Contact us at: sooddram@gmail.com

 

திருடியோடும் போது கூடச் சில்லறையும் தொலையவிடார்!

(லோகநாதன், ஜேர்மனி)

திருட்டுகளும் தீமைகளும் எப்பொழுதுமே கவர்ச்சி, லாபம், குதூகலம். இலகுவான பின்பற்றல், உற்சாகம், பிரமாண்டம் என பலதைத் தம்மோடு வைத்திருப்பவை. இவற்றை உணராது தீமைகளுக்குள் மூழ்கிக் காலம் காலமாகச் செக்கிழுத்தே மாளும் மக்கள் உலகத்தைப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் குமுறும் மனிதர்க்கெல்லாம் மாற்றத்துக்கான பங்களிப்பு ஏதாவது செய்யத் தோன்றும். அதன் ஒரு வடிகாலாக என்னால் அறிந்ததை எழுதத்தான் முடிகிறது.
இது வெட்டித்தனம், பயனற்றது, யார் பார்ப்பார் என்ற இலகுவான கேலிக்கெல்லாம் ஆளானாலும் என் தார்மீகக் கடமை என ஒரு திருப்தி. 'திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்துகொள்ளடா . . . .' என்று எச்சரிக்கும் கவிஞனின் பாடல் வரிகளையும் திருடர்களே திருடி வைத்து விளம்பரம் செய்கின்ற அளவுக்கு திருட்டு வளர்ந்து கிடக்கின்றது.
„நன்மைக்கும், நல்லவற்றுக்கும் விளம்பரம் தேவையில்லை' என்ற மேற்கோள் தலைகீழாக மாறியிருக்கிறது.
 

நாமோ, சுண்ணாம்பை வெண்ணையாகச் சுவைத்தே பழகிவிட்டோம் வெண்ணெய் கிடைத்தாலும் வெற்றிலையில் தான் தடவுவோம்' என்ற கரிவரிகள் போல உலகம் பூராவும் வாழ்வு செத்துக்கிடக்கிறது. ஆண்டாண்டுகளாக அழுது புரண்டாலும் இந்தத் திருடர்களாற் கொன்றொழிக்கப்பட்ட „நேரான உலகம்' என்ற அந்த ஆரோக்கியமான குழந்தை(வாழ்வு) இதுவரை மீண்டு வந்ததில்லை. இந்த வாழ்வுப் பாணியிலிருந்து சற்று சோரவோ, விடுபடவோ சிந்தித்தால்? முதலாழித் திருடர்கள் அனுமதிப்பார்களா? நாடு, இனம், ஜாதி, மதம் என்ற ஈட்டிகளால் மக்களின் கண்களை இறுகக் குத்தி(உசுப்பேத்தி) பார்வை அற்றவர்களாக்கிவிடுகிறது அந்தத் திருடர் கூட்டம். செலவற்ற கொலைகளும், அழிவுகளும் மக்களுக்குச் சேர வைத்து, நோவற்ற ரொக்க உழைப்பும் பதவிகளும் இந்தக் கூட்டத்துக்கு என்றாகிவிட்டது வழமை.

இதைவிட வழமையிலில்லாத புதியதோர் பரிமாணமாகக் கலைக் கழியாட்டத் திருடர்கள்(முதலாளிகள்) இனம் ஒன்று உருவாகித் தலைவிரித்தாடுகிறது. எந்தத் திருடர்களாயினும் ஒரு போதுமே தாமாகத் திருந்தப் போவதில்லை! திருத்தித் தான் ஆகவேண்டும். திருத்தும் தேவையை மக்களாகக் கையிலெடுக்க வேண்டும்! அதற்கென முதலில் திருடர்களையும் இவர்கள் செயற்பாடுகளையும் அமைப்புகளையும் அறிந்துகொள்ள வேண்டும். திருட்டுத்தான் என்று உணரவிடாத வகையில் இனிப்புக் கொடுத்துக் காப்புக் கழற்றும் திருட்டாகக் கலையுலகத் திருட்டுப் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது. இதையெல்லாம் கூர்ந்து பார்த்தால் . . . ? கட்டற்ற சுதந்திரத்தோடு தோன்றிய உயிரினங்களில் ஒன்று தானே மனிதனும்?
ஏன் அவனிடம் மட்டும் அனைத்து சுதந்திரமும் அர்த்தமற்றுப் பறிக்கப்பட்டிருக்கிறது. இது யாரால்?

ஒரு மனிதனுக்கு . . . .

 வாழும் உரிமை
 சித்திரவதைகளோ, இழிநடத்தலோ அற்ற சுதந்திரம்
 சட்டப்படியான சுதந்திரமும், பாதுகாப்பும்
 உழைப்புக்கான சுதந்திரம் அதற்கான சரியான கூலி
 எதிலும் அடிமைத் தனமின்மை
 ஒவ்வொருவருக்குமான நியாயமான விசாரணகள்
 சட்டப்படி தண்டனை
 தனிவாழ்க்கை, குடும்பம், வீடு, அஞ்சல் தொடர்புகளுக்கான
 சிந்தனை, மதம் பற்றிய கருத்துக்களில் . . .
 ஒன்றுகூடும் சுதந்திரம்
 ஓய்வுவினைச் சுரண்டாமை
 மணமுடிக்கவும், குடும்பமாக வாழவும் . . .
 எதிர்த்தல், விவாதித்தல், விமர்சித்தல் போலும் உரிமைகள்
 பிறரிடைஞ்சலற்று இன்பத்தை நுகர்தலைச் சொத்துரிமையாக் கொளல்
 கல்வி பெறல் அதனூடே உதவல் . . .
 சுதந்திரமாக, நேர்மையாக தேர்தல்களில் பங்கேற்றல்

இவைகள் ஓரளவு குறைந்த பட்ச அடிப்படையுரிமைகளாகக் கொள்ளப்பட்டவை!
உண்மையான உலக மானிடத்தை நேசிக்கும் உறவுகளே மீண்டும் ஒரு தடவை இவைகளை ஒவ்வொன்றாகப் பார்த்து, இவற்றில் உங்களிடம் நிறைவாக இருக்கும் ஒன்றையாவது அடையாள(அயசம)மிட்டோ கீழ்க்கோடிட்டோ பாருங்கள்! ஏதாவது ஒன்றாவது முழுமையாக உங்களிடம் அல்லது உலக மனிதர்களிடம் உண்டா? எதுவுமே இல்லையல்லவா?
„கல்வி பெறலும், அதனூடே பிறருக்கு உதவுதலும்' இதன் கீழே அடையாளமிட நினைத்திருப்பீர்கள். இல்லை அதுவும் எம்மிடம் இல்லை!

கல்விக் கண் எனும் இந்தக் கொடுப்பனவே பலாத்காரமாக அறவே மறுக்கப்பட்டு
குழந்தைப் போராளிகளாகவும், குழந் தைத் தொழிலாளிகளாகவும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் வகையறாக்களில் இன்றைய கணிப்பிலுள்ளோர். . . . .

 59 மில்லியன் சிறுவர்கள்(உலக சனத்தொகையில் இது 22% ஆகும்)

 தனித்து தற்போதைக்கு மூன்று நாடுகளின் புள்ளிவிபரம்(5-14 வயது வரை)

 9860 LTTE குழந்தைப் போராளிகள் (2003-2008 வரை பாதி இறப்பு)
 9600
South Sudan (2014 ன் கணிப்பு)
 43.71,600
India (2013 ன் கணிப்பு குழந்தைத் தொழிலாழிகள். 2.8%)
 

UNICEF மீட்பிலும் கணிப்பிலும் 6800 எனக் கூறப்பட்ட போதும் பாதிரியாரிடம் தஞ்சமடைந்திருக்கவும் பலவந்தமாக இழுத்துச் சென்று கொலைக்குக் கொடுத்த 421 சிறுவர்கள், தாமே கொன்றொழித்த செஞ்சோலை சிறுவர் உட்பட 10,800 க்கும் அதிகம் என்கிறது LTTE  யின் குழந்தைக் கொடுமை வரலாறு.

சிறுவர் கல்விமறுப்பு, சிறுவர் போராளிகள், குழந்தைத் தொழிலாழிகள், பாலியலுக்கும் பாட்சுக்கும் விலையாகும் குழந்தைகள், பிச்சைத் தொழிலுக்காய் ஊனமாக்கப்படும் பிள்ளைகள் எனும் சகிப்பிலடங்காக் கொடுமைகள் வேறொரு தலைப்பில் பார்ப்போம்! வேதனையில் மலைப்போம்!

இதைவிடவும் கொடுமையாக . . .

படிக்கும் மாணவர் படிப்பையும், அவருக்குதவும் தாய்மாரையும் அவர்கள் ஓய்வையும் திருடிப் பணம் பண்ணும் புதிய திருட்டு முதலாழிகள் பற்றி நீவீர் அறிந்ததுண்டா? இவர்கள் இனிப்புக் கொடுத்துக் காப்புக் கழற்றும் திருடர்கள்! இதுவரை திருடர்கள் எம்மை எப்படிக் கையாழ்கிறார்கள் தொடர்ந்து எம்மிடம் இழக்க எதுவுமில்லாமல் பறிக்கிறார்கள். இறுதியில் குழந்தைகளின் கல்வியைக் கூட இவர்கள் விட்டபாடில்லை என்றெல்லாம் விளங்காமல் திருடர்களுக்குத் தொடர்ந்து துணை போகிறோமே சிந்திக்கவேண்டாமா . . . . . . . ?

அன்றைய அடிமையுலகில் 1800 களில்! எல்லாமே பறிபோய் நின்ற மனித குலம் போராடி மீட்டுக்கொண்ட 8 மணி நேர ஓய்வு? இதையும் இன்றைய நவீனத்துவம், பிரயாண நெரிசல், கொள்வனவு என பல பரிமாணங்கள் உட் புகுந்து சூறையாடிவிட்டன சராசரி 2.8 மணிநேரம் மட்டுமே ஒரு மனிதனினுக்கு இன்றுள்ள ஓய்வு நேரம் எனக் கணிப்பிட்டிருக்கிறது சர்வதேச மனித உரிமைக் கணிப்புக்கள்.

இதையும் திருட, படித்துக்கொண்டிருக்கும் மாணவரின் கல்வியையும் திருட, பிள்ளைகளின் புடிப்பு - ஆரோக்கியத்திலுதவும் பெற்றாரின் நேரத்தையும் எதிர்கால உணர்வையும் திருட, சமூகத்தில் பெண்களுக்கான கொளரவத்தைத் திருட, ஒட்டுமொத்தத் தமிழர்களின் சமூகப் பார்வை, முற்போக்கு சிந்தனை இவை எல்லாம் திருடப்பட்டாகிவிட்டது.
என்பதோடு புலம் பெயர் இலங்கைத் தமிழர்கள் பற்றிய கீழ்த் தரமான எண்ணக் கருவை உலகம் பூராவும் பரவவிட்டு . . . . . . தாமே பணம் பண்ணுவதில் முனைப்போடிருக்கும் புதியதொரு முதலாளி வர்க்கமாகப் பரிணமித்துள்ளது தென்னிந்திய கலை கழியாட்ட(கூத்தாடி)த் திருடர் கூட்டம்.

கடல் வாழ் மீனைத் கரையில் போட்டால் இறந்துவிடும் என்பது போல் இன்றைய தென் இந்திய சினிமாவின் சுவாசத் தளமாகப் புலம் இலங்கைத் தமிழர்களே உள்ளார்கள்! சினிமா மட்டுமல்ல எண்ணற்ற தொலைக்காட்சிகள், அட்டை விற்பனை, இணையங்கள், சினிமாத்துறை தொடர்பான உப விற்பனைகள் என புலம் பெயர் தமிழர்கள் இந்திய சினிமா ஊடகங்களால் திருடப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் அரங்கேறும் பாரிய திருட்டாகப் பவனி வருகிறது!

இவ்வகைத் திருட்டில் இன்று தென்னிந்தியாவில் முன்னணியில் நிற்கும் நிறுவனங்கள் பல பல என்றாலும் அனைத்துத் திருட்டுகளுக்கும் உதாரணமாகக் காட்ட வல்ல ஒரே நிறுவம் Vijay TV தான். இது புலம் பெயர் தமிழருக்கும் ஒட்டு மொத்த உலகத் தமிழருக்கும் எப்படித் தீமைகளை அரங்கேற்றி தன் சட்டைப் பைகளை(மன்னிக்கவும் சாக்குகளை) நிறைக்கின்றது என்ற சமாச்சாரத்தை அறியத் தொடர்வோம் ?

(அடுத்துத் தொடர்வது Vijay TV பற்றிய விமர்சனமும் சுப்பர்சிங்கரும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com