Contact us at: sooddram@gmail.com

 

ஆன்மிகத்தின் ஊடாக அன்பு, மனிதநேயம், ஜீவகாருண்யம் வளர்த்தவர் பகவான் சாயிபாபா

உலகமெங்கிலும் 178 நாடுகளில் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் ஆன்மீகத் தலைவராக விளங்கி அனைத்து தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றுத் திகழ்ந்தவர் ஸ்ரீசத்யசாயிபாபா. ஆன்மீகம், கல்வி, சமூக சேவைகள், உள்ளிட்ட பல்வேறு அறப்பணிகளை செய்து அதன் மூலம் ஆன்மீகத்தை மக்களிடையே பரப்பியவர் ஸ்ரீசத்யசாயிபாபா. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி கிராமத்தில் பெத்த வெங்கம்ம ராஜூ- ஈசுவரம்மா தம்பதியினருக்கு 4வது குழந்தையாக 1926ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி சாயிபாபா பிறந்தார். இவருக்கு சத்யநாராயணன் ராஜூ என பெற்றோர் பெயர் சூட்டினர்.

9ம் வகுப்பு வரையே படித்த சத்திய நாராயணன் தனது இளம் வயதில் தன்னுடைய சகோதரர் சேஷ்மா ராஜூவின் உரவகொண்டா கிராமத்தில் வசித்து வந்தார்.

1940 மார்ச் 8ம் திகதி அவரை ஒரு தேள் கொட்டிவிட்டது. இதனால் மயக்கம் அடைந்த சத்தியா சில நாட்களில் குணம் அடைந்தார். ஆனால் அவரது நடவடிக்கைகளில் மாறுதல் காணப்பட்டது.

திடீர் என்று சமஸ்கிருத ஸ்லோகங்களை பாடினார். ஆனால் அதற்கு முன் அவர் சமஸ்கிருதம் படித்ததே இல்லை. இதனால் என்னவோ என்று பயந்துபோன அவரது பெற்றோர் அவரை டாக்டர்களிடமும் மந்திரவாதிகளிடமும் காண்பித்தனர்.

1940 மே 23ம் திகதி, சத்தியா தனது வீட்டில் உள்ளவர்களை அழைத்து அவர்களுக்கு பல பொருட்களை மந்திரத்தில் வரவழைத்துக் கொடுத்தார்.

அப்போது வீடு திரும்பிய அவரது தந்தை இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஒரு பிரம்பை எடுத்து அவரை மிரட்டியபடிநீ உண்மையிலேயே யார்என்று கேட்டார்.

இதற்கு சத்தியாநான்தான் சாய்பாபாஎன்றார்.

மராட்டிய மாநிலத்தில் iரடி சாய்பாபா மிக புகழ்பெற்றவராக இருந்தார். அவர் 8 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், “நான் iரடி சாயிபாபாவின் மறு அவதாரம்என்று சாயிபாபா கூறினார்.

அது முதல் சத்தியா என்ற பெயர் மறைந்து அவரைசாய்பாபாஎன்றே எல்லோரும் அழைக்கத் தொடங்கினர்.

அவர் தீவிரமாக ஆன்மிகப் பணிகளில் இறங்கினார்.

இதைத் தொடர்ந்து அவரது பக்தர்கள் 1950ம் ஆண்டு புட்டபர்த்தி கிராமத்தில்பிரசாந்தி நிலையம்என்ற ஆன்மிக மையத்தை உருவாக்கினார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வெளியில் தெரியாத ஒரு கிராமமாக இருந்தது புட்டபர்த்தி கிராமம். ஆனால் தற்போது இக்கிராமத்தில் அமைந்துள்ள சத்ய சாயிபாபாவின்பிரசாந்தி நிலையம்ஆசிரமத்தால், புட்டபர்த்தி என்ற பெயர் உலகெங்கிலும் மிகவும் பிரபலமடைந்து உள்ளது.

பல்வேறு நாடுகள், மாநிலங்கள், இனம், மொழி, மதம், கலாசாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் இந்த ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார்கள்.

உலக அளவில் கோடிக்கணக்கான பக்தர்கள், சத்யசாயி அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அளிக்கும் நன்கொடைகளை அவர் தனது கல்வி, சமூகப் பணிகளுக்காக செலவிட்டார்.

பகவானின் பக்தர்கள் நூற்றுக் கணக்கான சமூக சேவை நிறுவ னங்களை நடத்தி வருகிறார்கள். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூக சேவை நிறுவனங்கள் என பல வழிகளில் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

1971ம் ஆண்டில் அனந்தபூரில் பெண்களுக்கான கல்லூரியை பாபா தொடங்கினார். 1978ல் பெங்களூரில் ஆண்கள் கல்லூரி தொடங்கினார். 1981ல் ஸ்ரீ சத்யசாயி உயர் கல்விக்கான தனி அமைப்பு புட்டபர்த்தியில் தொடங்கப்பட்டது.

மிகப்பெரிய கலையரங்கம், கோளரங்கம், சத்ய தர்மஸ்தூபி, ரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றை பாபா புட்டபர்த்தியில் நிறுவினார். 1991ல் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ- 100 கோடி முதலீட்டில் அதிநவீன மருத்துவமனை பிரசாந்தி நிலையத்தில் தொடங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், அதைத் தொடங்கி வைத்தார்.

சத்யசாயி மருத்துவ மனைக்குமைக் தெகரட்என்ற அமெரிக்க தொழில் அதிபர் ரூ- 200 கோடி நன்கொடையாக வழங்கினார். அவருடைய நன்கொடையின் மூலம்தான் இந்த மருத்துவ மனை நவீன வசதிகளுடன் கட்டப்பட்டது.

இந்த ஆஸ்பத்திரியில் ஏழைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை உட்பட எல்லாவித நோய்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் 10 பேருக்காவது இலவச இருதய சத்திர சிகிச்சை செய்யப்படுகிறது.

ஜி.வி. ஷெட்டி என்ற வெளிநாட்டு வாழ் இந்தியர் வழங்கிய ரூ. 25 கோடி நன்கொடை மூலம் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இந்தோனேஷிய பக்தர் ஒருவர் அளித்த 50 கோடி ரூபா நன்கொடையின் மூலம் 2010ல் புட்டபர்த்தியில் இசைப்பள்ளி கட்டப்பட்டது.

சத்யசாயிபாபா பெயரில் பல்கலைக்கழகமும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியா மட்டுமல்லாது உலகின் பல பாகங்களிலும் இவை இயங்குகின்றன. அவரது நிறுவனம் உலகம் முழுவதும் 176 நாடுகளில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. உலகம் முழுவதும் 114 நாடுகளில் 1200 சத்ய சாயிபாபா சமூக அமைப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

பகவான் சாயிபாபா, இந்தியாவில் தர்மஷேத்ரா என்ற பெயரில் மும்பையிலும், சிவம் என்ற பெயரில் ஐதராபாத்திலும், சுந்தரம் என்ற பெயரில் சென்னையிலும் ஆன்மீக மையங்களை உருவாக்கினார்.

அவரது ஆன்மீகப் பணியை பாராட்டி மத்திய அரசு கடந்த 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி அவரது பிறந்த நாள் அன்று அவரது பெயரில் தபால் தலை மற்றும் தபால் உறையை வெளியிட்டு கெளரவித்தது.

ஆந்திராவில் இருந்து கிருஷ்ணாநீர் வரும் கால்வாய் பராமரிக்கப்பட்டால் மட்டுமே சென்னைக்கு குடிநீர் பெற முடியும் என்ற நிலையில், ஸ்ரீசத்யசாயிபாபாவின் உதவியால், ஸ்ரீசத்ய சாயி அறக்கட்டளை மூலம் சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டது.

ரூ. 300 கோடி செலவில் கண்டலேறு முதல் ஊத்துக் கோட்டை வரையிலான கால்வாயைப் புனரமைத்தார். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பிரமாண்டமான பணியை 2 ஆண்டுகளில் ஸ்ரீசத்யசாயி அறக்கட்டளை செய்து முடித்தது. இந்த திட்டத்தால் இன்றைக்கு சென்னை நகர மக்கள் தங்குதடையின்றி குடிநீர் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதே போன்று ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டம் ராயலசீமாவில் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள 731 கிராம மக்கள் பயன் பெறும் வகையில் கோதாவரி மேடாக் மற்றும் மெகபூர் நகர் குடிநீர் திட்டங்களை ரூ. 300 கோடி செலவில் ஸ்ரீசத்யசாய் மத்திய அறக்கட்டளை நிறைவேற்றியது.

மேலும் உலகமெங்கிலும் உள்ள சாயி நிறுவனத்தினர் தங்கள் பகுதிகளில் நிகழும் இயற்கை பேரிடர் சமயங்களில் உதவிகளைச் செய்து வருகின்றனர்.

பகவான் சத்யசாயிபாபா தனது கொள்கைகளை எழுதியும், பேசியும் பரப்பி வந்தார். இதற்காக அவர் பல்வேறு ஆன்மீக நூல்களை வெளியிட்டு வந்தார். பகவான் சாயிபாபாவுக்கு 178 நாடுகளில் பக்தர்கள் இருந்த போதிலும் இவர் 1968 ம் ஆண்டு உகண்டா நாட்டுக்குச் சென்றது தான் இவரது ஒரே வெளிநாட்டுப் பயணம் ஆகும்.

1963ம் ஆண்டு இவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆனால் விரைவிலேயே குணம் அடைந்து விட்டார்.

1993ம் ஆண்டு ஜூன் 6ம் திகதி சாயிபாபாவை கொல்ல முயற்சி நடந்தது. அப்போது அவரது படுக்கை அறையில் நடந்த மோதலில் அவரது தனி உதவியாளர் ராதா கிருஷ்ணமேனன் உட்பட 6 பேர் பலியானார்கள்.

உடல் நலிவடைந்ததால், அவர் 2005ம் ஆண்டு முதல் தள்ளு வண்டியிலேயே பக்தர்கள் முன் வலம் வந்தார்.

பகவான் சத்ய சாய்பாபா, ஆன்மீகம், சமூக சேவை, மனித நேயம், அன்பு, பண்பு, அறிவால் உலகம் முழுவதும் இலட்சக் கணக்கான மக்களின் உள்ளத்தில் இடம்பெற்றவர். இந்த நூற்றாண்டின் சிறந்த ஆன்மீகத் தலைவராக பகவான் விளங்குகிறார்.

பகவான் பாபாவின் அடுத்த பிறவி நிச்சயம் இருக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இலட்சக்கணக்கான பக்தர்களை அன்பால் கவர்ந்த சாயி பாபாவை முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர் என்று சந்தித்தவர்கள் ஏராளம்.

பகவானின் சொல்லும் செயலும் பக்தர்களின் உள்ளங்களில் அன்பை வளர்த்தது. குறுகிய எண்ணத்தை அழித்து மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தை தூண்டியவர் பாபா. இலட்சக்கணக்கான மக்கள் அவரவர் மதங்களை பின்பற்றி, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வழி ஏற்படுத்தியவர் அவர். மனித நேயத்தைப் போதித்தவர். கடந்த 50 ஆண்டுகளாக தன்னிகரற்ற ஆன்மீகத் தலைவராக விளங்கியவர்.

எல்லா மதத்தவருக் கும் ஊக்கம் அளிப்பவராக விளங்கியவர். சமூக மேம்பாட்டுக்கு அவர் ஆற்றிய பணிகள் என்றென் றும் நிலைத்திருக் கும். ஆன் மீகத்தை பரப்பிய இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், சுவாமி தயானந்த் வரிசையில், பாபாவும் இடம் பெற்றுள்ளார். அவர் உலகப் புகழ்பெற்ற ஆன்மீகவாதி, கலாசார, சமூக மேம்பாட்டுக்கு பாடுபட்ட பாபா போன்றவர்கள் இனிமேல் வருவதற்கு நீண்ட காலம் ஆகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com