Contact us at: sooddram@gmail.com

 

மட்டு ஆயர் ஜோசேப் பொன்னையா பேசுவது பிரதேச வாதமா?

(மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்)

"மட்டக்களப்பில் ஒன்றுமே நடக்கவில்லையா? மட்டகளப்பு மக்கள் பாதிக்கப்படவில்லையா? இங்கு யுத்தம் நடக்கவில்லையா? இங்கிருந்துதானே யுத்தம் தொடங்கியது. இங்குதானே மக்கள் அதிகம் அழிந்தார்கள். ஆனால் தமிழ் தலைமைகள் மட்டக்களப்பு மக்களை ஒதுக்கி வைக்கும் மனப்பான்மையோடுதான் நடக்கின்றார்கள்.இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டு தலைவர்கள் அனைவரையும் வடக்கு வடக்கு என்றுதான் கூட்டி செல்கின்றார்களே தவிர கிழக்குக்கு கூட்டி வருவதில்லை" என்று திருவாய் மலர்ந்தருளி இருப்பவர் மட்டு ஆயர் ஜோசேப் பொன்னையா ஆண்டகை அவர்கள்ஆகும். பல இணையத்தளங்களில் அவரது வீடியோ காட்சிகள் பதிவிடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு-யாழ்ப்பாணம் என்றும் வடக்கு- கிழக்கு என்றும் இப்படி வேறுபடுத்தி இப்படி வேறு யாராவது பேசியிருந்தால் "வாயில மண்". யாரந்த பிரதேசவாதி, எங்கேயந்த துரோகி? கொண்டு வா அவனை அல்லது கொன்று வா என்று ஆணைகள் பறந்திருக்கும். வசைவுகளுக்கும் வஞ்சனைகளுக்கும் பஞ்சமிருந்திருக்காது.

பிருத்தானிய பிரதமர் கமருனாக இருக்கலாம், ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி நவநீதம் பிள்ளையாக இருக்கலாம், இந்திய பிரதமர் மோடியாக இருக்கலாம் இவர்களையெல்லாம் ஏன் தமிழ் தலைவர்கள் கிழக்கு பிரதேசங்களுக்கு கொண்டுவந்து காட்டுவதில்லை?

இங்கு யுத்தத்தில் பலியானோரின் குடும்பங்கள் இல்லையா? காணாமல் போனோர்கள் பட்டியல் எம்மிடம் இல்லையா? போரினால் விதவைகளாக்கப்பட்டோர் இல்லையா? ஊனமுற்ற போராளிகள் பட்டாளம் இங்கில்லையா? என்கின்ற ஆதங்கமே ஆயரிடமிருந்து இந்த கேள்விகள் எழும்ப காரணமாகும்.என்பதனை யாரும் மறுதலிக்க முடியாது.

இற்றைக்கு பதினோரு வருடங்களுக்கு முன்னர் 2004ம் ஆண்டு இதே மார்ச் மாதம் கிழக்கிலிருந்த ஆறாயிரம் போராளிகளின் குரல்கள் இதே வார்த்தைகளைத்தான் ஒலித்தன. 2002ஆம் ஆண்டு உருவான சமாதான ஒப்பந்தத்தை தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாகிய நிர்வாக கட்டமைப்பில் 32 துறை செயலர்கள் நியமனம் பெற்றனர். அதில் 31பேர் வடக்கை சேர்ந்தவர்களாக இருந்தனர். இது நீதியல்ல, நியாயமல்ல. கிழக்கு போராளிகளின் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் எல்லாம் கொச்சைப்படுத்தப்படுகின்றன. எமக்கு நீதி வேண்டும் என குரல் கொடுத்தனர் கிழக்கு போராளிகள். அவர்களது குரல்கள் சரியானதே என சொன்ன தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் ராஜன் சத்திய மூர்த்தியும் கிங்ஸ்லி இராசநாயகமும் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். (இன்று மார்ச் 30 ராஜன் சத்திய மூர்த்திசுட்டுக்கொல்லப்பட்ட நாள்) கிழக்கு மாகாணம் ஒதுக்கப்படுகின்றது என குரல்கொடுத்து ஜனநாயக பாதைக்கு திரும்ப முற்பட்ட போராளிகள் துரோகிகள் பிரதேசவாதிகள் என்று குற்றவாளிகளாக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக வெருகல் படுகொலையும் நடந்தேறியது.

ஆனால் இப்போது "காலம் நம்மை விட்டு விட்டு செல்வதில்லையே" என்பதுபோல் இந்த வடக்கு தலைமைகளின் ஓரவஞ்சனை குறித்து இன்று சங்கைக்குரிய ஆயர் கூட கருத்து தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் அரசியலை திட்டமிடுவதிலும் தீர்மானிப்பதிலும் இவழிநடத்துவதிலும்

வடக்கு தலைமைகள் வசமிருக்கும் ஆதிக்கம் இன்று வரை குறைவடையவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது.

அந்த வகையில் ஆயர் கூறியுள்ள மனக்குறைகளை அண்மைகாலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் கூட அவர்களது பேச்சுக்களில் வெளிக்காட்டியே வருகின்றார்கள். வடக்கு முதல்வரின் பதவி பிரமாண நிகழ்வுக்கு மட்டகளப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை என்று மனக்குறைகள் வெளிக்காட்டப்பட்டன.அண்மையில் ஏற்பட்ட கிழக்கு மாகாணசபை ஆட்சி அதிகாரம் பற்றிய இழுபறி நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட ஒரு கிழக்கு பிளவை எதிர்கொள்ளும் நிலையையே நெருங்கியது.

உதாணரமாக கிழக்கு முதலமைச்சர் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மேலாதிக்க சிந்தனையுடனானஅணுகுமுறை கிழக்கில் தோல்வியை சந்திக்க நேரிட்டது.இதன்காரணமாக கூட்டமைப்பின் கிழக்கு முக்கியஸ்தர்கள் தமது தலைமைகளுடன் மிக கடுமையான முரண்பாடுகளை வெளிக்காட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய பிரதேசங்களின் யதார்த்த கள சூழ்நிலைகளை புறம்தள்ளி யாழ் மைய வாத சிந்தனைகளின் சிறைகளிலிருந்து வெளிவராமல் எடுக்கப்படும் முடிவுகள் மேலாதிக்கம் சார்ந்தவை. அவையே பிரதேச வாத சிந்தனைகளை கொண்டவை எனலாம். ஆனால் இவற்றை சுட்டிக்காட்ட முயல்கின்ற குரல்களை பிரதேச வாதி என சுட்டுவது முறையற்றது ஆகும். அந்த வகையில் இன்று புலிகளின் ஆயுத கலாசாரம் இன்று இல்லாமல் போயிருப்பதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மட்டுமல்ல ஆயர்கூட மனம்விட்டு பேசும் சூழல் உருவாகியுள்ளது. இது வரவேற்க தக்கதாகும்.பிரதேச வாத அணுகுமுறைகள் நிறுத்தப்படும் போதே அதற்கு எதிரான கருத்துக்கள் இல்லாதோ போகும்.இல்லாவிடின் அது ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை மட்டு ஆயரின் குரல் இன்னுமொருமுறை உரத்து சொல்லியுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com