Contact us at: sooddram@gmail.com

 

பழமைவாதக் கட்சி தமிழ் ஏதிலிகளை "ஆட்கடத்தல்காரர்கள்" "புலிகள்" "பயங்கரவாதிகள்" "கிறிமினல்ஸ்" என்று அர்ச்சிக்கிறது!

சீடன் -  எங்கே பார்த்தாலும் தேர்தல் மயம். இலங்கையில் மார்ச் 17 இல் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தமிழ் நாட்டில் சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரில் 13 நடந்து முடிந்து விட்டது. கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் மே 2 இல் நடைபெற இருக்கிறது.

குரு - மக்களாட்சி முறைமையில்  ேர்தல் இன்றியமையாதது. முறைக்கு முறை தேர்தல் இல்லாவிட்டால் நாட்டில் சர்வாதிகாரம் தலை தூக்கிவிடும்.

சீடன் - நீங்கள் சொல்வது சரி குருவே! ஆனால் தேர்தல் நடந்தால் மட்டும் அது மக்களாட்சிக்கு அடையாளம் இல்லை. சீனாவில் கூட தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் அங்கு ஒரு கட்சி ஆட்சிதான் நடைபெறுகிறது. சிறிலங்கா போன்ற நாடுகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.  ஆனால் முறையான தேர்தல் நடைபெறுவதில்லை.  மக்களாட்சியின் நான்காவது தூணான ஊடக சுதந்திரம் இருப்பதில்லை. ஆளும் கட்சி அரச வளங்களையும் பணத்தையும் இறைத்து தேர்தலில் வென்றுவிடுகிறது!

குரு - கனடாத் தேர்தல் எப்படிப் போகிறது?  இரண்டு தமிழ் வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்களாமே?

சீடன் - ஒருவர் ஆளும் பழமைவாதக் கட்சியில் கேட்கிறார். மற்றவர் எதிர்க்கட்சியான புதிய மக்களாட்சி கட்சியில் கேட்கிறார்.

குரு -  ஆளும் கட்சியில் தமிழர் கேட்கிறாரா? அந்தக் கட்சிதானே வி.புலிகள் இயக்கத்தை ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களில் தடை செய்தது? பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து உலகத் தமிழர் இயக்கத்தைத் தடை செய்தது? இப்போது சன் சீ கப்பலில் வந்த 492 தமிழ் ஏதிலிகளை "பயங்கரவாதிகள்" "ஆட்கடத்தல்காரர்கள்" "கிறிமினல்ஸ்" என்று வசை பாடுகிறது. அதற்காகவே மிகவும் கொடூரமான சட்டமுன்வரைவு சி - 49  ாடாளுமன்றத்தில்  கொண்டுவந்தது. அந்தக் கட்சியில் எப்படி ஒரு தமிழர் போட்டி போடலாம்?  கார்ப்பரின் பழமைவாதக் கட்சி தீவிர வலதுசாரிக் கட்சி. முன்னர் பிறாயன் மல்றோனி தலைமையில் ஆட்சி செய்த முற்போக்கு பழமைவாதக் கட்சி வேறு இந்தப் பழமைவாதக் கட்சி வேறு. பிறாயன் மல்றோனி 1986 இல் கப்பலில் வந்த 155 தமிழர்களை இரு கை நீட்டி வரவேற்றவர் ஆயிற்றே?

சீடன் - நீங்கள் சொல்வதெல்லாம் சரி.  ஆனால் நாடாளுமன்ற நாற்காலி ஆசை பிறந்தால் எந்தப் பேயோடும் கைகுலுக்கச் சிலர் ஆயத்தமாக இருக்கிறார்கள்.  "புலிகள் கதை முடிந்து விட்டது (done and gone)   அவர்கள் பற்றிக் கவலைப் படுபவர்கள் யாரும் இல்லை.  நான் புலிகளுக்கு முன்னர் வேலை பார்த்ததே கிடையாது. இனிமேலும் பார்க்கப் போவதில்லை. நாங்கள் பழமைவாதக் கட்சியோடு வைத்திருக்கும் உறவு பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை....." இப்படி ஒருவர் இங்கு வெளியாகும் ஆங்கில செய்தித்தாளுக்கு செவ்வி கொடுத்துள்ளார்.

குரு - போகிற போக்கைப் பார்த்தால் "நாங்கள் புலிகளது போராட்டத்தை ஆதரித்தவர்கள்" என்று சொல்வதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் போல் தோன்றுகிறதே?

சீடன் - சரியாகச் சொன்னீர்கள். வெற்றியை சொந்தம் கொண்டாட அநேகம் பேர் முன்வருவார்கள் ஆனால் தோல்வி ஒரு அநாதை என்பது பழமொழி. ஸ்காபரோ தென் மேற்குத் தொகுதியில் பழமைவாதக் கட்சி சார்பில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர் "புலிகள் இயக்கம்  தட செய்யப்பட்டதை ஆதரிக்கிறீரா?" என்ற கேள்விக்கு "ஆமாம்" என்று பதில் அளித்திருக்கிறார்!

குரு - உரலுக்குள் தலையை விட்டுவிட்டு உலக்கைக்குப் பயப்பட்டால் எப்படி?
தேர்தல் அரசியலில் இப்படியான குத்துக்கரணங்கள்  அடித்துத்தான் ஆக வேண்டும். அல்லது வெல்ல முடியாது. சரியான வேட்பாளர் பிழையான கட்சியில் கேட்கிறார் என வைத்துக் கொள்ளலாம்.

சீடன் - அப்படியொரு கேடு கெட்ட அரசியல் நடத்த வேண்டுமா?  இந்தக் கேள்விக்கு "நான் மட்டுமல்ல முழுத் தமிழ்மக்களும் வி.புலிகளை ஆதரிக்கிறார்கள்" என்று பதில் இறுத்திருக்கலாமே? அல்லது நான் வி.புலிகளை ஆதரிக்கிறேன், ஆனால் அதன் பொருள் அவர்கள் கையாளும் வழிமுறைகளை ஆதரிக்கிறேன் என்பது அல்ல" (I support the Tigers but not necessarily the means ) என்றாவது சொல்லியிருக்கலாமே?

குரு - அவர்தான் தான் ஒரு இனம்சார்ந்த வேட்பாளன் இல்லை. நான் ஒரு கனடியன் என்கிறாரே? பின் எதற்குத் தகராறு?

சீடன் - அதுவும் சரிதான். தமிழ் வாக்காளர் வாக்குப் போட்டு அவர் வெல்லப் போவதில்லை. தமிழர் அல்லாதவர்களது ஆதரவு இருந்தால் மட்டுமே வெல்ல முடியும். அதற்கு இசைவாக அவர் தனது முதற் பெயரையும் வசதியாக மாற்றி விட்டார்! நல்லகாலமாக தனது கடைசிப் பெயரை மாற்றாமல் விட்டு விட்டார்.

குரு - இந்தத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தால் முதல் வேலையாக  இந்த சட்ட வரைவை மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப் போவதாக தலைமை அமைச்சர் கார்ப்பர் பகிரங்கமாகக் கூறியுள்ளாரே? அந்த சட்ட வரைவு என்ன சொல்கிறது?

சீடன் - இந்தச் சட்டமூலம் குறிப்பிட்ட ஒருவர் தனக்கு எதிர்மறையான தீர்ப்புக்கு எதிராக ஏதிலிகள் வாரியத்தின் ஏதிலிகள் மேன்முறையீடுப் பிரிவுக்கு மேன்முறையீடு செய்யும் உரிமையை மறுக்கிறது. ஒருவரது உயிர் மற்றும் சுதந்திரம் கேள்விக்குறியாகும் போது மேன்முறையீடு என்பது ஏதிலிகள் தொடர்பான முடிவுக்கு எதிராக அடிப்படைப் பாதுகாப்பு ஆகும். முதல் மட்டத்தில் பிழைகளைத் திருத்தும் வாய்ப்பை நீக்குவதன் மூலம் இந்தச் சட்ட மூலம் ஏதிலிகள் தொடர்பாக கனடா அதன் முக்கிய அடிப்படைக் கடப்பாடுகளை மீறும் இடர்பாட்டில் உள்ளது. அதாவது அவர்களை துன்புறுத்தலுக்கு மீண்டும் அனுப்பக் கூடாது என்பதாகும். (ஏதிலிகள் மரபு, விதி 33). மேலும் இந்தச் சட்ட வரைவு  ுடும்ப மீள் இணைவுக்கு முட்டுக்கட்டை போடுகிறது5 ஆண்டுகளில் நிரந்தர வாழ்விடத்துக்கு விண்ணப்பம் செய்யும் சில ஏதிலிகளது உரிமையை அபகரிக்கிறது. இப்படி குடிவரவாளர்களுக்கு எதிரான பல அம்சங்கள் இந்த சட்ட வரைவில் இருக்கிறது.

குரு - பழமைவாதக் கட்சி தமிழர்களை இலக்கு வைத்து கீழ்த்தரமான முறையில் விளம்பரம் செய்கிறதாமே?

சீடன் - ஆமாம்.   சன் சீ கப்பலில் வந்தவர்களுக்கு எதிராக மிகவும் கீழ்த்தரமான விளம்பரத்தையும் அந்தக் கட்சி செய்கிறது.  நேரடியாக அவர்களை "ஆட்கடத்தல்காரர்கள்" "கிறிமினல்ஸ்"  "பயங்கரவாதிகள்" என வசை பாடுகிறது.  ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் இந்த விளம்பரத்தில் இனவாத நெடில் அடிப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. யேசன் கெனி மற்றும் அவர் போன்றவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் "சட்டவிரோதிகள்" "பயங்கரவாதிகள்" என்ற பசப்புரை குடிவரவாளர்களை கீழ்மனிதர்களாக நடத்துவதை நியாயப்படுத்துவதற்கும் மக்கள் மனங்களில் ஒரு அச்ச சூழ்நிலையை உருவாக்கவும் பயன்படுகிறது. இவ்வளவிற்கும் இன்றைய கனடா குடிவரவாளர்களாலேயே கட்டியெழுப்பப் பட்டுள்ளது என்பது மனங்கொள்ளத்தக்கது.

குரு - பின் ஏன் அந்தக் கட்சிக்கு சில தமிழர்கள் வேலை செய்கிறார்கள்?  உதைக்கிற காலை எப்படி முத்தமிடலாம்?

சீடன் - பாம்புக்கு பால் வார்த்தாலும் அது கடிக்கும் என்பது தெரிந்தும் தங்கள் சுயநலத்துக்காக பழமைவாதக் கட்சியை ஆதரிக்கிறார்கள். ஆளுங்கட்சியோடு ஒத்துப் போனால்தான் எதையாவது பெறலாம் என்கிறார்கள்.  அதனை எந்த வெட்கமோ துக்கமோ இன்றி  "ஆய்வாளர்" என்ற போர்வையில்  வான் அலையில் வந்து ஆதரவு திரட்டுகிறார்கள்வேதனை என்னவென்றால் அதற்கு மண்ணையும் மனங்களையும் நேசிக்கும் வானொலி களம் அமைத்துக் கொடுக்கிறது!

குரு - இந்த இணக்க அரசியலைத்தானே நாட்டில் டக்லஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் செய்கிறார்கள்?  சிங்கள ஆட்சியாளர்களோடு மோதிப் பயனில்லை கெஞ்சி மன்றாடித்தான் எதையும் பெறலாம் என்பவர்களுக்கும் பழமைவாதக் கட்சியை ஆதரிப்போருக்கும் என்ன வேற்றுமை?

சீடன் - ஒரு வேற்றுமையும் இல்லை. இரண்டு தரப்பாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

குரு -  ிபரல் கட்சி தமிழர் ஒருவருக்கு தொகுதி கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே?

சீடன் - ஒரு அரசியல் கட்சியில் போட்டி போடுவதென்றால் அந்தக் கட்சியில் சேர்ந்து நீண்ட காலம் உழைக்க வேண்டும். கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டிருக்க வேண்டும். தெருவாலே போகிறவர்களை எல்லாம் வலிந்து கூப்பிட்டு லிபரல் கட்சி தேர்தலில் நிறுத்தாது.  லிபரல் கட்சி நமு பொன்னம்பலத்தை நிறுத்தினால் அவர் பெயரளவில் ஒரு தமிழர் என்பதற்காக வாக்குப் போடுவீர்களா? நடந்து முடிந்த மாநகர சபைத் தேர்தலில் இவரைத்தான் லிபரல் கட்சி பொப் றே பரிந்துரை செய்திருந்தார்!

குரு - சரி. இந்தத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

சீடன் - முதலில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதைச் சொல்கிறேன். பழமைவாதக் கட்சிக்கு எந்தச் சூழ்நிலையிலும் வாக்களிக்கக் கூடாது. பழமைவாதக் கட்சிக்கு வாக்களிப்பது தெருவிலே போகிற சனியனை விலைக்கு வாங்கியதாக முடியும்.  அது ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளும் தமிழர்களுக்கு இருண்ட காலமாகவே இருக்கும். எஞ்சிய இரண்டு கட்சிகளில் புதிய மக்களாட்சிக் கட்சி உழைக்கும் மக்கள் சார்பாகவும்  ுதிய குடிவரவாளர் சார்பாகவும் நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் குரல் கொடுக்கும் கட்சி. பெரும்பான்மையான தமிழர்கள் சாதாரண தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்தக் கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும்.  ஆனால் புதிய மக்களாட்சிக் கட்சிக்குப் போடுவதால் பழமைவாதக் கட்சி வெல்ல வாய்ப்பிருந்தால் அதைத் தடுக்குமுகமாக லிபரல் கட்சிக்குப் போட வேண்டும். நோக்கம் பழமைவாதக் கட்சி பதவிக்கு வருவதை எப்பாடு பட்டும் தடுக்க வேண்டும் என்பதே!

குரு - ஒரு கூடைக்குள் எல்லா முட்டைகளையும் வைக்கக் கூடாது. தமிழ்மக்கள் மூன்று கட்சியிலும் இடம் பிடிக்க வேண்டும் என்கிறார்களே? அதற்கு பிரித்தானியாவை மேற்கோள் காட்டுகிறார்களே?

சீடன் -  ஏன இரண்டு தோணியில் கால் வைத்தால் இரண்டுக்கும் இடையில் விழ வாய்ப்புண்டு என்ற பழமொழியும் உண்டல்லவா? பிரித்தானியாவில் ஆட்சியில் இருக்கும் பழமைவாதக் கட்சி வேறு இங்கு கார்ப்பர் தலைமையில் உள்ள பழமைவாதக் கட்சி வேறு. இரண்டும் வெவ்வேறு. கார்ப்பர் தலைமையிலான பழமைவாதக் கட்சியை பிறாயன் மல்றோனியின் முற்போக்கு பழமைவாதக் கட்சியோடு சேர்த்துக் குழப்பக் கூடாது. 1986 இல் கப்பலில் வந்த 155 தமிழர்களை இருகை நீட்டி வரவேற்றவர் மல்றோனி.  கார்ப்பரின் பழமைவாதக் கட்சி கனடாவுக்கு அரசியல் அடைக்கலம் கேட்டு வந்த 492 தமிழ் ஏதிலிகளை "ஆட்கடத்தல்காரர்கள்"  "புலிகள்" "பயங்கரவாதிகள்" "கிறிமினல்ஸ்" என்று அர்ச்சிக்கிறது. ஏதிலிகளை சிறையில் அடைத்து அழகு பார்க்கிறது. இந்தக் கட்சி அல்பேட்டாவை தளமாகக் கொண்டு இயங்கிய பிரஸ்தன் மானிங்கின் (Preston Manning)  ீர்திருத்தக் கட்சியின் மறுவார்ப்பு!

குரு -  சரி, சரிஎது எப்படி இருப்பினும் முதலில் தமிழர்கள் கட்டாயமாக தேர்தல் நாளன்றோ அதற்கு முன்னரோ வாக்களிக்க வேண்டும். எமக்குள்ள ஒரே ஆயுதம் இந்த வாக்குத்தான்!

எழுதியவர்
திருமகள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com