Contact us at: sooddram@gmail.com

 

படையினரால் உயிர் பிழைத்த கஜேந்தினி.

எனக்கு முந்தி ஆமியெண்டா பயம். அவை நல்லவை எண்டு இப்ப விளங்குது என்ரை வாழ்க்கையில அவையள மறக்கேலாதுஎன்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் கஜேந்தினி. சில தினங்களுக்கு முன்பாக, யாழ்ப்பாணத்தில், இராணுவத்தால் உயிர் காக்கப்பட்ட பெண் என்று பரபரப்பாகப் பேசப்பட்ட செய்திக்குச் சொந்தக்காரி. 15 நாட்களே உயிர் வாழ்வார் என மருத்துவர்களால் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு நல்ல உள்ளங்களின் உதவியால் இன்று உயிர் பிழைத்திருக்கும் அதிசயம் அவர். யாழ்ப்பாண இராணுவக் கட்டளை பீடத்தின் ஏற்பாட்டிலான இலவச இருதய சத்திரசிகிச்சை மூலம் உயிர் காக்கப்பட்ட கஜேந்தினியை வரவேற்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போதே கஜேந்தினி கண்ணீர் மல்க மேற்கண்டவாறு நன்றி தெரிவித்திருக்கிறார்.

கிருஷ்ணகுமார் கஜேந்தினியை நாங்கள் சந்திக்கும் போது அவர் மருத்துவமனையை விட்டு, தனது ஊருக்குச் செல்லும் ஆயத்தங்களில் இருந்தாலும், தனக்கு மேற்கொள்ளப்பட்ட 3 மணிநேர சத்திரசிகிச்சையிலிருந்து முற்றுமுழுதாகத் தேறியிருந்தார். நெற்றியில் கறுத்த பொட்டும் அவர் அணிந்திருந்த பூப்போட்ட சட்டையும் அவரது அழகுக்கு மேலும் மெருகூட்டின.

கஜேந்தினி அடங்கலாக இரண்டு பெண் பிள்ளைகள் இரண்டு ஆண் பிள்ளைகளை உள்ளடக்கியது அவரது குடும்பம்.

கஜேந்தினி எந்நேரமும் ஓவியத்தில் ஈடுபாடு காட்டியது அவரது பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கஜேந்தினி பாடசாலைக்கு சைக்கிளிலேயே சென்று வருவார். வறுமைப்பட்ட குடும்பம் அவருடையது. ஒரு மருத்துவத்தாதியாக வேண்டும் என்று கஜேந்தினி கனவு கண்டார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட நோயினால் கனவு மெய்யப்படவில்லை.

எப்படியாவது படித்து ஒரு தாதியாகிவிட வேண்டும் என்ற உந்துதலில், தனது இதயத் துடிப்பின் மாறுபாட்டை அறிந்து கொண்ட பின்னரும் அவர் பாடசாலைக்குச் சென்று வந்தார். இது பற்றி அவரது பாடசாலை ஆசிரியர்கள் எச்சரித்தும் அவர் பொருட்படுத்தவேயில்லை. முடிவில் நோய் முற்றவே, அவரைப் பாடசாலைக்கு வரவேண்டாம் என்ற கூறிவிட்டனர் பாடசாலை அதிகாரிகள்.

நாளாக நாளாக, அவரது நிலைமை மோசமாக, தனது அறைக்குள்ளயே அடைப்பட்டுக் கிடந்தார் கஜேந்தினி.

யாழ் போதனா வைத்தியசாலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இருதய வால்வு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறி, கொழும்புக்கு அனுப்பினர். 2009 ஆம் ஆண்டு அவர் உடனடியாக விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டார்.

தனது 14 வயது முதலே, கஜேந்தினி இருதய நோயால் அவதியறுகின்றார். துரதிஷ்டவசமாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட வால்வு மாற்றுச்சிகிச்சை மூலமும் அவர் குணமடையவில்லை. சத்திரசிகிச்சையின் சில மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இருதய நோயால் அவதியுற ஆரம்பித்தார்.

அவரது நிலை மோசமடைய எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. கிழமைக்கு 3 நாட்கள், அரச மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் அவரைக் காண்பிப்பதைத் தவிரஎன்றார் கஜேந்தினியின் தாய்.

நான் கும்பிடும் கணேஷப் பெருமா§ன் என்ர மகளக் காப்பாற்றுவார் எண்டு நான் நம்பினேன்என்று கண்ணீர் மல்கக் கூறினார். கஜேந்தினியின் தாயார் 48 வயதான உதயகுமாரி.

கஜேந்தினியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைய, நடக்கக் கூட முடியாமற் போனது. கஜேந்தினிக்கு, அவரது குடும்பத்தவர்களுக்கு, கஜேந்தினியைக் காப்பாற்ற எதுவுமே செய்ய முடியவிலலை. இந்த நிலையிலே இடியென வந்தது கஜேந்தினியின் தந்தையின் மரணச் செய்தி இரண்டு மாதங்களுக்கு முன்னர், தனக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காகச்சென்று திரும்பும் வழியில் கஜேந்தினியின் தந்தை உயிரிழந்தார்.

கூலித் தொழிலாளியான இவரின் மரணம் கஜேந்தினியின் குடும்பத்தை வெகுவாகப் பாதித்தது. தந்தையின் வருமானத்தில் மட்டுமே தங்கியிருந்த அந்தக் குடும்பத்துக்கு அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாததாயிருந்தது. நோய்வாய்ப்பட்ட கஜேந்தினியையும் அவரது இரண்டு தம்பிகளையும் (வயது 9, வயது 7) பராமரிக்கவும், வீட்டுச் செலவுகளைச் சமாளிக்கவும் கஜேந்தினியின் தாயார் தனது நகைகளை அடகு வைக்க வேண்டியதாயிற்று.

கஜேந்தினிக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த மருத்துவ பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மாதா மாதம் அவரால் 1000 ரூபாய் செலவழிக்க முடிந்தது. மருத்துவர்களால் கஜேந்தினிக்கு எனப் பரிந்துரைக்கப்பட்ட பால்மாவை அவரால் வாசிக்கக் கொடுக்க முடியவில்லை. கஜேந்தினி குணமாக்கப்படுவார் என்ற உறுதிமொழியை எவருமே வழங்காததால், இராணுவத்தால் நடாத்தப்பட்ட மருத்துவ முகாமுக்குச் செல்ல கஜேந்தினியின் குடும்பத்தவர்கள் அக்கறை கொள்ளவில்லை. “இங்கு பாரம்பரியமாக ஒரு மரணச்சடங்கு நடந்தால் வெளியார்கள் எவருமே வரவேற்கப்படுவதில்லையாதலால், மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வீடு வீடாகச் சென்று அழைப்புவிடுத்த இராணுவத்தினருக்கும் எமது வீட்டுக்கு வரமுடியவில்லை. ஆனால் இவ்வாறு ஒரு மருத்துவ முகாம் நடாத்தப்படுவதாகவும் எங்களிடம் இது பற்றி அறியத்தருமாறும் கஜேந்தினியை அதற்கு அழைத்து வருமாறும் இராணுவத்தினர், எங்கள் அயலவர்களிடம் கூறிச் சென்றிருக்கிறார்கள் என்றார் கஜேந்தினியின் தாயார் உதயகுமாரி.

இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில், ஆசிரிய இதயப் பராமரிப்பு நலையத்தின் வைத்திய நிபுணர் டொக்டர் விவேக் குப்தா கலந்து கொண்டார்.

அவர் கஜேந்தினியைப் பரிசோதித்த போது, அவரது இதயத்தின் செயற்பாடுகள் அச்சம் தருவதாக அமைந்திருப்பதாகக் கூறினார். இதயத்தில், இரத்த ஒழுக்குஇருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்தார். உடனடியாக கஜேந்தினிக்கு மைக்ரோ வால்வ் மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கவே நகைகளை அடகு வைக்க லேண்டிய நிலையில் இருந்த கஜேந்தியின் தாயாரால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. அவ்வாறான சத்திர சிகிச்சையொன்றுக்குத் தங்களிடம் பணமில்லை எனத் தாயும் மகளும் அங்கிருந்து அகன்றனர். கண்ணீரோடு அங்கிருந்து அகன்ற கஜேந்தினியின் உருவம், டொக்டர் குப்தாவின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அடுத்த நோயாளியைப் பரீட்சித்துக் கொண்டிருந்தார். திடீரென, ஆசிரிய சத்திரசிகிச்சை மருத்துவ மனையின் இருதய நோய் சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் ஜெசியை அழைத்து, அவர்களுக்குப்பணம் கொடுத்தனுப்பும்படி கூறின்¡ர். ஜெசியும், அவர்கள் இருவரையும் துரத்திச் சென்று 1000 ரூபாய் கொடுத்தார். அக்காசில் கஜேந்தினிக்கு சஸ்டஜின் வாங்கப்பட்டது. யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவின் வழிகாட்டலில், 511 ஆம் படையனியின் பொதுமக்கள் விவகார அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில், ஆசிரிய வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர்கள் குழு, கோப்பாய் நாவலர் வித்தியாலயத்தில் மருத்துவ முகாமை நடாத்தியது. ஆசிரி வைத்தியசாலையின் இருதய நோய்ச்சிகிச்சை நிபுணர்கள் ஐவர், இம்முகாமில், பொதுமக்களிடையே இருதய நோய் பற்றிய விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது இதய நோயால் பாதிக்கப்பட்ட 560 பேர் இனங்காணப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டோ, வேறு மருத்துவமனைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காகவோ அனுப்பப்பட்டனர்.

அவ்வாறானவர்களில் கஜேந்தினியும் ஒருவர் கஜேந்தினிக்கு தனியே மருத்துவப் பொருட்களை பரிந்துரை செய்ததோடு தங்கள் வேலை முடிந்துவிட்டதாக இருந்துவிட அந்த மருத்துவர்களால் முடியவில்லை. கஜேந்தினிக்கான சத்திரசிகிச்சைக்கு தனக்கான கட்டணத்தைத் தான் அறவிடக் போவதில்லை என்று, கூறி சத்தரசிகிச்சையைச் செய்ய முன்வந்தார். குப்தா.

அவர் ஆசிரி வைத்தியசாலையின் இதய சிகிச்சைப் பிரவின் பணிப்பாளர் டொக்டர் அனில் பெரேராவுடனும் பிரதம நிறைவேற்று அதிகாரி மஞ்சுள கருணாரத்னவுடனும் தொடர்பு கொண்டார்.

அவர்கள் இருவரும் இந்தச் சந்திர சிகிச்சைக்கான மருத்துவமனைச் செலவுகளை அறவிடப் போவதில்லை என ஒரே குரலில் கூறினர்.

கஜேந்திரனிக்கான சத்திர சிகிச்சைக்கு 800,000 தேவைப்பட்டாலும் பலர் தமது கட்டணங்களை விட்டுக் கொடுத்ததால், சத்திர சிகிச்சை செய்ய 4 இலட்சம் ரூபாய் இருந்தால் போதுமானதென அறிவிக்கப்பட்டது.

4 இலட்சம் ரூபா தேவைப்படுகின்றது என்பது, 511 ஆவது படையணிக்கு அறியத்தரப்பட்டது. வீடு வீடாகச் சென்று நிதி சேர்க்க இராணுவத்தினரை அனுப்ப சம்மதித்தார் வடக்கின் இராணுவ கட்டளைத் தளபதி. இராணுவத்தினர் வீடு வீடாகக் சென்று நிதி சேகரிக்க ஆரம்பித்தனர். இது குறித்து அறிந்து கொண்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொறியியலாளர் கிருபாகரன் 4 இலட்சம் ரூபாவைத் தந்துதவினார்.

மார்ச் 30ம் திகதியன்று கஜேந்தினி விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்.

ஹெலிகொப்டரில் போவதென்றால் எனக்குச் சரியான பயம். ஆனால் எங்களை கூட்டிக் கொண்டு வந்த ஆமி ஆக்கள்தான் எங்களுக்கு தைரியம் தந்தவை. நான் கெதியா செத்திடுவன். எண்டுதான் நான் பயந்து கொண்டிருந்தனான்என்றார் கஜேந்தினி.

டொக்டர் அனில் பெரேரா கருத்துக் கூறுகையில், இராணுவத்தால் வழங்கப்படும் ஆதரவை நாங்கள் பாராட்ட வேண்டும். அவர்கள் மக்களின் நலனுக்கென கண்டி, மாத்தறை களுத்துறை யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்களை நடாத்துகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மக்களின் அன்றாட வாழ்க்கைக்காக திறம்பட உதவி வருகின்றனர் என்றார். ஜெஸி தனது கருத்தில், கஜேந்தினியின் உயிர் காக்க உதவிய இராணுவத்தினர் தற்போது, அவருக்கு மருந்துப் பொருட்களை தொடர்ச்சியாகப் பெற அனுசரணை வழங்குமாறு மருத்துக் கடைகளுக்கு நடையாக நடக்கின்றனர் அவர்களது பணி பாராட்டுக்குரியது என்றார்.

கஜேந்தினியின் உயிர் காக்கும் பணிகளை, கேர்ணல், விஜேந்திரா தலைமையிலான இராணுவத்தினரே திட்டமிட்டு மேற்கொண்டனர். நான் சத்திர சிகிச்சைக்கு பணம் வேண்டும் எனக் கூறியதும் ஒரு மணி நேர அவகாசம் கேட்டார். வீடு வீடாக இராணுவத்தினரை நிதி சேகரிக்க அனுப்பப் போவதாக நல்ல சேதியுடன் அவர் திரும்பினார் என்றார்.

கஜேந்தினியின் சத்திர சிகிச்சைக்கெனத் தேவைப்பட்ட கி+ இரத்தத்தையும், 511 ம் படையணியின் இராணுவத்தினரே தானம் செய்தனர். கஜேந்தினியின் சத்திர சிகிச்சைக்காக, கஜேந்தினியின் தாயாரும் கொழும்புக்கு சென்றுவிட்டதால், அவருடைய தம்பிமாரை இராணுவத்தினரே பராமரித்தனர்.

நாள் கும்பிடுற கணேஷப் பெருமாள் மாத்திரமில்லை, இராணுவத்தினரும் என்ற மகளைக் காப்பாற்றிட்டினம் என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார் கஜேந்தினியின் தாயார்.

வெளிநாட்டுக்குச் சென்று உழைக்க வேண்டும் என்பதும் கஜேந்திரனியின் கனவுகளில் ஒன்று வெளிநாட்டுக்குச் சென்று உழைத்து தனது சிறிய வீட்டை பெரிதாகக் கட்ட வேண்டும் என்று கஜேந்தினி ஆசைப்பட்ட போதும் அவரது தாயார் அதற்கு இணங்கவில்லை.

நான் நன்றாக உடல் தேறிய பிறகு, வேலைக்குப் போகத் தொடங்குவேன். ஒருநாள் எப்படியும் வெளிநாடு போவன். என்று தன் நடுவிரலில் இருந்த சிறிய மோதிரத்தை சுழற்றியபடி கூறினார் கஜேந்தினி. அது, அவரது எதிர்களாலக் கணவன் துஷ்யந்தன் அவருக்கு அணிவித்த மோதிரமாம் நாணத்தோடு சொல்கிறார்.

சத்திர சிகிச்சைக்குப் பிறகு எனக்கு நல்லம். நல்லா மூச்செடுக்க முடியுதுஎன்றார்.

(ஷானிகா)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com