Contact us at: sooddram@gmail.com

 

சர்கோஸியின் வாட்டர்லூ!

(எம். மணிகண்டன )

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வாட்டர்லூ அருகே கடும் யுத்தம் நடந்தது. அந்த யுத்தத்தில் பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டார். நாடு விட்டு நாடு ஓடினார். எங்கும் ஒளிந்து கொள்ள முடியாமல், கடைசியில் பிரிட்டிஷ் படைகளிடம் சரணடைந்தார். ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்தும் போனார். நெப்போலியனின் ஆட்சிக்கு முடிவு கட்டியதுடன், ஐரோப்பாவின் அரசியல் போக்கையே மாற்றியமைத்த யுத்தம் அது. அதைப்போன்ற இன்னொரு யுத்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நடந்தது. பிரான்ஸின் அதிபர் தேர்தல் வடிவில். பதவிக்கு வரும்போதே, பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸியை நவீன கால நெப்போலியன் என்றார்கள். உறுதியான முடிவுகள், பிரச்னைகளைக் கண்டு அஞ்சாத தன்மை, சர்ச்சைகளைக் கடந்து வரும் துணிச்சல் போன்ற சர்கோஸியின் குணங்கள் பாராட்டப்பட்டன. ஆனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவரும் மாவீரன் நெப்போலியனைப் போலவே வாட்டர்லூ யுத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

 நவீன நெப்போலியன் என்கிற பெயருக்கு ஏற்றபடி பிரான்ஸில் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு சர்கோஸி வித்திட்டார். குடியேற்ற விதிகளைக் கடுமையாக்கியது, வேலைநிறுத்தங்களைத் திறமையாகக் கையாண்டது போன்றவற்றில் நற்பெயர் கிடைத்தது.

 நெருக்கடியான பொருளாதாரச் சூழலில் ஐரோப்பியக் கூட்டமைப்பைக் கட்டிக் காத்த பெருமையிலும் அவருக்குப் பங்கிருக்கிறது.  சர்வதேச அளவிலும் சர்கோஸியின் பெயர் அவ்வப்போது தலைப்புச் செய்திகளில் அடிபட்டது. ரஷியாவுக்கும் ஜார்ஜியாவுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டபோது, அங்கு மத்தியஸ்தம் செய்யப்போனார். சில ஆண்டுகளுக்கு முன்பு லிபியாவின் முன்னாள் ஆட்சியாளர் முகமது கடாஃபியுடன் பல ஆயிரம் கோடிக்கு ஆயுத விற்பனைக்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டார்.

 தோளில் கைபோட்டுச் சிரித்துக் குலாவினார். ஆனால், அதே கடாஃபிக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேற்றியவுடன் முதல் ஆளாக ஏவுகணைகளையும் போர் விமானங்களையும் லிபியாவுக்கு அனுப்பியவரும் இவர்தான். கடாஃபி கொல்லப்படும்வரை அந்நாட்டு கிளர்ச்சிக்காரர்களுக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்தார். ஏனிந்த இரட்டை நிலை என்று கேட்டால், "வியாபாரம் வேறு, அரசியல் வேறு. லாபம் கிடைக்கிறது என்பதற்காக கொடுங்கோல் ஆட்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாது' என்று ராஜதந்திர விளக்கம் தருவார்.

 சர்ச்சைகளை எதிர்கொள்ள அஞ்சாதவர் சர்கோஸி. இரு முறை விவாகரத்தான இவர், கார்லா புரூனியை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டபோது, மற்ற எல்லாப் பிரச்னைகளையும் விட்டுவிட்டு பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இவர்களது காதலைப் பற்றிப் பேசத் தொடங்கின. சர்கோஸி என்றவுடனே, முதலில் நினைவுபடுத்தப்படுவது அவரது காதல் வாழ்க்கைதான் என்கிற அளவுக்கு உலகம் முழுவதுமே ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டிருந்தது. அரசியல் அணுகுமுறைகளெல்லாம் அப்புறம்தான். அவரது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்குக்கூட பாராட்டுக் கிடைக்கவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள். இவர் பெண் பித்தர் என்றுகூட ஊடகங்கள் கங்கணம் கட்டிக் கொண்டு எழுதின. ஆனால், சர்கோஸி எத்தனைவிதமான அவதூறுகள் பரப்பப்பட்டாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படும் ரகம் கிடையாது.

 அவரையே கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது பிரான்ஸ் அதிபருக்கான முதல் சுற்றுத் தேர்தல். கடந்த 30 ஆண்டுகளில் எந்தவொரு பிரான்ஸ் அதிபருக்கும் ஏற்படாத அவமானம் சர்கோஸிக்கு ஏற்பட்டிருக்கிறது.  1983-க்குப் பிறகு எந்த பிரான்ஸ் அதிபரும் இரண்டாவது முறையாகத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுப் போனதில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல், இந்த வரலாற்றைப் புரட்டிப் போடுவதற்கான முதல் படியாக அமைந்திருக்கிறது.

 பிரான்ஸ் அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் சோஷலிஸ்ட் கட்சி வேட்பாளரும் மதிக்கப்படும் இடதுசாரியுமான பிரான்காய்ஸ் ஹாலண்டே, சர்கோஸியை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார். சர்கோஸி 27.1 சதவிகித வாக்குகளும், ஹாலண்டே 28.6 சதவிகித வாக்குகளும் பெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 வாக்கு வித்தியாசம் வெறும் ஒன்றரை சதவிகிதம்தான் என்றாலும், இவர்கள் இருவர் மட்டுமே போட்டியிடும் இரண்டாம் சுற்றுத் தேர்தலில் சர்கோஸிக்கு தோல்வி உறுதி என்று கூறப்பட்டு வருகிறது.

 கடந்த சில மாதங்களில் வெளியான கருத்துக் கணிப்புகளிலேயே சர்கோஸிக்கு சரிவு ஏற்படுவது உறுதி என்று வெளிப்படையாகத் தெரிந்தது. 300-க்கும் மேற்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் ஒன்றில்கூட சர்கோஸிக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாகக் கூறப்படவில்லை.

 அதிபர் தேர்தலில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது இரண்டே விஷயங்கள்தான். பொருளாதாரத் தேக்க நிலை, வேலைவாய்ப்பின்மை. சர்கோஸி பதவிக்கு வருவதற்கு முன் இருந்ததைவிட வேலைவாய்ப்பின்மை கணிசமாக உயர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஐரோப்பியக் கூட்டமைப்பையும் யூரோவையும் தாங்கிப் பிடித்ததால் பிரான்ஸன்க்கு நெருக்கடி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 இத்தகைய நெருக்கடிகளுக்கு இடையே, பெண் பித்தர் என்கிற பிம்பமும் சேர்ந்து சர்கோஸிக்கு எதிராக மக்களைத் திருப்பியிருக்கிறது. மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பயணம் செய்து தம்மை எளிமையானவராகக் காட்டிக் கொண்ட ஹாலண்டே மிக எளிதாக முந்தியிருக்கிறார். "பிரான்ள்ஸ ஆளத் தயாராகிவிட்டேன்' என்றும் கூறியிருக்கிறார்.

 ஆனால், முதல் சுற்றில் பின்னடைவு ஏற்பட்டு, இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்ற கடந்த கால வரலாறுகள் இருக்கின்றன. இதுதான் சர்கோஸியை இப்போதும் உற்சாகமாக வைத்திருக்கிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com