Contact us at: sooddram@gmail.com

 

மட்டக்களப்புக்கு இப்படியும் ஒரு முகம் இருப்பது கனபேருக்கு தெரியாது

'மட்டக்களப்புக்கு இப்படியும் ஒரு முகம் இருப்பது கனபேருக்கு தெரியாது' தோணிதாட்ட மடுவின் சோகக் கதை.போய்க்கொண்டே இருந்தோம், அந்த முகங்களைத் தேடி அடர்ந்த காடு, உடைந்த றோடு, விரிந்த புல் வயல் வெயிலில் காய்ந்த பயிர்போல் பல பரிதாப முகங்களைக் கண்டு சோகத்தோடு உள்ளே நுழைகிறோம்... அங்கே புதிய புதிய அனுபவங்களை கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டோம்.

ஆமாம் அதுதான  ோறளைப்பற்று வடக்கில் நில வளம் நீர் வளம் ஒருங்கே அமையப்பெற்ற பேர்பெற்ற வாகரைப் பிரதேசத்தில் அமைந்த ஒரு பழம் பெரும் கிராமம்தான் தோணிதாட்டமடு எனப்படும் கிராமமாகும். இது புச்சாகேணி என்னும் கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு அழகிய இடமாகும். இங்கு மொத்தமாக 47 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர். அதன் மக்கள் தொகை 171 உம், அதில் 7 கணவரை இழந்த பெண்களும் 15 பாடசாலை செல்லும் மாணவர்களும் அதுபோல் 13 பாலர்வகுப்பு சிறார்களும் உள்ளடங்குவர்.

இந்த மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய கிராமம் இது என்றால் அது மிகையில்லை. இது யுத்தகாலங்களில் படுமோசமாக பாதிக்கப்பட்டு 2007 ஆண்டு காலப்பகுதியில் முற்றாக இடம்பெயர்ந்து வாழைச்சேனை இடம்பெயர் முகாங்களில் தத்தளித்து அல்லோல கல்லோலப்பட்டு சொந்த மண்ணிற்கு இன்று பல சிரமங்களுக்கு மத்தியில் காலடி எடுத்து வைத்திருக்கின்றனர். இந்த 47 குடும்பங்களில் 34 குடும்பங்களுக்கு மாத்திரம் NRC ஆல் தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டுள்ளன . ஏனைய குடும்பங்கள் அவர்களத  ிதைவடைந்த வீடுகளில் தங்கி வாழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இங்கு பிரதானமாக சேனைப்பயிர்ச் செய்கை தான் காணப்படுகிறது, தவிரவும் வேளாமை செய்கை வீட்டுத்தோட்டச் செய்கை என்பனவும் முக்கியமானதாக செய்கைபண்ணப்படுகிறது.

                                (காட்டுப்பாதையில் பயணம் செய்யும் சின்னஞ்சிறுசுகள்..)

ஒரு சமுகத்தின் கண்ணாக இருக்கவேண்டியது, அறிவு தானுங்க அந்த அறிவைப் பெற இந்த சின்னஞ சிறுசுகள் படும் பாடு பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. அடிப்படை வசதிகளைக் கூட சரிசெய்யாத நிலையில் பிள்ளைகளின் கல்வியை எப்படி பெற்றோர்களால் நிவர்த்திக்க முடியும்?? மூன்று வேளை உண்ணும் சமுகத்துக்கே படிக்கவராத நிலையில் ஓரிரு வேளையுடன் காலத்தை கடத்தும் இந்த சிறார்களின் நிலையை யாரறிவார்???

பாவனைக்கு வீதியில்லை, பசிக்கு சோறில்லை, வேலைக்கு தொழிலில்லை, வேதனைக்கு மருந்தும் இல்லை, குடிக்க நீர் இல்லை, படிக்க பள்ளி இல்லை, பால் இல்லை, பிள்ளைக்கு கூழும் இல்லை பசிக்கு, யானைத் தொல்லை, வேறு யாரும் இல்லை சொல்ல. ஆனால் அவர்களிடம் இருப்பதெல்லாம், மனதில் தையிரியமும், மானமும், உழைக்கும் ஊக்கமும் எள்ளையும் ஏழாக்கி வந்தோரை வாழவைக்கும் தமிழ் பண்பாடும் மட்டும்தான்.

இப்படி எத்தனையோ கிராமங்களை முன்னேற்ற நேரமில்லாமல் கொண்டாட்டங்கள் செய்வதில் என்ன பயன் தெரியவில்லை. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் அந்த சுவரே எமது அன்புக்குரிய சனங்கள்தான் அவர்கள் வறுமையால் பரிதவிக்கும் போது ஒரு சமுகத்தின் வளர்ச்சிக்கு வேறொன்றும் துணையாகாது.

 (பாவிக்கமுடியாமல் கிடக்கும் பாழடைந்த பாதை)

 இந்த சமுகம் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள்.

இங்கு ஒன்று இரண்டல்ல நிறை சிக்கல்கள் இருக்கிறது. பாரிய 30 வருடகால கொடிய யுத்தத்தில் சீவனைத்தவர சீவியத்தையே இழந்த வெறும் மனிதர்கள் தான் இவர்கள். ஒரு வருத்தம் வாதை ஏற்பட்டால்கூட பொதுவான போக்குவரத்து வசதிகள் கிடையாது, அப்படி போகவேண்டுமானால் இங்கிருந்து எட்டு கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள கதிரவெளிக்கு பொடி நடையாகவும் ஈருளியிலும், மாட்டு வண்டியிலும்தான் பயணம் செய்ய வேண்டும். பாருங்கள் மாண்பு மிகு மக்களே! எங்கள் மண்ணுக்குள்ளும் மாடு ஆடுகள்போல் காட்டுக்குள் விரட்டப்பட்ட பட்டாளம்போல் இன்னும் இன்னும், நினைத்தால் வெட்கக்கேடாகவும் ,ேதனையாகவும் இருக்கிறதல்லவா????

(யுத்த வடுக்களுடன் வாழும் மக்கள்)

 கல்வியில் பிரச்சினை

எழுத்தறிவித்தவன் இறைவன். ஆனால் நம்மில் எத்தனை பேர் மனிதனாய் கூட நடவாமல் இருக்கிறார்கள் என்றால் எனக்கு தெரியவில்லை. உடைந்து கிடக்கும் ஒரு பாழடைந்த வீட்டில் சந்து குத்தப்பட்ட கற்களின் நடுவே அ, ஆ என்ற அடிப்படையே ஆடிப்போய் கிடக்கிறது பாருங்கள். எங்கள் குழந்தைகள் அல்லவா!! அவர்கள் எங்கள் தமிழ் உறவுகள் அல்லவா!! அவர்கள் அந்த கருணை உள்ளம் கொண்ட ஆசிரியை எவ்வளவு சிரமத்தின் மத்தியில் பாடம் கற்ப்பிக்கிறார் பாருங்கள்!! இங்கு இவர்கள் கற்பதற்க்கு ஒரு நிரந்தர இடம் கூடக் கிடையாது.

 

      (உடைந்த பாலர் பாடசாலையில் கடமைபுரியும் ஆசிரியை)

இந்த குழந்தைகளில் அநேகமாக காலில் செருப்புக்கள் கூட கிடையாது, பள்ளிக்கு செல்ல குட்டிப் பை கிடையாது, இருக்க கதிரையில்லை எழுத கொப்பி இல்லை நடக்க செருப்பு இல்லை சிரிக்கக்கூட தெம்பில்லை.... ஆகவே இலங்கை தனது மிலேனியம் இலக்கை 'மிதமிஞ்சிய வறுமையையும் பட்டினியையும் ஒழித்தல்' என்கின்ற கோசத்தில் 2015 இல் அரைவாசிக்கும் குறைவாக்குவது சாத்தியமாக்குமா என்பது எனக்கு புரியவில்லை.

அதுபோல் இன்னும் ஒரு இலக்கான 'எல்லா நிலைகளிலும் ஆரம்பக்கல்வியை சாதித்தல்' என்கிற இலக்கும் மட்டக்களப்பினைப் பொறுத்தவரையில் சிந்திக்கவேண்டிய ஒன்றே. இருந்தும் 50 விகிதத்துக்கும் அதிகமாக மதிப்பெண்களை தாய்மொழியில் எடுக்கும் பிரதேசத்தில் வடக்கில் 72 விகிதமும் கிழக்கில் 82 விகிதமும் 2007 ஆண்டின் 'MDG இலங்கை நாட்டு நிலைமை அறிக்கை 2008/09' இல் குறிப்பிடப்பட்டிருப்பது இம்மக்களின் தமிழ் மொழிமேல் உள்ள பற்றினைக் காட்டச் சிறந்த ஆதாரமாகும் அல்லவா.

இன்னும் தேசிய வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற மக்களின் விகிதாசாரம் 20% கும் அதிகமாக இருக்கும் ஒரே ஒரு மாவட்டம் மட்டக்களப்புத்தான் என்பது எம்மில் எத்தனைபேருக்கு தெரியுமோ தெரியவில்லை?

குடிநீர்ப்பிரச்சினை

 

      (நீர் இல்லாமல் வற்றிக் கிடக்கும் காய்ந்த கிணறுகள )

மினரல் வோட்டர் குடிக்கும் எம் சமுகம் குடிநீரே இல்லாமல் பரிதவிக்கும் சமுகத்து உறுதுணை புரியுமா??? அவர்கள் அவர்களது பூர்வீக வாழிடங்களில் வாழ்வது ஒன்றும் வேதனைக்குரிய விடயமோ அற்றும் குற்றமோ அல்ல! பாலைவனத்திலும் வசதியுடன் வாழவில்லையா?? ஆனால் இந்த கிராமமாகி சுருங்கி வளர்ந்து விட்ட உலகத்தில் இவர்கள் பாராமுகமாய் இருப்பதுதான் வேதனை.

 

         ( ீர் எடுக்க அவதியறும் மக்கள் )

இவ்வாறான காரணங்களினால்தான  ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் பொழுது குழந்தைகளின் போசாக்கு நிலை மிகவும் மோசமான மந்த நிலையில் உள்ளது. இலங்கைக்கான மிலேனியம் இலக்கு அறிக்கையின் பிரகாரம் உடல் நலிவடைந்த குழந்தைகளின் விகிதம் 19.5 விகிதமாகவும், வயதுக்கான நிறை குறைந்தவர்களின் விகிதம் 32.9 ஆகவும் படு மோசமாக உள்ளமையினைக் காணலாம். ஆனால் கம்பகா மாவட்டத்தில் வயதுக்கான நிறை குறைந்தவர்களின் விகிதம் 16.9 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 (யானைக்கு பாதுகாப்பாக இருக்கும் விடியா விளக்கு)

யானைகளின் பெருக்கம் கூடி விட்ட நிலையில் எல்லைப் பகுதியில் வாழும் மக்கள் படும் தொல்லை கொஞ்ச நஞ்சமில்லை. இந்த யானைகளை அழிக்கவும் முடியாமல் அதனால் அழிந்து போவதை தடுக்கவும் முடியாமல் இம்மக்கள் நாளாந்தம் நித்திரை தொலைத்து, நிம்மதி தொலைத்து, குடியிருப்பைத் தொலைத்து, குழந்தை குட்டிகளைத் தொலைத்து, வாழையைத் தொலைத்து பயிர்க்காலையைத் தொலைத்து வாழ்க்கையையும் தொலைத்து அஞ்சி வாழும் நிலையில் இவர்கள் இருக்கும் போது, இவர்களது பேரால் ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட பணம் எல்லாம் எங்கே போகிறது???? இந்த மக்களின் பணம் எல்லாம் வெளியே போகும் போது யானை எல்லாம் உள்ளே வராமல் என்ன செய்யும்????

 

    (யானைத் தொல்லையில் உடைந்து கிடக்கும் கட்டிடம்)

மின்சார வசதிகள் இன்னும் இல்லை நாளாந்தம் காட்டு வெள்ளம் போல் ஏறும் விலைவாசிக்கு மத்தியில் மண்ணெண்ணை விளக்கில் குப்பி லாம்பில் படித்து பாசாக முடியுமா என்பது கேள்விக்குறியே! இப்படியே பிரச்சினையை அடிக்குக் கொண்டு போனால் நாம் தமிழ் சமுகம் என்று சொல்லுவதற்க்கு பதிலாக பிச்சைக்கார சமுகம் என்று சொல்ல நேரிடும் என்பதில் ஐயமில்லை.

வேண்டுகோள்!!

நிதி மிகுந்தவர் பொற்குகை தாரீர்

நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்

அதுவுமற்றவர் வாய்ச் சொல் அருளீர்

என்பதற்கு இணங்க இம்மக்களை போன்ற எத்தனையோ வறிய எம் சமுகத்தினை ஏன் நாங்கள் முன்னேற்றக்கூடாது. இங்கு இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பார்த்தால், இவர்களுக்கு குழாய் கிணறுகள் மூலம் நீர் வழங்குவதென்றால் சுமார் 10 கிணறுகள் தேவைப்படுகிறது.  அதுபோல் நிரந்தர பாலர் பாடசாலைக் கட்டிடம் ஒன்று தேவையாக இருக்கிறது அதற்க்கு தளபாடங்கள் அதுபோல் அவர்களுக்கான உபகரணங்கள் என்பனவும் தேவையாக உள்ளது. பாடசாலை செலலும் 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் தேவைப்படுகிறது.. இதற்க்கு மேலாக யானைக்கான பாதுகாப்பு வேலி மற்றும் தற்காப்பு சாதனங்கள் என்பன எல்லாம் தேவை இருந்தும் இருந்தும் யார் இவற்றை எல்லாம் எம் தமிழ் மக்களுக்கு இரந்தளிப்பார்? சிந்திப்போம் செயலாற்றுவோம்.

ஆக்கம்: சி. தணிகசீலன்,

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com