

அது மட்டுமல்லாது, பதவிகளிலும் பிரபலங்களிலும் உள்ள யாழ்ப்பாணத்துப் பிரமுகர்கள் எக்காரணம் கொண்டும், எவ்வகையிலும் திரு சரவணபவனை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப்போயே ஆகவேண்டும் என்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர். திரு சரவணபவன் இந்தக் கால இடைவெளியில் தனது பதவி மற்றும் தனது பத்திரிகையின் துணைகொண்டு யாழ்ப்பாணத்து மக்களின் மத்தியில் ஓர் ஆபத்பாந்தவன் என்ற தோற்றத்தையும் கட்டியெழுப்பிக் கொண்டுள்ளார்.

உதயன் பத்திரிகையின் நீண்டகால ஆசிரியரும் திரு சரவணபவனின் மைத்துனருமான திரு வித்தியாதரனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார் என்ற வதந்தி 2011ம் ஆண்டு மற்றும் 2012ம் ஆண்டுக்கால கட்டத்தில் நிலவியதைப் பலரும் அறிவர். அவ்வாறான ஓர் அனுமானம் வெளிவந்ததும் திர  ுரேஸ் பிரேமச்சந்திரன் தான்தான் அடுத்த வடக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் என்று பலரும் எண்ணும் வண்ணம் கருத்துக்களை விரைந்து பரப்பி விட்டதையும் பலரும் அறிவர்.

தனது மைத்துனனுக்கு எதிராக திரு பிரேமச்சந்திரன் கிளம்பியதால் திரு சரவணபவன் தம்மை அவரிடமிருந்து தூர விலக்கிக்கொண்டதோடு தமிழரசுக் கட்சியோடு தன்னை உத்தியோகபூர்வமாக நெருக்கிக் கொண்டதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனிக் கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பாக பிரேமச்சந்திரனுக்கு அளித்த வந்த ஆதரவையும் நிறுத்திக் கொண்டார்.

திரு சுமந்திரன் அவர்கள் தேசிய பட்டியலினூடாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர  அவர் சம்பந்தனின் அரசியல் வளர்ப்புப் பிள்ளை. மேலும் இருபது ஆண்டுகளுக்கு மேல் சட்டத் துறைத் தொழிலில் அனுபவம் உள்ளவர். சம்பந்தருக்கு அடுத்தபடியாக அவர் ஆங்கில மொழித் திறமையிலும் த.தே.கூவிலுள்ள ஏனைய அனைவரையும் மிஞ்சியவர். நாடாளுமன்றத்தில் முக்கியமான சட்ட மற்றும் பிரேரணை விவாதங்களில் த.தே.கூவுக்காக ஓதுக்கப்படும் நேரங்களை சம்பந்தர் இல்லாதவிடத்து பெரும்பாலும் சுமந்திரன் அவர்களே எடுத்துக் கொள்கிறார்.

யாழப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களிற் பெரும்பாலோர் சுமந்திரன் தமக்கு பின்னால் ஒட்டி ஓடத் தொடங்கி தமக்கு முன்னால் ஓடி விட்டார் என்று தமக்குள் உறுமிக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும் சேனாதிராஜா அவர்கள் சுமந்திரனை தமது பலயீனமான நிலைகளைப் புரிந்து கொண்டும் சுமந்திரனின் பயன்பாட்டை அங்கீகரித்தும் அவரை தனக்குத் துணையாக ஆக்கிக் கொண்டுள்ளார். சுமந்திரனுக்கு யாழ்ப்பாண மக்கள் மத்தியில் எந்தத் தளமும் இல்லையென்றும் அவர் கொழும்பை மட்டுமே மையமாகக் கொண்ட சட்டத்தரணி எனவும் சேனாதிராஜா அவர்கள் கருதுவதுவும் அவருக்கும் சுமந்திரனுக்கும் இடையில் சுமுகமான உறவுகள் தொடர வாய்ப்பாக உள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் இலங்கைத் தமிழர் அரசியல் அரங்கில் திரு சுமந்திரனின் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்திருக்கின்றது. திரு பிரேமச்சந்திரன் தமிழரசுக் கட்சியின் உண்மையான அதிகாரம் படைத்த தலைவரான திரு சேனாதிராஜா அவர்களுக்கு சவாலாக மாறியதால் திரு சுமந்திரனுக்கு திரு சேனாதிராஜா அவர்களின் அனுசரணை மேலும் அதிகரித்திருக்கிறது. திரு சுமந்திரனும் தன்னை தமிழரசுக் கட்சியின் உத்தியோக பூர்வமான உறுப்பினராக்கிக் கொண்டார். திரு சுமந்திரன் அவர்களின் முக்கியத்துவ அதிகரிப்புக்குக் கட்டை போடும் விதமாக திரு பிரேமச்சந்திரன் சில நடவடிக்கைகளை உள்நாட்டிலும் வெளிநாடுளிலும் அவரது அண்ணன் தம்பியரூடாக முயற்சித்ததால் திரு பிரேமச்சந்திரன் அவர்கள் திரு சுமந்திரனின் நட்பு மற்றும் ஒத்துழைப்புகளை இழந்தது மட்டுமல்லாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனிக் கட்சியாகப் பதிவு செய்யும் விடயத்துக்கு திரு  பிரேமச்சந்திரனுக்கு எதிராக திரு சுமந்திரனும் தமிழரசுக் கட்சிக்காரர்களோடு சேர்ந்து கட்டை போடும் வேலைகளைச் செய்யும் வகையாக திரு பிரேமச் சந்திரன் தனக்கெதிராகவே சும்மா இருந்த சுமந்திரனை உசுப்பிவிட்டுள்ளார்.    

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மைய நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிறீதரனும் 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என திரு சுரேஸூக்கு தோள் கொடுத்து நின்றார். ஆனால் தமிழரசுக்கட்சி அதற்கு இடம் தராது என்பதைக் கண்டதும் அவர் தன்னை தமிழரசுக் கட்சியில் உறுப்பினராக்கிக் கொண்டு திரு சுரேஸிடமிருந்த தன்னைத் தூர விலக்கிக் கொண்டார்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது திரு பிரேமச்சந்திரன் தன்னிச்சையாக யாழ்ப்பாணத்திலுள்;ள தனது வீட்டையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காரியாலம் போலக் காட்டுவதற்காக அங்கு விளம்பரப் பலகையை மாட்டினார். திரு பிரேமச்சந்திரனின் இந்தத் தலையெடுத்த பரியாரி வேலையால் முதலில் தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கும் பிரேமச்சந்திரனுக்கும் இடையில் வெறுப்பு வெடித்தது. அதற்கு முதலில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் அரசியற் பேச்சுகளும், அறிக்கைகளும் யாழ்ப்பாணத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. அரசியல் மாவீரனாக வலம் வந்த  ொண்டிருந்தார். ஆனால் சுரேஸின் த.தே.கூ. விளம்பரப் பலகை நடவடிக்கையைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சிக்குள் சுரேஸூக்கு எதிரான கருத்து அலைகள் அடுத்தடுத்து வேகமாகப் பரவத் தொடங்கின.

மேலும் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது அதற்கான வேட்பாளர்களை நிர்ணயிக்கும் விடயத்தில் தமிழரசுக் கட்சிக்காரர்களை மிரட்டும் வகையாக திரு சுரேஸின் நடவடிக்கைகள் அமைந்தன. அத்தேர்தலில் தமது கோரிக்கைக்கு இணங்கும் வகையில் வேட்பாளர் இடங்கள் தரப்படாவிட்டால் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனையோர் இணைந்து தனித்து நின்று தேர்தலைச் சந்திக்க வேண்டி வருமென திரு பிரேமச்சந்திரன் தமிழரசுக் கட்சியின் தலைவர்களான திரு சம்பந்தன் மற்றும் திரு மாவை சேனாதிராஜா போன்றவர்களை நோக்கி நேரடியாகவே சவாலும் விடுத்தார். அதற்கு திரு சம்பந்தன் 'தம்பி நீர் செய்யிறதைச் செய்யும்' என உடனடியாக ஆத்திரப்பட்டாலும் தமது தலைமையிலுள்ள கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியைக் கருத்திற் கொண்டு தமது ஆத்திரத்தைத் தாமே தணித்துக்கொண்டு திரு சுரேஸூடன் சமரசம் செய்து கொண்டார். ஆனாலும் கிழக்கு மாகாண தமிழரசுக்காரர்களை திரும்பச் சந்திக்க முடியாத அளவுக்கு அவர்களது நிரந்தர பகைவனாக சுரேஸ் தன்னைத்தான  ஆக்கிக் கொண்டார்.

ஆரம்பத்திலிருந்தே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரசுக் கட்சிப் பிரமுகர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளோடு சமனான பங்காளர்களாக ஆக்கிக் கொள்வதையோ அந்த அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதையோ ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவல்.    யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழரசுக் கட்சிப் பிரமுகர்கள் அனைவரும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தங்களையெல்லாம் தள்ளிவிட்டு மேவி ஓடப்பார்க்கிறார் என்ற கடுப்பிலேயே இருக்கிறார்கள்.திரு பிரேமச்சந்திரன் இனி அவர்களோடு காலிலே விழுந்து ஒட்டப்பேனாலும் அவரைக் கிட்டவிடமாட்டார்கள் என்ற அளவுக்கு சுரேஸ் தன்னைத் திரும்ப முடியாத பாதையில் ஓட்டிச் சென்று விட்டார்.

இன்றுள்ள த.தே.கூவில் இணைந்துள்ள கட்சிகள் கடைப்பிடிக்கும் ஒற்றுமை இன்னும் எத்தனை காலங்களுக்கு ஏன்? எத்தனை மாதங்களுக்கு நிலைக்கப் போகிறது என்ற கேள்வி தமிழ் அரசியல் அவதானிகள் அனைவரிடமும் பரவிக் கிடக்கிறது.

(பகுதி 11ஐ நோக்கி தொடரும்......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com