Contact us at: sooddram@gmail.com

 

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!! (பகுதி – 11)

(வரதர் பெருமாள்)

த.தே.கூ எந்த நேரத்திலும் சிதறிப் போகலாம் அல்லது சிதறடிக்கப்படலாம் என்ற வகையிலேயே அதனுள்ளே நெருக்கடிகள  ேகமாகப் புகைந்து கொண்டிருப்பது வெளிப்படை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என திரு. சம்பந்தர் அவர்கள் கூறுவது ' எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல் உள்ளது. இப்போது எப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறுமனே ஒரு பெயரளவு அமைப்பாக தமிழரசுக் கட்சியின் சட்ட அங்கீகாரத்தில் தொங்கியதாகவும் வீட்டுச் சின்னத்தைத் தவிர வேறொன்றுமில்லை எனவும  உள்ளதோ அவ்வாறே இருக்க வேண்டுமென தமிழரசுக்கட்சிக்காரர்கள் பிடிவாதமாகவே உள்ளனர். தமிழரசுக் கட்சிக்காரர்கள் தமது கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளை தமக்கு சமத்துவமான பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லை. அதே வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தேர்தற் சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று நிற்பவர்கள் தமிழரசுக் கட்சிக்காரர்களும் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு ஸ்தாபன அமைப்புத் திட்டத்தைக் கொண்டவர்களாக இல்லை. 

ஓ கடவுளாரே! உம்மை நாம் பயத்தாலேயே வணங்குகிறோம் - அவ்வாறே இங்கும் த.தே.கூவின் ஒற்றுமையை கொள்கைகளல்ல, பயமே காப்பாற்றுகிறது.

த.தே.கூத் தலைவர்கள் தமது கூட்டை இன்னமும் கலைந்து போய்விடாமல் வைத்திருப்பதற்கு இருப்பதற்கு சில வலுவான காரணிகள் உள்ளன,

  • த.தே.கூ விலிருந்து இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் யாரையாவது விலக்கினால் அந்த நபர் த.தே.கூ வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் தூக்கிக் கொண்டு அரசாங்கத்தின் பக்கம் சேர்ந்து விடுவாரோ! அப்படி இல்லாவிட்டாலும், தனியாக ஒரு பிரிவாக இருந்து தமக்கு அரசியற் தலையிடி தருவாரோ என்ற அச்சமே இன்று த.தே.கூவின் பிரதானமான தலைவர்களிடம் முக்கியமாக தமிழரசுக் கட்சியின் தலைமைத் தலைவர்களிடம் நிறைந்து உள்ளது. இப்போது காட்டப்படும் ஒற்றுமை சிதறிப் போனால் அடுத்த தேர்தலின் போது வெற்றிபெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படுமே என்ற கவலையும் அவர்களை நிறைத்து நிற்கின்றது;

  • தமது கூட்டமைப்பிலிருந்து வெறுமனே ஒன்றிரண்டு பேர் இப்போதைக்கு பிரிந்து பேனாலும் அது இப்போது அரசுக்கு எதிராக தாம் விடுகின்ற சவால்களுக்கு இருக்கும் பலத்தை இல்லாமல் அழித்து விடும் என தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் மத்தியில் நிலவும் பிரதானமான அச்சம்;

  • தாம் இப்போது தமிழரசுக் கட்சியோடு இணைந்து கூட்டாக இருப்பதாலேயே தமக்கு மக்களின் வாக்குப் பலம் உள்ளது. தமிழரசுக் கட்சியை விட்டுப் பிரிந்து போனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தாம் தோற்க வேண்டி நேரிடலாம் என சுரேஸ் அவரது கூட்டாளி ஆனந்தன் மற்றும் ரெலோ செல்வம் போன்றோரிடம் மிகத் தெளிவாகவே தென்படுகின்ற பயக்களை;

  • தமக்குள் பிரிவுபட்டு – பிளவுபட்டு இரண்டு கூட்டுக்களாக ஆகிறபோது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள தீவிர தமிழ் தேசிய வாத சக்திகளி் ஆதரவு யார் பக்கம் அதிகமாகச் செல்லும் என்பது பற்றி த.தே.கூ தலைவர்களிடையே உள்ளுர நிலவும் பயம்;

  • தமக்குள் பிளவுபட்டுக் கொண்டால் இப்போது ஒருமித்த குரலில் தமக்கு ஆதரவளிக்கும் வீரகேசரி, உதயன், வலம்புரி, மற்றும் தினக்குரல் போன்ற பிரபல தமிழ் நாளேடுகளின் ஆதரவுப் பிரச்சாரங்களும் பிளவுபட்டுப்போகுமே   என்பதால் ஏற்படும் கிலசம்.

  • ஒற்றுமையாக இருந்தே மக்கள் மத்தியில் உறுதியான நம்பிக்கையை வளர்க்க முடியாத தாங்கள் பிரிந்து போனால் மக்கள் தம்மைக் கைவிட்டு அரசை நோக்கி ஆதரவைத் திருப்பி விடுவார்களோ என்ற அச்சம்;

  • த.தே.கூ. காரர்களோடு தொடர்பில் உள்ள இந்திய அதிகாரிகளும் 'நீங்கள் பிளவுபட்டீர்களானால் உங்களுக்கு எங்களிடமிருந்து கிடைக்கும் உதவிகள் ஒத்ுழைப்புகள் தொடரமாட்டா' என்று விடப்பட்டுள்ள எச்சரிக்கைகளால் ஏற்பட்டுள்ள கிலேசம்;

  • த.தே.கூ. காரர்களுடன் தொடர்பிலிருக்கும் மேலைத் தேச நாடுகளின் தூதரக அதிகாரிகள் த.தே.கூ தலைவர்களிடம் 'நீங்கள் எப்படியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்' எனக் கேட்டிருப்பதனால் எங்கே அந்த தூதரகங்களோடு உள்ள உறவுகள் மற்றும் அவற்றிடமிருந்த அடிக்கடி கிடைக்கும் உதவிகள் தமக்கு எட்டாப் பழமாகி விடுமோ என நிலவுகின்ற கவலை;

  • வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் பொதுவாக இப்போது இருக்கும் கூட்டின் காரணமாகவே உற்ற துணையாக இருக்கிறார்கள். அது இல்லாமற்போனால் வெளிநாடுகளிலுள்ள தமிழர்களிற் பெரும்பான்மையோர் இலங்கை அரசியலை மறந்தே போவார்கள் என்னும் யதார்த்தம்.

இவ்வாறான பல்வேறு காரணிகளே இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்களை இணைத்து வைத்திருக்கின்றன. ஆனால் இந்த மேலோட்டமான பசையொட்டுக் கூட்டு, ஒற்றுமை இன்னும் எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்னும் கேள்வி நாளும் பொழுதும் பரந்து விரிந்து கொண்டே இருக்கிறது.

எந்த நேரத்திலும் தன்னைத் தமிழரசுக் கட்சிக்காரர்கள் கழட்டி விட்டு விடக்கூடும் என்ற கலக்கத்திலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உத்தியோக பூர்வமானதொரு தேர்தற் கட்சியாக ஆக்கிவேண்டும் என்று 'துயிராது, அயராது பாடுபடுகிறார்' என்பது வெளிப்படை. ஆனால் அவ்வாறு த.தே.கூ உத்தியோகபூர்வமான கட்சியாகிற போது அதிலுள்ள கட்சிகளின் தனித்துவத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமற் போய்விடும் என்பதே உண்மை. தனது நாடாளுமன்ற பதவி நிரந்தரமாகுவதற்கு எந்த வகையிலும் அரசியல் உத்தரவாதம் கிடைக்குமானால் தனது கட்சியை சாக்கடையில் தூக்கி எறிவதற்கும் தன்னை நம்பின கட்சி உறுப்பினர்களை? தனது அரசியற் சூதாட்டத்தில் பகடைக் காய்களாகப் பயன்படுத்துவதற்கும் சுரேஸ் எந்தவித கூச்சநாச்சமுமின்றி தயாராகவ  இருப்பார் என்பதே அவரது சுயஅரசியல் வரலாறு. தமிழரசுக் கட்சிக்காரர்களின் நிலை அதுவல்ல.

இன்று த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி மூக்கணாங் கயிறுகளெல்லாம் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற வகையில் திரு மாவை சேனாதிராஜா அவர்களின் கைப்பிடியிலேயே உள்ளது. த,தே.கூவானது உத்தியோக பூர்வமாக கட்சியானால் தமிழ்த்தேசிய அரசியலில் தன்னிடம் இன்றிருக்கும் கிடுக்குப்பிடி அதிகாரம் தன்னை விட்டுப் போய் விடும் என திரு சேனாதிராஜா அவர்கள் கவலை கொண்டிருப்பாரானால் அது அவரது நிலையில் தவிர்க்கமுடியாததே.

இலங்கையின் அரசியல் யாப்பு செயலாளர் நாயகம் என்னும் பதவியை அக்கட்சியின் அரசனாக்குகிறது. இலங்கையைப் பொறுத்த வரையில் ஒரு கட்சியில் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் என இரு பதவிகள் இருக்குமிடத்து அக்கட்சியின் ஸ்தாபன யாப்பு வெளிப்படையாக, எந்தவித மறுவிளக்கங்களுக்கும் வாய்ப்பின்றி அந்த இரு பதவிகளிலும் உள்ளோர் தொடர்பான அதிகாரங்களை மிகத் திட்டவட்டமாக வரையறுத்திருக்க வேண்டும். அத்துடன் அக்கட்சியின் உறுப்பினர்களும் தமது கட்சியானது ஸ்தாபன யாப்பின் பிரகாரம் ஒவ்வொரு கட்டத்திலும் செயற்படுகிறதா என்பதில் விழிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் இலங்கையின் அரசியல் யாப்பின்படி பொதுச் செயலாளர் என்னும் பதவியுடையவரை அக்கட்சியின் உள்விவகாரங்களில் எந்தவித சவாலுக்கும் இடமற்ற சர்வாதிகாரம் படைத்த ஓர் அரசன் போல் செயற்பட இலங்கையின் அரசியல் யாப்பு வாய்ப்பளிக்கிறது.

அதிலும் சில கட்சிகள் தலைவர் என்றதொரு பதவி இல்லாமல் வெறுமனே செயலாளர் நாயகம் என்ற பதவியை மட்டுமே கொண்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையின் போது இலங்கையின் அரசியல் யாப்பு நடைமுறையில் அக்கட்சியை ஒரு தனிமனிதனின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட ஒரு தனிமனிதக் கட்சியாக ஆகிவிட வழிவகுக்கிறது. திரு சுரேஸ் பிரேமச்சநதிரனிடம் செயலாளர்நாயகம் பதவியைக் கொடுத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரலாறு இதற்கு நல்ல உதாரணமாகும். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் இவ்வாறே. அதுவும் ஒரு டக்ளஸ் தேவானந்தாவின் தனிச்சொத்துரிமைக் கட்சியே.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்களில் திரு.சேனாதிராஜா அவர்களையும், திரு சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களையும் விட்டுப் பார்த்தால் ஏனையவர்கள் தமிழர் போராட்ட காலகட்டத்தில் பணத்தை உழைத்துக் களித்துக் கொண்டவர்களாகவும், கல்வியைச் சேர்த்து பிழைத்துக் கொண்டவர்களாகவுமே உள்ளனர். யாழ்ப்பாண தமிழரசுக் கட்சியோடு இப்போது ஒட்டிக் கொண்டுள்ள பலரும் கூட அப்படித்தான். அப்படியானவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் தாம் ஏதாவதொரு தேர்தலின் ஊடாக பதவிகளைப் பெறுவதற்கு பழைய இயக்கக்காரார்களின் உட்போட்டிகள் தம்மை எதிர்நோக்காமல் இருக்கும் நிலையை ஆக்கிவிடவேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அவ்வாறான போக்கும் யாழ்ப்பாண தமிழரசுக்கட்சிகாரர்கள் மத்தியில் சுரேஸூக்கு எதிராகச் செயற்படும் ஒரு பிரதானமா  ாரணியாக உள்ளது.

அதேவேளை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர்நாயகம் என்னும் அதிகாரக் கதிரையில் உட்கார்ந்திருந்து தன்னை நம்பிய சொந்தத் தோழர்களுக்கே துரோகம் செய்யும் வகையாக நெஞ்சில் எந்த ஈரமும் இல்லாமல் ஒரு கள்ளக் கூட்டத்தை கையில் வைத்துக்கொண்டு கட்சியின் பொதுச் சொத்துக்களுக்க  ுத்து விளக்கில் கணக்குக் காட்டிய திரு சுரேஸ் அவர்கள் கட்சியின் அரிய தோழர்களை புலிகள் அழித்தொழிப்பதற்கும் புலிகளுக்கு எடுபிடியாக நின்று துணை புரிந்தவர் என்பது பரவலாக அறியப்பட்ட விடயம். 

இலங்கையின் அரசியலில் ஒரு பதிவுசெய்யப்பட்ட கட்சியின் செயலாளர் என்பதன் சுகங்களையும், வசதிகளையும் அனுபவித்த பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படும் பட்சத்திலேயே குறைந்த பட்சம் திரு சேனாதிராஜாவையும், தன்னையும் சமப்படுத்திய வகையான இணைப் பொதுச் செயலாளர் பதவி தனக்குக் கிடைத்துவிடும் என்ற திட்டத்துடனேயே செயற்படுகிறார் என்பதுவும் புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒன்றே. திரு சுரேஸினால் திரு. சேனாதிராஜாவின் தலைமையின் கீழ் ஒரு ஜனநாயகபூர்வமான கட்சி உறுப்பினனாகச் செயற்படுவது மிகவும் கடினமான காரியமே.      

ஏய்த்துப் பிழைப்பவர்களுக்கு ஏமாற்றுபவர்களே கூட்டாளிகள்

தமிழரசுக் கட்சியோடு உள்ள கூட்டை விட்டுப் போனால் தனது எதிர்கால அரசியல் எதிர்பார்க்க முடியாத பல சவால்களைச் சந்திக்க நேரிடும் என்பதாலும் அதனால் தான் கற்பனைகள் பண்ணி வைத்திருக்கும் தனது எதிர்கால அரசியல் வாழ்வே சூன்யமாகிப் போய்விடுமோ என்ற அச்சமும் பிரேமச்சந்திரனை உளரீதியாக உள்ளுர அலைக்கழிப்பது புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒன்றே. அதுமட்டுமல்லாது இப்போது தன்னோடு நிற்பது போலக் காட்டிக் கொள்ளும் எத்தனை பேர் தன்னோடு சேர்ந்து இப்போதுள்ள கூட்டமைப்பை விட்டு விலகிப் போய் புதிய கூட்டைக் கட்ட முன்வருவார்கள் என்பதிலும் பிரேமச்சந்திரனுக்கு மிகுந்த சந்தேகங்களே நிறைந்திருக்கின்றன.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள தீவிர புலி ஆதரவாளர்களில் ஒரு கணிசமான பகுதியினர் திரு சம்பந்தர் மற்றும் மாவை சேனாதிராஜா அவர்களின் தலைமையானது படிப்படியாக மிதவாத சமரச அரசியற் தன்மைகளை நோக்கி நகர்வதனால் திருப்தியற்று இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. புலிகளின் எடுபிடியாக பிரேமச்சந்திரன் ஆனதன் பின்னர் பிரேமச்சந்திரனின் பேச்சுக்களும், அரசியலும் புரட்சி, சமூகநீதி, முற்போக்கான சமூகமாற்றம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தீர்வு என்பவற்றையெல்லாம் கைவிட்டு புலிகளை மகிழ்விக்கும் வகையான அதிதீவிர தமிழ்த் தேசியவாத அரசியல் முழக்கங்களை கிடைத்த இடங்களிலெல்லாம் உரத்ுக் கூவினார். இதனால் புலி ஆதரவாளர்களின் பாராட்டுகளுக்கும் உறவுகளுக்கும் உரியவரானார்.

மறுபுறமாக தொண்ணூறு வீதமான உண்மையான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்காரர்களை விட்டு சுரேஸ் வெகுதூரம் விலகிப்போனார். புலி ஆதரவளர்களின் ஆதரவும் அரவணைப்பும் சுரேஸூக்க  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்காரர்களின் தேவையை எந்தவொரு வகையிலும்  அவசியமற்றதாக்கியது - ஒரு சதத்துக்கும் பெறுமதியற்றதாக்கியது.

ஆறு கடக்க புலி ஓடக்காரனுக்கு ஆட்டைக் காட்டுகிறது

அண்மைக்காலமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தோழர்கள் சிலரின் உறவைப் புதுப்பித்தவிட சுரேஸ் பிரேமச்சந்திரன் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பது தெரிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சட்டபூர்வமாக ஒரு தேர்தற் கட்சியாகப் பதிவு செய்யும் தனது வேலைத்திட்டத்துக்கும், அது பிழைத்து விட்டாலும் அடுத்த கட்டமாக வேறொரு கூட்டைக் கட்டுவதற்கும் இப்போது சுரேஸூக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆட்பலம் தேவைப்படுகின்றது. இதுகாலவரை பலமும், பாலங்களும் வழங்கி வந்த புலித் தீவிரவாதிகள் தனது திட்டம் பிழைத்தாலும் தனக்கு தொடர்ந்து ஆதரவாக இருப்பார்களா என்ற சந்தேகம் சுரேஸூக்கு எப்போதோ ஆரம்பித்து விட்டது.

புலித் தீவிரவாதிகள் கைவிடும் பட்சத்தில் ஒரு மாற்று ஏற்பாட்டைத் தயாரா  ஆக்கி வைத்திருக்க வேண்டிய தேவை சுரேஸூக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி எனப் பயன்படுவதற்கு சில ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தோழர்களைக் கைப் பிடித்துச் செல்ல திரு பிரேமச்சந்திரன் கடும் முயற்சிகளை வெளிநாடுகளிலுள்ள சிலரின் ஊடாக மேற்கொள்கின்றமை தெரிகின்றது.

சுரேஸைப் பொறுத்த வரையில் இப்போதைக்கு எல்லாமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அல்லது செயலாளர் நாயகம் பதவியைப் பெறுவதே. குறைந்தபட்சம் திரு சேனாதிராஜாவோடு இணைந்த இணைப்பொதுச் செயலாளர் பதவி. தனது கையில் எச்சிற் சோறு ஒட்டி இருந்தாற் கூட அந்தக் கையால் காகம் துரத்தத் தயாராக இல்லாத சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைப் பொதுச் செயலாளர் பதவி கிடைத்து விட்டால் பக்கத்தில் நிற்பவரை ஏன் இவனால தேவையில்லாத செலவு என்பதற்காக ' நீ யார்' என்ற கேட்கக் கூடிய ஆள் என்பதை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தோழர்கள் அனைவரும் நன்கு அறிவர்.

தமிழரசுக் கட்சி சுரேஸ் பிரேமச்சந்திரனைத் தூக்கி வெளியே போடும் பட்சத்தில், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினாலும் விடமாட்டான் விக்கிரமாதித்தன் என திரு சுரேஸ் பிரேமச்சந்திரன் திரு ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையிலுள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் மற்றும் குதிரை கஜேந்திரன் தலைமையிலுள்ள அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியவை இணைந்த கூட்டமைப்பிலாயினும் அந்த இணைப் பொதுச்செயலாளர் பதவிக்காக விடாப்பிடியாக பாடுபடுவார் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் அப்போது யாழ்ப்பாணத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து ஆறு பேர் ஆக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சரவணபவன் தனது உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் உரிமையாளர் எனும் செல்வாக்காலும், கிளிநொச்சி சிறீதரன் உள்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளிலும் உள்ள புலிவாதப் பிரமுகர்களின் வற்புறுத்தலாலும், சுமந்திரன் அவர்கள் சம்பந்தரின் அரவணைப்பாலும் த,தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களாகி உரிய நேரத்தில் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களாகவும் ஆகிவிட்டார்கள். மேலும் சிற்றம்பலம், சிவஞானம், சிவச்சந்திரன், குலநாயகம், கௌரிகாந்தன், அருளானந்தன், என தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு நீண்ட பட்டியல் வேட்பாளர்கள் அடுத்த நாடாளுமன்ற பதவிகளுக்காக வரிசையில் நிற்கின்றனர். எனவே யாழ்ப்பாணத் தமிழரசுக் கட்சியினரால் அடுத்த நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கான வாய்ப்பிலிருந்து தமிழரசுக் கட்சிக்காரர்களால் விலக்கப்படப் போகிறவர் என்பதற்கான அதிக சாத்தியங்களைக் கொண்டவர் சுரேஷ் பிரேமச்சந்திரனே என்பது இப்போதே தெளிவாகிறது.

படைத்தவனே பறித்துக்கிட்டாண்டி – மானே கொடுத்தவனே எடுத்துக்கிட்ாண்டி

1994ம் ஆண்டுத் தேர்தல், 2000ம் ஆண்டுத் தேர்தல், 2001ஆம் ஆண்டுத்தேர்தல் என அடுத்தடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததனால் அத்தோடு தனக்கு அரசியல் வாழ்வு இல்லையெனக் கண்டபோது தான்தான் செயலாளர் எனக் கட்டியம் கூறி கையில் வைத்திருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைத் தூக்கி ஒரு மூலையில் போட்டு விட்டு குடும்பத்தோடு அமெரிக்கா ஊடாக கனடாவுக்கு ஓடி நிரந்தரமாகக் குடியேறப் போனவர்தான் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

அவரை 2001ம் ஆண்டுத் தேர்தலில் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கா புலிகளின் வேண்டுதலுக்கிணங்க மாதாந்தப் பணம் மற்றும் வசதிகளை வழங்கி மீண்டும் இலங்கைத் தமிழர் அரசியலில் களமிறக்கிவிட்டார் என்பதுவும் பரகசியம். அதன் பின்னர் புலிகளுக்கு அவரும் அவரோடு சேர்ந்து நின்ற கூட்டத்தினரும் மிகுந்த விசுவாசத்தோடு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முதன்மைத் தோழர்களான சுபத்திரன், நகுலன், ராசீக் உட்பட பல தோழர்களை அடுத்தடுத்து போட்டுத் தள்ளுவதற்கு துணையாக நின்று ஆற்றிய பெரும் சேவைகளுக்காக யாழ்ப்பாணத் தமிழ்த் தலைவர்களில் ஒருவராக ஆக்கப்பட்டார். வரதராஜப்பெருமாளையும் புலிகள் சீக்கிரத்தில் போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்று அதற்கான திகதியை சுரேஸின் கூட்டாளிகள் ஆவலோடு அந்த நாட்களில் எதிர்பார்த்து பல மாலை வேளைகளை தமது வவுனியா செயலகத்தில் குடிகளோடு கூடிய கொண்டாட்ட வேளைகளாக ஆக்கிக் கொண்டிருந்ததை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமாகும்.

எந்த யாழ்ப்பாண சமூகப் பிரமுகர்களால் திரு பிரேமச்சந்திரன் 2010ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டாரோ இன்று அதே யாழ்ப்பாண சமூகப் பிரமுகர்கள் மத்தியில் சுரேஸூக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் அவரை அரசியலிலிருந்தே ஒதுக்குவதென தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தன்னை வெளிநாடுகளிலுள்ள புலி ஆதரவு சக்திகள் தன்னைக் காப்பாற்றுவார்கள் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் இப்போது சுரேஸூக்கு அதிலும் இருந்த நம்பிக்கை குறைந்து போய்க் கொண்டிருப்பது தெரிகிறது. சுரேஸ் பிரேமச்சந்திரன் என்னதான் முகமூடிகள் போட்டாலும் புலிகளை எதிர்த்த காலத்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னணித் தலைவராக இருந்தவர் என்கிற வரலாறு சுரேஸின் அரசியத் தலைக்கு மேலே எப்போதும் 'மண்டையன் குழு' வாளாகத் தொங்கிக் கொண்டே இருக்கிறது.

அடுத்த நாடாளுமன்றத்துக்கென பொதுத் தேர்தலை நடத்தாமல் இப்போதிருக்கும் நாடாளுமன்றத்தை மஹிந்த அரசாங்கம் சர்வசன வாக்கெடுப்பு மூலம் நீடிக்க வாய்ப்பு உள்ளது என பரவலலாக எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஏற்பட்டால் சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக 2022ம் ஆண்டு வரை இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறு ஏதாவது அதிசயமாக நிகழ்ந்துவிடமாட்டாதா என சுரேஷ் பிரேமச்சந்திரன் இப்போதிருந்தே ஏங்கிக் கொண்டிருப்பார் என்பதுவும் புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒன்றே.

(பகுதி 12 ஐ நோக்கி தொடரும் ......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com