Contact us at: sooddram@gmail.com

 

வாழ்க பொதுபல சேனாவின் சேவைகள். வளர்க பொதுபல சேனாவின் ஆர்ப்பாட்டங்கள்                   

(யஹியா வாஸித்)

கனிகளை உண்ணும் பறவைகளுக்கு. வேர்களின் வேதனை தெரிவதில்லை.

 எல்லாமே கனவு போலவும் இருக்கின்றது. எல்லாமே நெனவு போலவும் இருக்கின்றது. எல்லாமே நேற்றுப்போலவும் இருக்கின்றது, அனைத்துமே உண்மை போலவும் தெரிகின்றது. உலகமே அமங்கலமாக விரிகின்றது. எதுவுமே மனசைவிட்டு விலகுவதாகவும் இல்லை, எதுவுமே இந்த பாழாய்ப் போன மனசைவிட்டு அகலுவதாகவும் இல்லை. அப்படியே தொண்டைக்குளிக்குள்ள பொறுத்துக்கொண்டு, மெல்லவும் முடியாமல், அடுத்த இனத்திடம் சொல்லவும் முடியாமல். இது நிஜமா, இது நிஜமா என மனசைப்பிராண்டிக்கொண்டு ............ யாரையாவது, எதையாவது கடித்துக்குதறவேண்டும் போல இருக்கின்றது. ஆனால் யாரோ கண்ணுக்குத்தெரியாத எவரோ வந்து குறுக்கே நின்று கொண்டு, பொறு ( சபூர் ), கொஞ்சம் பொறு ( சபூர் ) என கையிரண்டையும் கட்டி, நாக்கையும் வாயையும் அடக்கி வைத்துள்ளது போல் தெரிகின்றது.

புத்தருக்கு போதி மரத்தடிலும், முகம்மது நபி அவர்களுக்கு ஹிரா குகையிலும், மகாத்மாவுக்கு தென்னாபிரிக்க ரெயில்வே ஸ்டேஷனிலும் ஞானம் பிறந்ததாக கதைகதையாக சொல்லுவார்கள். சொன்னார்கள். ஆனால் நம்ம பொதுபலசேனா பிக்குகளுக்கு சோனவன்ட ஹலால் முத்திரையை பார்த்து ஞானம் பிறந்துள்ளதை பார்க்கும் போதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. ரூ லேட் ஹாமுதுறுணி.

என்னையும் சேர்த்து, சிறிலங்காவில் உள்ள மொத்த முஸ்லீம்களையும் எடுத்துக்கொண்டால், எங்களை விட புத்திசாலிகள் இந்த உலகத்தில் யாருமே கிடையாது. வீ ஆர் த கிங் ஒப் த சிறிலங்கா. அப்படித்தான் முந்தாநாளுக்கு முதல்நாள்வரை நினைத்துக்கொண்டிருந்தோம். மற்ற மொத்த தமிழனும், சிங்களவனும் மோடயாக்கள். அப்படி ஒரு ஆட்டம், பாட்டம், கூத்து, கும்மாளம். எங்களை யாரும் தட்டி கேட்க முடியடியாது. வேண்டிய கூத்த சிறிலங்காவில நாங்க செய்வம். செஞ்சம்.

தப்பாட்டம்-1

ஹைவே ரோட்டோரொத்தில் பள்ளி கட்டி, அதற்கு டபுள்கிளாசிங் கண்ணாடி பொருத்தி, கண்ணைக்கவரும் பெயின்ட் அடித்து, உள்தரைக்கு மாபள் பொருத்தி, அதற்கு மேலே. துருக்கியில் இருந்து ஸ்பெஷலாக தருவித்த காபட் விரித்து, பல லட்சங்களை அள்ளிவீசி பொங்கி. பெருமிதப்பட்டு. அல்ஹம்துலில்லாஹ். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்ட பள்ளிய எப்படி கட்டியிருக்கின்றோம் பார்த்தீர்களா என அடுத்தவனிடம் சொல்லி பெருமைப்பட்டு, இன்றைக்கு சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல். வாழ்க பொதுபல சேனா.

இறக்காமம், இல்லவத்துற, ஏறாவூர், வாழைச்சேனை, திருகோணமலை, மூதூர், மாவனல்லை, ஹொறவப்பொத்தானை, கிண்ணியா, வலஸ்முல்லை என கஞ்சிக்கு வழியின்றி, உலைவைக்க அடுப்பின்றி சின்னஞ் சிறுமிகளான ரிசானாக்களும், சித்தி பரிதாக்களும் அரபிகளுக்கு கக்கூசு கழுவப்போன சரித்திரம், இந்த புத்திசாலி சோனவனுகளுக்கு தெரியவே இல்லை. இவன் பள்ளி வாசல்களுக்கு வாசல்கால் வைப்பதிலும், கொழும்பு ரெண்டாம் குறுக்குத்தெருவில் நின்று கொண்டு பேமிற் கார்களுக்கு வரியை குறைத்து, எப்படி கொள்ளை லாபம் அடிக்கலாம் என்பதிலுமே குறியாக இருந்தான். இப்ப மஞ்சள் வாலாக்கள் வைத்துள்ளார்கள் ஆப்பு.

ஹலோ முஸ்லீம்களே கொஞ்சம் நில்லுங்க. நாங்களும் இந்த நாட்டுக்கு சொந்தக்காறர்கள்தான் எனக்கூறிக்கொண்டு பொதுபல சேனா களத்துக்கு வந்து மொத்த முஸ்லீம்களதும் செவியை முறுக்கி. ஒரு பாரிய ஸ்பீட் பிறேக்கரை போட்டுள்ளது. ரூ லேட் சகோதரயாக்களே. இதை நீங்கள் எப்பவோ செய்திருக்க வேண்டும்.

தப்பாட்டம்-2

இது கோட்டாஸ் வோர் பார்ட் டூ என்றுதான். கொஞ்சம் அரசியல சப்பி. துப்பி. கொட்டை போட்ட அனுபவஸ்தர்கள் அடித்துச் சொல்லுகின்றார்கள். கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என நேருக்கு நேராக துப்பாக்கிய நீட்டி தமிழ் இனத்தை அடக்கியது போல் அடக்காமல். இது தலைய தடவி கழுத்தை அறுக்கிற ஒரு பொறிமுறை. ஒரு குட்டி அடக்குமுறை. டோன்ற் திங் டூடூடூடூமச். சொந்த அப்பன் தாதுசேனனையே கொன்ற காசியப்பன் பரம்பரை நாங்க என்ற ஒரு அலட்சியமான எச்சரிக்கை.

அடிப்பன். ஒனக்கு அடிப்பன். அடோய் ஒனக்கு அடிப்பன். முந்தா நாள் அவன அடிச்ச மாதிரி உன்னையும் அடிச்சு முறிப்பன். அவன அடிச்சது ஒனக்கு தெரியும்தானே. முள்ளி வாய்க்கால் ஓரத்தில, சரணடைய வாங்க என அழைத்துவிட்டு, அடிச்சு, பிய்ச்சு மேஞ்சது புரியும்தானே. அதவிட வேகமாக உனக்கு அடிப்பன்.

ஆனால் அடிக்கமாட்டன். அதற்குரிய சகல ஆயத்தங்களையும் செய்வது போல் ஒரு பந்தா காட்டுதல். பாசாங்கு செய்தல். எதிரியை உளவியல் ரீதியாக மாய்ஞ்சி மயக்கமடையச் செய்தல். தூங்கமுடியாமல் செய்தல். தூக்கம் கண்ணை வெருட்டும். ஆனால் தூங்க முடியாது. பின் மண்டையில் பாரிய சுத்தியல எடுத்து அடிப்பன். என சொல்லாமல் சொல்லி முன் மண்டையின் வலமிருந்து இடமாக. இடமிருந்து வலமாக வலிக்கப் பண்ணுதல். மண்டையோட்டுக்குள்ள ஒரு நெருடலை உருவாக்குதல். அடிவயிற்றில் ஒரு குட்டி வலியை ஏற்படுத்தல். லேசா ஒரு கலக்கல். ஒரு சின்ன உருண்டை அடிவயிற்றிலிருந்து மேலெழும்பி அப்படியே நெஞ்சுக்குளிக்குள்ளால வந்து. நெஞ்சுக்கூட்டை உலுப்பி தொண்டைக்குளிக்குள்ள சிக்கச் செய்தல். மொத்த சோனவனும் விழுங்கவும் முடியாமல், கக்கவும் முடியாமல் முழிபிதுங்கிப் போய் இருக்கின்றார்கள். பஜிரோக்களில் கண்மண்தெரியாமல் மாற்று இன மக்களுக்கு முன்னால் பறந்து திரிந்த என் போன்ற சோனவனுக்கு இது வேணும். வாழ்க பொதுபல சேனா.

ஹலால் முத்திரையை நிற்பாட்டு என வறக்காப்பொலயில் ஒரு ஆர்ப்பாட்டம். அதே நேரம் நோ லிமிற்றில பொருள் வாங்காதே என தெகிவளையில் ஒரு தப்பாட்டம். என்னடா இது புதுப்பிரச்சனை என சோனவன் சிந்திக்க முதல் பர்தா போடாதே என குருநாகலையில் ஒரு குத்தாட்டம். அடச் சீ இது பெரிய வம்பாக இருக்கிறதே என யோசிக்க முதல், முஸ்லீம்கள் இனி மாடறுக்க கூடாது என பதுளையில் ஒரு போராட்டம். மூச்சு முட்டுதே என கண்ணை மூடித்திறப்பதற்கிடையில் புதிதாக பள்ளிகட்டாதே, உள்ள பள்ளிகளை இடித்து தள்ளு என ஒரு வெறியாட்டம்.

இதே வித்தையைத்தான் பிரபாகரனை அழிக்கு முன் ( கோட்டாஸ் வோர் பார்ட் ஒன் ) கொழும்பில் 2007களில் தமிழ் வியாபாரிகளை நோக்கி நடாத்தியிருந்தார்கள். அதாவது தமிழ் பெரும் வர்த்தகர்களை கடத்தி கப்பம் கேட்பது என்ற பெயரில் மிரட்டினார்கள். இங்கு அவர்களது நோக்கம் கப்பப் பணமல்ல. தமிழ் வர்த்தகர்களை பயமுறுத்தி. வேர்க்க விறுவிறுக்க பண்ணி நாட்டை விட்டு ஓடப்பண்ணுவது. ஓடப்பண்ணினார்கள். தமிழ் வர்த்தகர்கள் நாட்டை விட்டு தப்பினோம் பிழைத்தோம் என ஓட, தமிழர்களின் முழு வர்த்தகமும் கைமாறியது. இப்போது முஸ்லீம் வர்த்தகர்கள் மட்டுமல்ல முஸ்லீம் உலமாக்களையும், பெரும் தன வந்தர்களையும், அறிஞர்களையும் குறிவைத்து ஆட்டம் தொடங்கியுள்ளது.

வர்மக்கலையில யோகாசனம். வீராசனம். சர்வாங்காசனம். சாந்தி ஆசனம். பத்மாசனம். ஒட்டகாசனம் என பல சங்கதிகள் இருக்கின்றது. அதுல பிராண மோகன வர்மம் என்பதும் சுண்டு வர்மம் என்பதும் கொஞ்சம் எடக்கு மொடக்கான சமாச்சாரங்கள். இந்த சுண்டு வர்மம் இருக்கின்றதே அது எந்த பெரிய கொம்பனையும் ஒரு உலுக்கு உலுக்கி எடுக்கும். மஸ்தான்களும், பெரும் சூபிக்களும், வர்மக்கலை தாத்தாக்களும் இந்த சுண்டு வர்மத்தை லேசில் யாருக்கும் கற்றுக் தர மாட்டார்கள். அதாவது ஆள்காட்டி விரலை மடக்கி ஆண்குறிக்கும். அடிவயுற்றுக்குமிடையில ஒரு நொக் ( லொக்- பூட்டு ) போடுவது. அந்த நொக்கைத்தான் திருவாளர் அதிஉத்தம கோட்டாபாய ராஜபக்ஷ மொத்த சிறிலங்கா முஸ்லீம் காக்காமாருக்கும் போட்டுள்ளார். இந்த சுண்டுவர்மத்தை நிவர்த்தி செய்ய மறுதட்டுகளரி என்கின்ற வர்மவர்மத்தை உபயோகிக்க ஆள் இன்றி மொத்த சிறிலங்கா முஸ்லீம்களும் முகட்டை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். எஸ் வீ வோன்ட் ஒன் ஒன் மேன் ஆமி போர் அவர் லீடர்சிப்.

தப்பாட்டம்-3

அதுசரி மச்சான் சிறிலங்காவில முஸ்லீம்களுக்கு இவ்வளவு பிரச்சனை நடக்கின்றதே. ஒரு பதினைந்து வருடத்துக்கு முதல்ல இருந்து நேற்றைய கிழக்கு மாகாண சபை தேர்தல்வரை மகிந்த மவராசனை தங்கட பொக்கற்றுக்குள்ளயும், கோட்டாபாய ராஜபக்ஷவை தங்கட உள்ளங்கைக்குள்ளயும், பஷில் ராஜபக்ஷவை தங்கட இடுப்புக்குள்ளயும் வைத்திருப்பதாக சொல்லிக்கொண்டு வாக்குகளை அள்ளிச்சென்ற உங்கட முஸ்லீம் தலைவர்கள் எங்க மச்சான் என நம்முட முன்னாள் தோழர் ஒருவர் கேட்டார்.

இந்த மண்ணாங்கட்டி கேள்விய யாரும் கேட்டிட கூடாது என்பதற்காகத்தான் கடந்த இரண்டு மாதமாக எந்த தமிழ் நண்பர்களின் கண்ணிலும் படாமல் ஒழித்துக்கொண்டு திரிந்தேன். கட்டார் விமான நிலையத்துல றாண்சிட்டுக்கு நிண்டபோது 5/3/2013ல் ஒரு முன்னாள் தோழர் மடக்கி போட்டார். தோழர் இப்ப குடியும் குடித்தனமுமாக கனடாவில் இருக்கின்றாராம்.

எதை சொல்வது. எதை விடுவது. என்னத்தை சொல்வது. எப்படி சொல்வது. எங்களிடம் வாக்கை வாங்கி விட்டு. கொழும்பில் போய் காலில் விழுந்ததை சொல்வதா. எங்களிடம் வீரம் பேசிவிட்டு. அங்கு பாராளுமன்றத்தில் தூங்கி வழிவதை சொல்வதா. எங்களிடம் சாணக்கியம் கதைத்துவிட்டு, இப்போது முந்தானைகளுக்குள் முடங்கிக்கிடப்பதை சொல்வதா. எங்களிடம் தத்துவம் பேசிவிட்டு அங்கு மந்திரி பதவிகளுக்கும், புதுப் புது கோட்டாக்களுக்கும் சண்டை பிடிப்பதை சொல்வதா எதை சொல்வது எதை விடுவது.

நான் அரசிடம் நியாயம் கேட்கப் போனால் என்னை விட்டு விட்டு என் கட்சியில் உள்ள ஒருவரை மந்திரியாக்கிவிடுவார்கள் அதனால்தான் நான் நியாயம் கேட்க வில்லை. கேட்கவும் மாட்டேன். இதுதான் எமது இன்றைய மொத்த தலைவர்களின் நிலமை. அல்ஹம்துலில்லாஹ் எவ்வளவு பெரிய கொள்கை விளக்கம் பார்த்தீர்களா. வெட்கம். ரோஷம். மானம். மரியாதை ஏதாவது இவர்கள் முகத்தில் தெரிகின்றதா. என்ன ஜாலியாக முன்னாலும். பின்னாலும் சிவப்பு மோட்டார் சைக்கிள் பறக்க வீதிஉலா செய்கின்றார்கள். ஹாய் சகோதரயா, அதுதான் பலசேனா சகோதரர்களே எப்போது இவர்களது சொத்துக்கணக்கை கேட்கப் போகின்றீர்கள். வீ ஆர் வெயிட்டிட் போர் தட் செலிபரேஷன்.

1948இல் இந்தியாவில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஓமந்தூர் செட்டியார் இருந்தார். இவர் ஒரு முறை தனது காரில் குற்றாலத்துக்கு அரசு விடயமாக சென்றவர் குற்றாலத்தில் அன்றிரவு நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளார். அடுத்தநாள் தனது றைவருடன் சென்னை வரும்போது கார் டிக்கியில் ஏதோ உருள்வது போல் சத்தம் கேட்டுள்ளது. காரை நிற்பாட்டி டிக்கியை திறந்து பார்த்துள்ளார். அங்கே ஒரு பலாப்பழம் இருந்துள்ளது. இது அந்த வீட்டு தோட்டத்தில் இருந்து நான் பறித்து வைத்தது என றைவர் சொல்லியுள்ளார். பழத்துக்குரிய பணம் கொடுத்தாயா அல்லது அவர்களது அனுமதியாவது பெற்றாயா என றைவரை கேட்க அவர் கையை விரித்துள்ளார். உடனடியாக றைவரை காரைவிட்டு இறக்கி, றைவரின் கையில் பஸ்ஸுக்கு பணமும் கொடுத்து, உரியவரிடம் பழத்தை கொடுத்து மன்னிப்பு கேட்டுவிட்டு. பழத்தை பெற்றுக்கொண்டேன் என ஒரு சீட்டிலும் உறுதிப்படுத்திக்கொண்டு வா என அனுப்பியது மட்டுமல்லாமல். எனது இந்த பணத்தையும் அடுத்த மாத சம்பளத்தில் பிடிப்பேன் என சொல்லியுமனுப்பினுப்பியுள்ளார் அந்த மனிதகுல மாணிக்கம்.

ஆனால் நம்மவன். முகம்மது நபியின் பரம்பரையில் வந்ததாகவும், அலி ( றலி )யும். உமர் ( றலி )யும் எங்கள் வழிகாட்டிகள் எனவும் கூறி வாக்கு கொள்ளையடித்துவிட்டு. மொத்த சிறிலங்கா சோனவனையும் ஏலம் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

தப்பாட்டம் -4

ஹாமுதுருணி, பொதுபலசேனா ஹாமுதுருணி கொழும்பிலும். கண்டியிலும் ஓடித்தியும் பஜிரோக்களையும், கட்டப்படும் கட்டிடங்களையும் பார்த்துவிட்டு தம்பிலா லங்க கொடக் சல்லி தியனவா ( முஸ்லீம்களிடம் நிறைய பணமிருக்கின்றது ) என தப்பு கணக்கு போட்டு விடாதீர்கள் ஹாமுதுருணி. அவ்வளவும் பம்மாத்தும். வியாபார தந்திரங்களும் ஹாமுதுருணி. கொழும்பில் வாழும் மொத்த மூஸ்லீம்களில் 3 வீதமானவர்கள் காட்டும் கூத்துக்காக 97 வீதமான கொழும்பு முஸ்லீம்களை பழிவாங்கி விடாதீர்கள். கொழும்பில் வாழும் மூஸ்லீம்களில் 73 வீதமானவர்கள் அன்றாட கஞ்சிக்கு வழியின்றி. சேரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கினறனர். அவர்களை தண்டித்துவிடாதீர்கள் ஹாமுதுருணி.

ஹாமுதுருணி, புதுப்புது பில்டிங்குகள் கட்டி, கட்டம் போட்டு பள்ளி கட்டுபவர்களையும் அதற்கு பணம் அறவிடுபவர்களையும் கொஞ்சம் அதட்டி வையுங்க ஹாமுதுருணிகளே. எங்கட அல்லாஹ் அதாவது எனக்கு தெரிந்த அல்லாஹ் தொழுவதற்கு ஒரு இடம் இருந்தால் போதும் என்றுதான் கூறியுள்ளானே தவிர மாடி மேல மாடி கட்டிய பள்ளி வேண்டும் என்று எங்குமே சொல்லவில்லை. அந்த பாரிய பள்ளிகள் கட்ட அறவிட்ட. அறவிடும் பணங்களை ஏழை குடும்பங்களின் உயர்கல்விக்கும், தொழில் வாய்ப்புகளுக்கும் பயன்படுத்தச்சொல்லுங்கள் ஹாமுதுருணி.

டியர், மைடியர  ேர்வின் சில்வா சேர் முஸ்லீம்கள் மாடறுப்பதை தடுக்க ஏதாவது அவசரகால அல்லது பயங்கரவாத அல்லது குண்டர் சட்டத்தை அமுல்படுத்துங்க மந்திரிதுமா. இந்த மாட்டிறைச்சியை திண்டு, திண்டு கொழுத்து பெருத்து. கொலஸ்ரோலையும். டயபட்டிசையும் விலைக்கு வாங்கி மொத்த பணத்தையும் மூன்று நட்சத்திர. ஐந்து நட்சத்திர வைத்தியசாலைகளுக்கு செலவழித்துக்கொண்டிருக்கின்றார்கள் மந்திரிதுமா. அந்தப்பணங்களை எங்கள் கிராமத்து சிறார்களுக்கு செருப்பு வாங்கவாவது பயன்படுத்த சொல்லுங்க மந்திரிதுமா.

பொலன்னறுவை, பிபிளை. வீரகட்டிய போன்ற தனிசிங்கள கிராமங்களில் அப்பாவி சிங்கள மக்களிடம் இருபதாயிரம் ரூபாவுக்கும், 22ஆயிரம் ரூபாவுக்கும் வாங்கிய நோயும் நொடியும் உள்ள மாடுகளை அறுத்து கொள்ளைலாபம் உழைப்பது மட்டுமல்ல. கொள்ளை நோயையும் முஸ்லீம்கள் மத்தியில் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள். பிளீஸ் ஹெல்ப் ரு அஸ் சேர்.

எந்த முஸ்லீம்களிடமும் இன்று அறுப்பதற்கான மாடுகள் கிடையாது. புலிகளின் காலத்தில் அனைத்தையும் கடத்தி, தின்று தீர்த்துவிட்டார்கள் மந்திரிதுமா. சிங்கள கிராமப்புற பாட்டாளி மக்கள்தான் இன்று அறுவைக்குரிய மாடுகளை விற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்கு தர விரும்புகின்றோம்.

இந்த ஹலால் பிரச்சனையை யைமாக வைத்து ஒரு அரசியல் செய்யலாம் என நினைத்துக்கொண்டு. ஐரோப்பாவில் சிக்கன் கடையில் குப்பைகொட்டிய வேலையை உதறிவிட்டு. கடந்த இரண்டு மாதங்களாக சிறிலங்கா முழுக்க ஒரு சுற்று சுற்றி. உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்களை கைக்குள் போடலாம் என வீதி வீதியாக அலைந்ததுதான் மிச்சம். கையில் இருந்த காசுதான் கரைந்ததே தவிர ஒரு சோனகனாவது. அற்லீஸ் ஒரு இளைஞனாவது முன்னுக்கு வரவுவில்லை. ஆதரவு தரவுமில்லை. எவ்வளவோ சொல்லிப்பார்த்தோம். நமக்கு வடக்குடனும் நீண்ட நெடிய தொடர்பிருக்கின்றது. தாடிக்களுடனும் தொடர்பிருக்கின்றது. அது தூக்கிய அனுபவமும் நிறையவே இருக்கின்றது. வாங்கடாப்பா எல்லாருமா சேர்ந்து பொதுபல சேனாவுக்கு ஒரு முடிவுகட்டுவோம்.

மொத்த சிறிலங்கா முஸ்லீம்களும் தெளிவாக இருக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றனர். சிறிலங்காவில் சிங்கள சிறிலங்கா அரசுக்கு எதிராக ஒரு துரும்பையும் அசைப்பதே இல்லை என்பதில் ரொம்ப கிளியராக இருக்கின்றனர். இதற்காக மொத்த சோனவனையும் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் ஒரு அதிசயம் சிறிலங்கா முஸ்லீம்களிடத்தில் மிக மிக வேகமாக நடந்துகொண்டிருக்கின்றது. ஆம் சிறிலங்காவின் ஒட்டுமொத்த முஸ்லீம்களும் புதிதாக இஸ்லாத்தை தழுவிக்கொண்டிருக்கின்றார்கள். மூச்சுக்கு முன்னூறு தடவை அல்லாஹ் காப்பாற்றுவான் என சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். ஆறுமாதத்துக்கு முன் சிறிலங்காவுக்கு வியாபார விடயமாக என்னை அழைப்பித்து. தலதாரி ஹோட்டலில் றூமும், பிளக் லேபலும். பிறண்டியும் உடைத்த நம்ம நீர்கொழும்பு பெரியமுல்ல காக்கா தொப்பியும் கையுமாக இருக்கின்றார். கோட் இஸ் கிறேட்.

இது இப்படி என்றால் மொத்த சிங்கள சமூகமும் இஸ்லாம் படிக்க தொடங்கிவிட்டார்கள். திம்பிரிகஸ்சாய ஆட்டோ றைவர் சரத்மல்லி குரானைப்பற்றி புட்டு புட்டு வைக்கிறார் என்றால். மாவனல்ல ஹிங்குல் ஓய லொக்கு ஹாமுதுருவுக்கு முகம்மது நபி மரணித்த தினத்தன்று உதுமான் ரலிக்கும். அலி ரலிக்கும் என்ன கொடுக்கல் வாங்கல்கள் நடாந்தது என தெளிவாகவே தெரிகின்றது. இது இப்படி இருக்க. கதிர்காம கந்தனுக்கருகில் இருக்கும் பெரியவிகாரையில் அமர்ந்திருக்கும் குட்டி கபுரால தொடக்கம் பெரிய கபுரால வரை. பக்கத்தில் ஒள்ள பால்குடிபாபா பள்ளிக்குள் குர்ஆனுக்கு விளக்கம் கேட்டுக்கொண்டு திரிகின்றார்களாம். வராகபொலையில் பொதுபல சேனாவுக்காக கொடிபிடித்த அரநாயக்கவைச் சேர்ந்த நண்பர். திப்பிட்டி காக்காவிடம் வந்து குரான் மொழிபெயர்ப்பொன்று வாங்கிச் சென்றுள்ளது. வாழ்க. வாழ்க பொதுபலசேனா சகோதரர்கள்.

இஸ்லாத்தை மறந்து பணம் பணம் பணம்தான் எல்லாம் என்று அலைந்த எங்களை ஒரு உலுக்கு உலுக்கி நிற்பாட்டி, நிமிர வைத்து இஸ்லாத்தின்பால் திருப்பிய. திருப்பிக்கொண்டிருக்கும் பொதுபலசேனா தலைமைக்கும். அதன் அபிமானிகளுக்கும் எமது நன்றிகள். மறுமுறை ஆர்ப்பாட்டத்துக்கு ஆள்தேவை என்றால் என்னையும் அழையுங்கள். எனது ஈமெயில் விலாசம் கீழே உள்ளது.

புத்தம் சரணம் கச்சாமி- புது சரணம்

தம்மம் சரணம் கச்சாமி.- தர்மம்

சங்கம் சரணம் கச்சாமி.- சங்கயா

                      ( ட்ரிபள் ஜெம் )

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com