Contact us at: sooddram@gmail.com

 

மையில நனச்சு பேப்பரில் அடிச்சால் மறுத்துப் பேச ஆளில்லை

மையில நனச்சு பேப்பரில் அடிச்சால்

மறுத்துப் பேச ஆளில்லை; அதனைச் செய்யும்

அச்சகத் தொழிலாளரின் பிரச்னைகளை

நினைத்துப் பார்க்க அமைப்பில்லை

என்ற நிலையை மாற்ற அணிதிரள்வோம்

வாழ்க்கைச் செலவினங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தாலும் சம்பளம் மட்டும் சிறிதளவு கூட உயராத பல தொழில்கள் நமது நாட்டில் உள்ளன. அவற்றில் ஒன்று அச்சுத் தொழிலாகும். உலகம் இதுலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது, கலகம் வருது; தீருது; அச்சுக் கலையால் உலகம் மாறுதுஎன்று பாடினார் கவிஞர் மருதகாசி. அவ்வாறு உலகையே மாற்றிய அச்சுக் கலைத்துறையில் பணிபுரிவோரின் ஊதியங்கள் சராசரியா  ாதம் ரூபாய் 5000/ என்னும் அளவிற்கே உள்ளன.

முன்பாவது ஓவியர்கள், அச்சுக் கோர்ப்போர் எனப் பலவகைத் தொழிலாளர்கள் அத்துறையில் பணிபுரிந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஊதியம் கொடுத்து அச்சகம் நடத்தும் போது பெரிய வருவாய் எதுவும் கிட்டாது; அந்நிலையில் கிட்டும் வருவாய்க்குத் தகுந்த விதத்தில் தானே ஊதியம் வழங்க முடியும் என்ற வாதத்தை அச்சக முதலாளிகள் முன் வைப்பதற்கு வாய்ப்பிருந்தது. தற்போது கணிணி மயம் ஏற்பட்ட பின்னர் அவ்வாறு பலரகத் தொழிலாளர் இருப்பதற்குத் தேவையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எத்தகைய பிரசுர வடிவமைப்பையும் கணிணி கற்ற ஓரிருவரைக் கொண்டே செய்து விடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் சம்பள உயர்வு என்பதை மட்டும் அச்சக முதலாளிகள் எண்ணிப் பார்ப்பதே இல்லை. நவீன மயத்தின் பலன்கள் அனைத்தையும் தாங்களே ஆதாயமாக அடைய வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர்.

வேலை தெரிந்தவர்கள் குறைவாக இருக்கும் எந்தத் தொழிலிலும் அவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பேரம் பேசும் உரிமையும் அதன் மூலம் கூடுதல் ஊதியம் பெறும் வாய்ப்பும் அதிகம் இருக்கவே செய்யும். ஆனால் அச்சுத் தொழிலில் வேலை தெரிந்தோர் அத்தனை கூடுதல் எண்ணிக்கையில் இல்லாதிருந்தாலும் அவர்களால் கூடுதல் ஊதியம் பெற முடிவதில்லை. அதற்கான காரணம் ஒருபுறம் அவர்களுக்காக வாதிடுவதற்கு அமைப்பு இல்லாததும் மறுபுறம் தங்களது ஆட்தேவையை கூடுதல் முன்பணம் கொடுத்துத் தொழிலாளரை தக்க வைத்து அவர்களிடம் ஓவர்டைம் வேலை வாங்கி அச்சக முதலாளிகள் நிறைவேற்றிக் கொள்வதும் ஆகும். கைநீட்டிக் காசு வாங்கி விட்டோம்; அவர்கள் கூறுவது அனைத்தையும் செய்துதானே தீரவேண்டும் என்ற தார்மீக உணர்வு அச்சகத் தொழிலாளரை இவ்விசயத்தில் கட்டிப் போட்டு விடுகிறது. அதிக எண்ணிக்கையில் தொழிலாளர் வேலை செய்யும் அச்சகங்கள் மிகவும் குறைவு. அதனால் ஒவ்வொரு தொழிலாளரைப் பற்றியும் தனிநபர் ரீதியாக நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு குடும்ப உறவு போல் தொழில் உறவை நினைக்கும் மனநிலையை அவர்களிடம் ஏற்படுத்தி செண்டிமெண்டுகளைப் பயன்படுத்தி ஏமாற்றிச் சுரண்டும் போக்கும் இத்தொழிலில் தலை விரித்தாடுகிறது.

சம்பள விகிதங்கள் தரைமட்டமாக இருப்பதால் மாலை வேளைகளிலும் வேறு அச்சகங்களுக்குச் சென்று பிளேட் போட்டுக் கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்து அதன்மூலம் ஏதாவது சம்பாதித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பெரும்பான்மை அச்சகத் தொழிலாளர் உள்ளனர். அதனால் அவர்கள் தங்களது வாழ்க்கைச் சூழ்நிலையை நினைத்துப் பார்க்க முடியாதவர்களாகவும், தங்களது பிரச்னைகளுக்குத் தீர்வுகாண உகந்த வழி எது என எண்ணிப் பார்க்க முடியாதவர்களாகவும் உள்ளனர். அவர்கள் அமைப்பு ரீதியாக ஒன்று படுவதில் ஒரு மிகப்பெரும் சிக்கலை இச்சூழ்நிலை தோற்றுவிக்கிறது.

மேலும் பெரிய பெரியஇடது சாரிக் கட்சிகள்கூட அச்சகத் தொழிலாளருக்கென அமைப்புகளை ஏற்படுத்த முன்வருவதில்லை. அக்கட்சிகள் பலவற்றின் அடிப்படை அரசியல் வழி சிறு முதலாளிகளை நேச சக்திகள் எனக் கருதுவதால் அச்சிறு முதலாளிகளைப் பாதிக்கும் தொழிற்சங்க அமைப்புகளை உருவாக்க அவை முன்வருவதில்லை. சிறு முதலாளிகளின் சிரமங்கள் அவர்களது கண்களுக்குப் பளிச்செனத் தெரிவது போல் அச்சகத் தொழிலாளரின் தாங்கொண்ணா வாழ்க்கைப் பிரச்னைகள் அவர்களது கண்களுக்குத் தெரிவதில்லை.

இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் தொடர்ச்சியான விலை உயர்வோடு அரசு தற்போது சுமத்தியுள்ள பேருந்துக் கட்டணமும் பால் விலை உயர்வும் மிகக் குறைந்த ஊதியம் பெறும் அச்சு மற்றும் பைண்டிங் தொழிலாளரை வாட்டி வதைத்துக் கொண்டுள்ளன. அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு அடுத்துவரும் மாதங்களில் அவர்களை நிலைகுலைக்கக் காத்திருக்கிறது. மருத்துவச் செலவு கூடிக்கொண்டே போகிறது. குடும்பத்திற்கு தரமான மருத்துவ வசதி பெற அச்சகத் தொழிலாளருக்கு இ.எஸ்.ஐ. வசதி கிடையாது. இத்துடன் ஓரளவேனும் தரமான கல்வியைத் தங்கள் பிள்ளைகளுக்குத் தரவேண்டும் என்றால் அதற்கும் அவர்கள் ஒரு பெரும் தொகையைச் செலவிட வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்நிலையிலும் கூட ஒன்றுபட்டு ஒரு அமைப்பினை உருவாக்கி சம்பள உயர்வு போன்ற தங்களது அத்தியாவசியக் கோரிக்கைகளை வலியுறுத்தாது இருந்தால் நாகரீக சமூகம் வேண்டும் குறைந்தபட்ச வாழ்க்கையைக் கூட நடத்த முடியாதவர்களாக அச்சுத் தொழிலாளர்கள் ஆகிவிடுவர். கண் கெட்டபின் யாரும் சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது. அதனை உணர்ந்து மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அச்சுத் தொழிலாளரின் முன்னணி ஊழியர்கள் கடந்த பல மாத காலமாக அரும்பாடுபட்டு விரவியும் சிதறியும் கிடக்கும் அச்சுத் தொழிலாளரை ஒருங்கு திரட்டியதின் பலனாக சங்கம் ஒன்று மலர்ந்துள்ளது. அதனைப் பதிவு செய்யும் பணி தற்போது வேகமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. அம்முயற்சிக்கு முழு ஒத்துழைப்புத் தந்து இன்னும் சங்கத்தில் இணையாதிருக்கும் தொழிலாளரை இணையக் கேட்டுக் கொள்வதோடு தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியான அச்சுத் தொழிலாளர்கள் மாமேதை மார்க்ஸ் கனவுகண்ட தொழிற்சங்கமாக அணிதிரண்டிருப்பதை வாழ்த்தி வரவேற்று அம்முயற்சிக்கு உதவிக்கரம் நீட்டுமாறு கரத்தாலும் கருத்தாலும் பாடுபடும் உழைக்கும் மக்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.

அச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்

நாள : 29.04.2012, ஞாயிறு மாலை 4 மணியளவில்

இடம : மகாலட்சுமி திருமண மண்டபம்,

தியாகி பாலு 2-வது தெரு, 50 அடி ரோடு, செல்லூர்

சிறப்புரை:

தோழர் அ.ஆனந்தன்,

சி.ஓ.ஐ.டி.யு., தென் இந்தியப் பொதுச் செயலாளர்.

மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம்

1/3 அஹிம்சாபுரம், 8வது தெர(விசாலம்) செல்லூர், மதுரை-௨

தொடர்பிற்கு:

R.பெருமாள், செயலாளர். செல்: 934283358.

T.சிவக்குமார், துணைப் செயலாளர். செல்: 9443080634.

M.பால முருகன், அமைப்புச் செயலாளர். செல்: 9843206808.

A.நாகராஜன், பொருளாளர். செல்: 9629372771.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com