Contact us at: sooddram@gmail.com

 

புத்தபெருமான் வருகை தந்தலங்கா பட்டணதுறைமுகத்துக்குச் சென்றோம்

பல மாதங்களாக நாம் யாழ்ப்பாணத்தின் தீவுக்கூட்டங்களுக்கிடையே திரிந்து சென்றோம். அத்தீவுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை மட்டுமன்றி அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் யுத்தத்தால் இருளடைந்த பகுதிகளுக்கும் சென்றோம். இன்று பிரசுரிக்கப்படுவது இறுதிப் பாகமாகும். விசேடமாக தந்ததாது இலங்கைக்கு கொண்டு வந்து வைத்த லங்கா பட்டண ஸ்ரீ சமுத்ரசிறி ரஜ மகா விகாரையோடு தொடர்புடைய கதையையும் எடுத்துக் கொண்டு வருகிறோம். நான் இந்த வரலாற்றுப் புகழ் மிக்க பிரதேசம் அமைந்துள்ள கிழக்கு மாகாணத்திலமைந்துள்ள திருகோணமலை பக்கமாக வாகனத்தைத் திருப்புமாறு அனுரங்கவுக்கு கூறினேன். மூதூர் நகருக்கு சுமார் 35 கிலோ மீற்றர் தெற்குப் பக்கமாகவும் சேருவில புனித பூமிக்கு கிழக்குப் பக்கமாக நேரடியாகத் தெரிகிறபடி சுமார் 6 கிலோ மீற்றர் தூரத்திலும் இந்த மனோரம்மியமான புனித ஸ்தலம் அமைந்துள்ளது.

இலங்கையில் பல ரம்மியமான இடங்களைக் கண்டிருந்தாலும் ஒரு பக்கத்தில் கடலாலும் மறுபக்கத்தில் களப்பினாலும் சூழப்பட்ட அழகான ஒரு கற்பாறையின் மேல் அமைந்துள்ள ஒரு புனித பூமியை நீங்கள் வேறு எங்கும் காண முடியாது.

நுரையை பொழியும் அலைகளுக்கு மேல் காணப்படும் தென்னந் தோப்புக்களையுடைய கடற்கரையோரமும் அதற்கு மேலால் ஓரளவு தெரியும் கல்லடி பாஷான பப்பத விகாரையின் மேல் அமைக்கப்பட்டுள்ள புலிகளின் ஒலிபரப்பு கம்பமும் இவ்விடத்துக்கு நன்கு தெரியக்கூடியதாக உள்ளது. புத்த பெருமானின் தந்தத்தை அன்று தம்பதிவ காலிங்க தேசத்தில் அரசாண்ட குகசீவ அரசன் பகைவர்களின் ஆக்கிரமத்துக்கு மத்தியில் தனது மகள் ஹேமமாலிடமும் ஒப்படைக்கப்பட்டது.

இந்த தந்தத்தை நீண்ட தலைமயிருக்குள் ஒழித்துக் கொண்டு ஹேமாலி இளவரசி தந்த இளவரசனோடு வந்து இலங்கைக்கு வந்திறங்கிய இடம் லங்கா பட்டண அல்லது லங்கா படுண என அழைக்கப்பட்டது. இன்று அது இலங்கைத்துறை என்று அழைக்கப்படுகின்றது. உதவி செய்த அந்த இடம் பிற்காலத்தில் பயங்கரவாதிகளின் ஆயுதங்களைக் கொண்ட பெரிய படகுகள் நாட்டுக்குள் கொண்டு வந்த பிரதான இடமாகவும் அமைந்தது. லங்கா பட்டண விகாரைக்கு அருகாமையில் வடக்கே கிராமங்களை இணைத்த அந்தப் பாலத்தை மானிட நடவடிக்கைகள் நடைபெற்ற காலத்தில் புலிகள் தகர்த்து விட்டனர்.

பாலத்துக்குப் பதிலாக சிறிய படகொன்றினால் லங்கா பட்டணத்துக்கு யாத்திரிகளைக் கொண்டு செல்லும் தனது பெயரைக் குறிப்பிடாத ஒரு தமிழ் கிராம வாசி என்னிடம் இவ்வாறு கூறினார். கிராம மக்களின் சுக துக்கங்களை விசாரித்துப் பார்த்தார். கிராம மக்களும் அவ்வாறே தான். இன்று கடற்படையினர் தான் புத்த கோயிலுக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொடுக்கின்றனர். புலிகள் இந்த இடத்தினூடாகத் தான் ஆயுதங்களைக் கொண்டு வந்தனர்.

இவ்விடத்திலிருந்த பாலம் புலிகள் வெடிக்க வைக்கும் போது எங்களது உள்ளங்கள் எரிந்தன. அவர் அவ்வாறு கூறிக் கொண்டு ஒழித்து வைத்திருந்த ஒரு கண்ணீர்த்துளியை துடைத்துக் கொண்டார். போதி மரக்கிளை கொண்டு வரப்பட்டதனால் யாழ்ப்பாணத்தில் ஜம்பு கோளப் பட்டணத்துக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது போலவே தந்ததாது கொண்டுவரப்பட்ட துறைமுகமாக லங்கா பட்டண சமுத்ரசிறி விகாரையும் எமது மதிப்புக்குட்படுத்த வேண்டும். தந்த இளவரசனும் ஹேமலதா இளவரசியும் இங்கு வந்த அந்த மாலை நேரம் எனது எண்ணத்துக்குள் வருகின்றது. அச்சந்தர்ப்பத்தில் இந்த கற்பாறையின் உச்சியில் ஒரு பக்கத்தில் சூரிய மாளிகையொன்று இருந்ததாக இங்கிருக்கும் தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

இம்மாளிகை இருந்த இடத்தில் காலையில் சூரியன் கடலிலிருந்து உதிப்பதையும் மாலையில் மேற்குப் புறமாக சூரியன் கடலில் மறையும் காட்சியையும் இங்கிருந்து நன்கு காணக்கூடியதாக இருக்கின்றது. அதனால் இங்கு சூரியனை வணங்கும் ஒரு மாளிகை இருந்ததாக எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும். இந்த மாளிகையில் பிராமணர்களோடு தந்ததாது பாதுகாப்பாக இங்கு வைத்து பூஜைகளை செய்து இரவை கழித்த அவர்கள் அடுத்த நாள் அனுராதபுரம் வரை சென்று கித்சிரி மெவன் அரசனிடம் தந்ததாதுவை ஒப்படைத்தனர்.

இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அப்போதிருந்த துறைமுகங்களுக்கிடையே லங்கா பட்டணமானது ஒரு விசேடமான ஒன்றாகும். இதில் களப்பானது கடலோடு சேருமிடத்தில் காணப்பட்ட கடலோர துறைமுகம் பற்றி பெருமளவு வரலாற்றுக் கதைகள் உண்டு. அன்று கிழக்குப்புற கடலோரமாக இலங்கைக்கு வந்த பத்தகச்சானா இளவரசியும் ஏனைய சாக்கிய வம்ச இளவரசர்களும் விஜிதகிராமய, ராமகோதய, தீகாயு மற்றும் ரோஹன போன்ற பல குடியேற்றங்களை உருவாக்கினார்கள் என்றும் வரலாற்றுக் கதைகள் எடுத்துக் காட்டுகின்றன.

அநுராதபுர யுகம் வரை காணப்படும் இறந்த காலத்தைக் கொண்ட லங்கா பட்டுண விகாரையின் பிக்குகளின் ஆச்சிரமம், தூபிகள் என்பன பிற்காலத்தில் மீண்டும் அழிந்து போயின. இங்கு கற்பாறைகள் மேல் மிகப் பழைய தூபிகளின் மேற்பூச்சு அதற்குப் பாவித்த கலவைகளின் மிகுதிகள் இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது.

சேருவில மறுமலர்ச்சியின் முன்னாள் கர்த்தாக்களான தம்பகஸ் ஆரே ஸ்ரீ சுமேதங்கர மகா தேரர் 1940 ஆம் ஆண்டுகளில் இவ்விடத்தைக் கண்டுபிடித்தார். தற்போதிருக்கும் சேருவில தலைமை பிக்கு சேருவில சரணகித்தி தேரரின் முயற்சியால் 1982 ஆம் ஆண்டு பிக்குகளுக்காக ஒரு ஆச்சிரமத்துக்கான அத்திவாரமிடப்பட்டாலும் 1989 இறுதி அரைப் பாகத்தில் புலிகளின் ஆக்கிரமிப்புக்கு இப்பூமி அகப்பட்டுக் கொண்டது. அவர்கள் மிகப் பழைமை வாய்ந்த தூபிகள் இடிபாடுகளை அழித்து கற்பாறையின் மேல் ஒரு கோயிலைக் கட்டினர்.

இங்கு வாழ்வோர் தமிழ், முஸ்லிம் மக்களாவர். எங்களுக்கு கடற்படையினரால் அநேக ஒத்துழைப்பு கிடைத்தாலும் அப்பிரதேசத்தின் மக்கள் நல்ல அன்போடு எங்களைக் கவனிக்கிறார்கள். சேருவில தலைமை தேரரினால் தான் நாங்கள் இன்றும் இவ்விடத்தை பார்த்துக் கொண்டு இருக்க முடிகின்றது. அதில் கடல் யானையின் பல்லொன்றும் இருக்கின்றது. அதை எங்களுக்கு ஒரு தமிழ் இன மீனவர் தான் பெற்றுக் கொடுத்தார். இலங்கையில் நாலா பக்கங்களிலுமிருந்து வருகை தரும் பெருமளவு யாத்திரிகர்களுக்காக இந்த ஸ்தலத்தை பாதுகாத்துக் கொடுத்த செருவில சரணகித்தி தேரரையும் நாம் காணச் சென்றோம்.

நான் இந்த அழகான பூமியை மீண்டும் கட்டியெழுப்பு முயற்சிக்கிறேன். இங்கு ஒரு தேவாலயம் இருந்த இடத்தில் தான் பழைய காலத்தில் எமது தூபிகள் இருந்திருக்கின்றன. நாங்கள் அதற்கண்மையில் ஒரு தூபியை அமைத்தோம். அவுக்கன புத்தர் சிலையின் மாதிரியைக் கொண்டு புத்தர் சிலையொன்றை அமைத்தோம். தந்த இளவரசனும் ஹேமமாலாவும் இங்கு தந்தத்தைக் கொண்டு வரும் சிலையை அமைக்க இப்போது முயற்சியெடுக்கிறோம்.

அந்த தேரர் மிக எதிர்பார்ப்போடு கூறினார். நாம் அங்கு சென்றிருந்த வேளையில் கூட விகாரையின் கட்டட வேலைகள் முடிவடைந்திருக்கவில்லை.

அழகான ஓர் கற்பாறையினால் அலங்கரிக்கப்பட்ட இந்த கடல் விகாரையானது மிக அழகான ஓர் இடமாகும். பொலிஸாரும் இராணுவத்தினரும் தலையிட்டு இந்த படிக்கட்டுகளை மீண்டும் நிர்மாணித்து வருகின்றன. இந்தளவு பலமிக்க தந்த தாதுவை இலங்கைக்குக் கொண்டு வர காரணமாயிருந்த லங்கா பட்டண விகாரையும், துறைமுகமும் எமது மதிப்புக்கு கட்டாயம் உரித்தாக வேண்டும். நெடுந்தீவு பயணத்தில் மோட்டார் ஜெட்களைப் பெற்றுக் கொடுத்த மற்றும் சகல ஒத்துழைப்புகளையும் வழங்கிய இலங்கை கடற்படையினருக்கும் தரைமார்க்க பயணத்தில் உதவிகளைச் செய்த வடமாகாண உதவி பொலிஸ் மா அதிபர் காமினி டி சில்வா அவர்களுக்கும் அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஸ்ஸங்க போன்றோருக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும். (முற்றும்)

படங்கள்: விமல் கருணாதிலக

சிங்களத்தில : உபாலி சமரசிங்க

தமிழில : நிசா...

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com