Contact us at: sooddram@gmail.com

 

பிரான்ஸ் ஜனாதிபதி யார்?

இரண்டாம் கட்ட தேர்தலில் ஹோலண்ட் சர்கோஸி

(ஏ.ஜி.எம். தெளபீக )

பிரான்ஸில் அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்த லில் ஐந்து பேர் போட்டி யிட்டதால் எவரும் ஐம்பது வீதமான வாக்குகளைப் பெற முடியவில்லை. இதனால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு அடுத்த ஞாயிற்றுக்கிழமை (மே 06) நடைபெறவுள்ளது. எல்லோரும் ஆசைப்பட்டால் மக்கள் யாரைத் தெரிவு செய்வார்கள் என்ற இழுத்தடி ப்பே இது. முதலாம் கட்ட வாக்களிப்பு முடிவுகளின்படி ஹோலண்ட் 28.5 வீத வாக்குகளையும் நிக்கலஸ் சர்கோஸி 27.1 வீதத்தையும் பேரின்லிபென் 18.1, ஜீன் லக் 11.1, பிரான்ஸ் கொஸ் 8.5 வாக்குகளையும் பெற்றனர். இப்போது பதவியிலுள்ள ஜனாதிபதி சர்கோஸி இரண்டாம் இடத்துக்குச் சென்று பின்னடைவிலுள்ளார். இதேவேளை ஹோலண்ட் முன்னிலைக்கு வந்து ஜனாதிபதியாகும் அதிஷ்டத்தை நெருங்கிவிட்டார்.

இரண்டாம் கட்ட வாக்களிப்பிலும் ஹோலண்ட் சர்கோஸி இடையே கடுமையான போட்டியே நிலவப்போகின்றது. பிரான்ஸ் ஜனாதிபதியென்றால் எவ்வளவு பெருமை, கெளரவம், அந்தஸ்து, உலகின் ஐந்து வல்லரசு நாடுகளில் பிரான்ஸ¤ம் ஒன்று. ஐ. நா. பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்துடன் நிலையான உறுப்புரிமையும் உடைய நாடுதான் பிரான்ஸ். யாரேனும் விட்டுக் கொடுப்பார்களோ இக்கதிரையையும் அதிகாரங்களையும். இந்த ஆசைகளின் ஆதங்கத்தினால்தான் இரண்டாவது கட்டத்திலாவது வென்றுவிடுவோம் என்றே ஆலாய்ப்பறந்து முயற்சி செய்கிறார் சர்கோஸி. மூன்றாவது நிலையிலுள்ள பேரின்லி பென் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து வாக்குகளைப் பெறுமாறு சர்கோஸியின் அபிமானிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பதுபோல் தனித்து நின்றே ஜெயிப்பது எந்தக் கட்சிக்கும் இடமில்லையென்றுவிட்டார்.

சர்கோஸியின் இந்த இறுமாப்பு ஆதரவாளர்களை வாயடைக்கச் செய்துவிட்டது. குடும்ப உறவினர்களும் கத்தோலிக்கர்களும் தாய்நாட்டு விசுவாசிகளும் அதிகமாக வாழும் அல்சேஸ் பிராந்தியத்திலே எஞ்சியுள்ள காலத்துக்கு பிரசாரங்களை மேற்கொள்ளப் போகிறாராம்.

குடியேற்றக் கொள்கை, வெளிநாட்டுக் கம்பனிகளின் வருகை, ஐரோப்பிய பொருளாதார ஒப்பந்தங்கள் என்பற்றை பிரான்ஸின் உள்நாட்டு பொருளாதார கலாசார விடயங்களைப் பாதிக்கா வண்ணம் முன்னெடுக்கவும் தேவையேற்படின் ஒப்பந்தங்களை நிருத்தியமைக்கவும் கடுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்படுமாம். மீண்டுமொரு முறை ஜனாதிபதியானால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஐரோப்பிய பொருளாதார உடன்படிக்கையில் மாற்றங்களையும் செய்யவுள்ளதாக சர்கோஸி மேடைகளில் வீர வசனம் பேசுகின்றார்.

நடந்து முடிந்த முதலாம் கட்ட வாக்களிப்பில் ஒரு வீத வாக்கு வேறுபாட்டில்தான் சர்கோஸி பின்னுக்கு சென்றுள்ளார் என்று யோசிக்க வேண்டாம். முதலாம் கட்ட வாக்களிப்பில் ஐம்பது வீதத்தை தாண்டியிருந்தால் இரண்டாம் கட்டம் தேவைப்பட்டிருக்காதே. ஆட்சியிலிருந்த ஜனாதிபதி எவ்வளவு சாதித்திருப்பார் எனவே இலகுவாக தேர்தலை வென்றிருக்கலாம் தானே என்ன நடந்தது சர்கோஸிக்கு. ஆட்சியிலிருப்பவர்கள் தேர்தலுக்குச் சென்றால் இலகுவில் தோல்வியடைய மாட்டார்கள் என்பதே எழுதப்படாத நியதி. மே 6 இல் நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்களிப்பில் ஹோலன்ட் 54 வீதத்தையும் சர்கோஸி 46 வீதத்தையும் பெறுவார். இதனால் சர்கோஸி தோற்கடிக்கப்பட்டு ஆட்சியிலிருந்து தோற்றுப் போன ஜனாதிபதியென்ற விசேட நாமத்தை சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் பெற்றுக் கொள்வார்.

இன்றுமொரு தகவலின்படி பிரான்ஸில் 54 வருடங்களின் பின்னர் ஆட்சியிலிருந்தபோது தோற்கடிக்கப்பட்டவராக சர்கோஸி கருதப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸியின் தனிப்பட்ட வாழ்க்கையும் கடந்த காலங்களில் காரசாரமாக விமர்சிக்கப்பட்டதை நீங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். இப்போது சர்கோஸி மூன்றாவது மனைவியுடனே குடும்ப வாழ்வை ஓட்டிக்கொண்டு செல்கிறார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிந்ததால் இளம் மனைவியை இப்போது கைப்பிடித்துள்ளார். சர்கோஸியின் வெளிநாட்டுக் கொள்கைகள் அதிலும் விசேடமாக அரபு இஸ்லாமிய நாடுகளில் பிரான்ஸ் படையினரின் பணிகள் இதனால் பிரான்ஸ¤க்கு ஏற்பட்டுள்ள இஸ்லாமிய இயக்கங்களின் அச்சுறுத்தல்கள் என்பன பிரான்ஸ் மக்களின் உளநிலையை பாதித்துள்ளன. குடியேற்றக் கொள்ளையென்ற போர்வையில் இஸ்லாமிய நாடுகளிலிருந்து வருவோர் தாக்கப்பட்டமை. இஸ்லாமியரின் உள்ளங்களை நோவினை செய்யும் கருத்துக்கள் ஊடகங்களை பிரான்ஸ் அரசாங்கம் அப்பட்டமாக அறிந்தமை. இதை தூதுவர் முஹம்மத றபிக் எதிராக வரையப்பட்ட கேலிச் சித்திரங்களையும் எழுத்தாளர்களையும் சர்கோஸி வெளிப்படையாக ஆதரித்தமை, முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா, பர்தா, புர்கா, ஹிஜாப் ஆகிய ஆடைகளை கேலி செய்யும் வகையிலான கருத்துக்களையும் சர்கோஸி கடந்த காலங்களில் வெளியிட்டுள்ளார். இன்று முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா, பர்தா, ஹிஜாப் என்பவை இறைத் தூதர் முஹம்மது நபியின் காலத்து ஆடைகளில்லையாம்.

ஈரானின் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக மறைந்த ஆன்மீகத் தலைலர் ஆயதுல்லா கொமெய்னி அறிமுகம் செய்த மதவாத ஆடைகளே இவைகள் என்றும் சர்கோஸி குறிப்பிட்டதை மறக்க முடியாது.

இவ்வாறான முஸ்லிம் விரோத கருத்துக்களைப் சர்கோஸி முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவை -பிsதிருக்கலாம். ஜனாதிபதியை தீர்மாணிக்குமளவிற்கு பிரான்ஸில் முஸ்லிம் வாக்காளர்கள் இல்லை. என்றாலும் சர்கோஸியின் 01 வீத பின்னடைவை ஈடுசெய்ய முஸ்லிம் வாக்குகள் தேவைபட்டாடிருக்கலாம் என்பதையே சிந்திக்க வேண்டியுள்ளது. இனி எஞ்சியுள்ள காலத்தை பிரசார மேடைகளில் செலவிடவுள்ள சர்கோஸி கத்தோலிக்கர்களின் வாக்குகளையும் தாய் நாட்டுப் பற்றாளர்களின் ஆதரவுகளையும் குறியாகக் கொண்டே செயற்படுவார். எப்படியாவது இம்முறை ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற வேகத்தில் ஹோலண்ட எவ்வாறான யுக்திகளை கையாள்வாரோ தெரியாது.

57 வயதுடைய ஹோலண்ட் இதற்கு முன்னர் பிரான்ஸில் பல பொது வேலைகளில் ஈடுபட்டவர். போட்டியிலுள்ள ஏனையவர்களின் ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாகிவிடலாம் என்று சுறுசுறுப்பாக இயங்குகின்றார். எல்லா கட்சிகளதும் ஆதரவுகளைப் பெற்றால் அமைச்சரவையில் பதவிகள் வழங்குகின்ற போது மோதல்கள் தோன்றக்கூடும். எதிர்வரும் ஜூன் மாதத்தில் பாராளுமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால் தனியாக நின்று செயற்படவே அரசாங்கத்தின் நீண்டகால ஆயுளுக்கு சாதகமாக அமையும். இதை எண்ணியே சர்கோஸியும் கூட்டுச் சேர்வதை விரும்பவில்லை. சட்டதையும் ஒழுங்கையும் பேணி உழைப்புக்கான சம்பளத்தை பெறவும் பிரான்ஸ் அதல பாதாளத்திற்குள் செல்வதை தடுக்கவும் தனக்கு வாக்களிக்குமாறு முன்னணியிலுள்ள ஹோலண்ட் மக்களைக் கேட்டுள்ளார்.

இரண்டாம் கட்ட வாக்களிப்பு அடுத்த ஞாயிற்றுக்கிழமை 06 நடைபெறவுள்ளதால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் சர்கோஸி ஹோலண்ட்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com