Contact us at: sooddram@gmail.com

 

ஜெனீவாத் தீர்மானமும் தமிழரின் எதிர்காலமும் 

இலங்கை அரசியல் வரலாறு

1948 ல் இலங்கையின் ஆட்சி ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் என்ற பெயரில் சிங்களவர் கைக்கு மாறியது. அன்றிலிருந்த  இலங்கையை ஒரு சிங்கள - பௌத்த நாடாக்க வேண்டுமென்பதில் கட்சி பேதமின்றி அனைத்துச் சிங்கள ஆட்சியாளரும் குறியாக இருக்கின்றனர். அவர்களது நோக்கத்தை நிறைவேற்றுவதற்குச் சவாலாக இருக்கின்ற தமிழ் இனத்தை பூண்டோடு அழித்து அதைச் சாதிக்க வேண்டி இருக்கிறது. மாறி மாறி வந்த சிங்கள ஆட்சியாளர்கள  ோட்டி போட்டுக்கொண்டு அதையே செய்துவந்ததோடு யார் அதை அதிகமாகவும்  வேகமாகவும்  செய்கிறார்களோ அவர்களே சிங்களவர் மத்தியில் அதிக செல்வாக்கைப் பெற்றனர். அந்தவகையில் இன அழிப்பை அதி உச்சமாகச் செய்த மகிந்த இராசபக்சே சிங்களவர் மத்தியில் முடி சூடா மன்னனாக,  சர்வ வல்லமை கொண்டவராக தட்டிக் கேட்க ஆளே இல்லாதவராக 2009 இல் இருந்து கோலோச்சி வருகிறார்.

அவரது இந்தச் சாதனைக்க  ுவிசார் அரசியல் சூழ்நிலையும் விடுதலைக்காகப்  போராடிய தமிழர் தரப்பு அந்த புவிசார்  அரசியல் சூழ்நிலைக்கேற்பத் தம்மை  தயார் படுத்திக்  கொள்ளாததுமே காரணிகளாயின. விடுதலைப் புலிகள் ஒரு நாட்டின் அரசு எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு இலக்கணமாக  அமைந்த அரசொன்றை  நடத்திக் காட்டினார்கள். அவர்களது தனித்தன்மை அவர்கள் எந்த நாட்டோடும் எந்த அணியோடும் சேர முடியாமல் இருந்தது. அப்படி அவர்கள் தனிமைப்பட்ட காரணத்தால் அனைத்துலக உதவியோடு மகிந்த இராசபக்சேயால  அழிக்கப் பட்டார்கள். அமெரிக்கா தலைமையிலும் சீனா தலைமையிலும் இருந்த இரு முக்கிய அணிகளையும் பிராந்திய வல்லரசான இந்தியாவையும  ிகச் சாதுரியமாகக்  கையாண்டு மகிந்த இராசபக்சே  போரில் வெற்றி ஈட்டிக்  கொண்டார். உலக நாடுகளும  தமக்கிடையே இருந்த வேற்றுமைகளை மறந்து  பயங்கரவாதம் என்ற ஒற்றைச் சொல்லின் கீழ் அணிதிரண்டு தமிழ் மக்களுக்கு  அரணாக விளங்கிய ஒரு விடுதலை இயக்கத்தை அழிக்க உதவினார்கள். அரசியல் தொலை   நோக்கமில்லாத பயங்கரவாதம் உலகில் தலை தூக்கி  இருந்த காலப் பகுதியில் விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாதமாகச் சித்திரித்து அழிப்பதில் சிறிலங்கா வெற்றி கண்டது.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் 

ஆனால், தமிழர் ஆட்சி அழிக்கப் பட்டதும் உலக நாடுகளிடையே இருந்த பகைமைகள  தல  தூக்கின.  இந்து சமுத்திரப  ிராந்தியத்தில்  தன்னைத்  தவிர  சீனாவோ  அமெரிக்காவோ  கால்  பதிப்பதை  இந்தியா விரும்பவில்லை. ஆனால் சீனா இந்தியாவின் கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் உள்ள   நாடுகள  எப்படித் தன் பக்கம் வைத்துக்கொண்டிருக்கிறதோ அதேபோல் தெற்கில் இருக்கும் சிறிலங்காவையும்  தன்  பிடிக்குள்  கொண்டுவந்துவிடப் பாடுபடுகிறது.  இதனால் தெற்காசியப் பிராந்தியத்தில் எப்படியும் தங்கள் மேலாண்மையை நிலைநாட்டிவி  ிரும்பும் சீனா - அமெரிக்கா இரண்டுக்கும் இடையே சிறிலங்கா அகப்பட்டுத் தவிக்கிறது.  சிறிலங்காவின் இந்த பரிதாப நிலைமைக்கு மகிந்தாவின் செயற்பாடுகளே முழுமையான காரணமாக விளங்குகிறது. தெற்காசியாவில் அமெரிக்காவை விட சீனாவின் ஆதிக்கத்தை பெரும் ஆபத்தாக எண்ணும் இந்தியா அமெரிக்காவோட  இணைந்து சீனாவின் செல்லப் பிள்ளையான சிறிலங்காவுக்கு எதிராக செயல்படத் தொடங்கியுள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்களால் இந்தியா தனது வெளிநாட்டுக் கொள்கையில  ாற்றம் செய்யவேண்டிய  நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுளது.

சீனாவின் பிடிக்குள  இருக்கும்  சிறிலங்காவுக்கு எதிராகப் பயன்படுத்த  மேற்குலக  நாடுகளுக்குக் கிடைத்திருக்கிற ஆயுதம் சிறிலங்கா அரசு தமிழ்மக்களுக்கு எதிராகச் இழைத்த போர்க் குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் ஆகும்.   எந்த நாடுகள  ஒன்றுசேர்ந்து எம்மை அழித்ததோ அதே நாடுகளுக்கு  இப்போது எமது உதவி தேவைப்படுகிறது. எல்லா உண்மைகளையும் தெரிந்துகொண்டும் தெரியாததுபோல் இருந்து எம்மை அழித்தவர்கள் இப்போது எமக்காகப் பரிந்து செயற்படுகிறவர்கள் போல் செயற்பட்டு ஜெனீவாவில் சிறிலங்காவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். தீர்மானத்தை நியாயப்படுத்த   தமிழர் தரப்பின் ஆதரவ  ாடினார்கள். த தே கூ, நா.க.த.அ. உட்பட தமிழர் தரப்பும் அந்த ஆதரவை சிறப்பாகச் செய்து முடித்தார்கள். இந்த மாற்றம் தமிழரின் போராட்ட வரலாற்றில் ஒர  ிருப்பு முனையாகப் பார்க்கப் படவேண்டும். "உலகில் நீதி நியாயம், சரி பிழை எதையுமே காணமுடியவில்லை, உலகமே எம்மைக் கைவிட்டுவிட்டது, எமக்கு இனி எதிர்காலமே இல்லை" என்ற  ிரக்தியின் எல்லைக்கே  சென்ற  தமிழினத்திற்கு இந்த்த் தீர்மானம் இருள்மயமாய் இருந்த எதிர்காலத்தில் ஒரு குப்பி விளக்கு அளவு நம்பிக்கை ஒளியை ஏற்றிவைத்துள்ளது.

LLRC அறிக்கையும் ஜெனீவாத் தீர்மானமும் 

சிறிலங்காவை இறுக்க விரும்பிய நாடுகளின் அழுத்தத்தால் பான்கி மூன் இலங்கையில் நடந்தேறிய போர்க் குற்றங்கள் குறித்து அறிக்கை மூலம் தமக்கு ஆலோசனை வழங்குமாறு ஒரு நிபுணர் குழுவை நியமிக்க நேர்ந்தது. தமிழர் தரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு அவர்களது அறிக்கை வெளிவந்தது. ஆயினும் அதை நடைமுறைப் படுத்துவிக்கும் அளவுக்கு சர்வதே  ிலைமைகள்  இல்லாவிட்டாலும் ஒருவித அழுத்தம் இருந்தது. அதிலிருந்து தப்புவதற்கு ஸ்ரீலங்கா LLRC என்ற ஒரு ஆணைக் குழுவ  ியமித்து. இதன் மூலம  இன அழிப்பைத்  தொடர்வதற்கான சிறு கால அவகாசத்தைப் பெற்றுக் கொண்டாலும் அந்த அறிக்கையை   வெளியிடவேண்டிய  நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியது. அந்தக் குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசுக்க  எதிரான குற்றங்கள் மறைக்கப் பட்டாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு  உடனடிப் பாதுகாப்பும் நிவாரணங்களும் நல்லிணக்கமும் அவசியம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரண  ேண்டுமென்ற கோரிக்கைக்கு சர்வதேச ஆதரவு இல்லாத காரணத்தால் பான்கி மூனின் நிபுணர் குழு அறிக்கையை விட LLRC அறிக்கை அவர்களுக்கு ஏற்றதாக அமைந்தது. அதனால் அதை மையமாகக் கொண்டு அமெரிக்கா ஒரு தீர்மானத்தை தயாரித்தது. அதற்கு அது TNA இன் உதவியையும் பெற்றுக் கொண்ட தென்பதும  கவனிக்கப் படவேண்டும். அமெரிக்கா கொண்டுவந்  ீர்மானம்:-  ஐக்கிய  நாடுகளின்  மனித உரிமை  ஆணையாளர் அலுவலகம்  வழங்கும் அறிவுரை மற்றும் தொழில்நுட்ப உதவியை ஏற்றுக்கொண்டு  LLRC அறிக்கையில் காணப்படும்  ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறீலங்கா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள  ுறித்து  சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும். 22 ஆவது அமர்வில  நா மனித உரிமை ஆணையர் அலுவலகம் முன்னேற்றங்களையிட்டு ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதாக இருந்தது.

ஆனால் ஆதரவளித்த நாடுகளின் அழுத்தத்தால் தீர்மானத்தின  கடுமை குறைக்கப் பட்டு காலக் கெடுவும் ஓர் ஆண்டுக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில  இந்தியாவின் தலையீடு காரணமாக "மனித உரிமை அவையின் தொழில்நுட்ப   ஆலோசனை உதவிகளை  ஏற்றுக் கொண்டு"    என்பதற்குப் பதிலாக  "ஸ்ரீலங்கா அரசின் ஒப்புதலோடு கலந்துபேசி  " என்று மாற்றப்பட்டது. அதனால் இந்தியா உட்பட 24 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

ஜெனீவா தீர்மானத்தின் பின்னர்  

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்த  பயங்கரவாதம் எனச் சித்திரித்து  சர்வதேசத்தின் முழு ஒத்துழைப்போடு அழித்துவிட்ட ஸ்ரீலங்கா தனது மீதமுள்ள இனவழிப்பை உள்நாட்டுப் பிரச்சினை யாகக் காட்டி அதை நிறைவேற்றக் கடந்த 3 வருடமாக அசுரவேகத்தில் இயங்கி  வருகிறது.  கடைசிப  ோரை எப்படிச் சர்வதேசம் தலையிடுவதற்கு  முன்  அவசரமாக முடித்ததோ அதுபோல் மீதமான இன அழிப்பையும் விரைவில் முடித்துவிடத் துடிக்கும் மகிந்த இராசபக்சே அரசிற்கு;  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கேள்வி கேட்க ஆளில்லாமல் எதிர்ப்பே இல்லாமல் தடைகளேதும் இல்லாமல்   போய்க்கொண்டிருந்த  மகிந்தாவிற்கு முதன்முதல் ஏற்பட்ட தடை இந்த ஜெனீவாத் தீர்மானமாகும். தங்கு தடையற்ற காட்டாற்று வெள்ளம்போல் அனைத்தையும் சாய்த்து வீழ்த்தி  ஓடிக்கொண்டிருந்த மகிந்தவிற்கு எதிரே குறுக்கிட்ட  ஒரு பாறாங் கல்லாக இத் தீர்மானம் அமைந்துள்ளது.

 தமிழினத்தையே அழித்து இலங்கையை ஒரு சிங்கள -  ௌத்த நாடாக்குவதையே ஒரே குறியாகக் கொண்ட மகிந்தாவிற்கு "தமிழருக்கு    அரசியல்உரிமைகள் கொடு,  நல்லிணக்கம் செய்துகொள்,அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்து,  மனித உரிமைகளை நிலைநாட்டு" என்று சொன்னால் எப்படிச் சகித்துக் கொள்வார்?. பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறியத  ோல் LLRC அறிக்கையை வைத்து  உலகம்  தன்னைத் திருப்பி அடிக்கும்  என்று மகிந்தா  நிட்சயம் கனவும் கண்டிருக்க மாட்டார். தீர்மானம் சிறிலங்காவைக் கட்டாயப் படுத்துவதா  அமையா விட்டாலும்  அது சர்வதேச கண்காணிப்பில் மகிந்த அரசைக் கொண்டு வந்துள்ளது.  " இது உள்நாட்டுப் பிரச்சனை எல்லாரும் கண்ணை மூடிக் கொண்டிருங்கோ" என்று மகிந்தா சொல்லக்கூடிய  நிலைமை இனி இல்லை. தமிழரின் பிரச்சனை முதன் முதலாக உத்தியோ  ூர்வமாக  சர்வதேச அரங்கில்  மேடை ஏற்றப்பட்டிருக்கிறது. அதில் இருந்து இனி முற்றாகப் பின்வாங்குவது சர்வதேசத்திற்கு இலகுவாக அமையாது. இதுதான் தமிழரின் வரலாற்றுத் திருப்புமுனை. 

ஜெனீவாவில் 32 நாடுகள் சிறிலங்காவை நம்பவில்லை.அதை ஆதரித்த 15 நாடுகளும் கூட அமெரிக்காவுக்கு எதிராகத் தத்தம் நலன்களை முன்னிட்டு ஆதரித்தனவே தவிர ஸ்ரீலங்காவின் செயற்பாடுகளை ஆதரிக்கவில்லை. 24 நாடுகள் அமெரிக்காவுடன் சேர்ந்து வெளிப்படையாகவே சிறிலங்காவை எதிர்த்துள்ளன. சிறிலங்காவின் அராஜகத்தை சாதாரண மக்களும் புரிந்துகொள்ள இதைவிட வேறு ஆதாரங்கள் தேவை இல்லை.ஜெனீவாவில் கூட தமது "தாதா" அரசியலைக் காண்பித்து அனைத்து நாடுகளும் அனுபவ ரீதியாக இலங்கையில் சாதாரண தமிழ்ப் பொது மக்களை இவர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதை உணரவைத்ததற்கு நாம் சிறிலங்காச் "சண்டியன்" அரசியலுக்க  நன்றி சொல்ல  வேண்டும். எது எப்படி இருந்த போதும் தமிழராகிய நாம் இப்போதுதான் மிக மிக அவதானமாக நிதானமாகச் சிந்திக்க வேண்டும். உண்மையில் இந்த்த் தீர்மானத்தின் வெற்றிக்கு அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் சொந்த நலன்கள் தான் காரணமே தவிர எந்தவொரு நாடும் தமிழனுக்கு அநியாயம் நடந்துவிட்டதே உலகில் தர்மம் நிலைநாட்டப்பட வேண்டுமே என்று செயற்ப்பட வில்லை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு எந்தத் தமிழர் தரப்பும் தம்மால் தான் இது சாத்தியமானதென்று உரிமை கொண்டாட முடியாது.  ஆனால் தமிழர் தரப்பு தாம் செய்யக்கூடியதை செய்ய வேண்டியதை செய்துள்ளதாக திருப்திப் படலாம்.

 கற்றுக் கொண்ட பாடங்கள்

தத்தம் அரசியல் பொருளாதார ஆதிக்க நலன்களைக் கருத்தில் கொண்டுதான் உலகம் இயங்குகிறது.அதில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தரப் பகைவனும் இல்லை.அந்தந்தச் சந்தர்ப்பத்தில் எவரெவர் செயற்பாடு தமக்குச் சாதகம  அவர்களோடு  சேர்வார்கள். பகைவனுக்குப் பகைவன் நண்பன். நண்பனுக்குப் பகைவன் பகைவன்.அடுத்ததா  ஒரு நாட்டில் அமைதி, அரசியல் ஸ்த்திரத் தன்மை, பொருளாதார அபிவிருத்தி என்பன இருந்தால்த் தான் தமது வணிக நலன்களுக்கு நன்மை என்பதால் பிற நாடுகள் அதையும் எதிர் பார்க்கின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டித்தான் மனிதாபிமானத்தைப் பார்க்கிறார்கள்.வலிமையான சர்வதேச நலன்களுக்குப் பாதகமாக எமது நலன்களைப் பெறமுடியாது.எமக்குச் சாதகமான சர்வதேச நலன்களோடு எமது நலன்களையும் இணைத்துத  ான் நாம் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அந்தச் சர்வதேச நலன்கள் எம்மை விழுங்கி விடாமல் நழுவி எமது தனித்து வத்தைப  ாதுகாத்துக் கொள்வதே எமது ராஜதந்திர சாணக்கியமாகும்.

இன்றய நிலையில் நாம் கையில் எடுத்திருப்பது ராஜதந்திர ஜனநாயக அரசியல்ப் போர் என்பதால் மனித பலவீனங்களான வெறும் உணர்ச்சிகளால் உந்தப்படாமல் உள்ளச் சமச்சீருடன் நிதானம் தவறாமல் சாதுரிய மூளை பலத்தால் ஆழமாக விசாலமாக கூர்மையாகச் சிந்தித்துச் செலல்படக் கூடியவர்கள் இனத்தை வழிநடத்த வேண்டும்.ஒற்றுமை என்பது சிங்களவர்களிடம் இருந்து நாம் கற்கவேண்டி உள்ளது.எமது முதல் எதிரி சிறிலங்கா ஆட்சியாளர்கள்  என்பதை மறந்து தொலை நோக்கு இல்லாமல் எமக்கு முன்னால் பக்கத்தில் இருக்கும் எமது உறவுகளோடு அவர்களின் அபிப்பிராய வித்தியாசங்களுக்காக அவர்களை எதிரியாகப் பார்க்கிறோம்.எல்லோரதும் இலக்கு இறுதி நோக்கம் ஒன்று என்பதை  மறக்கிறோம். அபிப்பிராய பேதங்கள் மனித இயல்பு என்பதை மறந்து அவர்களைத் துரோகி என்று அவர்களை அழிப்பதற்காக   சம்மந்தம  இல்லாத  பொய்  வதந்திகளைக் கொண்டு அவர்களை அழிப்பதிலேயே எமது முழு  சக்தியையும் விரைய மாக்குகிறோம்.    எமது சிந்தனை செயல்களில் 90 வீதத்தை எமக்கிடையே உள்ள பகைமையைத் தீர்பதிலேயே செலவிடுவதால் பொது எதிரியான சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு எதிரா  எதையும் செயற்படுத்த முடியாமல் இருக்கிறோம். இந்த நிலைமை மாறியே ஆக வேண்டும்.மாறுவோம் என்று சம்மந்தப் பட்ட அனைவரும் சபதம் எடுக்க வேண்டும்.

 எமது எதிர் காலம்

மகிந்தா வழமை போல் போலியான பொய்யான ஏமாற்று வழிகளில் சர்வதேசத்திற்கு "அல்வா" கொடுத்து காலத்தை இழுத்தடித்து இன அழிப்பை நிறைவேற்றவே ஆனமட்டும் முயற்சிப்பார்.

 தத்தம் நலன்களையே அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சர்வதேசம் அவர்களத  நலன்களை மகிந்தா கொடுத்துவிட்டால் அவர்கள் தமிழர்களைக் கைவிட்டுவிவார்கள் என்பதை மறக்கக் கூடாது.ஆகவே மகிந்த-சீனக் கூட்டணி உடையாமல் பார்த்த்துக்  கொள்ளவேண்டும். எமக்கு ஆதரவான சர்வதேச அணியினரின் நலன்களோடு தமிழர் நலன்கள் முரண்படவில்லை   ஆதரவாக இருக்கிறார்கள்,தமிழரின் ஒத்துழைப்பு அவர்களுக்கு தேவை என்ற நிலைமையைத் தொடர  வேண்டும். நம்ப நட நம்பி நடவாதே. நா.க.த.அ. முயற்சிப்பது போல ஒரு சர்வதே  தமிழர் பாதுகாப்புப் பொறிமுறை உடனடியாக நமக்குத் தேவை.தமிழர் தாய் நிலம்,  மொழி, மதம், கலாசாரங்கள் முற்றாக அழிக்கப்படுவதைத் உடனடியாகத் தடுக்கா விட்டால் இனஅழிப்பு முடிந்து விடும்.

தமிழர் நாம் முன்னரை விட மிக அதிகமாக வேகமாக புதுத் தென்போடு ஒற்றுமையாக செயற்படவேண்டிய காலம் இதுதான். நம்பிக்கை பிறந்துள்ளது. அந்த நம்பிக்கைய  மக்கள் மயப்படுத்துவோம். இந்தியாவின் தென்பகுதியில் இருப்பத  ்ரீலங்கா அல்ல.  தமிழ் ஈழம் தான். இந்தியாவுக்கு அண்மையில் இருப்பதும் அத்தோடு இந்துசமுத்திரத்தின் கேந்திரத் துறைமுகம் ஆக  இருப்பதும்  அம்பாந்தோட்டைத் துறைமுகம் அல்ல.பெரிய இயற்கைத் துறைமுகமான திருகோணமலைதான். சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறியவுடன் காங்கேசன்துறைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து கொள்ளலாம்.பாரிய கப்பல் போக்குவரத்து பாக்கு நீரிணை வழியாகவே நடைபெறும்.இந்தியாவையும் அமெரிக்காவையும் ஸ்ரீலங்கா கைவிட்டாலும் தமிழ் ஈழம் அதாவது வட கிழக்கு மாகாண தமிழர  ாப்பாற்றலாம்,ஆதரவாக இருக்கலாம். தமிழர  மட்டும்  தான் இந்தியாவின்  உண்மையான நிரந்தர  நண்பர். இந்தியாவின  ாதுகாப்பு  தமிழரின் பலத்தில்  தான் தங்கயுள்ளது  என்ற யதார்த்த நிலைமையை உலகறியச் செய்ய வேண்டும்.  சிறீலங்கா அளவுக்கதிகமாக முரண்டு பண்ணினால் இவற்றை எமது ஆயுதமாகப் பயன் படுத்தும் வாய்ப்பை நாம் மறக்கக் கூடாது. இப்போத  தமத  நன்மை  கருதி  ஒரு  பிரேரணையை  நிறைவேற்றியவர்கள் மேற்கண்ட காரணங்களுக்காக எமது சுதந்திரத்தையும் பெற்றுத்தர வேண்டிய காலம் தொலைவில் இல்லை.ஒன்றுபட்டு உழைப்போம்.ஒளி மயமான எதிர்காலம் காண்போம்.

(வின் மகாலிங்கம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com